செவ்வாய், 8 நவம்பர், 2022

2301. தென்னாட்டுச் செல்வங்கள் - 32

சில அதிசய அழகுகள் ( சிதம்பரம்)

சில்பி+தேவன்


 இக்கட்டுரை  1954-இல் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இதில் உள்ள இரு படங்களைப் பார்த்து உடனே நான்  வரைந்தவை கீழே உள்ளன ! :-)







                                      


 ஸ்ரீ சிவகாம சுந்தரி கோயில் வெளிப்பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் உள்ள நாட்டிய வரிசைகளில் காணலாம். 

திருஞானசம்பந்தர்

'சிவஞானத்தின் திருவுருவம்' என்று அடியவர் போற்றும் திருஞானசம்பந்தப் பெருமான், இரு கைகளிலும் பொற்றாளங்களை வைத்துக்கொண்டு நிற்கும் அழகிய காட்சியைச் சிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் வெளியே உள்ள விநாயகருக்குச் சமீபத்தில் காண்கிறோம்.

இச்சிற்பம் முத்துகளாலேயே அலங்கரிக்கப் பெற்றிருப்பது போலத் தோன்றுமாறு வேலைப்பாடு அமைந்துள்ளது.

கொள்ளை கொள்ளும் அழகு

இதன் பக்கத்தில் படத்திலே காட்டியிருக்கும் யௌவனப் பெண்ணின் தோற்றத்தை, துவஜஸ்தம்பம் இருக்கும் மண்டபத்தில் தெற்குப் பக்கமுள்ள ஓரத்துத் தூணில் காணலாம்.

இந்த யௌவன சுந்தரியின் தேக அமைப்பும்,முழங்கால் வரை தொங்கும் ஜடை அலங்கார அழகும், இந்தச் சிற்பத்தைப் பார்பவரின் உள்ளங்களைக் கொள்ளைகொள்ளுமாறு அதிசயமாக அமைந்துவிட்டன.

இம்முழுப் படத்தின் இருபுறமும் உள்ள பூக்கொடி வேலையின் முழுத் திறமையும் துவஜஸ்தம்ப மண்டபத்தில் காணலாம்.

***

'நான் பொருட்களைச் சித்திரிக்கவில்லை; கருத்துகளைச் சித்திரிக்கிறேன்' என்றார் ஓர் ஒவிய நிபுணர். நமது ஓவிய மரபிலோ புற அழகைக் காட்டிலும் உள் அழகை, அதாவது கருத்து அழகைச் சித்திரிப்பதே சிறப்பியல்பு.

[ நன்றி: Rare Books of South India ]

  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 



கருத்துகள் இல்லை: