வெள்ளி, 14 ஜனவரி, 2022

2003. புதுமைப் பொங்கல்: கவிதை

புதுமைப் பொங்கல்

பசுபதி



தொன்மைத் திருநாள் பொங்கலின்முன்
 . . தொல்லை களைதல் முறையன்றோ?
இன்னல் கக்கும் வன்முறையை
. . எரித்து மகிழ்வோம் போகியன்று;
இன்பத் தையை வரவேற்போம்
. . எல்லோன் அறத்தைக் கும்பிட்டே!
பொன்னார் வையம் சமைத்திடுவோம்!
. . புதுமைப் பொங்கல் படைத்திடுவோம் !

பதக்கு வாய்மை அரிசியுடன்
. . பண்பாம் அன்புப் பால்சேர்த்து
மதநல் லிணக்கச் சீனியுடன்
. . வாழ்க்கைப் பானை தனிலிடுவோம்!
முதியோர் நூல்கள் பருப்புடனே
. . மொழியில் ஆர்வத் திராட்சையிட்டுப்
புதுமைப் பொங்கல் படைத்திடுவோம் !
. . பொருந்தாப் பழமை தவிர்த்திடுவோம்!

[ 18-1-2016 'தினமணி' யில் வெளியான கவிதை]

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை: