வெள்ளி, 8 அக்டோபர், 2010

கவிதை இயற்றிக் கலக்கு! - 4

கவிதை இயற்றிக் கலக்கு! : 45 -- 51




[ 'கவிதை இயற்றிக் கலக்கு' என்பது யாப்பிலக்கணத்தைப்
பற்றி் நான் வலையில் எழுதிய ஒரு கட்டுரைத் தொடர் ; இப்போது ஒரு நூலாகவும் வெளிவந்துள்ளது ]


நூல் விவரத்தை

கவிதை இயற்றிக் கலக்கு -5     

என்ற சுட்டியில் படிக்கலாம்.

 45. வஞ்சிப் பா 

46. கலிப்பா -1


47. கலிப்பா - 2


48. கலிப்பா -3


49. வண்ணப் பாடல்கள் - 1
( " கலப்புச் சந்தத்திற்கு ஒரு காட்டு" ; (திஸ்ரம்+சதுரஸ்ரம்+கண்டம்) என்ற அமைப்பு.
'தத்த தானா தனாதன' என்று திருத்திக் கொள்ளவும் )


50. வண்ணப் பாடல்கள் - 2


51. வண்ணப் பாடல்கள் - 3


தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு!

வியாழன், 7 அக்டோபர், 2010

கவிதை இயற்றிக் கலக்கு! - 3

கவிதை இயற்றிக் கலக்கு! : 33 -- 44

[ 'கவிதை இயற்றிக் கலக்கு' என்பது யாப்பிலக்கணத்தைப்
பற்றி வலையில் நான்  எழுதிய ஒரு கட்டுரைத் தொடர் ; இப்போது ஒரு நூலாகவும் வெளிவந்துள்ளது.  ]


நூல் விவரத்தை

கவிதை இயற்றிக் கலக்கு -5 

என்ற சுட்டியில் பார்க்கலாம்.





33. கட்டளைக் கலித்துறை -1
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி கட்டளைக் கலித்துறை என்ற பாவினத்தை ஆராய்கிறது. முக்கியமாக, கட்டளைக் கலித்துறையின் விதிகளையும், நேரசையிலும், நிரையசையிலும் தொடங்கும் பல காட்டுகளையும் வழங்குகிறது.

34. கட்டளைக் கலித்துறை - 2
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி கட்டளைக் கலித்துறை என்ற பாவினத்தை மேலும் ஆராய்கிறது. கட்டளைக் கலித்துறையில் வகையுளி, சந்தம் என்ற இரு பகுதிகளையும், பயிற்சிகளையும் பல காட்டுகளுடன் வழங்குகிறது.

35. அறுசீர் விருத்தம் - 1
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி அறுசீர் விருத்தம் என்ற பாவினத்தை விளக்குகிறது. அறுசீர் விருத்த வகைகளைச் சீர் வாய்பாடு, கட்டளை அடிகள், வெண்டளை பயின்றவை போன்ற கோணங்களில் பார்த்து, சில பயிற்சிகளையும் பல காட்டுகளுடன் வழங்குகிறது.

36. அறுசீர் விருத்தம் -2
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி சந்த அறுசீர் விருத்தத்தை ஆராய்கிறது. முக்கியமான சில சந்த அறுசீர் விருத்த வகைகளைச் சீர் வாய்பாடு, சந்த மாத்திரைகள், சந்தக் குழிப்பு, கட்டளை அடிகள், வெண்டளை போன்ற பல கோணங்கள் மூலமாகப் பார்த்து, சில பயிற்சிகளையும் பல காட்டுகளுடன் வழங்குகிறது.

37. எழுசீர் விருத்தம் -1
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி எழுசீர் ஆசிரிய விருத்தம் என்ற பாவினத்தை விளக்குகிறது. இலக்கியங்களில் அதிகமாகக் காணப்படும் சில எழுசீர் விருத்த வகைகளைச் சீர் வாய்பாடுகள், வெண்டளை பயின்றவை என்ற கோணங்களில் பார்த்து, சில பயிற்சிகளையும் வழங்குகிறது.

38. எழுசீர் விருத்தம் -2
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி எழுசீரடிச் சந்த விருத்தத்தை ஆராய்கிறது. முக்கியமான சில விருத்த வகைகளைச் சீர் வாய்பாடு, சந்த மாத்திரைகள், சந்தக் குழிப்பு, கட்டளை அடிகள், வெண்டளை போன்ற பல கோணங்கள் மூலமாக விளக்கி, பல காட்டுகளையும், சில பயிற்சிகளையும் வழங்குகிறது

39. எண்சீர் விருத்தம் -1
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி எண்சீர் ஆசிரிய விருத்தம் என்ற பாவினத்தை விளக்குகிறது. இலக்கியங்களில் அதிகமாகக் காணப்படும் சில எண்சீர் விருத்த வகைகளைச் சீர் வாய்பாடுகள், வெண்டளை பயின்றவை என்ற கோணங்களில் பார்த்து, சில பயிற்சிகளையும் வழங்குகிறது.

40. எண்சீர் விருத்தம் - 2
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி எண்சீர்ச் சந்த விருத்தத்தை ஆராய்கிறது. முக்கியமான சில விருத்த வகைகளைச் சீர் வாய்பாடு, சந்தக் குழிப்பு, கட்டளை அடிகள், வெண்டளை போன்ற பல கோணங்கள் மூலமாக விளக்கி, பல காட்டுகளையும், சில பயிற்சிகளையும் வழங்குகிறது.

41. கட்டளைக் கலிப்பா
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி கட்டளைக் கலிப்பா என்ற பாவினத்தின் இலக்கணத்தை ஆராய்கிறது. இதற்கும் எண்சீர் விருத்தத்திற்கும், கலி விருத்தத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கி, முக்கியமான சில எடுத்துக் காட்டுகளையும் வழங்குகிறது.

42. விருத்தங்களில் ஒன்பது, பத்து, பதினொரு சீர்கள்
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி ஒன்பது, பத்து, பதினொரு சீர்கள் கொண்ட விருத்தங்களின் இலக்கணத்தை ஆராய்கிறது. முக்கியமான சில விருத்த வகைகளின் காட்டுகளையும், சில பயிற்சிகளையும் வழங்குகிறது.

43. பன்னிரு சீர், பதினான்கு சீர், பதினாறு சீர் விருத்தங்கள்
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி பன்னிரண்டு, பதினான்கு, பதினாறு சீர்கள் கொண்ட விருத்தங்களின் இலக்கணத்தை ஆராய்கிறது. முக்கியமான சில விருத்த வகைகளின் காட்டுகளையும், சில பயிற்சிகளையும் வழங்குகிறது.

44. மற்ற சில பாவினங்கள்
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி குறட்டாழிசை, வெண்டாழிசை, வெள்ளொத்தாழிசை, வெண்டுறை, ஆசிரியத்துறை, மேல்வைப்பு என்ற பாவினங்களின் இலக்கணங்களை ஆராய்கிறது. பல காட்டுகளையும், சில பயிற்சிகளையும் வழங்குகிறது.

(தொடரும்)

தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு!

புதன், 6 அக்டோபர், 2010

கவிதை இயற்றிக் கலக்கு! - 2

கவிதை இயற்றிக் கலக்கு! : 17 -- 32





[ 'கவிதை இயற்றிக் கலக்கு' என்பது யாப்பிலக்கணத்தைப்
பற்றி இணையத்தில் பல ஆண்டுகளாக நான் எழுதிய ஒரு கட்டுரைத் தொடர் ; இப்போது நூலாகவும் வந்துள்ளது
]


நூல் விவரத்தை 

கவிதை இயற்றிக் கலக்கு -5    

என்ற சுட்டியில் படிக்கலாம்.


17.வஞ்சி விருத்தம்
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் வஞ்சி விருத்தம் என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணங்களும், எடுத்துக் காட்டுகளும் உள்ளன.

18. கலிவிருத்தம்
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் கலிவிருத்தம் என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.

19. தரவு கொச்சகக் கலிப்பா
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் தரவு கொச்சகக் கலிப்பா என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.

20. பரணித் தாழிசை
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் பரணித் தாழிசை என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன..

21. ஆசிரியத் தாழிசை
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் ஆசிரியத் தாழிசை என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.

22. கலித்தாழிசை
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் கலித் தாழிசை என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.

23. சந்தப் பாக்கள்
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் சந்தப் பாக்களின் இலக்கணமும், பல காட்டுகளும் உள்ளன.

24. சந்த வஞ்சித் துறை, சந்த வஞ்சி விருத்தம்
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் பதினாறு அடிப்படைச் சந்தங்களைப் பற்றிய மேலும் சில விளக்கங்களும் சந்த வஞ்சித் துறை, சந்த வஞ்சி விருத்தம் என்ற இரண்டு பாவினங்களின் பல காட்டுகளும் உள்ளன.

25. வெண்பா - 1 : குறள், சிந்தியல்
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் வெண்பாவின் பொது இலக்கணமும், குறள், சிந்தியல் வெண்பாக்களின் இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.

26. வெண்பா - 2:
அளவியல் கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் அளவியல் வெண்பாவின் பொது இலக்கணமும், நேரிசை, இன்னிசை, முடுகு, இருகுறள், ஆசிடை வெண்பா வகைகளின் இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.

27. வெண்பா - 3; ப·றொடை, கலி, சவலை, மருட்பா, வெண்கலிப்பா

கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் ப·றொடை, கலி வெண்பாக்களின் பொது இலக்கணமும், மருட்பா, சவலை, வெண்கலிப்பா ஆகிய பாடல் வகைகளின் இலக்கணமும், காட்டுகளும், வெண்பாப் பயிற்சிகளும் உள்ளன.

28. சந்தக் கலிவிருத்தங்கள் -1
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி சில சந்தக் கலிவிருத்தங்களை சீர் வாய்பாடு, சந்த மாத்திரைக் கணக்கு, சந்தக் குழிப்பு, எழுத்துக் கணக்கு என்று பல கோணங்களில் விரிவாய்ப் பார்க்கிறது. பத்து முதல் பதின்மூன்று எழுத்தடிகள் கொண்ட சில அளவியற் சந்தங்களின் காட்டுகளையும், பயிற்சிகளையும் விவரிக்கிறது இந்தப் பகுதி.

29. சந்தக் கலிவிருத்தங்கள் - 2
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி மேலும் சில சந்தக் கலிவிருத்தங்களைச் சீர் வாய்பாடு, சந்த மாத்திரைக் கணக்கு, சந்தக் குழிப்பு, எழுத்துக் கணக்கு என்று பல கோணங்களில் விரிவாய்ப் பார்க்கிறது. மாத்திரைக் கணக்கு வரிசையின் அடிப்படையில், பதினாறு முதல் இருபத்திரண்டு மாத்திரையடிகள் கொண்ட சில சந்தங்களின் காட்டுகளை விவரித்து, பல பயிற்சிகளையும் தருகிறது.

30. கலித்துறை - 1
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி கலித்துறை என்ற பாவினத்தைச் சீர் வாய்பாடு, கட்டளை அடிகள், வெண்டளை என்று பல கோணங்களில் விரிவாய்ப் பார்க்கிறது. பல பயிற்சிகளையும் தருகிறது..

31. கலித்துறை - 2
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி கலித்துறை என்ற பாவினத்தைத் தொடர்ந்து ஆராய்கிறது. முக்கியமாக, கலிமண்டிலத் துறை, சந்தக் கலித்துறை இவற்றின் இலக்கணத்தைச் சில காட்டுகளின் மூலமாக அறிமுகப் படுத்தி, பல பயிற்சிகளையும் தருகிறது.

32. கலித்துறை - 3
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி கலித்துறை என்ற பாவினத்தைத் தொடர்ந்து ஆராய்கிறது. முக்கியமாக, வெளிவிருத்தத்தின் இலக்கணத்தைச் சில காட்டுகளின் மூலமாக அறிமுகப் படுத்தி, பல பயிற்சிகளையும் தருகிறது.

(தொடரும்)

தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு! 

சனி, 25 செப்டம்பர், 2010

கவிதை இயற்றிக் கலக்கு! -1

கவிதை இயற்றிக் கலக்கு! :  கட்டுரைகள் 1--16



நல்ல வடிவில், ஓசை அழகுடன்   கவிதையை எழுதவும், பழமிலக்கியங்களை ரசிக்கவும்  அவசியமான யாப்பிலக்கணத்தை அறிய எண்ணியதுண்டா?

இத்தொடர் உங்களுக்காக..! எளிமையாகவும், அதே சமயம்
சுவாரசியமாகவும் யாப்பைப் பயில..!

 'கவிதை இயற்றிக் கலக்கு' என்பது யாப்பிலக்கணத்தைப்
பற்றி  நான் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிய ஒரு கட்டுரைத் தொடர் ; இப்போது  பல மாற்றங்களுடன் , பயிற்சிகளுடன் ஒரு நூலாகவும் வெளியாகி உள்ளது .  அந்தக் கட்டுரைகளின் விவரங்களையும், அவற்றின் சுட்டிகளையும் இம்மடலிலும், இதன் தொடர் மடல்களிலும் கொடுக்கிறேன்.


நூல் விவரத்தை

கவிதை இயற்றிக் கலக்கு -5

என்ற சுட்டியில் பார்க்கலாம்.

( நூலைப் பற்றி நண்பர் எழுதிய வெண்பா. )

கானடாப் பாவலர் நூல் கற்றறிந் தாலுனக்(கு)
ஏனடா வீண் ஐயம் ஏற்றமிகத் - தேனாய்ச்
சுவையூறும் சொல்தேர்ந்து சுந்தரமாய் என்றும்
கவிதை இயற்றிக் கலக்கு!

-  அரிமா இளங்கண்ணன்

நூல் பற்றி டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் ‘அமுதசுரபி’யில் எழுதியதையும், கவிமாமணி இலந்தை இராமசாமியும், பேராசிரியர் அனந்தநாராயணனும் நூலைப் பற்றி எழுதிய சில பகுதிகளையும்

கவிதை இயற்றிக் கலக்கு -6

-இலும்,

கவிமாமணி குமரிச்செழியனின்  மதிப்புரையை

கவிதை இயற்றிக் கலக்கு -7   

-இலும்

கலைமாமணி ஏர்வாடி  எஸ். இராதாகிருஷ்ணன் ‘கவிதை உறவு’ இதழில் எழுதிய  விமரிசனத்தை

கவிதை இயற்றிக் கலக்கு -10

-இலும் படிக்கலாம்.


======

அறிமுகம்

கவிதை இயற்ற யாரும் கற்றுக் கொடுக்க முடியாது!
உணர்ச்சியும், கற்பனையும் ஒருங்கிணைந்து மனத்தில்
எழும்பும் எண்ணமே நல்ல கவிதைக்குக் கருப்பொருள்.
ஆனால், கவியுள்ளம் படைத்தவருக்கு, ஓசை நயம் மிளிர,
ஒரு நல்ல வடிவில் கவிதையை அமைக்கக்
கற்றுக்கொடுக்கலாம். அதுவே யாப்பிலக்கணத்தின் பணி.
பழமிலக்கியங்களை ரசிக்கவும் யாப்பிலக்கண அறிவு தேவை.
தற்காலத் திரை இசைப் பாடல்களிலும், பல புதுக்
கவிதைகளிலும் யாப்பின் மரபணுக்கள் இருப்பதைப்
பார்க்கலாம். ஓசை, இசை அடிப்படையில் அமைந்த
யாப்பிலக்கணம் தமிழ் முன்னோர் கண்டுபிடித்த ஒரு
அறிவியல் பொக்கிடம். பாரி மகளிர் முதல் பாரதி வரை
யாவருக்கும் உதவிய அந்தச் செய்யுள் இலக்கணம்
நமக்கும் உதவும்.


மேலும் வலையில் படிக்க:

(  வலையில் உள்ள கட்டுரைகளில் உள்ள முக்கியமான பிழை திருத்தங்களையும் இங்கே இட முயல்வேன்.)


1. அறிமுகம் 2. கவிதை உறுப்புகள்   



3. எழுத்துகள்
'எழுத்துகள்' பற்றி யாவருக்கும் தெரிந்த சில
அடிப்படைகளை, இப்பகுதியில் யாப்பிலக்கணக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.

4.நேரசை
எழுத்துகள் சேர்ந்து எழுப்பும் ஓசையையும், இசையையும் அறிவியல் வழியில் ஆராய நம் முன்னோர்கள் கண்டுபிடித்த பொக்கிடங்களே அசைகள்.

5. நிரையசை
அசைகள் மரபுக் கவிதைகளின் ஜீவநாடிகள் .

6. பாடலை அலகிடுதல் 7. சீர்கள் -1
கவிதை இலக்கணத் தொடரின் ஆறாம், ஏழாம் பகுதிகளில் பாடலை அலகிடுதல், ஓரசைச் சீர்கள், ஈரசைச் சீர்கள் பற்றிய விளக்கங்கள் உள்ளன

8. மோனை
கவிதை இலக்கணத் தொடரின் எட்டாம் பகுதியில் மோனை (alliteration) பற்றிய விளக்கங்கள் உள்ளன.

9. எதுகை 10. சீர்கள் -2
கவிதை இலக்கணத் தொடரின் இப்பகுதியில் எதுகை (rhyme) பற்றிய விளக்கங்கள் உள்ளன.

11. அலகிடுதல் : சில நுண்மைகள்
கவிதை இலக்கணத் தொடரின் இப்பகுதியில் குற்றியலிகரம், அளபெடை, ஆய்தம் , ஐகாரக் குறுக்கம், ஒற்றுகள் இவற்றை அலகிடுதலில் உள்ள நுணுக்கங்கள் , வெண்டளை பற்றிய விளக்கங்கள் உள்ளன.

பிழை திருத்தம்:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்.

12. வெண்பாவின் ஈற்றடி

13. தளைகள்
கவிதை இலக்கணத் தொடரின் இப்பகுதியில் வெண்பாவின் ஈற்றடியின் இலக்கணம், தளைகள் பற்றிய விளக்கங்கள் உள்ளன

14. குறள் வெண்செந்துறை
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் குறள் வெண்செந்துறை என்ற பாடல் வடிவத்தின் இலக்கணமும், காட்டுகளும் உள்ளன

15. ஆசிரியப்பா
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் ஆசிரியப்பா அல்லது அகவல் என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன

16. வஞ்சித் துறை
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் வஞ்சித் துறை என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன

( தொடரும் )

வலையில் உள்ள என் மற்ற கட்டுரைகளைப் பற்றிய தகவல்களைக்  ”கவிதை இயற்றிக் கலக்கு”  என்ற தலைப்பில் உள்ள மற்ற பதிவுகளில் ( 2-4 )  பார்க்கவும்.

பி.கு.

ஆசுகவி சிவசூரியின் பின்னூட்டம்

பசுபதியாரின் வலைப்பூ
கவிஞர்களின் கரம்பிடித்தே அழைத்துச் சென்று
  கவிமரபைக் கருத்துள்ளே பதிய வைத்துப்
புவிமகிழ மரபொட்டிக் கவியி யற்றப்
  புரியும்படி இலக்கணத்தை எடுத்து ரைக்கும்
கவிதையியற் றிக்கலக்கென் னும்நூ லாசான்
  கனிவுடனே வடித்துவைத்த வலைப்பூத் தோட்டம்
அமுதமெனக் கவிசெய்ய வழியைக் காட்டும்,
  ஆசான்போல் உடனிருக்கும்,ஊக்கம் ஊட்டும்!


சிவ சூரியநாராயணன்


தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு!

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

'தேவன்' : நினைவுகள் - 2

வாழ்க்கை வரலாறு


’தேவன்’ --ஆர்.மகாதேவன் -- 1913-ஆம் ஆண்டில் செப்டம்பர் 8-ஆம் தேதியன்று திருவிடைமருதூரில் பிறந்தவர். அதே ஊரில் இருந்த திருவாவடுதுறை ஆதீனம் உயர்தரப் பள்ளியில் படித்தார். பள்ளியில் சாரணப் படையில் சேர்ந்திருந்தார். சாரணத் தலைவர் திரு. கோபாலசாமி ஐயங்கார் பல கதைகளைச் சொல்வார்; மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பார். இதனால் கதை கட்டுவதில் ‘தேவ’னுக்கு ஓர் ஆர்வமும், சுவையும் தோன்றின.


பின்பு, ‘தேவன்’ கும்பகோணம் அரசாங்கக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். அங்கே இருந்த திரு. எம்.ஆர். ராஜகோபால ஐயங்கார் என்ற ஆங்கில ஆசிரியர் மூலம் தேவனுக்கு இலக்கியத்தில் நாட்டமும், இலக்கியச் சிருஷ்டியில் ஈடுபாடும் ஏற்பட்டன. ‘மிஸ்டர் ராஜாமணி’ என்ற பெயரில் அவர் ‘ஆனந்த விகட’னுக்கு அனுப்பிய கதை அப்போது பிரசுரமாயிற்று.

தனது 18-ஆம் வயதில், ஆத்தூர் உயர்தரக் கல்லூரியில் சுமார் மூன்று மாதம் ஆசிரியராகப் பணி புரிந்தார். அந்த ஆண்டே பட்டமளிப்பு விழாவிற்குச் சென்னை வந்த ‘தேவன்’ ஆனந்த விகடன் காரியாலயத்திற்குச் சென்றார். இதோ, அவருடைய சொற்களிலேயே நடந்ததைப் பார்ப்போம்:

“ விளையாட்டாக நான் ஒரு கட்டுரை ‘மிஸ்டர் ராஜாமணி’ என்ற தலைப்பில் ஆனந்த விகடனுக்கு எழுதி அனுப்பி, அதை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று அசிரத்தையாக இருந்த சமயத்தில் ‘கல்கி’ அவர்களிடமிருந்து முதலில் கடிதம் வந்தது.

அன்புடையீர்!
உங்கள் கட்டுரை ‘மிஸ்டர் ராஜாமணி’யை ஆனந்த விகடனில் பிரசுரிக்க உத்தேசித்திருக்கிறோம்.உன்களுடைய கட்டுரையின் நடையும், போக்கும் விகடனுக்கு ஏற்றதாக இருக்கின்றன. சாதாரணமாகக் காணப்படும் இலக்கணப் பிழைகளை நீக்கி எழுதப் பயிலுவது தங்களுக்கு நலம்.
தங்கள்,
ரா.கிருஷ்ணமூர்த்தி


இதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு நான் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்னைக்கு வந்திருந்தேன். அப்போது ஆனந்த விகடன் காரியாலயத்தில் ‘கல்கி’ என்பவர் எப்படி இருப்பார் என்று பார்க்கவே காரியாலயத்தினுள் நுழைந்தேன். பார்வைக்கு மிக எளிமையுடனும் பேச்சில் வெகு சௌஜன்யமாகவும் இருந்த கல்கியைக் கண்டு, “ இவரா இத்தனை அற்புதமாக எழுதுகிறார்!” என்று நான் ஆச்சரியப்பட்டது உண்மை. நான் அறிமுகம் செய்து கொண்டதும் என்னை உட்காரச் சொல்லி அவர் முதல் முதலாகக் கேட்ட கேள்வி எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.

" கட்டுரை எழுதினீர்களே, அது நீங்கள்தான் எழுதினீர்களா? உங்கள் தகப்பனார் மற்றும் யாராவது உதவி செய்தார்களா? “ என்று அவர் கேட்டார்.

“நானேதான்!” என்று சற்றுக் கடுமையாகவே பதில் சொல்லியதும் அவர் சிரித்துக் கொண்டே, “ எதற்குக் கேட்கிறேன் என்றால், இந்த ஊரில் இருந்து கொண்டே எழுதலாமா என்பதற்குத்தான் ” என்றார். அதற்கு மேல் ஒரு நாள் அவர் கைப்பட எனக்கு ஒரு கார்டு வந்தது. நான் சற்றும் எதிபார்க்கவில்லை அதை. “ தங்களுக்கு விகடன் காரியாலயத்தில் சேர்ந்து வேலை செய்யச் சம்மதம் இருக்குமானால் புதன்கிழமை காலை பதினோரு மணிக்கு வரவேணுமாய்க் கோருகிறேன்” என்ற விஷயம் அதில் வந்தது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ஒரு கட்டுரையில் தேவன் உதவி ஆசிரியராய்ச் சேர்ந்த வரலாற்றை இப்படி விவரிக்கிறார்.

“ அவர் முதல் முதல் எழுதிய மாஸ்டர் ராஜாமணியை, ஆம், அந்தக் குஞ்சுப் பயல் ராஜாமணியை அழைத்துக் கொண்டு, தான் வேலை பார்க்கும் துரைமகனிடம் சென்ற அவனது மாமா, அங்கு அந்த ராஜாமணி குறும்பாகப் பேசிய மழலை மொழிகளை எல்லாம், தமிழே அறியாத துரையிடம் மொழி பெயர்க்கும் விதத்தைப் படித்துப் படித்து இருபத்தைந்து வருஷங்களுக்கு முன், நான் சிரித்ததை எல்லாம், சொன்னபோது அவர் சொன்னார். “ஆம், அந்த மாஸ்டர் ராஜாமணி தான், சார், எனக்கு ஆனந்த விகடனில் வேலை தேடிக் கொடுத்தான். அவன் தான் என்னை ஆசிரியர் ‘கல்கி’யிடமும் திரு வாசனிடமும் அறிமுகம் செய்து வைத்தான்” என்றார். மேலும் சொன்னார். “அந்தக் கட்டுரையைப் படித்த ‘கல்கி’க்கு ஒரு சந்தேகம். அது என் சொந்தச் சரக்குத் தானா என்று. ஆதலால் அதைத் தொடர்ந்து ஒரு கட்டுரையை, அங்கே அவர் பக்கத்தில் கிடந்த மேஜை அருகிலேயே உட்கார்ந்து அப்பொழுதே எழுதும்படிச் சொன்னார். எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகே என்னை ஒரு உதவி ஆசிரியனாக அமர்த்தினார் “ என்றார். “

அதன்பின் ஒன்பது வருஷங்கள் ( 1933-42) கல்கியின் வலது கையாகப் பணியாற்றினார் தேவன். ஆரம்ப நாட்களில் ‘சரஸ்வதி காலண்டர்’ , ‘எங்கள் ஊர்ச்சந்தை’ முதலிய கதைகளை தேவன் எழுதியபோது, கல்கி அவரை மிகவும் பாராட்டி நேயர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

தன் அனுபவங்களைத் தேவன் ‘கல்கி என்னும் காந்த சக்தி’ என்ற கட்டுரையில் இப்படிச் சொல்கிறார்:

“ கல்கியிடம் என் பக்தி ஒரு புறம் இருக்க, ஒரு பயமும் உண்டு. ‘இத்தனை பெரிய எழுத்தாளரிடம் எப்படி நாம் எழுதுவதை வைப்பது?’ என்று நான் அஞ்சியிருக்கிறேன். ஒரு சமயம் இப்படித்தான் பயந்து கொண்டு, “எங்கள் ஊர்ச்செய்திகள்” என்று ஒரு கட்டுரையை வைத்துவிட்டு, கீழே அச்சாபீஸுக்குள் அடைக்கலம் புகுந்து கொண்டேன்.

சற்று நேரத்துக்கெல்லாம் கூப்பிட்டார். போனேன். என் கட்டுரையைக் கையில் சுருட்டி வைத்துக் கொண்டு, “இதை நீயா எழுதினே?” என்றார். “ஆமாம்!” என்று சொன்னேன். “நீ போகலாம்!” என்றார்.

சற்று நேரத்துக்கெல்லாம் ‘கல்கி’ ஒரு உபயகுசலோபரி எழுதிக் கொண்டிருந்தார். ‘ஷீட்’’ஷீட்டாக அச்சகத்துக்கு வந்து கொண்டிருந்தது. நான் படித்துப் பார்த்தேன்.”இந்த இதழில் ‘எங்கள் ஊர்ச்செய்திகள்’ என்றொரு கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது. நேயர்கள் அதை மிகவும் ரசிப்பார்கள் என்று நான் அறிவேன். அதை எழுதியவர் இருபது வயது நிரம்பாத ஓர் இளைஞர் என்றால் எத்தனை ஆச்சரியப்படுவீர்கள் என்றும் நான் அறிவேன்....” இதைப் படித்தபோது --இன்றுபோலவே -- அன்றும் நான் கண்ணீரைக் கொட்டி விட்டேன்.எத்தனை பெரிய அறிமுகம்!”

இதோ, வேறொரு சமயம், ‘கல்கி’ தேவனைப் பற்றி 29.4.1934 விகடன் இதழில் எழுதியது:

“ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில் தமிழ்நாடெங்கும் பிரசித்தியாகி விட்டவர். அல்லது, அவருடைய மருமான் ‘மிஸ்டர் ராஜாமணி’ அவரை பிரசித்திபடுத்தி விட்டான் ...நமது நாட்டில் இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையைப் பற்றி எழுதும் இந்த ஆசாமி யார்? .. என்று எண்ணி வியப்படைந்தேன்... குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும் துக்கங்களையும் பற்றி மட்டுமல்ல; வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையுப் பற்றியும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர்தான் என்று தேவன் காட்டிக் கொண்டு வருகிறார்... ”

விகடனிலிருந்து கல்கி விலகியதும், தேவன் சுமார் ஓராண்டு காலம் உதவி ஆசிரியராய் இருந்து பின்னர் 1942 முதல் நிர்வாக ஆசிரியராகப் பணி புரிந்தார்.

த.நா.குமாரஸ்வாமி எழுதுகிறார் ( ‘உயர்ந்த மனிதர், விகடன் பொன்விழா மலர், 1980):

”கொள்கை வேற்றுமையால் கல்கி விகடனிலிருந்து விலகி விட்டார். வாசன் அவர்கள் இதனால் இடிந்து போகவில்லை. பத்திரிகையின் பெரும் பொறுப்பைத் தேவனிடம் முழு நம்பிக்கையுடன் ஒப்படைத்தார். பலர் அஞ்சினர். தேவன் என்ன சாமானியர், கல்கியைப் போல் ஒரு வார இதழை நடத்துவதற்கான ஆற்றலோ அனுபவமோ உள்ளவரோ என்று. 1942-ஆம் ஆண்டிலிருந்து 1957-இல் தம் உயிர் போகும் வரை விகடனை எவ்வளவு செம்மையாகத் தேவன் நடத்தினார் என்பதற்கு ஒவ்வோர் ஆண்டும் வெளிவந்த தீபாவளி மலரும், அவருடைய நவீனங்களும், கட்டுரைகளும், சிறுகதைகளும் சான்று பகரும்.”

‘கல்கி’ தனிப் பத்திரிகை தொடங்கியபோது, தேவனும் விகடனை விட்டுவிட்டுக் கல்கியில் சேர்ந்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். இந்தக் கேள்வியைத் த.நா.குமாரஸ்வாமி தேவனிடம் கேட்டபோது, தேவனின் பதில் இதோ:

“இன்னும் அந்த மாமேதையிடம் எனக்கு நீங்காத பற்றுள்ளது. ஆனால் நான் இரண்டாம் நிலையிலேயே வாழ்நாளெல்லாம் எவ்வாறு இருப்பேன்..என் காலில் நிற்க வேண்டாமா? என் இலக்கியச் சாதனைக்கு ஏற்ற நிலைக்களனும் தனிச் சூழலும் வேண்டாமா? நான் அவருக்கு எவ்வகையிலும் துரோகம் செய்யவில்லை. எழுத்துத் துறையில் எனக்கிருந்த அச்சத்தைப் போக்கி, என்னை வளர்த்து உருவாக்கினவர் அவர். அவரை என்றும் மறவேன்.

விகடனில் 23 ஆண்டுக் காலம் பணி புரிந்த தேவன் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார்.


துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான நகைச்சுவை நாவல்; இது சின்னத் திரையிலும் வந்தது. இவருடைய நாவல்களில் கோமதியின் காதலன் மட்டும் திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய கோமதியின் காதலன், மிஸ் ஜானகி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், கல்யாணி, மைதிலி, துப்பறியும் சாம்பு முதலிய பத்துப் படைப்புகள் மேடை நாடகங்களாகப் பல இடங்களில் நடிக்கப் பட்டன. அநேகமாக நாடக வசனங்களை அவரே எழுதினார்.மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் என்ற இரண்டு நாவல்களும் இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் சின்னத்திரையிலும் வழங்கப்பட்டன.

ஐம்பதுகளில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்ட போது எழுதியது ’ஐந்து நாடுகளில் அறுபது நாள்’ என்ற கட்டுரைத் தொடர். தேவன் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறார்.ஜஸ்டிஸ் ஜகந்நாதன் நாவல், 1974 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.

அண்மையில் அல்லையன்ஸ் பதிப்பகம் தேவனின் பல படைப்புகளை வெளியிட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகமும் தேவனின் பல நூல்களைச் செம்பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.

தேவன், தமது 44-ஆவது வயதில், 1957 மே 5 ஆம் தேதி அன்று மறைந்தார்.

தொடர்புள்ள பதிவுகள்:

தேவன் நினைவு நாள், 2010

தேவன் நினைவுகள் -1

தேவன் படைப்புகள்

துப்பறியும் சாம்பு

பி.கு.

ஆசுகவி சிவசூரியின் பின்னூட்டம்:

தேவன் சீர்

ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதிமூன் றென்னும்
  ஆண்டுவந்த செப்டம்பர் எட்டாம் நாளில்
பாயுமது போலெழுத்தால் படிப்போர் தம்மைப்
  பரவசத்தில் தள்ளவென்றே சிரிப்பாம் தேனில்
தோய்த்தெடுத்துக் கதைபலவே சொல்ல வென்றே
  துறுதுறுக்கும் எழிலார்ந்த தோற்றம் கொண்டே
சேயெனவே திருவிடையான் மருதூர் தன்னில்
  திருவருளால் மகாதேவன் தோன்றி னாரே!

அம்பி,விச்சு, காயத்ரி, மயூரம்,கேட்டை
  ஆரெமென்றும் சிம்மமென்றும் தேவ னென்றும்
அம்புவியில் பேர்பலவும் பூண்டோ ராக
  அனுதினமும் நமைமகிழ்த்த எழுதித் தள்ளி
நம்மனத்தில் நீங்காத இடத்தில் வாழும்
  நற்றமிழர் மகாதேவன் நூற்றாண் டைநாம்
அம்மையப்பன் அருளாலே கொண்டாடும் வேளை
  அவர்புகழைப் பாடியின்பம் கொள்வோம் வாரீர்!

சிவ சூரியநாராயணன்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

கொத்தமங்கலம் சுப்பு - 4 : ராசரத்தினம் நாதசுரத்திலே ...

 ராசரத்தினம் நாதசுரத்திலே 
கொத்தமங்கலம் சுப்பு



ஆகஸ்ட் 27. டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம். 

சென்னையில் 1953 சங்கீத ஸீஸன்.

புல்லாங்குழல் வித்வான் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளைக்குச் ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு. ‘ஆனந்த விகடனில்’ வழக்கமாக வரும் ஆடல் பாடல் பகுதியில் இப்படி ஒரு குறிப்புக் காணப்படுகிறது:

“அசாதாரணமான கற்பனையுடன் இன்ப நாதத்தைப் பொழிந்து ரஸிகர்களை மூன்று மணி நேரம், மந்திரத்தால் கட்டுண்ட சர்ப்பம் போல், மெய்ம்மறக்கச் செய்துவிட்டார் ஸ்ரீ ராஜரத்னம். இந்த சங்கீத விழாவுக்கே இந்தக் கச்சேரி ஒரு தனி சோபையை அளித்தது என்று கூடச் சொல்லலாம் .” 



திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாகஸ்வரக் கச்சேரியை ரேடியோவில் கேட்டுப் பரவசமடைந்த



 கொத்தமங்கலம் சுப்பு உடனே எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பிய  கவிதை இதோ:


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

கொத்தமங்கலம் சுப்பு - 3

மண்ணை நம்பி வாழ்கிறோம் 
கொத்தமங்கலம் சுப்பு




இந்தக் கவிதை 1954 -இல் பொங்கல் சமயத்தில் விகடனில்  வந்தது என்று நினைக்கிறேன்.




[நன்றி: ஆனந்த விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
கொத்தமங்கலம் சுப்பு

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

கொத்தமங்கலம் சுப்பு -2 : காந்தி மகான் கதை

காந்தி மகான் கதை
இரா.நக்கீரன்




[கொத்தமங்கலம் சுப்புவின் நூற்றாண்டு விழா 2010-ஆம் ஆண்டில் பல இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது .

.அவர் நினைவில் சில மடல்கள். இது விகடனில் வந்த ஒரு கட்டுரை ]


'முப்பக்கம் சூழ்ந்த கடல்
முத்திருக்கும் ஆழ்ந்த கடல்
இப்பக்கம் வந்தாலும்
இமயம் வடக்கினிலே
கட்டாத கோட்டையுண்டு
கடலும் மலைகாவல்
எட்டாது அசலானுக்
கிடங்கொடுக்கா திந்நாடு'


- என்று தொடங்கி, கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வருகையிலிருந்து இந்திய விடுதலைக் காவியத்தின் நாயகனான காந்தி மகானின் கதை ஆரம்பமாகிறது. காந்தி மகான் பாரிஸ்டர் படிப்புக்காக இங்கிலாந்து போக வேண்டுமென்றபோது அவரது அன்னை, சீமைக்குப் போவதனால் உண்டாகும் கெடுதிகளைக் கூறி, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக நேரிடும் என்று மறுப்புத் தெரி வித்தபோது, காந்திஜி கீழ்க்கண்ட வாறு தம் அன்னைக்குச் சத்யப் பிரமாணம் செய்து தந்துவிட்டுப் பயணமானார்.

'அம்மா தாயே பெத்தவளே
நான் அப்படி மகனல்ல
அண்டமிடிஞ்சு விழுந்திட்டாலும்
ஆணைமீறுவேனோ?
கனவில்கூடக் கள்ளுக்குடியைக்
கருதிடவே மாட்டேன்
கஸ்தூரிபாயிதவிர ஒருத்தியைக்
கையால் தொடமாட்டேன்
மாமிசந்தின்னு முட்டை குடிக்க
வாய்திறக்க மாட்டேன்
மாதாவேயிது தவறுவதில்லை
மகாதேவன் சாட்சி'




இந்த வரிகளிலே காந்திஜியின் வருங்கால இலட்சியத்தின் சத்ய ஒளி பிரகாசிப்பதைப் பார்க்கி றோம்.

தென்னாப்பிரிக்காவிலே காந்தி மகானுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அநேகம். அவற்றில், நிறவெறி பிடித்த முரட்டு வெள்ளைக்காரன் அண்ணலைத் தனது பூட்ஸ் காலால் உதைத்ததும் ஒன்று. அந்தக் கொடுமையைக் கவிதை யிலே கவிஞர் வடித்துள்ளார்.


'கருப்புப் பூட்சால்
எட்டி உதைச்சான்
காந்தி மகாத்மாமேல்
கட்டின தலைப்பா
தட்டிவிட்டான்
காந்திமகாத்மா மேல்'


அப்போதும் அந்தக் கொடிய வன் மீது காந்தியண்ணலுக்குச் சினமேற்படவில்லை. மாறாக, பகைவனுக்கு அருளும் மேலான பண்பு தவழ்கிறது அவரது முகத்தில்.

'சாந்தம் பொங்கி
வழியுது ஐயா
காந்திமகானுக்கு
சனங்களைக் கண்டு
கருணை பெருகுது
காந்தி மகானுக்கு!'


இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக் கும் ஏற்பட்ட வகுப்பு வாதக் கலகத் தைப் பற்றிக் குறிப்பிடுகையில்...

'என்னத்துக்காக அடிச்சுக்கறான்
என்பது கூடத் தெரியாமல்
சின்னத்தனமான சண்டையிலே
செத்து விழுந்தது தேசச்சனம்'


- என்று மக்களின் அறியாமையை விளக்கிச் சாடியுள்ள போக்கானது, இன்றைய நிலையில் கூடப் பொருத் தமாகத்தானே இருக்கிறது?

நவகாளிக்குப் பயணமான காந்திஜியைப் பற்றிக் குறிப்பிடும் கவிதை வரிகள் இலக்கிய நயம் உடையவை.

'முள்ளும் மொரும்பும்
நிறைந்த வயல்
மொய்க்கும் கொசுக்கள்
நிறை காட்டில்
கல்லும் பயந்து நடுங் கிடவே
கடுமத வெறி
கொண்டவர் நாட்டில்
போதிமரத்து நிழல்வீற்ற
புத்தன் புறப்பட்டுப்
போனது போல்
ஆதியில் ராமச் சந்திரனும்
ஆரணியவாசம் போனது போல்
பாதுகைதன்னையும்
தான்கழட்டி
பரதன்கையில் கொடுத்துவிட்டு
மோதிக்கிழிக்கிற முள்காட்டில்
முன்னர் நடந்த கதை போலே
காந்தி மகானும் தன் செருப்பை
கழட்டித்தூர வைத்துவிட்டு
சாந்திவிளக்கும் திருவடியாம்
தாமரைப்பாதம் தடம்படவே' '


செல்கிறார் என்று படிக்கும்போது நமது மெய் சிலிர்க்கவில்லையா?

எல்லாவற்றுக்கும் சிகரமான தாக அமைந்திருப்பது காந்தி மகானின் துர்மரணம். புற்றிலிருந்து பாம்பானது பதுங்கி வந்து கடிப்ப தைப் போல், பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்துகொண்டிருந்த அண்ணலைக் கும்பிடுங் கரங்க ளால் கொன்று தீர்த்தானே கொடியவன். அவன் துப்பாக்கியி லிருந்து புறப்பட்ட குண்டுகள், அண்ணலை மட்டுமா துளைத்தன? இல்லவேயில்லை. எந்தச் சமுதா யத்தின் விடுதலைக்காகப் பாடு பட்டு, அல்லும் பகலும் தொண் டாற்றினாரோ அந்தத் தொண் டுக்கு நன்றிக்கடன் செலுத்தக் கடமைப்பட்ட ஒவ்வொருவரது நெஞ்சையுமே அந்தக் குண்டுகள் 12துளைத்தன.

'வழியை அமைத்துக்
கொடுத்த மகான்
வந்த கடமை முடிந்ததென்றே
அழியும்உடம்பை அழித்துவிட்டே
ஆதிபரம்பொருள் ஆகிவிட்டார்'


- என்று கூறி காந்தி மகான் சரிதையை முடித்து வைத்துள்ளார் கவிஞர்.

காந்திமகானின் கதையைக் காவியமாக்கிய பெருமை, கவிஞர் சமுதாயத்தின் பெருமையாகும். அந்தப் பெருமைக்கு வித்திட்ட சிறப்பு, கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களுடையது.

வானமும் பூமியும் உள்ள மட்டும், வாரிதியாழிகள் உள்ள மட்டும், ஞானமும் நீதியும் உள்ள மட்டும், ஞாயந் தரையினில் உள்ள மட்டும்... காந்தி மகான் கதையும் சிரஞ்சீவித்துவம் பெற்றிருக்கும்.



[நன்றி: ஆனந்த விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

கொ.சுப்பு: மற்ற பதிவுகள்

மகாத்மா காந்தி

சனி, 7 ஆகஸ்ட், 2010

கொத்தமங்கலம் சுப்பு -1 : பல்கலைச் செல்வர்

பல்கலைச் செல்வர் - கொத்தமங்கலம் சுப்பு

கலைமாமணி விக்கிரமன்




"சுப்பு பிறவிக் கவிஞன். ரச பேதமும் ரசக் குறைவும் இல்லாத ஹாஸ்ய புருஷன். வாழ்க்கையை இன்பமும், ரசமும் ததும்ப சித்திரித்துக் காண்பிக்க வேண்டும் என்ற அவரோடு கூடப்பிறந்த ஆவல், அவரை இலக்கிய உலகத்திலிருந்து அறவே விலக்கிவிட முடியவில்லை. தான் வாழ்க்கையில் கண்ட காட்சிகளை அவ்வப்போது சிறுகதைச் சித்திரங்களாக வரைந்து வந்தார். இந்தச் சிறுகதைகளை விலைமதிக்க முடியாத மாணிக்கங்கள் என்று சொன்னாலும் என் ஆவல் தணியாது. நோபல் பரிசைப் போல் தமிழ்நாட்டில் பாரதியார் பெயரால் ஒரு பரிசு இருக்குமானால் அதைத் தயங்காமல் நான் சுப்புவுக்குக் கொடுப்பேன்'' என்று மூத்த எழுத்தாளர் அறிஞர் வ.ரா., கொத்தமங்கலம் சுப்பு எழுதிய "மஞ்சுவிரட்டு' என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

""அவர் ஒரு கவிஞர், அவர் ஒரு கதாசிரியர், அவர் ஒரு இயக்குநர், அவர் ஒரு நடிகர்...அதற்கும் மேலாகச் சிறந்த மனிதர்'' என்று கவிஞர் வாலி தன் கவிமாலையில் கொத்தமங்கலம் சுப்புவைப் பாராட்டியுள்ளார்.

கொத்தமங்கலம் சுப்பு, மக்களிடையே புகழ் பெற்றதோ, நடிகர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர் என்ற வகையில்தான்.

ஆவுடையார்கோயிலுக்கு அருகேயுள்ள கன்னரியேந்தல் என்ற சிற்றூரில், மகாலிங்கம்-கங்கம்மாள் தம்பதிக்கு 1910-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சுப்பிரமணியன். சிறு வயதிலேயே அன்னையை இழந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்ட சிற்றன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார்.

அத்தை மகளை மணந்து அவர்கள் வாழ்ந்த கொத்தமங்கலத்துக்கு வந்து, தனவணிகர் ஒருவர் வீட்டில் கணக்கு எழுதும் பணியில் அமர்ந்தார்.

பள்ளத்தூரில் நாடகக் கம்பெனி ஒன்றில் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பல்வேறு நாடகங்களில் நடித்து கதாநாயகனாகப் புகழ்பெற்ற கொத்தமங்கலம் சுப்பு, சீனுவின் பரிந்துரையால் சென்னைக்கு வந்தார். சிவனால் பாபநாசமும், ராமலிங்கம் பிள்ளையால் நாமக்கல்லும் புகழ்பெற்றது போல் சுப்புவால் "கொத்தமங்கலம்' பிரபலமானது.

சென்னையில் ஜெமினி நிறுவனம் அவர் ஆற்றலைக் கண்டுகொண்டது. தன் திறமையால் படிப்படியாகத் திரை உலகில் முன்னேறி பல துறைகளில் பிரபலமானார். செல்வமும் செல்வாக்கும் பெருகின. இயற்கையாகவே எழுத்துக் கலை அவருக்குக் கைவரப் பெற்றிருந்ததனால் காட்சிகளை அமைப்பதில் நயமிருக்கும். நகைச்சுவையும் அவருடனே ஒட்டியிருந்ததால், நகைச்சுவைக் காட்சிகளை அமைப்பதில் திறமை மிகுந்திருக்கும். கருத்தாழம் மிக்க காட்சிகளுக்கு வசனம் எழுதும்போது அவை நெஞ்சை அள்ளுவனவாக அமையும்.

அவர் திறமையை, கலைஞானத்தை உணர்ந்த ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், சுப்புவுக்கு வாய்ப்புகள் பல அளித்தார். ஜெமினி கதை இலாகாவில் முக்கிய பங்கு அவருக்குக் கிடைத்தது. "மிஸ் மாலினி', "தாசி அபரஞ்சி', "கண்ணம்மா என் காதலி', "வள்ளியின் செல்வன்' ஆகிய படங்களில் இயக்குநராகப் பணியாற்றினார்.

தேசப்பற்று மிக்க அவர் எப்போதும் கதரே அணிவார். காந்திமகான் மீது பக்தியும் மரியாதையும் கொண்டிருந்ததால், காந்திமகான் கதையை வில்லுப்பாட்டில் அமைத்தார். வில்லுப்பாட்டில் திறமைமிக்கவர் என்.எஸ்.கிருஷ்ணனும், சுப்பு ஆறுமுகமும். கொத்தமங்கலம் சுப்புவும் அந்த வரிசையில் சேர்ந்து புகழ் பெற்றவர்.

""சுப்புவின் "காந்திமகான் கதை' வில்லுப்பாட்டு தேசபக்தி உணர்வை நாட்டில் சிலமணி நேரங்களில் ஊட்டின'' என்று பிரபல தலைவர்களே ஒப்புக்கொள்வர்.

ஔவையார் கதை தமிழ்நாட்டு மக்களைக் கவர்ந்ததுபோல் வேறு எந்தக் கதையும் கவரவில்லை. எஸ்.எஸ்.வாசன், ஔவையாராக நடிக்க கே.பி.சுந்தராம்பாளை ஒப்பந்தம் செய்து கொண்டார். டைரக்ஷன் பொறுப்பை எஸ்.எஸ்.வாசன் ஏற்றிருந்தாலும் கொத்தமங்கலம் சுப்புவின் வசனங்களும், யோசனைகளும்தான் படம் மகத்தான வெற்றிபெறக் காரணமாக அமைந்தன. படம் நூறு நாள்களுக்கு மேல் தமிழ் நாடெங்கும் வெற்றி நடைபோட்டது. படத்தின் வெற்றிக்குக் காரணம் சுப்புவாக இருந்தாலும், தன்னை முன்னிலைப்படுத்தாமல் பத்திரிகையாளருக்கு அவர் அளித்த மிக அடக்கமான பேட்டி இன்றும் நினைவிருக்கிறது.

ஔவையார் திரைப்படக் கைவண்ணத்துக்குப் பிறகு சுப்புவின் எழுத்தாற்றல் "தில்லானா மோகனாம்பாள்' புதினத்தால் வெளிப்பட்டது. பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வாரந்தோறும் அந்தத் தொடரைப் படித்து மகிழ்ந்தனர். கதைக்கு "கோபுலு'வின் சித்திரங்கள் மேலும் பெருமை சேர்ந்தன. தில்லானா மோகனாம்பாள் திரைக் காப்பியமாகவும் புகழ்பெற்றது.

தில்லானா மோகனாம்பாளுக்குப் பிறகு அவர் பல புதினங்களை எழுதினார். சமூகக் கதை எழுதுவதில் புகழ்பெற்ற சுப்பு, சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி எழுதியும் புகழ்பெற்றார். சுதந்திரப் போராட்ட காலத்தில் வெள்ளையரை மிகத் துணிவுடன் எதிர்த்த வீரர்களின் கதை தமிழ் நாடெங்கும் நிறைந்திருந்தது. ஆங்காங்கே கிராமங்களில் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள் வரலாறு மக்களிடையே பரவக்காரணம், மக்களுக்குப் புரியும் மொழியில் "கும்மி' மெட்டில் வீரர்கள் வரலாறு அமைத்ததுதான். அவற்றை எழுதிய கவிஞர் பெயர் தெரியவில்லை. தமிழகத்தில் அப்பாடல்கள் பாடப்பட்டன. அவற்றுள் ஒன்று "கட்டபொம்முவின் கதை'.

கடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்பே அத்தகைய வீரனான கட்டபொம்மன் கதையை ஓலைச்சுவடியிலிருந்து எடுத்துத் தன் கை வண்ணத்துடன் வாரப் பதிப்பில் பாடல்களாக எழுதினார் கொத்தமங்கலம் சுப்பு. கொத்தமங்கலம் சுப்புவின் கைவண்ணத்துடன் கூடிய கட்டபொம்மன் கதையை சிலம்புச் செல்வர் ம.பொ.சி. மிகவும் பாராட்டினார். "வீரபாண்டிய கட்டபொம்மன்' என்று புத்தகம் எழுதி, கட்டபொம்மனை நாடறியச் செய்தார்.

சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்து, சிறு கிராமத்திலிருந்து பெரிய நகரமான சென்னைக்கு வந்த சுப்புவின் வளர்ச்சி, அவருடைய உழைப்பு, திறமை, அணுகுமுறை, மனித நேயம், எழுத்தாற்றல் என்றும் தமிழ்மக்களால் மறக்க முடியாதவை. கொத்தமங்கலம் சுப்பு இளங் கவிஞர்களை உற்சாகமூட்டுவதுடன், அவர்கள் அழைக்கும் கவியரங்கங்களில் கலந்துகொண்டு பாராட்டுவார். கவிஞர்களை அழைத்து விருந்துபசாரம் செய்து ஊக்கமூட்டுவார்.

காந்திமகான் கதையை வில்லுப்பாட்டில் தயாரித்த சுப்பு, ராமாயணக் கதையையும் பாடி மகிழ்வித்தார். பாரதியார் கதையை "பாட்டிலே பாரதி' என்ற பெயரில் அரங்கேற்றினார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இப்போது வழங்கப்படும் "கலைமாமணி' விருதுபோல், "கலாசிகாமணி' என்ற விருது பெற்றவர் சுப்பு.

சுப்பு எட்டாம் வகுப்புவரைதான் படித்தார். ஆனால், தன் குழந்தைகளைப் பட்டப்படிப்பு படிக்க வைத்தார். எட்டமுடியாத புகழை கலைத்துறையில் அடைந்தார். ரசிகமணி டி.கே.சி., சுப்புவின் கிராமிய மொழிப் பாடல்களை மிகவும் ரசித்தவர். "மண்ணாங்கட்டி கவிஞர்' என்ற பட்டமளித்து மகிழ்ந்தவர். பொறியியல், வேளாண்துறை மேதை ஜி.டி. நாயுடு, சுப்புவின் சிறந்த நண்பர். ஜி.டி.நாயுடுவின் புதிய புதிய கண்டுபிடிப்புகளை சுப்பு புகழ்வார்.

பன்னிரண்டு புத்திரச் செல்வங்களுக்கு (இருவர் மறைந்தனர்) தந்தையாக இருந்து அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை எல்லாம் பொறுப்புடன் செய்து அவர்கள் ஒவ்வொருவரையும் கலை உணர்வுடன் வளர்த்து ஆளாக்கினார் சுப்பு.

தனக்கு வாழ்வளித்த எஸ்.எஸ்.வாசனின் புகைப்படத்தை தன் வீட்டின் முகப்பில் பெரிய அளவில் அலங்கரிக்கச் செய்து நாள்தோறும் மரியாதை செலுத்துவாராம். கொத்தமங்கலம் சுப்புவின் பல்கலைத் திறமையை நாடறியச் செய்த மேதை எஸ்.எஸ்.வாசனின் "ஜெமினி மாளிகை' இன்று இல்லாவிட்டாலும், "கொத்தமங்கலம் ஹவுஸ்' என்ற பெயருடன் புதுப்பித்துக் கட்டிய சுப்புவின் இல்லம், வாசன் பெயரையும் பல்கலைச் செல்வர் சுப்புவின் திறமையையும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

பத்மஸ்ரீ முதலிய உயர் விருதுகளைப் பெற்ற கொத்தமங்கலம் சுப்பு, 1974-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி அமரரானார். அவரின் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதன் மூலம் அவ்வறிஞருக்கு நாம் மரியாதை செலுத்துவோம்.

[ நன்றி: தினமணி ]

திங்கள், 19 ஜூலை, 2010

'தேவன்': கண்ணன் கட்டுரை - 4

கண்ணன் கட்டுரை - 4

தேவன்

 ஒரு சின்னப் பையன் எழுதுவது போன்ற நடையில் பல அரிய விஷயங்களை  'சின்னக் கண்ணன்' என்ற புனைபெயரில் விகடனில் தேவன் எழுதி வந்தார். 'கண்ணன் கட்டுரை' என்ற தலைப்பில் வெளியான அவை 50-களில்  பலரைக் கவர்ந்தன. நூல் வடிவில் வெளியாகாத ‘தேவனின்’ கட்டுரைத் தொடர்களில் இது ஒரு மிகச் சிறந்த ஒன்று என்று நான் நினைக்கிறேன். கோபுலு அவர்களும் இதற்கு விசேஷமாகப் படங்கள் வரைந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

முதல் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி இங்கே :

கண்ணன் கட்டுரை


[ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்]


ஒரே ஒரு சின்ன ஈ ஒரு பெரிய ஓட்டல் மேஜை மேலே இப்டி சுத்தி சுத்தி பறந்துட்டு, கடைசியிலே ஒரு இடத்தைப் பொறுக்கி உட்கார்ந்துது. அங்கேருந்து நாலாப் புறமும் கண்ணோட்டம் விட்ட போது ஒரு மைசூர் பாக் விள்ளல் திருஷ்டிலே விழுந்தது. அதை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறப்போ, அங்கே காபி சாப்பிட்டிண்டிருந்தான் ஒருவன். அவன் கையிலே வைச்சிருந்த பேப்பரைச் சுருட்டி, 'டப்'னு ஒரு அடி போட்டானே பார்க்கலாம், குறிபார்த்து! சின்ன ஈ முதுகிலே 'பளாச்'சுனு விழுந்தது அது. ஒரு கலங்கு கலங்கி, இறக்கையை உதறிண்டு, காலை நீட்டி சரி பண்ணிண்டு சின்ன ஈ விட்டது சவாரி! மேஜைக்குக் கீழே ஓடி, மேல் மூச்சு வாங்க, தாத்தா ஈ பக்கமா நின்னு, "தாத்தா, தாத்தா! இன்னிக்கு நான் ஒரு கண்டத்திலே தப்பிச்சேன்!'' அப்படின்னுது.

தாத்தா ஈ எல்லாத்தையும் கவனிச்சுண்டுதானே இருந்தது? சும்மா சிரிச்சுட்டு, "போடா! முட்டாள் பையா! ஒரு கண்டமும் இல்லை! அவன் உன்னை அடிச்சது நேத்து நியூஸ் பேப்பராலே! நாலே நாலு காயிதம்தானேடா அதிலே! உம்! என்ன காயம் பட்டுடப் போறது! முன் காலத்திலே எப்படி இருந்தது பேப்பர்னு கேளு, சொல்றேன்! 16, 24 பக்கம். அதனாலே ஒரு அடி வாங்கியிருந்தயானால்...'' என்று ஆரம்பிச்சுது.

அதுக்குள்ளே இன்னொரு பெரிய ஈ, "அதைச் சொல்றிங்களே, தாத்தா! அடிச்சானே, அந்த ஆளுக்கு உடம்பிலே திராணி இருக்குதா, பார்த்தியா? ஆறு அவுன்ஸ் ரேஷனிலே என்ன பண் ணிட முடியும் அவனாலே! இங்கே வந்து குடிக்கிறதோ காபிங்கிற வெறும் தண்ணி''னு சொல்லிச் சிரிச்சுது.

இதுக்குள்ளே சின்ன ஈ ஒடம்பைச் சரி பண்ணிண்டு, "கெடக்கிறது, தாத்தா! இதுக்கெல்லாம் பயந்து சாவலாமா? உசிரை லெச்சியம் பண்ணாம கௌம்பிட வேண்டியதுதான்''னுது.

தாத்தா ஈ வழுக்கைத் தலையைத் தடவிக்கொண்டு, "போடா பைத்தாரப் பையா! உசிரை எதுக்கடா லச்சியம் பண்ணப்படாது? அதோ கொண்டு வரானே, அந்தக் கோதுமை அல்வாவுக்காகவாடா? போடா! முன் காலம் மாதிரி வெண் பொங்கல், சேமியா-பேணி, பால் போளி என்று இருந்தால், உசிரு போனாலும் உட்கார்ந்து சாப்டோம் என்று இருக்கும். இதென்னடா, சோளத்தைப் போட்டு ஒபயோக மத்த பண்டங்கள்...''

சின்ன ஈ நேரே ஓடிப் போய், ஸர்வர் கையிலிருந்த சப்பாத்தியிலே உட்கார்ந்துண்டுது. சூடு பொறுக்காமல் எழுந்திருக்கிறதற்குள்ளே, 'டணார்'னு மண்டையிலே விழுந் தது ஒரு அடி! ஸர்வர் போட்டு விட்டான். சின்ன ஈக்கு ஸ்மரணையே தப்பிப் போச்சு! ஸர்வர் இப்போ அதைத் தட்டினது நியூஸ் பேப்பராலே இல்லை; இன்னொரு சப்பாத்தியாலேயாக்கும்! அதுதான் அப்படிக் கல்லு மாதிரி அதன் தலை மேலே விழுந்திருக்கு. ஸர்வர் ஒண்ணையும் கவனிக்கவே இல்லை. அவன் சப்பாத்தியைக் கொண்டு போய் மேஜை மேலே வச்சுட்டான்.

இதிலேருந்து நாம் தெரிஞ்சுக்கற நீதி என்ன தெரியுமா? ஆகாயத்திலே பறக்கிற இரண்டு ஈக்களைவிட, ஆகாரத்திலே அகப்பட்டிருக்கும் ஒரு ஈ எவ்வளவோ மேலானது!

[நன்றி: ஆனந்த விகடன்]

தொடர்புள்ள சில பதிவுகள்:

கண்ணன் கட்டுரை -1 

கண்ணன் கட்டுரை -2 

கண்ணன் கட்டுரை -3

தேவன்: படைப்புகள்

தேவன் நினைவுகள்

மிஸ்டர் ராஜாமணி : கதைகள்

தேவன்’: துப்பறியும் சாம்பு

சனி, 26 ஜூன், 2010

'தேவன்':கண்ணன் கட்டுரை-3

நீங்க கதை எழுதப் போறெளா..?

தேவன்

(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)

(9.1.55)

நாமும் எழுத்தாளனாகணும்கிற ஆசை அநேகம் பேருக்கு இருக்கு. எங்கப்பாவோடே சிநேகிதாள், மச்சினன்கள், மருமான்கள், ஒண்ணு விட்ட தம்பிகள் எல்லாரும், ''ஒரு சான்ஸ் கொடுங்கோ! கொளுத்திக் காட்டுறோம். ஊதிக் காட்டுறோம்''னு அடிக்கடி கேக்கறா. (பத்திரிகை வேலைன்னா சிகரெட்டா... கொளுத்தறதுக்கும் ஊதறதுக்கும்!) அப்பா என்னைக் கூப்பிட்டு, ''எலே! உங்கம்மா தினம் தவறாமே வெண்டைக்காய் கறி பண்றதனாலே எனக்குப் பயித்தியம் பிடிக்காதுடா! இந்தப் பசங்கள் பிடுங்கலிலேயே மூளை கலங்கிடும்டா!'' அப்படீன்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டுண்டார்.

எதுக்குச் சொல்ல வந்தேன்னா... எதை எழுதினாலும் ஜனங்க வாசிப்பானு தப்பா நினைக்கிறா. வர கடிதாசுகளிலே கடோசி வரியைத்தான் எங்கப்பா படிப்பார். ஒடனே, ''எங்கிட்டே பணம் இருக்குன்னு தவறா நினைச்சுண்டிருக்கா இவா''ன்னு கீழே போட்டுடுவார். ஆபீஸ் டயத்திலே இருபத்தொண்ணாம் நம்பர் பஸ்ஸிலே கூட ஏறிப்பிடலாம்; அதைவிடக் கஷ்டம் பத்திரிகையிலே எழுத எடம் கிடைக்கிற காரியம்.

எழுதற விஷயம் ஜனங்களுக்குப் பிடிச்சிருக்கோ இல்லையோ, ஒதவி ஆசிரியருக்குப் பிடிச்சிருக் கணும். காலத்துக்கு ஏத்த மாதிரி எழுதினாக் கூடப் பிரயோசனம் இல்லை. இப்போ நான் நம்ம 'தண்டு' கதையைச் சொன்னால் எல்லாம் புரிஞ்சுடும்.

அவருக்குத் தபால்காரா மேலே ரொம்ப எரிச்சல். பின்னே, ஓயாம அவர் கதைகளைத் திருப்பிக் கொண்டு வந்தால்? கடோசியா அவர் ஒரு மிக மிக நல்ல கதை எழுதி, நேரே ஒதவி ஆசிரியரை பேட்டி கண்டு, ''இப்போ இதை வாசிக்கிறீரா? இங்கேயே தற்கொலை பண்ணிக்கட்டுமா?'' அப்படின்னார். அந்த ஒதவி ஆசிரியர் புன்னகை செய்து, ''வாசிக்கிறேன். எதற்கும் நீர் போய் நம்ம 'கான்ட்டீன்'லே டிபன் பண்ணிவிட்டு வாரும், பார்க்கலாம்!''னார்.

'தண்டு' திரும்பி வந்தபோது, ஒதவி ஆசிரியர் உலாத்திண்டிருந்தார். கதையை அவசரமா கூடையிலேருந்து எடுத்து, ''பேஷா இருக்கிறது கதை!'' அப்படீன்னார். 'தண்டு' வயிறெல்லாம் 'கபகப'ன் னுண்டிருந்த 'வெஜிடபிள் குருமா' கூட 'ஜில்'லுனு போச்சு. 32 பல்லையும் காட்டி, ''அப்படியா! அது எப்போ பிரசுரமாகும்?''னு கேட்டார்.


''அதுவா! ஜனங்கள் இன்னும் இதைப் படிக்கத் தயாராகல்லை. 20 வருஷம் கழிச்சுப் போட்டால் நன்னாயிருக்கும்''னார் அந்த ஒதவி ஆசிரியர்.

'தண்டு'வோட மனசு பூஷணிக்காய் மாதிரி உடைஞ்சு போச்சு. அந்த ஏக்கத்தோடேயே திரும்பி வரபோது, மூணாம் நம்பர் பஸ்ஸிலே கதையையும் காணடிச்சுட்டு, எழுதறதையும் நிறுத்தி விட்டார்; கிராமத்திலே போய் பயிர்ச் செலவு பண்ணிண்டிருந்தார்.

இருபது வருஷத்துக்கு அப்றம்தான் 'தண்டு' பட்டணத்துக்கு வந்தார். முப்பத்தி மூணாம் நம்பர் பஸ்லே எடமும் கெடைச்சுது. பழைய நினைவெல்லாம், பொங்கல் இனாம் கேழ்க்க வரவங்க மாதிரி 'க்யூ' வரிசைலே கூச்சல் போட்டுது. குனிஞ்சு பார்த்தால், ஸீட் அடியிலே ஒரு காகிதக் கட்டு சிக்கிக் கிடந்தது. எடுத்துப் பிரிச்சுப் படிச்சால், அவர் முன்......னே எழுதின கதை! 20 வருஷமா நம்ம சர்க்கார், பஸ்களை அப்படியே நலுங்காமே வச்சிருந்து நம்பரை மட்டும் மாத்தி ஓட்டறா!

'ஆஹா'ன்னார் நம்ம 'தண்டு'. கதையோடே ஓடினார். ஒதவி ஆசிரியர் அதே அறையிலே அதே மாதிரி உலாத்திண்டிருந்தார். முன் போலவே கதையைப் படிச்சுட்டு, ''பேஷாயிருக்கிறது கதை!'' அப்படீன்னார். 'தண்டு' தன்னோட 14 பல்லையும் காட்டி, ''அப்படியா? சந்தோஷம்! எப்போ இது பிரசுரமாகும்?''னு கேட்டார்.

ஒதவி ஆசிரியர் வழுக்கையைத் தடவிண்டே, ''பிரசுரம் செய்ய றதா? இந்தக் காலத்து ஜனங்க இதையெல்லாம் வாசிக்கமாட்டா ஓய்! இருபது வருஷம் முந்தி கொணர்ந்திருந்தீர்னா போட்டிருப்பேன்!'' அப்படீன்னார்.

''உமக்கென்ன வயசு?'' னு கேட்டார் 'தண்டு' வெடுக்குனு.

''ஏன்..? அறுபதாகிறது!''

'தண்டு' ஒரு நாற்காலியை அலாக்காய்த் தூக்கி, ''ஏனா? அறுபது வருஷத்துக்கு முந்தி நீர் பொறந்திருக்கவே கூடாது!''ன்னு சொல்றப்போ, நல்லவேளையா ஆபீஸ் பையன் ஓடி வந்து நாற்காலியைக் காப்பாத்தினான்.

எதுக்குச் சொல்ல வந்தேன்னா, எழுத்தாளனைக் கோபமூட்டப் படாது; எக்கச்சக்கமா ஆயிடும்! என்னைக் கேட்டா, பசிக்கிறபோது சாப்பிட்டுடணும்; தூக்கம் வர போது தூங்கிடணும்; எழுத வர போது எழுதிடணும். ஒலகம் முன்னேற, அது ஒண்ணுதான் வழி!

தெரியாமலா பெரியவா சொன்னா, வேலை செய்றவனுக்கு வேலையைக் கொடு; வேலை செய்யாதவனுக்குச் சம்பளத்தைக் கொடு அப்படின்னு?

[நன்றி: ஆனந்த விகடன் ]

தொடர்புள்ள சில பதிவுகள்:

கண்ணன் கட்டுரை - 1

கண்ணன் கட்டுரை - 2

கண்ணன் கட்டுரை - 4

தேவன் நினைவுகள்

மிஸ்டர் ராஜாமணி : கதைகள்

தேவன்’: துப்பறியும் சாம்பு

தேவன் படைப்புகள்

வியாழன், 24 ஜூன், 2010

'தேவன்':கண்ணன் கட்டுரை-2

மக்காவது... சுக்காவது..!
தேவன்

(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)

(24.2.52)




'இந்தக் காலத்திலே நல்ல வேலையைக் காண்றதுன்னா சிவராத்திரியன்னிக்குச் சந்திரனைத் தேடறாப்லே'ன்னு பாட்டி சொன்னா. அப்பாவைக் கேட்டா, கடையிலே காப்பிக் கொட்டை வாங்கற மாதிரின்னு சொல்றார். முன் காலத்திலே, உத்தியோகம் வேணும்னா பெரிய மனுஷா சிபார்சு இருந்தாப் போறுமாம்; இந்தக் காலத்திலே அதுக்குப் பெரிய மனுஷாளாவே இருக்க வேண்டியிருக்காம்..!

எத்தனையோ பேர் வேலையில்லாத் திண்டாட்டம் போகணும்னு ஒரே வேலையாச் சொல்லிண்டிருக்கா. வேலை கெடைக்கிற முந்தி, எதுவானாலும் போறும்கறா; அது கெடைச்ச பேரோ, அது நன்னா இல்லையேனு மொனகிண்டிருக்கா!

இப்படித்தான் ஒருத்தன் எதானும் ஒரு வேலை கேட்டுண்டு வந்தானாம். மானேஜர் எரக்கப்பட்டு ஆபீஸ் பையனா வெச்சுண்டாராம். அப்புறம் அவன் ஆபீஸ் ரகஸ்யம் எல்லாம் தெரிஞ்சுண்டு மேலே மேலே வந்து மானேஜர் எடத்தையே புடிச்சுண்டானாம். ''நான் ஒரு முட்டாள்''னு மானேஜர் தலேல அடிச்சுண்டாராம். ஒடனே அவன், ''முட்டாள்களுக்கு இந்த ஆபீஸ்லே எடம் இல்லே''னு விரட்டிட்டானாம்.




அப்பாகிட்ட ஒருத்தர் வேலைக்கு, ஒரு பெரிய மனுஷர்கிட்டே சிபார்சுக் கடுதாசி வாங்கிண்டு வந்தார். அப்பாவாலே வேலை பண்ணி வைக்க முடியல்லே. ஆனா, அந்த மனுஷர் கொஞ்ச நாளிலே ரொம்ப சிநேகிதராப் போயிட்டார். ஒரு நாளைக்கு அவர் திடீர்னு வந்து, ''ஒங்களாலே ஒரு ஒபகாரம் ஆகணும்! நீங்க சொன்னா நடந்துடும்''னார்.

''சொல்லுங்கோ!''ன்னார் அப்பா.

''அந்தப் பெரிய மனுஷரே ஒரு ஆபீஸ் தொடங்கியிருக்கார். நிறையப் பேருக்கு அதிலே வேலை கொடுக்கிறார். உங்க கையாலே ஒரு சிபார்சு லெட்டர் கொடுத்தா, எனக்கும் ஒண்ணு கட்டாயம் கொடுத்துடுவார்...''

அப்பா பிரமிச்சுப் போயிட்டார். ''நீங்களே எனக்கு அவர்கிட்டத்தானே லெட்டர் வாங்கிண்டு வந்தேள்?'' அப்படீன்னார்.

''ஆமா! இப்போ அவரை விட நீங்க தெரிஞ்சவரா போயிட்டேளே!''

அப்பாவுக்கு ரெண்டு பயம்; அந்தப் பெரிய மனுஷரை நன்னாத் தெரியாதே என்கிறது ஒண்ணு; தன் லெட்டரை மதிக்கிற அளவு தான் பெரிய மனுஷர் இல்லையே என்கிறது ரெண்டு. நம்ம சிபார்சுக்கு மதிப்பு வரணும்னா எப்படி இருக்கணும்னு ஒரு கதை கூடச் சொன்னார் அப்பா...
ஒரு பெரிய ஆபீஸ்லே ஒரு வேலை காலியாச்சாம். இந்தச் சமாசாரம் செவிடாள் உள்பட எல்லார் காதிலேயும் விழுந்துட்டுதாம். ஒடனே அந்த ஆபீஸை நோக்கி, கிரிக்கெட் மாச்சுக்குப் போறாப்லே பட்டதாரிகள் போனாங்களாம்.

மானேஜர் வெளிலே வந்து, பழக் கடையிலே ஆரஞ்சுப் பழம் பொறுக்கறாப்லே மூணு பேரை நிறுத்தி வெச்சுண்டு, பாக்கிப் பேரை ''போங்கடா வேலையத்தவங்களா!''னு வெரட்டிட்டாராம்.


அந்த மூணு பேர்லே முதல் ஆளைப் பார்த்து, ஒரு தியேட்டர் பேரைச் சொல்லி, ''ஓய்..! நீர் போய் நமக்கு அந்தத் தியேட்டரிலே இன்னிக்கு ஒரு டிக்கெட் கொண்டு வாரும்! உம்ம சாமர்த்தியத்தைப் பார்க்கிறேன்''னார். அவன் அசந்து போனான். அன்னிக்குதான் அதிலே ஒரு புதுப்படம் ஆரம்பமாம்!

இரண்டாவது ஆளைப் பார்த்து ''நீர் ட்ராம்லே பாரீஸ் கார்னருக்குப் போய் பஸ்ஸிலே திரும்பி வந்துடணும். பார்க்கலாம்!''னார். அவன் தலையைப் புடிச்சுண்டான்; அது அப்படிச் சுத்தித்து.

மூணாவது ஆள் கையிலே ஒரு மூணு ஸ்தானக் கூட்டல் கணக்கைக் கொடுத்து, ''இதைப் போட்டு வையும், பார்க்கலாம்''னார்.

சரியா ஆறு மணி அடிச்சது. மானேஜர் கார்யதரிசியைக் கூப்பிட்டு, ''அந்தப் பசங்கள் வந்தாங்களா?"ன்னு கேட்டார்.

''ஓ! மொதல் பேர்வழி எப்படியோ டிக்கெட் கொண்டு வந்துட்டான்; ரெண்டாவது ஆள் ட்ராம்லே போய் பஸ்ஸிலே வந்துட்டான். ரொம்ப சாமர்த்தியசாலிகள் ஸார், ரெண்டு பேரும்!''

''உம்ம்.. அப்றம்..?''

''மூணாவது ஆள் கணக்கைப் பத்துத் தரம் போட்டிருக்கான். பத்து விடை வந்தது. அத்தனையும் தப்பு!''

''உம்... சரி! மூணாவது ஆளை வேலைக்கு வெச்சுண்டு, பாக்கி ரெண்டு பேரையும் வெளியிலே வெரட்டு! நமக்கு வாண்டாம்!''

''ஸார், ஸார்..! அந்த ஆள் ரொம்ப மக்காச்சே!''

''மக்கானால் என்ன ஓய்..! அவன் நம்ம ஊர் கலெக்டர் மருமான் ஆச்சே, அது போறாதா?'' அப்டீன்னாரே, பார்க்கலாம் அந்த மானேஜர்!

நீங்க கதை எழுதப் போறெளா..?

[நன்றி: ஆனந்த விகடன்]

தொடர்புள்ள சில பதிவுகள்:

கண்ணன் கட்டுரை -1

கண்ணன் கட்டுரை -3

கண்ணன் கட்டுரை - 4

தேவன்: படைப்புகள்

தேவன் நினைவுகள்

மிஸ்டர் ராஜாமணி : கதைகள்

தேவன்’: துப்பறியும் சாம்பு

திங்கள், 21 ஜூன், 2010

'தேவன்’:கண்ணன் கட்டுரை -1

அவனவன் வேலையை...
தேவன்


ஒரு சின்னப் பையன் எழுதுவது போன்ற நடையில் பல அரிய விஷயங்களை 'சின்னக் கண்ணன்' என்ற புனைபெயரில் விகடனில் தேவன் எழுதி வந்தார். 'கண்ணன் கட்டுரை' என்ற தலைப்பில் வெளியான அவை 50-களில் பலரைக் கவர்ந்தன. நூல் வடிவில் வெளியாகாத ‘தேவனின்’ கட்டுரைத் தொடர்களில் இது ஒரு மிகச் சிறந்த ஒன்று என்று நான் நினைக்கிறேன். கோபுலு அவர்களும் இதற்கு விசேஷமாகப் படங்கள் வரைந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
======

(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)
(17.2.52)
எங்க பள்ளிக்கூடத்து வாத்தியார் பெரம்பை ஆட்டி, ''அவனவன் வேலையை அவனவன் செய்யுங்களேண்டா! உருப்படறதுக்கு வழி பிறக்கும்''னு அடிக்கடி கூச்சல் போடறார். நாலு பேர் கவனிக்கணும்னா இவர் யோசனை பலிக்காது! பள்ளிக்கூடத்துப் பசங்களானாலும் சரி, பார்லிமென்ட்லே ஒக்கார்ர மந்திரியானாலும் சரி... பேர் எடுக்கணும்னா பிறத்தியான் கார்யத்தைச் செய்யணும். அப்பத்தான் பத்ரிகேலே அவா பேர் பெரிசா வரும்.

இல்லாட்டா, கொல்ருல் வெச்சுண்டு மந்திரிகள் எதுக்காக அஸ்திவாரக் கல் நடறா? கொத்து மேஸ்திரியைவிட மந்திரி நன்னாக் கட்டி விடுவாரோ? பெரிய இஞ்சினீர், நாடகத்திலே நடிச்சுட்டு எத்தனை புகழ் வாங்கி விடறார்! அப்புறம், ஒரு நெஜ வக்கீல் சங்கீதக் கச்சேரி பண்ணிட்டு எல்லார்கிட்டேயும் ஸர்ட்டிபிகேட் வாங்கிடறார். பசங்க மாத்திரம் அவனவன் பாடத்தைப் படிச்சுண்டு இருந்துட்டால் யார் கவனிக்கப் போறா? பக்கத்துப் பையன்கள்கிட்டே பேசினாலும் வாத்தியார் கவனிச்சு, முதுகிலே ரெண்டு அறையாவது வைப்பார்!

எதுக்குச் சொல்ல வந்தேன்னா, ஒலகம் அப்படி ஆயிடுத்து. நாய் மனுஷனைக் கடிச்சா, அதைக் கேட்கிறவா இல்லை; மனுஷன் நாயைக் கடிச்சுட்டா, விழுந்து விழுந்து பார்க்கறா. பத்திரிகையிலே எழுதிப்பிடறா. ஆகையினாலே, பட்டணத்திலே அவனவன் வேலையைச் செய்றவனைக் காண்றது, பலசரக்குக் கடையிலே காப்பிக் கொட்டையைக் காண்ற மாதிரி அரிதா ஆயிப் போச்சு! கேளுங்கோ இந்தக் கதையை!

முந்தா நாள் தேனாம்பேட்டை யிலே யாரோ ஒருத்தர் வீட்டுக் கொழாயிலே ஜலம் வரதா ஒருத்தன் சொன்னான்னு ஜனங்கள் திரள் திரளா அதை வேடிக்கை பார்க்கப் போனா. 'பொழலேரியிலேயே தண்ணியில்லாத போது, கொழாயிலே வருமா?'னு எங்கப்பா மாத்திரம் போகல்லே. நானும் மாமாவும் மாத்திரம் போனோம்.

அந்தத் தேனாம்பேட்டை வீட்டுக்காரர் எங்களையெல்லாம் பார்த்து, ''யாரோ வெஷமக்காரன் பொய் வதந்தி கிளப்பியிருக்கான். ஐயோ பாவம்! இவ்வளவு தூரம் நடந்து வந்தேளே!''ன்னு வருத்தப் பட்டு, கண்ணாலே ஜலம் விட்டார். அப்றம் அவரை விசாரிச்சதிலே, அவரோட ஆறு பிள்ளைகளும் பத்திரிகைக்கு எழுதி பிரபலமான பேர்னு பெருமையாச் சொல்லி, அதை விவரமாவும் மாமாவிடம் சொன்னார்.

''மூத்தவன் இப்போ டெல்லியிலே அரசியல்லே இருக்கான்; ரொம்ப கெட்டிக்காரன். அவன் கையைச் சொடக்கினான்னா மந்திரி சபையே கலைஞ்சுடும்'' னார். ''அடிக்கடி சொடக்கு வாரோ?''னு கேட்காம, ''எழுத்தாளர்னேளே!''ன்னு கேட்டேன்.

''ஓ! அவன் அரசியல் கட்டுரைகள் அடிக்கடி பத்திரிகையிலே பிரபலமா வருதே! இரண்டாவது பையன் கிரிக்கெட்லே யமனே தான்! அவன் 'ஸ்போர்ட்ஸ்' கட்டுரைகள் வாராவாரம் கொடுத் துண்டு வரான், ஒரு தினசரிலே!''

''பேஷ், பேஷ்!''

''மூன்றாவது பெண்; புக்காத்திலே இருக்காள். வாரப் பத்திரிகையிலே 'சித்தியின் சிங்காரம்'னு ஸ்திரீகள் பகுதி, அவள் பேரிலே தவறாமே வரது...''

''சபாஷ்!''

''நாலாவது பயல் கார்ப்பரேஷன் ஜனன - மரண ஆபீஸ்லே குமாஸ்தா. சக்கைப் போடு போட றான். ஒன்பது பத்திரிகைகளுக்கு அவன் வார பலன் பகுதி எழுதறான். நல்ல கற்பனை போங்கோ! ஒரு பத்திரிகையிலே வராப்லே இன்னொண்ணுக்குக் கொடுக்க மாட்டான். புதுசு புதுசா இருக்கும்.''





''பலே, பலே! அப்றம்..?''

''அஞ்சாவது பையன் நடிகனா இருக்கான். போன வாரம் கூட அவன் கட்டுரை 'சோக நடிப்பைச் சிரிக்காமல் செய்ய வேண்டுமா?'ன்னு பார்த்திருக்கலாமே!''

''ஆறாவது பையனும்...''

''இல்லை; பெண் அவள். அவளுக்கு ஏழு குழந்தைகள். இதோடே அவள் 'சுக வாழ்வு'ன்னு வைத்தியப் பகுதி ஒண்ணு விடாமே...''




மாமா ரொம்பச் சந்தோஷப்பட்டுண்டு, ''போறது! உங்க பசங்க அத்தனைபேருமே பத்திரிகை மூலம் பிரபலமாயிருக்கா!''ன் னார்.

அவர், ''இன்னொரு பய இருக்கான். அவன்தான் பிரயோசனமில்லே''னு சொன்னார். அப்போ அவர் மொகம் அப்பா 'மார்க்கெட்' லேருந்து வாங்கிண்டு வர கறிகாய்கள் மாதிரி ஒரேமிக்க வாடி வதங்கிப் போயிருந்தது.

''ஏன் ஸார்! அவன் என்ன பண்ணிண்டிருக்கான்?''

''அவனைக் கவனிக்கற பேர் இல்லை ஸார்! ஒரு பத்திரிகையிலே உதவி ஆசிரியரா இருக்கான். அவன் வேலையைச் செஞ்சுண்டு வரான். அவனாலே ஒரே ஒரு ஒபயோகம்... அவன் அண்ணன் - அக்காமார்களுக்குத் தவறாமே கட்டுரைகள் எழுதித் தந்துடறான். வேற ஒரு ப்ரயோஜனமுமில்லை, ஸார்!'' அப்படீன்னார் அவர்.

ஆகையாலே, இந்தக் காலத்திலே அவன் அவன் தொழிலைச் செஞ்சு பிரபலமாகி விடறது என்கிறது மட்டும் கிடையாது! அப்படி ஆயிடுத்து ஒலகம்!

[நன்றி: ஆனந்த விகடன்; ஓவியம் :கோபுலு ]


தொடர்புள்ள சில பதிவுகள் :

கண்ணன் கட்டுரை -2

கண்ணன் கட்டுரை -3

கண்ணன் கட்டுரை -4

தேவன்: படைப்புகள்


தேவன் நினைவுகள்

மிஸ்டர் ராஜாமணி : கதைகள்

தேவன்’: துப்பறியும் சாம்பு

புதன், 12 மே, 2010

`தேவன்’ நினைவு நாள்: மே 5, 2010

தேடித் தேடி ... 
பசுபதி     




ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 5-ஆம் தேதி வந்தவுடன் நான் உஷாராகி விடுவேன்; அடுத்த சில நாள்களில் சென்னையிலிருந்து வரும் ஆங்கில, தமிழ் நாளிதழ்களை ஊன்றிப் படிப்பேன். எங்கேயாவது , ‘தேவன்’ தினத்தைப் பற்றிய தகவல்களோ, படங்களோ இருக்குமா என்று தேடுவேன். ‘ஹிந்து’ பத்திரிகை என்னைக் கைவிடாது! ‘ஹிந்து’ நிருபர் சுகந்தி கிருஷ்ணமாச்சாரி ஒரு தீவிர ‘தேவன்’ விசிறி. அதனால் ஒவ்வொரு வருடமும் ஒரு பத்தி எழுதி இருப்பார். அதைப் படித்தவுடன், எனக்கு எப்போதும் தோன்றுவது ஓர் எண்ணம் தான்:


அடடா, ஒரு வருஷமாவது நான் இந்த ‘தேவன்’ தின விழாவில் கலந்து கொண்டு, மற்ற ’தேவன்’ ரசிகர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டாதா என்று ஏங்குவேன். இந்த வருடம், எனக்கு அப்படிப் பட்ட ஒரு அற்புதமான வாய்ப்புக் கிட்டியது! கீழே இருக்கும் ‘தேவன்’ தின அழைப்பிதழைப் பாருங்கள்! புரியும்!



வேறு ஒரு காரணத்திற்காகச் சென்னை சென்றிருந்த என்னைத் ‘தேவன்’ விழாவிற்குத் தலைமை தாங்கும்படி பிரபல எழுத்தாளர் சாருகேசி, ‘தேவன்’ அறக் கட்டளையின் சார்பில் கேட்டுக் கொண்டார். கரும்பு தின்னக் கூலியா? மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன். ‘இணையத்தில் தேவன்’ என்ற தலைப்பில் பேசுவதாகவும் சொன்னேன்.



முதலில், நிஷா ராஜகோபாலன் அழகாக முருகன் மேல் ஒரு விருத்தம் பாடினார். பிறகு உரைகள், மெடல்கள் வழங்கல். ( 'தேவன்' மெடல் பெற்ற சந்துரு சிக்கில் குருசரணின் தந்தை என்பதை அப்போதுதான் அறிந்தேன்.) கடைசியாக, சாருகேசி எழுதிய ஒரு சிறு நகைச்சுவை நாடகம்.





அன்று எடுக்கப்பட்ட சில படங்களைப் பார்க்க:

https://photos.google.com/album/AF1QipOxezJToX9_SRjial5fXiAmF4NA0DnB-TbVLW8A




தேவன் தின நிகழ்ச்சியில் நான் படித்த என் கவிதை:

===============


தேடித் தேடி
பசுபதி

எடுப்பு

ஆய்வுகளில் தேடித் தேடிக் களைத்ததுண்டு
ஆரோக்யம் தேடித் தேடி இளைத்ததுண்டு
இணையத்தில் தேடித் தேடிச் சலித்ததுண்டு
இலக்கியம் தேடித் தேடி முழித்ததுண்டு.
பலகாரம் தேடித் தேடிப் புசித்ததுண்டு
பண்ணிசையைத் தேடித் தேடி ரசித்ததுண்டு.
பதவிகளைத் தேடித் தேடிப் பறந்ததுண்டு
பட்டங்கள் தேடித் தேடி விரைந்ததுண்டு
தனக்குள்ளே தேடித் தேடித் தளர்ந்ததுண்டு
கனவுகளில் தேடித் தேடி எழுந்ததுண்டு
ஏமாற்றம் தந்தவைதாம் ஏராளம் தேடல்கள்
என்றாலும் இன்சுவையை எழுப்பியவை சிலவுண்டு
தேடுபொருளில் ஆர்வமும் திருப்திதந்த விளைவும்
இளமையில் கண்டதுபோல் இனிமேலும் வருமோ?
தெய்வத்தைக் கண்டகதை தேசத்தில் ஏராளம்
'தேவ'னை விண்டகதை தெரிந்துகொள்வீர் என்மூலம்!

தொடுப்பு


தேடித் தேடிச் சிறுவயதில் படித்தேன் . . .
திகில்கதைகள் மர்மங்கள் தெவிட்டாத படித்தேன்
திவான்கள் தீரர்கள் திருடர்கள் சீலர்கள்
சவால்கள் சாமர்த்யம் சாகசங்கள் நிறைகதைகள்
நாடோறும் நகம்கடித்து நான்படித்த நாவல்கள் . .
ஞாபகத்தில் வருகின்ற நனவோடைக் குமிழிகள் .


வடுமாங்காய் உணவிற்கு வழங்கிடுமோர் காரம்
வடுவூரார் எழுத்துகளோ வாசிப்பின் சாரம்
ஆரணியார் நாவல்கள் அனைத்தும்அ பாரம்
ஆங்கிலக் கதைகள்தாம் அடியஸ்தி வாரம் !:-))
அன்றைக்கென் வாழ்க்கைக்கு அவசியங்கள் எனத்துடித்தேன்
இன்றைக்கு நினைத்தாலும் எனக்கது நகையூட்டும்!

நடைபாதைக் கடைகளென்ன? நண்பர்களின் மனைகளென்ன?
விடாப்பிடியாய் தேடிடுவேன் வேண்டிய நூல்களெல்லாம்
அச்சேறாத் தொடர்களை அலைந்து’மூர் மார்க்கெட்டில்’
தேடுகையில் கண்டுபிடித்தேன் தேவனின்  எழுத்தில் . .

மெல்லிய நகைச்சுவையும் விஷயத் தெளிவும்
கற்பனை வளமும் கதைசொல்லும் பாங்கும்
பாத்திரப் படைப்பும் பன்முகப் பார்வையும்.
உள்ளத்தைத் தொடுகின்ற உருக்கமும் பக்தியும்.
நடுத்தரக் குடும்பத்து நடைமுறைச் சிக்கல்கள்
அத்யாயத் தொடக்கத்தில் அசத்திவிடும் மேற்கோள்கள்
ஆடம்பரம் அற்றவோர் ஆற்றொழுக்கு எழுத்து....
பசுமரத் தாணிபோல் பதிந்திடும் பாத்திரங்கள்....

துப்பறியும் கதைகள்மேல் சொல்லவொணா மோகம்
இப்போதும் தொடர்கிறது எனக்கந்தத் தாகம் !. . .

சாம்புவையும் சந்த்ருவையும் சட்டென்று மறப்பேனா?
சாம்பு(4)புகழ் பரப்பத் தனியனொன்று வேண்டாமா?

{வெண்பா}


காகம் அமர்ந்த கணத்தில் மரம்விட்டு
வாகாய் விழுங்கனியை வைத்துப்பின் -- ஆகமது
நோகாமல் துப்பு நொடியில் துலக்கிடுவான்
சாகா வரம்பெற்ற சாம்பு
.

(ஆகம்=உடம்பு)


 சந்துரு வை மறக்காமல் ‘சபாஷென்று சொல்வோமே!

துருவும் கூர்மை விழிமுகம்;
. துப்பறி தொழிலில் தனிரகம்;
இரும்புக் கரங்கள் பேசினால்
. எதிரி மீண்டும் எழுந்திரான்
தெருச்சீ ராளம் புசிப்பான்;
. திருவாய் மொழியும் ரசிப்பான்
திருடும் நபர்க்குச் சத்துரு;
. தேவன் படைத்த சந்துரு!


கோபுலுவின் சித்திரங்கள் குதித்துவரும் கதைகளிலே!
மேன்மையான அப்படங்கள் மேலதிக ‘போனஸ்’தான் !

வித்தகர் கோபுலு -வுக்கு வெண்பா ஒன்றிதோ!

(வெண்பா)
Gopulu 

நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும்,
ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன்
சோபிக்கும் சித்திரமும் தோமிலா ஹாஸ்யமிடும்
கோபுலு ஓவியர் கோ.


முடிப்பு

சென்னைசென்று தேவனைத் தேடிப் பிடிப்பேன்
தினமொரு நூலெனத் திரும்பவும் படிப்பேன்.
நினைவலையில் மூழ்கி நெருக்கடிகள் மறப்பேன்
முந்துநகைச் சுவையாலே முதுமைமுறி யடிப்பேன்!


==

தொடர்புள்ள சில பதிவுகள்:

தேவன் படைப்புகள்

’தேவன்’: துப்பறியும் சாம்பு

தேவன் நினைவுகள் -1

தேவன் நினைவுகள் -2

பின் குறிப்பு:
’தேவ’னைப் பற்றி என் நண்பர்கள் சிலர் மறுமொழியாய் எழுதிய  கவிதைகள்:

1)
சந்துரு வேதாந்தஞ் சாம்புஜகந் நாதனென்றுன்
சிந்தனை ஈன்றபல சேய்களாய் - வந்தென
வந்தணைக்கும் மாண்பெழுத்தாய் வைகுவாய் தேவா!நீ(டு)
அந்தமிழ் அன்பர் அகத்து.


வந்து என=காற்றைப் போல்; வைகுதல்=தங்குதல்; அம்=அழகு; அகம்=மனம்

சந்துரு=சி.ஐ.டி சந்துரு; வேதாந்தம்=மிஸ்டர் வேதாந்தம்;
சாம்பு=துப்பறியும் சாம்பு; ஜகந்நாதன்=ஜஸ்டிஸ் ஜகந்நாதன்


 வெண்பா விரும்பி


========
2) 
வானாளும் தேவர்க்கும் வாய்க்காப் பெரும்புகழைப்

பேனாக்கொண்(டு) இத்தேவன் பெற்றானே - நானிலத்தில்

ஆனந்த மாய்விகடன் ஆசிரிய னாய்நம்மைத்

தான்களிக்கச் செய்திட்ட தால்.

.. அனந்த்

3) 
தேடிப் படித்திடு தேவன் படைப்புகள்!
வாடிப் பறந்திடும் வாட்டங்கள்-- கூடும்
நகைச்சுவை; வெல்லும் நலிவுதரும் மூப்பை;
மிகையில்லை நம்கவிச்சொல் மெய்.


--- தங்கமணி.

4) 
பசுபதியாரின் தேவன் விழாக் கவிதைக்குப் பின்னூட்டம்

ஓவியர்கோ கோபுலுவின் கைவண் ணத்தில்
   ஒப்பில்லா உருவத்தில் உலவும் ஹாஸ்யக்
காவியத்து நாயகனாம் சாம்பு வைநாம்
   களித்ததெலாம் கவிதையிலே வடித்துத் தந்து
பூவிரியும் மணங்காட்டிப் பொழிந்த வண்ணம்
   புவியோரின் உள்ளத்துக் கோயில் கொண்ட
தேவன்புகழ் செப்பியநல் வேகம் கண்டேன்
   தேன்போலே மரபங்கே இனிக்கக் கண்டேன்.

எப்படியும் வெற்றிபெறும் சாம்பு வைப்போல்

  இதயத்தில் என்றென்றும் ஆட்சி செய்யும்
துப்பறியும் சந்துருவின் தோற்றம் கண்டேன்
  சொல்லிநின்ற கதைகளிலே உள்ள தெல்லாம்
அப்படியே எடுத்துரைததுக் கவியால் செய்த
  ஆலயத்தில் பொருத்தமுற அன்பாய் நீங்கள்
செப்பரிய விதமாகத் தேவன் தம்மைச்
  செகமகிழ நிறுவியதைக் கண்டேன் கண்டேன்!

தேவனின் கோமதியின் காதலன்

கோடிமுறை படித்தாலும் மீண்டும் மீண்டும்

  கோமதியின் காதலனைப் படிக்கத் தூண்டும்!
ஓடியாடி உழைத்துப்பின் ஓய்ந்தி ருக்கும்
  உள்ளத்தில் புத்துணர்வு வேண்டு மென்றால்,
தேடிவந்து தேவன்கை தீட்டி யுள்ள
  தெவிட்டாத அமுதமிதைத் தீண்டு வீரே:
நாடிவந்து நகைச்சுவையாள் நன்க ணைத்து
  நலம்பலவும் நமக்களிக்கக் காணு வீரே!

காதலது நமக்கிலையேல் சாதல் என்றே

  கவிகுயிலாய் மாறிவந்து கூவி நின்றான்!
காதலதால் சாவதையே கவிஞர் பல்லோர்
  காவியமாய்ச் செய்துள்ள புவியில் அந்தக்
காதலதே நகைச்சுவையைக் காதல் செய்து
  கைபிடித்து நடப்பதையே காட்டு கின்றார்,
பூதலத்தில் சிரித்தென்றும் வாழ்வ தற்குப்
  புதினமிதைச் செய்தளித்ததேவ தேவன்!

துப்பறியும் சாம்பு

இதிகாச புராணத்தை மீண்டும் மீண்டும்

  எல்லோரும் படிப்பதுவே இயற்கை ஆகும்,
அதிலொன்றும் அதிசயமே இல்லை என்பேன்,
  அவையூட்டும் சுவையென்றும் தனியே தானே!
புதிர்நீக்கும் சாம்புபுகழ் பேசும் காதை
  போதெல்லாம் படித்தாலும் போதை ஊட்டும்
புதிரான கதைக்கொத்தாய்த் திகழ்வ தென்னே,
  புதுமையிதைப் புவியிலெவர் விளக்கு வாரே!

சிவ சூரியநாராயணன்.

======

'ஹிந்து'வில்  இந்நிகழ்வைப் பற்றி வந்த கட்டுரை:
[ courtesy: The  Hindu ]

FRIDAY REVIEW

Devan popular in U.S.

 

MAY 14, 2010 00:00 1ST

UPDATED: NOVEMBER 19, 2010 12:56 1ST

 

SUGANTHY KRISHNAMACHARI

Two artists were honoured at a function held in the writer's memory.

Dr. S. Pasupathy, Professor Emeritus, University of Toronto, Canada, and a distinguished alumnus awardee of IIT Madras, expressed his happiness over the large number of fans of the great writer Devan among Tamilians in North America. He was the chief guest at the Devan Memorial function, held recently at Sivagami Pethachi auditorium. At the event, two theatre artists K.S.N. Sundar and V. Chandru were honoured.

Speaking on the presence of Devan, one of the greatest of 20th century Tamil writers, known for his witty stories, on the internet, he said that there were many links to articles on the writer published in newspapers and magazines. Popular blogs like 'Idli Vadai' and 'Koottanchoru' have essays on him. There are websites, like that of Bhagyam Ramaswamy, for instance, that have his out-of-print stories such as 'Mr.Rajamani; his first short story.

Poems on Devan

Devan's works enjoy so much popularity, that poems on him have been written too. One of them is by a professor of mathematics, and another is by Ananthanarayanan, a Professor in McMaster's University, Canada. Pasupathy himself has written a poem on the books he enjoyed reading, and quite a bit of it is devoted to Devan. Titled 'Thedi Thedi; it speaks of how Pasupathy would go book hunting, for there was a time when Devan could only be found in the hearts of his admirers, but not in print.

Luckily Devan's novels and some short stories are now available, but the others must be published too, at least before his centenary year in 2013, Pasupathy said.

 ======

 தொடர்புள்ள பதிவுகள்: