சனி, 25 மே, 2013

முருகன் -2

சென்னை நகர் மேவும் சண்முகத் தெய்வமணி 
குருஜி ஏ.எஸ்.ராகவன் 

’கல்கி’ யில் 2002-இல் வந்த ”தலந்தோறும் தமிழ்க்கடவுள்” என்ற கட்டுரைத் தொடரில் 29-ஆவது கட்டுரை இது. ஓய்வுக்குப் பின் டில்லியிலிருந்து ’சென்னை நகர் மேவிய’ ஒரு குருமணி எழுதிய கட்டுரை.



[ நன்றி : கல்கி ] 

ஞாயிறு, 19 மே, 2013

திருப்புகழ் - 5

குராவடிக் குமரன் 
குருஜி ஏ.எஸ்.ராகவன் 

அண்மையில் ( 17 மே, 2013) காலமான குருஜி ஏ.எஸ்.ராகவன் அவர்களுக்கு நினைவஞ்சலியாக அவர் ‘கல்கி’ யில் எழுதிய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன். 2002-இல் அவர் ‘தலந்தோறும் தமிழ்க்கடவுள்’ என்ற தொடரைக் ‘கல்கி’யில் எழுதினார்; அத்தொடரில் வந்த ஒரு கட்டுரை இது. 

குருஜி ராகவன் கனடாவிற்கு 1988-இல் வந்தபோது  அவருக்கு டொராண்டோ திருப்புகழ் அன்பர்கள் கொடுத்த வரவேற்பில் நான் படித்த ஒரு கவிதை ( சில சிறு மாற்றங்களுடன்) :

திருப்புகழுக் கிசைசேர்த்த மாசாதகன்
  திருச்செந்தூர் தீரனே கதியென்பவன்
முருகனது புகழ்பரப்பும் பணியேற்றவன்
  மனமுருகப் பண்ணிசைக்கும் குணக்குன்றவன்
திருப்புகழ் அன்பர்களுக் குயிரானவன் 
  திருமுருக பக்தியே சாறானவன் 
அறுமுகன் புகழ்பாட அசராதவன் 
  ஆறுமுக மங்கலத்து ஸ்ரீராகவன்  

இதோ அவர் எழுதிய ஒரு கட்டுரை.




[ நன்றி: கல்கி ] 

சனி, 11 மே, 2013

பாடலும் படமும் - 5: திருப்புகழ்க் காட்சி

சித்திரம் வரையும் செவ்வேள்


இன்றைய ‘யூட்யூப்’ உலகில் , ஒரு காணொளிக் காட்சியைப் பார்த்து, “சித்திரம் பேசுதடீ” என்று பாடினால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால், இத்தகைய  “பேசும் படத்தை” அன்றே முருகன் வரைந்தார் என்று அருணகிரிநாதர் பாடுவது ஒரு கவித்துவமான கூற்று அல்லவா? அந்தக் காட்சியைக் காட்டும் ஒரு சித்திரத்தைப் பார்ப்பதும் அழகுதானே? ஓவியங்களுக்குகந்த இத்தகைய மனங்கவரும்  பல காட்சிகள் திருப்புகழில் கொட்டிக் கிடக்கின்றன!

“ கொந்துவார்” என்று தொடங்கும் திருத்தணித் திருப்புகழில் வரும் ஒரு பகுதி:



செண்ப காடவி யினுமித ணினுமுயர்
      சந்த னாடவி யினுமுறை குறமகள்
      செம்பொ னூபுர கமலமும் வளையணி     புதுவேயும்
இந்து வாண்முக வனசமு ம்ருகமத
      குங்கு மாசல யுகளமு மதுரித
      இந்த ளாம்ருத வசனமு முறுவலு               மபிராம
இந்த்ர கோபமு மரகத வடிவமு
      மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு
      மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய        பெருமாளே.


இதன் பொருள் ( ‘தணிகைமணி’ டாக்டர் வ.சு. செங்கல்வராய பிள்ளை அவர்களின் உரையிலிருந்து ) :


செண்பகக் காட்டிலும், (தினைபுனத்துப்) பரண் மீதும், உயர்ந்த சந்தனக் காட்டிலும் உறைந்த குறமகள் (வள்ளியின்) செம்பொன்னாலாய சிலம்பணிந்த மலரடிகளையும், வளையல்கள் அணிந்த புதுமூங்கில் அனைய தோள்களையும் 

சந்திரனை ஒத்த  (குளிர்ந்த) ஒளி வீசும் முகமென்னும் தாமரையையும், கஸ்தூரி, குங்குமம் இவை அணிந்த மலையன்ன இரண்டு கொங்கைகளையும், இனிமை இன்பம் தருவதான பண் இந்தளம் ( நாதநாமக்கிரியை) போன்ற அமிருத மொழிகளையும், பற்களையும், அழகுவாய்ந்த 

தம்பலப் பூச்சி (இந்த்ர கோபம்) போன்ற (சிவந்த) வாயிதழ்களையும், பச்சை நிறத்தையும், இந்த்ர சாபம் (இந்த்ர வில்- வானவில்) போன்ற புருவத்தையும், இரண்டு காதணியாம் குழைகளைத் தூக்குகின்ற இந்த்ர நீலம் ( நீலோற்பல மலர்)  போன்ற கண்களையும் மடலின் கண் எழுதி (மகிழ்ந்த) பெருமாளே! 

வள்ளியின் பல அங்கங்களை வரைவது சிரமமல்ல ;  

ஆனால் எழுதுதற்கு அரிதான வள்ளியின் “ இந்தளாம்ருத வசனத்தையும்” எழுதினார் என்கிறார் அருணகிரியார். இது முருகன் திறத்தைக் காட்டுகிறது. அவர் நினைத்த காரியங்கள் எவற்றையும் நிறைவேற்ற வல்லவர்.”   

என்கிறார் தணிகைமணி.

இந்தக் கருத்தை வலியுறுத்த, புறநானூற்றில் உள்ள ஒரு பாடல்(56) ஆசிரியர்  அரசனைப் பார்த்துச் சொல்லும்  ஓர் அழகான மேற்கோளையும் நம்முன் வைக்கிறார் தணிகைமணி.

முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின்! “  

ஆம், “ நினைப்பதை  முடிப்பதில் நீ முருகனைப் போலிருக்கிறாய்” என்று அரசனைப் புகழ்கிறார் அந்தப் பாடல் ஆசிரியர்! 

ஓசை முனிவர் அருணகிரியின் பாடலையும், புறநானூற்றுப் பாடல் மேற்கோளின் அழகையும்,  திருப்புகழ் அன்பர்களின் வெள்ளி விழா மலரின் அட்டைப்படத்தில் வந்த அழகிய சித்திரத்துடன் சேர்ந்துப் பார்த்து, ரசித்து  மகிழலாம்! 



செவ்வாய், 7 மே, 2013

'தேவன்’: போடாத தபால் - 3


போடாத தபால் - 3

தேவன் 

ஹிட்லரின் கார் டிரைவருக்குச் சென்னை கார் டிரைவர் ஒருவர் 50-களில் எழுதிய கடிதத்தைப் படித்திருக்கிறீர்களா?

’தேவன்’ தன் கையெழுத்தே இல்லாமல் பல தொடர்களையும் கட்டுரைகளையும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார். அவற்றில் ‘போடாத தபால்’ என்ற தொடரும் ஒன்று. 50-களில் இருந்த நம் நாட்டு நிலைமையை அறிந்து கொள்ள இந்தத் தொடர் மிகவும் உதவும். அவருடைய மெல்லிய நகைச்சுவையிலிருந்தே ‘தேவ’னின் முத்திரையும்  தெரியும்.

( இன்னும் அச்சில் வராத பல தேவன் படைப்புகளில் இதுவும் ஒன்று.)




ஒரு கேள்வி: இந்த முதல் தபாலில் குறிப்பிடப்பட்ட சென்னை சட்டசபை மெம்பர் யார்?  யாருக்காவது தெரியுமா? ( இது 50-களில் எழுதப்பட்ட கட்டுரை...)




[நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

போடாத தபால் -1

போடாத தபால் -2 




சனி, 4 மே, 2013

ஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்! -6

முந்தைய பகுதிகள்

பகுதி 1பகுதி 2பகுதி 3பகுதி 4பகுதி 5



(தொடர்ச்சி)

இந்தக் கடைசிப் பகுதியில் ஷெர்லக் ஹோம்ஸின் வீட்டுச் சொந்தக்காரி ( landlady) மிஸ்ஸஸ் ஹட்சனை ( அமிர்தம்மாள்) நாம் சந்திக்கிறோம். இந்தக் கதையில் ஒரு முக்கியப் பணியாற்றும் அமிர்தம்மாள் மற்ற சில  ஷெர்லக் கதைகளிலும் வருவார். பி.பி.சி நிறுவனம் எடுத்த பல ஷெர்லக் தொலைக் காட்சித் தொடர்களில் இவர் ஒரு முக்கியப் பங்கு பெற்றிருக்கிறார்.














செவ்வாய், 30 ஏப்ரல், 2013

ஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்! -5

முந்தைய பகுதிகள்:
பகுதி 1 , பகுதி 2பகுதி 3பகுதி 4

(தொடர்ச்சி)

இந்தக் கதையின் வில்லனை நாம் இப்போது சந்திக்கப் போகிறோம்.

மூலக் கதையில் கர்னல் மொரான்; தமிழில் கர்னல் மாரப்பன்.  ஏமநாதனின் சீடன். ( முன்பு பிரிட்டனின் இந்தியப் படையில் பணி புரிந்தவன்; பெங்களூர் பயனீர்ஸ் ( Bangalore Pioneers) -இல் இருந்தவர் என்றெல்லாம் எழுதியிருக்கிறார் கானன் டாயில். இமயமலையில் வேட்டையைப் பற்றி ஒரு நூல் எழுதியவர். லண்டனில் உள்ள ‘ஆங்கிலோ-இந்தியன் க்ளப்பில் ஓர் உறுப்பினர்! எப்படி வில்லனின் இந்த இந்தியத் தொடர்பு?)

இன்ஸ்பெக்டர் ராமநாத் ( லெஸ்ட்ரேட்) தையும் நாம் சந்திக்கிறோம்.









(தொடரும்) 

சனி, 27 ஏப்ரல், 2013

ஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்! -4

முந்தைய பகுதிகள்
பகுதி 1  , பகுதி 2 , பகுதி 3

(தொடர்ச்சி)


மூலக் கதையின் விறுவிறுப்புக்குச் சற்றும் குறையில்லாத வகையில் தமிழில் கதையை நகர்த்திச் செல்வதில் ஆரணியார் சமர்த்தர். கதையின் இந்தப் பகுதி அதற்கு ஒரு மிக நல்ல சான்று.



















(தொடரும் )