சனி, 29 அக்டோபர், 2016

கோபுலு - 5

கோடுகளுக்கு உயிர்கொடுத்த ‘ கோபுலு’ 




இந்த வருட தீபாவளி மலர்களில் ‘கோபுலு’ வின் படங்கள் காணவில்லை என்று குறைசொன்னார் ஒரு நண்பர்.

 ’கோபுலு’வைக் காணாத  கண்ணென்ன கண்ணே! --- அதுவும் தீபாவளியில் !

சரி, அந்தக் ‘குறையொன்றும் இல்லை’ என்று செய்ய வேண்டாமா?

கோபுலு முதலில் ‘வாஷ் டிராயிங்’ முறையில் தான் பல கதைகளுக்கு வரைந்து கொண்டிருந்தார்.  பிறகுதான் ‘கோட்டோவியக் கோமான்’ ஆனார்!

  நான் 2010-இல் கோபுலு சாரைச் சந்தித்தபோது, தேவனின்  மிஸ் ஜானகிதொடருக்கு ( 1950?) வாஷ் டிராயிங்முறையில் சித்திரங்கள் வரைந்ததைப் பற்றி நினைவு கூர்ந்தார். சுவரில் இருக்கும் படத்தைத் துடைத்துக் கொண்டிருக்கும் ஜானகியின் அத்திம்பேர், ஸைக்கிளுக்குக் காற்றடித்துக் கொண்டிருக்கும் ஜானகியின் சோதரன் போன்றாரைத் தான் ஓர் அத்தியாயத்தில் படம் போட்டதை மலர்ந்த முகத்துடன் சொன்னார்

அந்தப் படத்தை இங்கே முதலில் இடுகிறேன்.  



இப்போது கோட்டோவியங்களுக்குப் போகலாம்!

   2013 ‘அமுதசுரபி’ தீபாவளி மலரிலிருந்து  சில பக்கங்கள்   !












[ நன்றி : அமுதசுரபி ]

பி.கு. இந்தக் கட்டுரையில் ஒரு தகவல் தவறு . கோமதியின் காதலன், கல்யாணி இரண்டும் விகடனில் தொடராக வந்தபோது ராஜு தான் ஓவியங்கள் போட்டார். ( கல்யாணி மங்கள நூலக நூலாய் வந்தபோது ...அட்டைப்படம் கோபுலுவுடையது.) . மிஸ் ஜானகி தொடங்கி மற்ற தேவன் தொடர்களுக்கெல்லாம் கோபுலு தான் ஓவியம்.  துப்பறியும் சாம்பு தொடருக்கு( 1942) ராஜு ஓவியம். பிறகு சாம்பு சித்திரத் தொடருக்குக் ( 1958) கோபுலு. 

 கட்டுரையில் காணப்படும் கொத்தமங்கலம் சுப்புவின் ஓவியம் 'கோபுலு' வரைந்ததல்ல!  யார் வரைந்ததென்று நீங்களே கண்டுபிடியுங்கள்!

தொடர்புள்ள பதிவுகள்:

கோபுலு

தீபாவளி மலரிதழ்கள்

4 கருத்துகள்: