வெள்ளி, 27 டிசம்பர், 2019

1424. திருப்புகழ்ப் பாடல்களின் இசையமைதி: கட்டுரை

திருப்புகழ்ப் பாடல்களின் இசையமைதி
பசுபதி 



'அம்மன் தரிசனம்' 2019 தீபாவளி மலரில் வந்த கட்டுரை .



[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

2 கருத்துகள்:

ananth சொன்னது…

அற்புதமான, அரிய கட்டுரை. இது யாப்பிலக்கணம் உட்பட்ட தமிழ் இலக்கண அறிவும், இசைஞானமும் பொருந்திய உங்களைப் போன்ற ஒரு சிலரால் மட்டுமே படைக்கப்படக் கூடிய ஒன்று. 
 அங்கதாளம் என்பது யாதென்று ஒரு அடியில் விளக்கியிருக்கலாம் எனத் தோன்றியது.   கடினமான அங்கதாளத்தில் லயக்கோர்வைகள் அமைத்துத் தனியாவர்த்தனம்  செய்வது தேர்ந்த மிருதங்க வித்துவான்களுக்கே சவால் விடுமென்னும் போது நீங்கள் அதை இளம் வித்வானின் மிருதங்கங்க அரங்கேற்றத்தில் எதிர்பார்ப்பது முடவன் வானுலகத்துக் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போன்றதே!. இதுவரையில் முன்பும் இக்காலத்திலும் இத்தகைய தேர்ச்சி பெற்றவராக நீங்கள் யாரைக் (யார்யாரைக்) கருதுகிறீர்கள்? 
உங்கள் கட்டுரையின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட அங்க தாளத்தின் அமைப்புப் பற்றிய விளக்கமும் அவ்வமைப்பை எடுத்துக்காட்டும் இசையையும் இணைத்து, ’லெக்-டெம்’- ஆக உரை நிகழ்த்த வேண்டும் என்பது என் ஆசை..
... அனந்த்
 

Pas S. Pasupathy சொன்னது…

>>அற்புதமான, அரிய கட்டுரை. இது யாப்பிலக்கணம் உட்பட்ட தமிழ் இலக்கண அறிவும், இசைஞானமும் பொருந்திய உங்களைப் போன்ற ஒரு சிலரால் மட்டுமே >>படைக்கப்படக் கூடிய ஒன்று.

நன்றி. தேர்ச்சி பெற்ற பலர் ( நீங்கள் உட்பட) மேலும் அருமையாய் எழுதமுடியும் என்று நம்புகிறேன்.

>.அங்கதாளம் என்பது யாதென்று ஒரு அடியில் விளக்கியிருக்கலாம் எனத் >.தோன்றியது.

உண்மை. மேலும் விரிவாக எழுதப்பட வேண்டிய ஆய்வுக் கட்டுரைதான் இது. ஆனால், இதழ் எவ்வளவு தூரம் வரவேற்கும் என்பது ஐயமாய் இருக்கவே, அளவை இத்துடன் நிறுத்தி விட்டேன்.


>>கடினமான அங்கதாளத்தில் லயக்கோர்வைகள் அமைத்துத் தனியாவர்த்தனம் செய்வது தேர்ந்த மிருதங்க வித்துவான்களுக்கே சவால் விடுமென்னும் போது நீங்கள் அதை இளம் வித்வானின் மிருதங்கங்க அரங்கேற்றத்தில் எதிர்பார்ப்பது முடவன் >>வானுலகத்துக் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போன்றதே!.

உண்மை. ஆனால், அண்மையில் நடந்த சில மிருதங்க அரங்கேற்றங்களில் கடினமான பல்லவிகளுக்கு வாசிப்பதைக் கேட்கும்போது, நன்றாய்த் தயார் செய்துகொண்டு ஒரு திருப்புகழுக்குத் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் திறமை இவர்களுக்கு உண்டு என்று தோன்றுகிறது. ( திருப்புகழைப் பாடும்போது எளிதாய் இருக்கும் அங்க தாளம். ஆனால், திருப்புகழ் பாடி முடிந்ததும் , அதே அங்க தாளத்தில் மிருதங்கத்தின் தனி முடியும் வரை, ( பாடலின் துணையின்றி ) சரியாய்த் தாளம் போடும் திறமையும் பாடுபவர்க்கு இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத் தக்கது)


>>இதுவரையில் முன்பும் இக்காலத்திலும் இத்தகைய தேர்ச்சி பெற்றவராக நீங்கள் >>யாரைக் (யார்யாரைக்) கருதுகிறீர்கள்?

முழுத் திருப்புகழ்க் கச்சேரிகளில் கேட்டிருக்கிறேன். ஆனால், பெயர்களைச் சொல்லமுடியவில்லை. பழனி சுப்பிரமணிய பிள்ளை ஒரு தனி லெக்-டெம்மோ, கச்சேரியிலோ செய்ததாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன்.

>> அனந்த்

... பசுபதி