வெள்ளி, 4 ஜனவரி, 2019

1208. மார்கழியில் சென்னை : கவிதை

மார்கழியில் சென்னை
பசுபதி 

[ ஓவியம்: கேசவ் ] 


கனமும் நயமுமாய் பிருகா கமகமும்
. களிப்பை இறைத்திடும் பண்ணிசை
இனிய 'சரிகம பதநி'ச் சுரங்களை
. இசைக்கும் இளையரின் தீங்குரல்
பனியின் குளிர்ச்சியில் இறையைப் பணிந்திடும்
. பஜனைக் குழுக்களின் ஊர்வலம் 
கனலின் பொறிகளாய் கடங்கள் முழவுகள்
. கலந்து வழங்கிடும் போஜனம்



தொடர்புள்ள பதிவுகள் :