சனி, 22 ஆகஸ்ட், 2020

1608. வ.ரா. - 7

மீண்டும்  அவர் வருவாரோ?
கல்கி


ஆகஸ்ட் 23. வ.ரா.வின் நினைவு தினம்.  .

 'பாரதி சர்ச்சை'யில் கல்கியும் வ,ரா .வும் "மோதிக்" கொண்டாலும், இருவரின் நட்பு ஆழமானது. வ.ரா.வின் மணி விழாவின்போது ( 1948-இல்)  வ.ரா.வின் படத்தால்  கல்கி அட்டையை அலங்கரித்தார் கல்கி. பிறகு சதாசிவம் தலைமையில் வ.ரா.விற்கு நிதி திரட்டினார் கல்கி.

தான்  நடத்திய 'சுதந்திரன்' என்ற பத்திரிகையில் தான் 'கல்கி'யின் முதல் குறுநாவல் 'விமலா'வை  வ.ரா. வெளியிட்டார் என்பதும், அந்த நாவலின் ஒரு பகுதி கூட இதுவரை நமக்குக் கிட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலில், வ.ரா. 1951-இல் மறைந்தபின்  'கல்கி'யில் வந்த உணர்ச்சி மிக்க  ,தலையங்கம் இதோ.




[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


இரண்டாவதாக, ஆனந்தவிகடனில்  பி.ஸ்ரீ. எழுதிய அஞ்சலிக் குறிப்பு.

மறைந்தும் மறையாதவர்!
'கலை வினோதன்'

பண்டித படாடோபங்களை வெறுத்து ஒதுக்கியதுடன், தூய தனித் தமிழ்க் கூச்சலையும் பரிகசித்தவர் எழுத்தாளர் வ.ரா.

வழக்கிழந்த பழந்தமிழ்ச் சொற் களையெல்லாம் வாழ்விழந்த பழந் தெய்வங்களைப்போல் ஒதுக்கி வைத்துவிட வேண்டும் என்று சொல்வார்.
தமிழ் வசன நடையைப் புதிய புரட்சிகரமான நடையாக்கினார். காலத்திற்குத் தேவையான உயிரும் புஷ்டியுமுள்ள கருத்துக்களை உயிர்ச் சக்தியுள்ள தமிழில் வ.ரா. வெளியிட முயன்று, வெற்றியும் பெற்றார்.
ஆகஸ்ட் 23-ந் தேதி ஆசிரியர் வ.ரா. மாரடைப்பினால் மரணமடைந்தார்.

வ.ரா.வின் மறைவினால் இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் மூத்த சகோதரரை இழந்துவிட்டனர். எனினும், 40 ஆண்டுகளாக இந்த அண்ணா செய்திருக்கும் தமிழ்ப் பணி நம் மறுமலர்ச்சிப் பயிருக்கு உரமாகி, உணவாகி, உயிரொளியும் ஆகியிருப்பதால், 'மறைந்தும் மறையாதவர்' என்று இவரைக் கருதலாம்!



தொடர்புள்ள பதிவுகள்:
வ.ரா.

கல்கி


கருத்துகள் இல்லை: