வியாழன், 31 ஆகஸ்ட், 2017

819. ஆர்வி - 2

நான் ரசித்த சிறுகதைகள் - 2
ஆர்வி










( நிறைந்தது )

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்:
ஆர்வி

820. மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை - 1

செந்தமிழ்க் களஞ்சியம் "மே.வீ.வே."
டாக்டர் ப.சரவணன்


ஆகஸ்ட் 31. மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையின் பிறந்த தினம்.

"இலக்கணத் தாத்தா" என்று அறிஞர் பெருமக்களால் அன்போடு அழைக்கப்பட்ட பெருமைமிக்கவர் வித்துவான் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை. தமிழ்த்தொண்டே தம் தொண்டு எனக் கொண்டுழைத்த அவர், புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை மரபைச் சார்ந்தவர். ஒரு பெரிய நிறுவனம் சாதிக்க வேண்டிய, சாதிக்க முடியாத அருந்தமிழ்ப் பணியை ஆற்றி மறைந்தவர்.

மே.வீ.வே. சென்னை, சைதாப்பேட்டை மேட்டுப்பாளையத்தில் 1896 ஆகஸ்ட் 31ம் தேதி பிறந்தார். தமது இளமைக் கல்வியை சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளியில் தொடங்கினார். ஆனால் வறுமையின் காரணமாகக் கல்வியைத் தொடர முடியவில்லை. அப்போது சென்னை வேப்பேரியில் உள்ள எஸ்.பி.சி.கே. அச்சகத்தில் அச்சுக் கோப்பாளராகவும், அஞ்சலகத்திலும், வழக்குரைஞர்களிடத்தும் உதவியாளராகவும் பணிபுரிந்தார். என்றாலும், தமிழார்வம் காரணமாக கா.ர.கோவிந்தராச முதலியாரிடத்தில் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். கலாநிலையம் சேஷாசல ஐயர் நடத்தி வந்த இரவுப் பள்ளியில் ஆங்கிலமும் கற்றார். அதன்பின்பு வித்துவான் தேர்வில் வெற்றி கண்டு பட்டம் பெற்றார்.

1920ல் சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும், புரசைவாக்கம் பெப்ரீஷியல் உயர்நிலைப் பள்ளியிலும் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்த இவர், உடல்நலக் குறைவு காரணமாகப் பணியை விட்டு விலக நேர்ந்தது. எனினும் பணியினை துறந்தாரே அன்றி தமிழைத் துறக்கவில்லை. 1928ல் தென்னிந்திய தமிழ்க் கல்விச் சங்கத்தின் துணைத் தலைவர் தேர்வு, வித்துவான் தேர்வு முதலியவற்றிற்குரிய தனி வகுப்புகளை நடத்தி வந்தார். தேர்வுகளில் தேர்ச்சி அடைவதற்காக மட்டும் பாடம் சொல்லித் தரும் இன்றைய ஆசிரியர்களைப் போல் அல்லாமல் தமது மாணவர்கள் அறிஞர் பலரும் வியக்கும்படி புலமைப் பெற்றுத் திகழ வேண்டும் என்று விரும்பியவர் மே.வீ.வே. அவர் தமது மாணவர்களை நோக்கி,

"வித்துவான் பட்டம் பெற்றீர்கள். அதனைக் காற்றில் பறக்கவிடும் பட்டமாக்காதீர்கள். மேன்மேலும் பயின்று தக்க அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள்; பிறருக்கும் வழங்குங்கள். வழியில் கேட்ட ஐயத்திற்கு வீட்டில் விடை எண்ணாதீர்கள். தக்கவாறு பொருள் உணர்ந்து கேட்போர் ஐயமற வெளியிடுங்கள்," என்று கூறுவதிலிருந்து தமது மாணாக்கர் எப்படித் திகழ வேண்டும் என்று விரும்பினார் என்பதை அறியலாம்.


புரசை - லுத்ரன் மிஷன் பள்ளிப் பாதிரியார்களால் நடத்தப்பட்டு வந்த குருகுல மதக் கல்லூரியில் இந்துமதச் சித்தாந்தப் பேராசிரியராக இவர் பணியாற்றிய போது ஜெர்மானியர் பலருக்கும் தமிழ் போதிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இவரிடம் தமிழ் பயின்ற ஜெர்மானியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள், டாக்டர். ஸ்டாலின், டாக்டர். கிராபே (இவர் பெரிய புராணத்தை ஜெர்மனியில் மொழிபெயர்த்த எல்வின் மகள்), ஹில்டகார்டு மற்றும் பலர். இதேபோல, செக்.நாட்டு திராவிட மொழி ஆராய்ச்சியாளர் டாக்டர் கமில் சுவலபிலும் மே.வீ.வே.யின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவலபில், மே.வீ.வே. மீது அதிக மரியாதை கொண்டிருந்தார் என்பதை அவர் எழுதிய தமிழகச் சித்தர்களைப் பற்றிய "The Poets of the Powers" என்னும் நூலில் இவரின் புகைப்படத்தை வெளியிட்டு "எனது குரு" என்று குறிப்பிட்டதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்ற மே.வீ.வே. பாடம் போதிக்கும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் எழுதுவதிலும் இவருக்கு இணை இவரே. டாக்டர். உ.வே.சா. கூட தாம் பதிப்பிக்கும் நூல்களில் சில குழப்பங்களுக்கு மே.வீ.வே.வையே நாடினார் என்பதும் இங்கே பதிவு செய்யக் கூடிய விஷயமாகும்.

தமிழ் மொழியை தொல்பொருள் ஆராய்ச்சியாக ஆராய்ந்த சிற்பி மே.வீ.வே. அரசாங்க இலக்கிய - இலக்கண பாடநூல் குழுவிலும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி திருத்தக் குழுவிலும் தலைமைப் பதிப்பாசிரியராகத் தமது இறுதிக் காலம் வரை இவர் இருந்துள்ளார். அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கம்பராமாயணப் பதிப்புக் குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.


மே.வீ.வே. தாமாக முயன்று பதிப்பித்த நூல்கள்;
இறையனார் அகப்பொருள், தொல்.சொல் (நச்சர் உரை), தஞ்சைவாணன் கோவை, வீரசோழியம், யாப்பருங்கலம், அஷ்டபிரபந்தம், யசோதரகாவியம், நளவெண்பா முதலியன.



இலக்கண உலகில் இவர் பதிப்பித்த யாப்பருங்கலக்காரிகை இன்றும் அறிஞர்களால் போற்றப்படுகிறது. இதற்கு இணையான ஒரு பதிப்பு இன்றுவரை இல்லை என்றே கூறலாம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்நூலை மீள்பதிப்பு செய்துள்ளது. இவர் பதிப்பாளராக மட்டுமன்றி படைப்பாளராகவும் இருந்துள்ளார்.


பத்திராயு(அ) ஆட்சிக்குரியோர், திருக்கண்ணபிரானார் அற்புதவிளக்கு,
குணசாகரர் (அ) இன்சொல் இயல்பு, அரிச்சந்திர புராணச் சுருக்கம்,
அராபிக்கதைகள், முதலியன இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. இது தவிர; அம்பலவாணன், இளங்கோவன் என்னும் இரு புதினங்களையும் படைத்துள்ளார்.

இவரது பதிப்புப்பணி - படைப்புப்பணி குறித்துத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. பின்வருமாறு கூறுகிறார்;

"திரு.வேணுகோபாலப்பிள்ளை விளம்பரமின்றி ஆரவாரமின்றி, அமைதியில் நின்று தமிழ்த்தாய்க்குத் தொண்டு செய்வோருள் ஒருவர். திரு.பிள்ளை, நூல்களைப் பிழையின்றி பதிப்பிப்பதில் பெயர் பெற்றவர். இவரது தமிழில் தமிழூர்தல் வெள்ளிடைமலை. தமிழறிஞர் வேணுகோபாலரின் பிழையற்ற உரைநடை, தற்போது கறைபட்டுள்ள தமிழுலகைத் தூய்மைச் செய்யும் பெற்றி வாய்ந்தது." (நவசக்தி 8.4.1938).

திருத்தமான செயல்களுக்கு அடிப்படை மொழியே. மொழி செப்பமாக இல்லாவிட்டால் கருதிய எச்செயலும் கருதியபடி நடவாது என்பதை உணர்ந்த மே.வீ.வே. மொழியில் பிழை நேராதபடி எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளார். "தமிழ் நூல்கள் சிறியவையாயினும் பெரியவையாயினும் பிழையின்றி திருத்தமான முறையில் கண்கவர் வனப்புடன் வெளிவருதல் வேண்டும் என்பதே என் வாழ்வின் குறிக்கோள்" என்னும் அவரின் கூற்றே இதற்குப் போதிய சான்று.

1939-45ல் உலகையே உலுக்கிய இரண்டாம் உலகப்போர் சென்னையையும் விட்டு வைக்கவில்லை. அதனால் பாதிப்புக்குள்ளான பலர் பல்வேறு இடங்களில் சிதறினர். மே.வீ.வே. காஞ்சிபுத்துக்கு இடம் பெயர்ந்தார். அங்கும் அவரது தமிழ்ப்பணி ஓயவில்லை. "கச்சித் தமிழ்க் கழகம்" என்னும் ஓர் அமைப்பை நிறுவி பலருக்கும் தமிழ் உணர்வை ஊட்டினார். அத்துடன் சீவகசிந்தாமணி குறித்து நெடியதோர் சொற்பொழிவாற்றினார். இவரது பேச்சைக் கேட்ட பலரும் இவரை சமண மதத்தவர் என்றே எண்ணலாயினர். அதனால்தான் திரு.வி.க. "சிந்தாமணிச்செல்வர்" என்னும் பட்டமளித்து இவரைப் பாராட்டினார். சுவாமி விபுலானந்த அடிகளும் "உமது தமிழறிவு நாட்டிற்குப் பயன்படுவதாகுக," என்றும் பாராட்டி மகிழ்ந்தார்.


இது தவிர;
செந்தமிழ்க்களஞ்சியம் (அறிஞர் அண்ணா வழங்கியது),கன்னித்  தமிழ்க்களஞ்சியம், கலைமாமணி ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். நியூயார்க் உலகப் பல்கலைக்கழகம் மே.வீ.வே.க்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.

படிப்பது, எழுதுவது, பதிப்பிப்பது, பாடம் சொல்லித்தருவது என்ற வட்டத்துக்குள்ளேயே தமது வாழ்நாளைக் கழித்தவர். எந்த ஒரு நூலையும் நன்கு படித்து தேர்ந்த பின்னரே அதைப் பற்றிய கருத்தையோ விளக்கத்தையோ கூறும் இயல்புள்ள இவர், அரைகுறையாகப் படித்துவிட்டு கருத்துக் கூறுவது தவறு என்று பிறருக்கு அறிவுரை கூறுவார்.

தமிழ் இலக்கிய உலகில் 89 ஆண்டுகள் வரை உலவிய மே.வீ.வே. 4.2.1985 அன்று இரும்புண்ட நீரானார். நல்லவர்கள் உதிப்பதும் - மறைவதும் நன்நாளில் என்பதற்கேற்ப இவர் கோகுலாஷ்டமியில் பிறந்து தைப்பூசத்தில் மறைந்தார். இவரது பெருமையை பறைசாற்றும் வகையில் ஜெர்மனி கோல் பல்கலைக்கழகம் இவரது பெயரைச் சூட்டி கெளரவித்தது. தமிழக அரசு இவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடி மகிழ்ந்தது.


இவை அனைத்தினூடே கவியரசு கண்ணதாசன் உள்ளிட்ட பலரும் எழுதிய "பாவலர் போற்றும் மகாவித்துவான் மே.வீ.வே." என்னும் தொகுப்பு நூல் இவரது புகழை இன்றளவும் பேசிக்கொண்டிருக்கிறது.

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை


மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை : விக்கிப்பீடியா

புதன், 30 ஆகஸ்ட், 2017

818. ஆர்வி - 1

நான் ரசித்த சிறுகதைகள் - 1
ஆர்வி

ஆகஸ்ட் 29. ஆர்வி அவர்களின் நினைவு தினம்.

’அஜந்தா’ பத்திரிகையில் ஆர்வி ( ஆர்.வெங்கடராமன் )  1953-இல் எழுதிய கட்டுரையின் முதல் பகுதி:






[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்:
ஆர்வி

816. முகவைக் கண்ண முருகனார் - 1

ரமணானந்தத்தில் திளைத்த தேசியக்கவி முகவை முருகனார்
 லா.சு.ரங்கராஜன்


ஆகஸ்ட் 28. முகவைக் கண்ண முருகனாரின் நினைவு தினம்.

முகவைக் கண்ண முருகனார் (1890-1973) என்ற வரகவிராயரைப் பற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், 1910-1924 கால கட்டத்தில் ஒரு தேச பக்த கவிஞராகத் தமிழ் நாடெங்கும் பிரபலமாக அறியப்பட்டார். சம காலத்தியவரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு இணையாகப் பரவலாகப் பேசப்பட்டவர் தேசியக்கவி முருகனார்.

பாரதியாரின் தேசிய இயக்கப் பாடல்களின் முதல் தொகுப்பு "ஸ்வதேச கீதங்கள்' என்ற தலைப்பில் 1908-இல் வெளியாயிற்று. கவி முருகனாரின்  "ஸ்வதந்திர கீதங்கள்' என்ற பாடல் தொகுப்பு, 1918-இல் நூல் வடிவம் பெற்றது. அது வெளியாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே "தேசிய சிந்தனை செறிந்த மகாகவிராயர்' என்று புகழ்ந்துரைக்கப்பட்டார் முருகனார்.

"மகாத்மா காந்தி பஞ்சகம்' என்ற தலைப்பில் தாம் எழுதிய "வாழ்க நீ எம்மான்...' என்று தொடங்கும் பாடலை, 1918-இல் சென்னைக் கடற்கரையில் திலகர் கட்டத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் பாரதியார் தமது கணீர்க் குரலில் உரக்க ஒலித்து, மக்களைச் சிலிர்க்க வைத்தாரல்லவா? அதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே காந்திஜியைப் போற்றி கவி முருகனார் இயற்றிய,

""தானந் தழைத்திடுமே தன்மஞ் செழித்திடுமே
ஞானம் பழுத்திடுமே ஞானமெலாம் ஊனமிலாச்
சாந்தி யுபதேசித்த சன்மார்க்க சற்குருவாம்
காந்தி நன்னெறி நடக்குங்கால்''

என்ற பாடல் உடனடியாய் தமிழ்நாடெங்கும் பிரபலமாயிற்று. தென்னிந்தியர் அனைவரும் இந்திமொழி கற்க வேண்டும் என முதன்முதலாக வாதிட்டவர் கவி முருகனாராகத்தான் இருக்க வேண்டும். இது குறித்து, அவரது "ஸ்வதந்திர கீதங்க'ளில் ஒரு பாடல் எழுதியுள்ளார்.
பிற்காலத்தில் தமிழ் இலக்கியத்துக்கே பெருமை சேர்க்கும் வகையில் சங்கத் தமிழ் நடையில் கவிதை மழை பொழிந்தவர். ஐந்து வயது வரையில் ஊமைபோல் வாய் திறவாமல் இருந்த இவர், பின்பு தமிழ்மொழியின் மீதிருந்த ஆர்வம் காரணமாக அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றார் என்பர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் (ராமநாதபுரத்துக்கு மற்றொரு பெயர் முகவை) ஓர் எளிய அந்தணர் குடும்பத்தில், 1890-ஆம் ஆகஸ்டு மாதம், கிருஷ்ணய்யர்-சுப்புலட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த தேதி அறியக்கிடைக்கவில்லை. இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். ஆரம்பக்கல்வியை ஸ்காட் மிஷன் பள்ளியில் படித்தார். இரண்டாண்டுகள் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தார்.

கல்லூரி நாள்களிலேயே அவருக்கிருந்த அபரிமித தமிழ்ப்பற்றின் விளைவாக, தமது பெயரை முருகனார் என்று தூய தமிழாக்கிக் கொண்டார். பிறந்த இடம் முகவை என்பதால், "முகவைக் கண்ண முருகனார்' என்ற பெயரில் பிரபலமானார்.

கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் ஓரிரு ஆண்டுகள் ராமநாதபுரம் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேலுச்சாமித் தேவர் என்பவருக்கு திருக்குறள் கற்பிக்க நியமனம் பெற்றார். இதற்கிடையில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது.

பிறகு தமது மனைவி மற்றும் விதவைத் தாயார் சகிதம் சென்னை நகருக்கு இடம் மாறி, நார்விக் மகளிர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். அப்போது தேசியப் பாடல்கள் பல இயற்றிப் பிரபலமாகி வந்தார்.

அந்தக் காலகட்டத்திலேதான் ஸ்ரீரமண மகரிஷியின் எளிய அத்வைத உபதேசம் தாங்கிய "நான் யார்?' என்ற சிறு நூலை 1922-இல் படிக்க நேர்ந்தது. படித்ததும் பரவசமானார். அதே ஆண்டு திருவண்ணாமலைக்குச் சென்று ரமண மகரிஷியை (1879-1950) தரிசித்து, சமைந்து நின்றார். தேசபக்திக் கனல் மங்கி சாம்பல் பூத்தது. ஆன்மிக எழுச்சி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர், ராவ்பகதூர், வ.சு.செங்கல்வராயப் பிள்ளை, எஸ்.சச்சிதானந்தம் பிள்ளை, ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஆஸ்தானப் புலவர் ரா.ராகவையங்கார் போன்ற மகா மேதைகள் எல்லாம் போற்றிப் பேசியும், பாடியும் புகழும் அளவுக்கு ஓர் ஒப்புயர்வற்ற தமிழ் அறிவாற்றலைப் பெற்றிருந்தார் முருகனார். ராவ்சாஹிப், மு.ராகவையங்கார் முதலான தமிழ் வல்லுனர்களுடன் தமிழ்ச் சொல்லகராதிக் (Lexicon) குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றினார். இந்த நூற்றாண்டின் சங்கப் புலவர் என்றே முருகனார் இவர்களால் போற்றப்பட்டார்.

1926-இல் தமது அருமை அன்னை மறைந்ததும், கடைசி உலகப்பற்றும் அறுந்தது. தமிழ்ப் பண்டிதர் வேலையை உதறித் தள்ளினார். வீடு வாசல் துறந்தார். தனியாகத் திருவண்ணாமலை சென்று ஸ்ரீரமணரின் காலடி பணிந்து, தன் வயமிழந்தார். புற வாழ்வை அறவே துறந்தார். கடைசிவரை ரமண மகரிஷியின் பரம பக்தராய், ஒரு துறவியாய் ரமணரின் நிழலாகவே வளைய வந்தார் முருகனார். ரமணரைச் சரணடைந்து, தேச பக்தியைத் துறந்து, ரமண பத்தியில் ஆன்ம அனுபூதி பெற விழைந்ததைப் பற்றி சற்றே சிலேடை கலந்த பாடலொன்றில் பதிவு செய்துள்ளார்.

திருவண்ணாமலையில், 1926-ஆம் ஆண்டு முதற்கொண்டு ஸ்ரீரமண தரிசனத்தைவிட்டு முருகனார் அகலவேயில்லை. உண்டிப் பிட்சை (உஞ்சவிருத்தி) எடுக்க ஆசிரமத்தை விட்டு வெளியே சென்ற நேரம் தவிர, நாள் முழுவதும் ஆசிரமத்து தியான மண்டபத்திலேயே சமைந்து கிடந்தார்.
பல்வேறு பக்தர்கள் மற்றும் வருவோர்-போவோர் மகரிஷி ரமணரிடம் எழுப்பிய ஆன்மிகம் சார்ந்த சந்தேகங்கள், கேள்விகள் அவற்றுக்கு மகரிஷி அளித்த பதில்கள், தெள்ளிய அறிவுரைகள் யாவற்றையும் முருகனார் மெüன சாட்சியாகச் செவிமடுத்தார். மகரிஷி பெரும்பாலும் தமிழிலேயே சுருக்கமாக விடையளிப்பது வழக்கம். இவ்வாறு ரமணர் தெள்ளிய உபதேச வாசகங்களையும், எளிய ஆன்ம விசாரத் தத்துவ சாரத்தையும் முருகனார் கவனமாக கிரகித்துக்கொண்டு அவற்றைக் கருத்துச் செறிவான செந்தமிழ்ச் செய்யுள்களாகச் செதுக்கலானார். அவ்வப்போது மகரிஷி ரமணரிடமும் காண்பித்து, அவரது ஆலோசனை மற்றும் அனுமதியும் பெற்றுவந்தார். ஆங்காங்கே மகரிஷி அளித்த திருத்தங்களைப் புகுத்தி, பாடலைப் புனரமைத்தார்.

இவ்வாறு கோத்தமைத்த நூலே "குருவாசகக் கோவை' என்பது. மொத்தம் 1,282 நாலடி வெண்பாக்கள் கொண்ட நூல். அவற்றுள் 28 வெண்பாக்கள் ஸ்ரீரமணர் இயற்றியவை. இக் கோவை, குரு ரமணரின் ஒப்புதல் பெற்றது. ஆன்மிகர்களுக்கும், தமிழைச் சுவைக்கக் கூடியவர்களுக்கும் என்றென்றும் இலக்கிய மணம் வீசும் பாமாலையாக அமைந்துள்ளது. ஆனால், இன்றளவில் பரவலாக அறியப்படவில்லை என்பது வருந்தத்திற்குரியது. இப்பாடல்கள் அனைத்தையும் ரமண சித்தாந்தச் சிற்பியும், காந்திய மாமேதையுமாகத் திகழ்ந்த பேராசிரியர் கே.சுவாமிநாதன் (1896-1994), கவிதை, பொருள் நயம் சிறிதும் குன்றா வண்ணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தளித்துள்ளார்.

1928-இல் முருகனாரின் முயற்சியால், ரமணர் அவ்வப்போது இயற்றிய பாடல்கள் ஒன்றுதிரட்டப்பட்டுச் சீரமைத்துத் தொகுக்கப்பட்டன. இவையே "உள்ளது நாற்பது' என்ற தலைப்புடன் ஓர் அரும் பெரும் நூலாயிற்று. சாத்திர நூல்களைத் தவிர, ஸ்ரீரமண சந்நிதி முறை, ஸ்ரீரமண தேவமாலை, ஸ்ரீரமண சரணப்பல்லாண்டு,  ஸ்ரீரமணானுபூதி முதலிய அரிய தோத்திர நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும், ரமண-அனுபூதி பற்றி முருகனார் தாமாகப் புனைந்துள்ள நூற்றுக்கணக்கான பாடல்கள் மூலம் மனங்கடந்து வியாபிக்கும் தூய உணர்வுப் பிரபஞ்சத்தில் சஞ்சரித்துத் தாம் லயித்த பரமானந்தப் பிரக்ஞையை வெவ்வேறு கோணங்களில் விவரித்துள்ளார்.

முகவை முருகனார் இயற்றிய இந்த "ஸ்ரீரமண சந்நிதி முறை' நூலை "திருவாசகம் நிகரே' என்று பகவான் ஸ்ரீரமணர் புகழ்ந்துள்ளார். "என்றைக்கு குருவாசகக் கோவையும் ஸ்ரீரமண சந்நிதி முறையும் முருகனாரிடமிருந்து வெளிவந்தனவோ, அன்றே முருகனார் தலையாய அடியவர்கள் வரிசையில் சேர்ந்துவிட்டார்' என்றும் கூறியிருக்கிறார்.
பதினான்காயிரம் (14,000) பாக்கள் இயற்றிய முருகனாரின் பாடல்கள், "ரமண ஞான போதம்' என்ற தலைப்பில் ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டு சாதனை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரமண மகரிஷி 1950-இல் மகா நிர்வாணம் எய்திய பிறகு 23 ஆண்டுகாலம் முருகனார் வாழ்ந்து, ஆன்மிகப் பாக்களை சரமாரியாகப் புனைந்து வந்தார். சுமார் 30,000-க்கும் மேற்பட்ட தீந்தமிழ்ப் பாக்களை இயற்றி பெருஞ்சாதனை படைத்துள்ளார். கடைசி ஆண்டுகளில் ரமணாசிரமத்திலேயே தங்கியிருந்து, ஆன்மிக நாட்டத்துடன் அணுகுவோர்க்கு தெள்ளிய விளக்கங்கள் அளித்து வந்தார்.
ரமண மகரிஷியிடம் தாம் தம் கவிதைகளில் வெளிப்படுத்திய பக்திக்குப் பன்மடங்கு மேலாகத் தம் சொந்த வாழ்வில் அப் பரபக்தியை வெளிப்படுத்தி, வாழ்ந்து காண்பித்த முருகனார், 1973-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 28-ஆம் தேதி பகவான் திருவடிகளில் ஒன்றுகலந்தார். இவரது சமாதி ரமணாச்சிரமத்துக்கு வடக்கே அருணை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.

இராமநாதபுரத்தில் பிறந்து, வசித்த முருகனாரது இல்லம், அன்னாரது நினைவகமாக "ஸ்ரீமுருகனார் மந்திரம்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டு, ரமண பக்தர்கள் வணங்கும் ஒரு புனிதத் தலமாக விளங்கிவருகிறது. தேசியக் கவியாகவும், வரகவியாகவும் திகழ்ந்த முருகனாரது தமிழ்த் தொண்டும் புகழும் ஸ்ரீரமணர் புகழ் பாடும் இடமெல்லாம் நிலைத்திருக்கும் என்பது உறுதி.

[ நன்றி : தினமணி ]


தொடர்புள்ள பதிவுகள்:

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

817. லியோ டால்ஸ்டாய் - 1

தோல்ஸ்தோயி 
ப.கோதண்டராமன்

ஆகஸ்ட் 28. டால்ஸ்டாயின் பிறந்த தினம்.

‘சக்தி’ 1950 பொங்கல் மலரில் வந்த ஒரு கட்டுரை இதோ.









[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

815. ந.சுப்பு ரெட்டியார் - 2

ஊடல் விளைவித்த செயல்
ந.சுப்பு ரெட்டியார் 

ஆகஸ்ட் 27. சுப்பு ரெட்டியாரின் பிறந்த தினம்.


ஒரு முத்தொள்ளாயிரப் பாடல் விளக்கம் இதோ!




 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:


வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

814. வ.சு.செங்கல்வராய பிள்ளை - 1

தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை
முனைவர் அ.கா.அழகர்சாமி

ஆகஸ்ட்  25. தணிகைமணி செங்கல்வராய பிள்ளை அவர்களின் நினைவு தினம்.



தணிகைமணி, ராவ் பகதூர், வ.சு.செ. என்று பலவாறு அழைக்கப்படும் வ.சு.செங்கல்வராய பிள்ளை, தமிழுக்குச் செய்த தொண்டுகள் அளவிடற்கரியன. திருப்புகழ் பதிப்பாசிரியரான சிவஞானச் செல்வர், வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளையின் இளைய மகனான இவர், அன்றைய தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பத்தில் 1883-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி பிறந்தார்.

1888-1891-ஆம் ஆண்டுகளில் அரசு ஊழியரான இவரின் தந்தையார் நாமக்கல்லில் பணியாற்றியதால், அங்குள்ள கழகப் பள்ளிக் கூடத்தில் தணிகைமணி மூன்றாம் வகுப்பு வரை பயின்றார். அதன் பிறகு கும்பகோணம், திருவாரூர் மதுரை ஆகிய ஊர்களில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். 1901-ஆம் ஆண்டில் சென்னை மில்லர் கல்லூரியில் பி.ஏ.,தத்துவம் பயின்றார். பின்னர் அதே கல்லூரியில் எம்.ஏ., தமிழ் பயின்றார்.

தணிகைமணி, மாணவப் பருவத்தில் சாதனையாளராகவே திகழ்ந்தார். 1892-இல் நடந்த அரசு துவக்கப்பள்ளித் தேர்வு, 1896-இல் நடந்த அரசு உயர் துவக்கப் பள்ளித் தேர்வு, 1899-இல் நடந்த மெட்ரிகுலேஷன் தேர்வுகளிலும் முதல் வகுப்பில் தேறினார். இவை தவிர, சீனியர் எம்.ஏ., வகுப்பில் நடைபெற்ற தமிழ்த் தேர்வில் முதலாவதாகத் தேறினார்.

இதற்காக இவர் இராமநாதபுரம் மகாராணியார் வழங்கிய தமிழ்க் கல்வி உதவித் தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 4.50 என்ற அளவில் பெற்றார். இதே போல் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றார். ஊழ்ஹய்ந்ப்ண்ய் எங்ப்ப் எர்ப்க் ஙங்க்ஹப் என்னும் பெயரில் பல்கலைக்கழகம் வழங்கிய பட்டத்தையும், கல்லூரி அளவில் வழங்கப்பட்ட சேதுபதி தங்கப் பதக்கத்தையும் பெற்றார்.

1902-இல் மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் கலந்துகொண்டு ரூ.50 பரிசாகப் பெற்றார். இவ்வாறு கல்வியில் சாதனையாளராக விளங்கிய தணிகைமணி, அலுவலகப் பணியிலும் தனது முத்திரையைப் பதித்தார். இவரது பணியைப் பாராட்டி ஆங்கிலேய அரசு ராவ் சாகிப், ராவ் பகதூர் ஆகிய பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தது.

மரபான சைவக் குடும்பப் பின்னணியாலும், இவருக்குத் தமிழ் கற்பித்த தமிழாசிரியர்களான பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், கோபாலாசாரியார் ஆகியோரின் தாக்கத்தாலும், இவர் தமிழ்ப் பணியின்பால் தம்மை இணைத்துக் கொண்டார். 1905-இல் அரசுப் பணியில் சேர்ந்த இவர், அலுவலகப் பணியையும், தமிழ்ப் பணியையும் ஒருங்கிணைத்துச் செய்தார்.

சிறுவயதிலேயே தனது தமையனாரிடம் யாப்பிலக்கணங்களைக் கற்றுக்கொண்ட இவர்,

""கண்ணனும் வேதனும் போற்றுமுருகா கவின் மணியே
விண்ணவர் கோன்தான் பதம்பெறச் செய்த செவ்வேலவனே
பெண்ணோடு பாகன் அளித்த குமரா பெருநிதியே
தண்ணருளே பொழி தேவே தணிகைத் தயாநிதியே''

என்று முருகனைப் புகழ்ந்து பாடல்களைப் பாடியுள்ளார். திருத்தணிகை முருகனைப் போற்றும் பாங்கிலான இப்பாடல், தணிகைமணியின் தொடக்ககாலப் பாடல்களில் ஒன்று எனலாம். இவ்வாறு தனது குடும்பப் பின்னணி சார்ந்து தமிழார்வம் கொண்ட தணிகைமணி உரையாசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாசிரியர் எனப் பல தளங்களில் தமிழுக்காகத் தொண்டாற்றியுள்ளார். தணிகைமணி தாம் வாழ்ந்த காலத்தில் ஏறத்தாழ நாற்பது நூல்களைப் படைத்துள்ளார்.

இவை பெரும்பாலும் முருகனைப் பற்றியனவாகவும், தேவாரத்தைப் பற்றியனவாகவும் உள்ளன.
தணிகைமணியின் படைப்புகளில் முன்னிற்பவை அவரின் முருகனைப் பற்றிய ஆக்கங்களாகும். திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ், தணிகைப் பதிகம், தணிகைத் தசாங்கம், வேல்ப்பாட்டு, சேவல்பாட்டு, கோழிக்கொடி, தணிகைக் கலிவெண்பா, திருத்தணிகேசர் எம்பாவை, திருத்தணிகேசர் திருப்பள்ளியெழுச்சி, மஞ்சைப் பாட்டு, வள்ளி திருமணத் தத்துவம், வள்ளி-கிழவர் வாக்குவாதம் முதலிய பல நூல்களைச் செய்துள்ளார்.

இவை தவிர, முருகனைப் பற்றிய பாடல்கள் அனைத்தையும் தொகுத்து, "முருகவேள் பன்னிரு திருமுறை' என்ற தொகுப்பையும் தந்துள்ளார். இதனுள் திருப்புகழ் கந்தரலங்காரம், கந்தரநுபூதி, திருவகுப்பு, சேய்த்தொண்டர் புராணம் முதலியன உள்ளன.

தணிகைமணி, திருப்புகழுக்கு மிக எளிமையான உரையை எழுதிப் பதிப்பித்துள்ளார். 1951-ஆம் ஆண்டு முதல் இவரின் திருப்புகழ் உரை வெளிவரத் தொடங்கியது. இதை அவர், இதழ் போன்றே பகுதி பகுதியாக வெளியிட்டுள்ளார்.

இவரின் இம்முயற்சி பற்றித் தமது மதிப்புரையில் குறிப்பிடும் செந்தமிழ் இதழ், ""தேவஸ்தானங்களும், மடாலயங்களும் போன்ற செல்வ நிலையங்கள் மேற்கொள்ள வேண்டிய மிகப் பெரிய இந்நன் முயற்சியை, இதன் பதிப்பாளர் உலையாவூக்கமொடு இடையூறின்றி இனிது நிறைவேற்ற முருகப்பிரான் திருவருள் முன்னிற்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளது. (செந்தமிழ்-48,பகுதி 9-10, ப.239) எனவே, அவரின் திருப்புகழ் பதிப்பு முயற்சியானது தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது எனலாம்.

இவர் தமது திருப்புகழ் பதிப்பை, இடது பக்கம் பாடல் வரிகள், வலது பக்கம் பொழிப்புரை என்ற வகையில் பதிப்பித்துள்ளார். இவை தவிர, பாடல் வரிகளின் கீழ் முக்கியமான சொற்களுக்குக் குறிப்புரையையும் தந்துள்ளார். எண்கள், உடுக்குறிகள் முதலியவற்றைப் பயன்படுத்தி இந்தக் குறிப்புரைகளை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அமைத்துள்ளார். ""தம்மைப் பூசை செய்திருந்த மார்க்கண்டேயரைப் பிடிக்க வந்த கூற்றைச் சிவபிரான் மாளும்படி உதைத்தனர். கந்தபுராணம் மார்க்கண்டேய படலம் பார்க்க'' (தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, திருப்புகழ், ப.2, 22) என்று ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அடிக்குறிப்புகளைப் பயன்படுத்தியுள்ளார். இதனால், இவரின் திருப்புகழானது படிப்பதற்கு மிக எளிமையானதாகவும், ஆய்வாளர்களுக்குப் பயன்படுவதாகவும் உள்ளது.

தணிகைமணியின் மற்றுமொரு சிறந்த முயற்சி, தேவார ஒளிநெறி, தேவார ஒளிநெறிக் கட்டுரைகள், திருவாசக ஒளிநெறி, திருவாசக ஒளிநெறிக் கட்டுரைகளாகும். தேவாரத்திலுள்ள சொற்கள், தலங்கள், அரிய சொல்லாட்சிகள், அடியவர்கள் முதலியவற்றுக்கு அகர வரிசையில் விளக்கம் தந்துள்ளார். ""திருத்தணிகேசனது திருவருளையே துணையாகக் கொண்டு தேவார ஒளிநெறி என்னும் பெயரோடு தேவாரத்துக்குப் பெரியதொரு ஆராய்ச்சி எழுத விரும்பினேன்.

தேவாரத்தில் உள்ள பல பொருள்களையும், அவ்வப்பொருளின் வழியே அகராதி முறையாகத் தொகுத்து விளக்கிக் காட்டும் ஆராய்ச்சியே எனது சிற்றறிவுக்குத் தக்கதொண்டு எனக் கருதினேன்.
அத்தகைய கருத்துடன் சம்பந்தப் பெருமானது தேவாரத்தை ஆய்ந்து, நானூற்று அறுபத்து ஆறு தலைப்புகளின் கீழ் விரிந்ததொரு ஆராய்ச்சி அகராதி எழுதி முடித்தேன்'' என்று தனது தேவார ஒளிநெறி பற்றி தன்னடக்கத்துடன் குறிப்பிடும் தணிகைமணி, தான் எடுத்துக்கொண்ட பணியை மிகவும் விரிவாகவே செய்துள்ளார்.

இவரின் தேவார ஒளிநெறியானது 466 தலைப்புகளில் மூன்று பாகங்களாகவும், அப்பர் தேவார ஒளிநெறி 190 தலைப்புகளில் இரண்டு பாகங்களாகவும், சுந்தரர் தேவார ஒளிநெறி 261 தலைப்புகளில் ஒரே நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தர் ஒளிநெறியில் "பதிகப் பாகுபாடு' என்னும் தலைப்புக்கு விளக்கம் தரும் தணிகைமணி ""இராவணனை அடர்த்தது எட்டாவது பாடலிலும், பிரமன், மால் இவர்களுக்கு அரியவராய்ச் சிவபிரான் நின்றது (இருவர்கருமை) ஒன்பதாவது பாடலிலும், சமணர் முதலிய புறச்சமயத்தாரைப் பற்றிப் பத்தாவது பாடலிலும் சுவாமிகள் தமது பதிகங்களில் ஓதியுள்ளார். இந்த முறையில் வராத பதிகங்களின் விளக்கங் கீழ்க்காட்டுவன. ராவணன் (8-ஆம் பாடலில் சொல்லப்படாதது) 9-ஆம் பாடலிற் சொல்லப்பட்ட பதிகங்கள் (17) 39, 45, 57, 78, 90, 117, 127, 138, 142, 156, 204, 209, 210, 253, 316, 330, 368'' என்று செறிவானதொரு விளக்கத்தைத் தருகிறார். இவ்வாறு ஒவ்வொரு தலைப்புக்கும் செறிவானதும், நுட்பமானதுமான விளக்கங்களைத் தந்துள்ளார் தணிகைமணி. இதுபோல விளக்கவுரை தந்தவர் எவருமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது உரைநடையைப் பொறுத்தவரையில் அவை மிகவும் எளிமையானவை. வாசகனை அரவணைத்துச் செல்பவை. படிப்பார்வத்தைத் தூண்டக் கூடியவை. இவரது உரைநடை பற்றிக் கருத்துரைக்கும் கு.கதிரேசன், ""உரைநடையில் இவருக்கு ஒப்பான செறிவு, இனிமை, தெளிவு, நயம் ஆகியவற்றின் இணைவை வேறு எவரிடத்தும் காண இயலாத அளவுக்குச் சிறந்த மொழி நடையைப் பெற்றவர்'' என்று குறிப்பிடுகிறார். எனவே, தனித்துவம் மிக்க மொழிநடையின் மூலம் ஒரு செறிவார்ந்த உரைநடையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் தணிகைமணி எனலாம்.
இவ்வாறு தமது வாழ்நாள் முழுவதும் தமிழ்ப் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட தணிகைமணி, 1971-ஆம் ஆண்டு ஆகஸ்டு 25-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

இப்பூவுலகில் 88 ஆண்டுகள் வாழ்ந்த தணிகைமணி, தமது இளமைக்காலம், பணிக்காலம், ஓய்வுக்காலம் என அனைத்திலும் தமிழுக்காக, தமிழாகவே வாழ்ந்தவர். எனவே, வழிவழியாக வரும் தமிழ்ச் சான்றோர் மரபில் அவருக்கான இடம் ஓர் ஒளிநெறியாகவே இருக்கும் எனலாம்.
  ======
[ நன்றி: தினமணி ]


தொடர்புள்ள பதிவுகள்:

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

813. தென்னாட்டுச் செல்வங்கள் - 24

பஞ்சமுக  விநாயகர் 
சில்பி+தேவன்


’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும்.


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள்/சில்பி

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

812. ஆனந்த குமாரசுவாமி -1

ஆனந்த குமாரசுவாமி
“ரசிகன்”


ஆகஸ்ட் 22கலாயோகி ஆனந்த குமாரசுவாமியின் பிறந்த தினம்.

‘சக்தி’ இதழில் 1947-இல் வந்த ஒரு கட்டுரை இதோ.




பி.கு.:
நா. ரகுநாதய்யர். இவர் தான் “ரசிகன்”. 'ஹிந்து’வில் 31 ஆண்டுகள் உதவி ஆசிரியர். ஆங்கிலத்தில் ‘விக்னேஸ்வரா’ என்ற புனைபெயரில் ‘ Sotto Voce' கட்டுரைகளையும் எழுதினவர் . பாகவதம், பத்துப்பாட்டு, ராமாயணம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

811. ஜீவா - 2

ஜீவா - ம.பொ.சி. சந்தித்தால் ...?


ஆகஸ்ட் 21. ப.ஜீவானந்தத்தின் பிறந்த தினம்.

’விகடனில்’ 1956 -இல் வந்த ஒரு கட்டுரை.





[ நன்றி: விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:
ப.ஜீவானந்தம்

சனி, 19 ஆகஸ்ட், 2017

810. கு.ப.ராஜகோபாலன் - 2

செட்டிமார் நாட்டிலே
கு.ப.ராஜகோபாலன்


‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. ( அவருடைய சிறுகதைகளைத் தான் பலரும் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ) 





[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
கு.ப.ராஜகோபாலன்

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

809. சத்தியமூர்த்தி - 2

ஒழிவு நேர உல்லாஸ வேலை
எஸ்.சத்தியமூர்த்தி 

ஆகஸ்ட் 19. எஸ். சத்தியமூர்த்தியின் பிறந்த தினம்.






[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
சத்தியமூர்த்தி

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

808. சங்கீத சங்கதிகள் - 131

ஸ்ரீ பூச்சி ஐயங்கார் ஸாஹித்யங்கள் - 1
அரியக்குடி ராமனுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 

ஆகஸ்ட் 16.  ராமநாதபுரம் ( பூச்சி ) ஐயங்காரின் பிறந்த தினம்.


‘ சுதேசமித்திர’னில் 1946 -இல் வந்த மூன்று கட்டுரைகள். 








[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்