சனி, 15 டிசம்பர், 2012

சங்கீத சங்கதிகள் - 1

சங்கீத சீசன் 1953: ஆடல் பாடல் -1 




எம்.கே.தியாகராஜ பாகவதரின் தமிழிசைக் கச்சேரியின் சில பகுதிகளை சென்னை வானொலி ஒலிபரப்புகிறது.

2009-இல் பத்மஸ்ரீ விருது வாங்கப்போகும் டாக்டர் ஜான் ரால்ஸ்டன் மார்   வித்வத் சபையில் ஒரு பிரசங்கம் செய்கிறார்.

அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் எதிரில் உட்கார்ந்திருக்கும் மந்திரி ஸி. சுப்ரமணியத்தைப் பார்த்தவாறே “ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே” என்று பாடுகிறார்.

இவையெல்லாம் எப்போது நடந்தன என்று கேட்கிறீர்களா? 1953- 'சீஸன்’ .
 புல்லாங்குழல் இசைக்கலைஞர் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளைக்குச் ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப் பட்ட ஆண்டு.

ஐம்பதுகளில் ‘ஆனந்தவிகடனில்’ ஆடல் பாடல் என்ற தலைப்பில், சென்னையில் நடக்கும் இசை விழாக்கள் பற்றிப் படங்களும் , கட்டுரைகளும் வாராவாரம் வரும். அவற்றில் சிலவற்றை  உங்கள் முன்வைக்கிறேன்.

விகடனில் அந்த 53 சீஸனில் வந்த முதல் ‘ஆடல் பாடல்’ கட்டுரை இதோ!










மேலும் அந்த ஆண்டில் வந்த சில கட்டுரைகள் உள்ளன ....

[நன்றி; விகடன்]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
(தொடரும்)

தொடர்புள்ள பதிவுகள்:



சீஸன் 53: 2

சீஸன் 53 : 3

சீசன் 54 : 1

சீஸன் 54: 2

சீஸன் 54 -3

மற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்



10 கருத்துகள்:

sapthagireesan சொன்னது…

Anbulla Thiru Pasupathy Avarkalukku,
Vanakkam pala.
Thangal muyarchi migavam Aanadamaga ulladu.
Kum Kamala Natanathai Rasikkum Pugaippadathil
Mudal Varisaiyil MGR ullaar.
Mikka Nandri
Anbulla
Sapthagireesan

Pas S. Pasupathy சொன்னது…

>>Kum Kamala Natanathai Rasikkum Pugaippadathil
>>Mudal Varisaiyil MGR ullaar

Thanks for identifying MGR! As you mentioned in your private mail, the fourth person from the left in that picture may be Minister Kakkan...

அவனிவன் சொன்னது…

அன்பின் பசுபதி அவர்களுக்கு:

உங்களின் பன்முக ஆர்வங்களும், செயல்பாடுகளும் உண்மையிலேயே வியக்கத்தக்கவை. உங்களை 25 வருடங்களுக்கு மேலாக அறிந்திருந்தும், நெருங்கிப் பழகாமல் போய்விட்டேனே என்று வருந்துகிறேன். உங்களிடமிருந்து நிறைய பெற்றிருக்கலாம், பெருகியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறேன். இந்த வருடம் சுலோசனா, கிருஷ்ணமூர்த்தி இவர்களை நாரதகான சபாவில் பார்த்தேன், நான டொரோண்டோ வந்த சில நாட்களை நினவுகூர்ந்தேன். புதுவருடத்தில் உங்களோடு பேசவேண்டும், நிறைய கற்றுக்கொள்ளவேண்டும். இசை தொடர்பாகவும்தான்! ஆனந்தவிகடன் பக்கங்களைப்படிக்கும்போது, இன்றைய அகாடமி நடைமுறைகளைப் போல்தான் இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது. உங்களிடம், என்னுடைய பெரியப்பா மறைந்த கே.ஆர்.குமாரசுவாமி அவர்களின் இசையைப் பற்றிய குறித்த விமரிசனனங்களோ, அல்லது தகவல்களோ இருக்கிறதா? அவருடைய சகோதரர் கே.ஆர்.கேதாரநாதனையாவது சிலர் அறிந்திருக்கின்றனர். நான் திரும்பி வந்தபிறகு உங்களைக் கூப்பிடலாமா?

Pas S. Pasupathy சொன்னது…

நிச்சயம் பேசலாம். உங்கள் பெரியப்பா பற்றி ..நினைவு வைத்திருக்கிறேன். ஏதாவது தகவல் கிட்டினால் இடுகிறேன். இந்தியாவில் இருந்திருந்தால் மேலும் தகவல்கள் சேகரித்திருப்பேன். என்ன செய்வது? என்னிடம் இங்கு இருக்கும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். தற்போது நான் செய்யக் கூடியது அவ்வளவுதான்....

பாலா திரு சொன்னது…

Dear Sir,
I do not know how to express my sincere thanks to you for these articles. You have taken me to the yester years. I am happy to inform you that I have read these articles when it was published. I remember those days.
with warm regards,
Balasubramanian TV

Pas S. Pasupathy சொன்னது…

@bala

மிக்க நன்றி. மீண்டும் வருக!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

ஐயா!
நான் பிறக்குமுன் நடந்தவை, படிக்க சந்தோசமாக உள்ளது. இந்த திருப்பாம்புரம் சுவாமிநாதபிள்ளை- சீர்காழி கோவிந்தராஜனின் குரு என நினைக்கிறேன். அவர் ஒரு பாடலில் "வேய்ங்குழல் வேந்தன், திருப்பாம்புரத்தான்" எனப் பாடுவார்.
மிக்க நன்றி

Pas S. Pasupathy சொன்னது…

ஆம், சீர்காழியின் குரு அவரே. குருபக்தி மிகவும் கொண்ட சீர்காழி தன் குருவின் பெயரில் ஓர் அறக்கட்டளையை நிறுவினார் .

பெயரில்லா சொன்னது…

How many interesting, very rare Articles, you have gathered sir! Humble respects for magnanimously sharing so many facts about countless great Artists. Very enjoyable and so much educative. We are hugely indebted to you sir. Indra Srinivasan.

Pas S. Pasupathy சொன்னது…

Thanks, Indra Srinivasan.