சனி, 11 ஜனவரி, 2014

சங்கீத சங்கதிகள் - 25

மதுரை சோமு - 1 

[ நன்றி: விகடன், 1946. ஓவியம்: சில்பி ? ] 


”சோமுவின் சாரீரத்தில் ஓர் ஆச்சர்யம். ஆரம்பிக்கும்போது புகைச்சலாய் இருக்கும். ஆனால், போகப் போக அதிலிருந்து வெளிவரும் நாத அலைகள் அவர் எவ்வளவு தலை சிறந்த நாதோபாசகர் என்பதை நிமிஷத்துக்கு நிமிஷம் பறை சாற்றும். ஊசிப் பிரயோகங்களைத் தொடர்ந்து உலக்கைப் பிரயோகங்கள் வரும். திடீரென்று கைகளை நாதஸ்வர வித்வான் மாதிரி வைத்துக் கொண்டு ராஜரத்தினத்தை கண்முன் கொண்டுவந்துவிடுவார்.” 
       ---’சுப்புடு’ , 1978. [ நன்றி: ராஜு அசோகன் ]

கர்நாடக இசை மேதை மதுரை சோமு அவர்களைத் தெரியாத இசை ரசிகர்கள் இருக்க முடியாது/ இருக்கக் கூடாது!  என்று நினைக்கிறவன் நான். ஆனால், இணையத்தில்  அவரைப் பற்றி அதிகம் தகவல்கள், கட்டுரைகள் இல்லையே என்ற ஓர் ஆதங்கம் திடீரென்று தோன்றியது ; ‘சரி, இதற்கு ஏதாவது ஒரு முடிவு கட்டி விட வேண்டியது தான்’ என்று நண்பர் ராஜு அசோகனைத் தொடர்பு கொண்டேன். தீவிர சோமு ரசிகரான அவர் மனமுவந்து தந்த சில கட்டுரைகளை மெதுவாக, தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி! கூடவே என்னிடமும் இருக்கும் சில குறிப்புகளையும், கட்டுரைகளையும் சேர்க்கிறேன்.

முதலில், மதுரை சோமு அவர்களைப் பற்றி என்னிடம் இருக்கும் பழைய குறிப்பு ஒன்று. 1946-ஆம் ஆண்டு ‘ஆனந்த விகடன்’ ’ஆடல் பாடல்’ பத்தியில் வந்த விமர்சனமும், படமும். ( ஆம், அப்போதே விகடன் அவரைக் ‘கவனித்திருக்கிறது’! ) ( இதற்கு முன்பே - 44,45 -இல் -- விகடனின் ‘ரேடியோ எப்படி’ என்ற பத்திகளில் சோமு அவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன; அவற்றைப் பின்பு வேறு மடலில் இடுகிறேன். அந்தப் பக்கங்களின் மிகவும் சேதமடைந்த நிலையே காரணம்! )

ஆடல் பாடல்


வித்வத் சபையில் பாடிய இளம் வித்வான்களில் சோமசுந்தரத்தின் பாட்டு எல்லாருடைய விசேஷ கவனத்தையும் கவர்ந்திருக்கும். ஸ்ரீ சோமசுந்தரத்துக்கு வெகு அபூர்வமான சாரீரம் வாய்த்திருக்கிறது. அதில் பேசும் துரித கால பிர்க்காக்கள் அழுத்தமும் அழகும் கொண்டு நம்மை பிரமிக்கச் செய்துவிடுகின்றன. அத்துடன் அவருக்குச் சிறந்த ஞானமும் விசேஷ மனோதர்மமும் இருப்பதும் அன்றைய கச்சேரியில் தெரிந்தது. இந்த வசதிகளையெல்லாம் அவர் பாகுபாடாகப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார். அவருடைய ராக ஆலாபனைகளெல்லாம் விசேஷபாவத்தோடும் சிறந்த கல்பனைகளோடும் பிரகாசிக்கின்றன. உதாரணமாக, அவர் ஆலாபனை செய்த கல்யாணியையும் ஷண்முகப்பிரியாவையும் சொல்லலாம். நடநாராயணி கல்யாண வசந்தம், அஸாவேரி போன்ற அபூர்வ ராகங்களையும் அவர் மிக்க திறமையோடு ஆலாபனை செய்ததைப் பாராட்ட வேண்டும். கீர்த்தனைகளையும் அவர் வெகு கச்சிதமாகப் பாடுகிறார். சுருங்கக் கூறினால், ஒரு பெரிய வித்வானுக்கு வேண்டிய எல்லா யோக்யதாம்சங்களும் இவரிடம் இருப்பதைக் காண்கிறோம்.
[ நன்றி: விகடன் ]

இரண்டாவதாக,  சோமு அவர்களைப் பற்றிய ஒரு வாழ்க்கைக் குறிப்பு; 1988- இல் அவருக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் வெளியிடப்பட்ட  மலரில் வந்த கட்டுரை.






[ நன்றி : ராஜு அசோகன் ] 

மூன்றாவதாக, தன் குருவுடன் தான் செய்த கடைசிக் கச்சேரி பற்றிச் சோமு அவர்களின் சில நினைவுகள்;


[ நன்றி : ராஜு அசோகன் ] 

 ( தொடரும் )

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:


8 கருத்துகள்:

sapthagireesan சொன்னது…

Aptly recalling the interesting anecdotes in these wonderful pages - during the music season -A nostalgic experience indeed! Thank you very much Sir.

sairamakoti சொன்னது…

Sir, I am your rasika for the sangitha tidbits. Especially,this article on somu is highly interesting and I long for more of the same. I am one of Somu's devoted rasika and I will never pardon MusicAcademy for its failure to give Sangitha Kalanidhi award to Somu

கோமதி அரசு சொன்னது…

அருமையான பகிர்வு.

Melasevel group சொன்னது…

We were running an organisation at Bangalore in the name of Kalaradhana and once Madurai Somu was giving his concert ( I remember the Year as 1979), accompanied by Chandrasekhar in Violin and Tanjore Upendran in Mridangam. The concert started at 6.15 PM and they have to return to Chennai on the same night by the mail train leaving around 10 PM. The concert was going on very well as usual and Somu was in his full form. Around 9 PM, he asked Chandrasekhar whether the concert could go beyond 9.30PM as he is in the mood of singing. Chandrasekhar has agreed but Upendran said he has to be at Chennai next morning at Chennai to attend a meeting at Iyal Isai Nadaka mandram. Some tried to convince him that he will take in a car and reach Chennai well in time to attend the meeting. But he was reluctant and kutchery came to an end around 9.40 PM and they got into the train at Contontment station. That day, Shanmugapriya was the main raaga and we will not hear such rendering again in our life.

vintageaudio சொன்னது…

மிக்க நன்றி

ராஜூ அசோகன்

Pas S. Pasupathy சொன்னது…

அன்புள்ள ராஜு அசோகன், என் நெடுநாள் விருப்பத்தைச் செயலாக்க உதவிய உங்களுக்கே என் நன்றி!

Unknown சொன்னது…

Dear Pasupathy Sir & Raju Asokan Sir!

Padikka Padikka Inikkuthada ..

Endure solla thondrugirathu.

Thanks a lot for your great service.


பெயரில்லா சொன்னது…

மகா மேதை
மகா வித்வான்
சரஸ்வதி தாயின் தலைமகன்

என்று மதுரை சோமு ஐயாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

அவரின் ராக சங்கதிகளும் பிர்காக்களும்
தனித்தன்மையானது
நிரவல், கற்பனா ஸ்வர்ம் ஆகிய பகுதிகளும் அவருக்கென தனி பாணியை வர்ணிக்கும்

லய வின்யாஸ கோர்வைகள் அவரின் லய ஞானத்தை உணர்த்தும்

அரை நூற்றாண்டுகள் மகுடிக்கு அடங்கின பாம்பாக தென்னக ரசிகர்களை மயக்கிய

மந்திர குரலோன்
தந்திர குரலோன்

திரு மதுரை சோமு அண்ணா

என்றும் அவர் புகழ் வாழ்க