புதன், 27 நவம்பர், 2013

இந்தியப் பெண்களின் படைப்புகளின் காப்பகம்: ஸ்பேரோ

’தேவன் நூற்றாண்டு விழாவில் நான் செப்டம்பர், 2013 -இல் சந்தித்த எழுத்தாளர் ‘அம்பை’ , 25 ஆண்டுகளாக அரும் பணியாற்றிவரும்  ‘ஸ்பேரோ’ ( SPARROW) என்ற ஒரு சிறந்த காப்பகத்தைப் பற்றிச் சொன்னார்; இப்போது அந்நிறுவனத்திற்கு எல்லோரிடமும் நன்கொடை கேட்டு , ஒரு வேண்டுகோளை எனக்கு அனுப்பியுள்ளார்.

இது ஒரு முக்கிய வேண்டுகோள் என்பதால் அதை அப்படியே இங்கு இடுகிறேன்.

சொல்வனம் இணைய இதழ் இந்தக் காப்பகத்தைப் பற்றி அண்மையில் எழுதியதை இங்கு மீண்டும் பதிவிடுவது பொருத்தம் என்று நினைக்கிறேன். அதுவே என் வேண்டுகோளும் ஆகும்.

“ இது இந்தியப் பெண்களின் படைப்புகளைக் காக்கும் ஒரு அரிய கருவூலம். பல மாநிலத்தைச் சேர்ந்த அறிஞர்களும், படைப்பாளிகளும் தன்னார்வலர்களும், கலைஞர்களும் ஆதரித்து, தம் படைப்புகளை நன்கொடையாகக் கொடுத்து, உழைப்பையும் நல்கிக் கட்டமைத்த ஒரு ஆவணக் காப்பகம் இது.  அம்பை அவர்களும் இந்த அரிய அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இதன் 25 ஆண்டுகளிலும் அதன் கட்டமைப்புக்கும், பராமரிப்புக்கும் மிக்க பாடுபட்டதோடு, தனது சலியா உழைப்பையும் இதற்கு நல்கியிருக்கிறார்.
இந்த ஆவணக்காப்பகத்தை நிலைநிறுத்தி அதன் தொடர்ந்த பராமரிப்புக்கும், தன் நடவடிக்கைகளை அது விஸ்திகரிக்கவும் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது இந்தியாவின் வரலாற்றை எழுத முற்படுவோருக்கு வருங்காலத்திலாவது நியாயமான ஆழமான முறையில் அதை எழுத, மிகுந்த உதவியாக இருக்கும்.
படிப்பறிவு பெற்ற ஒவ்வொரு இந்தியரும் இத்தகைய முயற்சிகளைத் தம்மால் ஆன வகைகளில் ஆதரிப்பது இந்தியாவின் எதிர்காலம் வளமாக அமைய நாம் செய்யக் கூடிய எளிய ஆனால் உருப்படியான செயலாக இருக்கும்” 




1 கருத்து:

Unknown சொன்னது…

அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள்