ஞாயிறு, 27 டிசம்பர், 2015

சங்கீத சங்கதிகள் - 61

சங்கீத சீசன் : 1956 - 1





50-களில் சென்னை இசை விழாக்கள் என்றாலே மூன்று இடங்கள் தான் ரசிகர்களை இழுத்தன: வித்வத் சபை ( Madras Music Academy ), தமிழிசைச் சங்கம், இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி.  1956-இலும் அப்படியே.

1956-இல் வித்வத் சபையின் தலைவர்: திருவீழிமிழலை சுப்ரமண்ய பிள்ளை .
வித்வத் சபை தொடங்கிய 1927-ஆம் ஆண்டிலேயே அங்கே நாகஸ்வரம் வாசித்தவர் !

தமிழிசைச் சங்கத்தில் மு.வரதராசனார் தலைமை.  “ தியாகய்யர் தமிழரே. அவர் தாய்மொழி தெலுங்காக இருந்ததால் அவர் தெலுங்கில் பாட்டியற்றினார். ஆனால் அவர் கையாண்ட இசை தமிழிசை தான். ஆகவே கர்நாடக சங்கீதம் வேறு தமிழிசை வேறு என்று சொல்வது பெரும் தவறு” என்றெல்லாம் பேசினார் மு.வ. ( இதை இவருக்குப் பின் எத்தனை பேர்கள் சொல்லியிருப்பார்கள் என்பதைக் கணக்கிடுவது கடினம்! ஆனால், சொன்னவர்கள் மு.வ. 56-இலேயே சொன்னார் என்று சொல்லியிருப்பார்களா என்பது ஐயமே! )

இந்த வருடத்தில் இன்னொரு விசேஷம். சில்பி, கோபுலு இருவருமே ‘ஆடல் பாடலுக்கு’ அவர்களின் கைவண்ணத்தைச் சேர்த்திருக்கிறார்கள் ! ( சில்பியும், கோபுலுவும் நல்ல நண்பர்கள்! ”சிலரை நான் வரைகிறேன், நீர் வரைய வேண்டாம்”, என்று கோபுலு சொல்லியிருப்பார்” என்பது என் யூகம். பாலசரஸ்வதியை அவர் ‘காரிகேசராக’ வரைந்தது நடனமணிக்குப் பிடிக்கவில்லை ;அவர்  விகடன் ஆசிரியர் வாசனைக் கூப்பிட்டுப் பேசினதாகப் பின்னர் கோபுலு ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.)

இந்த வருடம் ‘தேவன்’ விகடனில் பொறுப்பாசிரியராய் இருந்தார். 57-இல் இசை விழாவைப் பார்க்க அவர் இல்லை.

56-இல் இசை உலகிற்கு ஒரு பெரிய இழப்பு: நாகஸ்வர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை 12 டிசம்பர், 56 -இல் மறைந்தார்.

இதோ ‘விகடனின்’ 56-இன் முதல் ஆடல் பாடல் கட்டுரை!  















[ நன்றி : விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

1 கருத்து:

UK Sharma சொன்னது…

அருமையான தொகுப்பு!