வெள்ளி, 2 நவம்பர், 2012

சின்ன அண்ணாமலை -1 : தாரா சிங் -கிங்காங் போட்டி!

விளம்பர வெற்றி
சின்ன அண்ணாமலை




சின்ன அண்ணாமலை ஒரு தேச பக்தர்; ராஜாஜி, கல்கி போன்றோருக்கு மிக நெருங்கியவர். காந்தியின் ‘ஹரிஜன்’ பத்திரிகையைத் தமிழில் நடத்தியவர். சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத் தலைவராய் இருந்தவர். நகைச்சுவையாகப் பேசுவார்; எழுதுவார்.  சென்னையில் 50-களில் தி.நகரில்  பனகல் பார்க் அருகில், ‘தமிழ்ப்பண்ணை’ என்ற ஒரு நூல் பதிப்பகம் நடத்தியவர். ராஜாஜி, நாமக்கல் கவிஞர், ம.பொ.சி போன்றவரின் நூல்களை மிக நேர்த்தியான முறையில் வெளிட்டவர். ஒரு நூலகமும் ( லெண்டிங் லைப்ரரி )  வைத்திருந்தார்; அதிலிருந்து பல நூல்களைச் சிறு வயதில் நான் வாங்கிப் படித்திருக்கிறேன்.

அண்மையில் பிரபல மல்யுத்த வீரர், நடிகர் (தொலைக்காட்சி ராமாயணத் தொடரில் அனுமான்!) தாரா சிங் காலமானவுடன்,  எனக்குத் தாரா சிங் -கிங்காங் மல்யுத்தப் போட்டியும், கூடவே சின்ன அண்ணாமலையின் நினைவும் வந்தது. அவர் எழுதிய ஒரு கட்டுரையும் நினைவுக்கு வந்தது.
( அந்த மல்யுத்தப் போட்டிப் பப்ளிசிடி பொறுப்பு சாவி, சின்ன அண்ணாமலை இருவரிடம் இருந்தது)

1978-இல் ’குமுத’த்தின் இலவச இணைப்பான ‘சிரிப்புக்கு ஒரு சின்ன அண்ணாமலை’ என்ற ஒரு சிறு  நூலில் வந்த அந்தக் கட்டுரை இதோ!
( அது சின்ன அண்ணாமலை எழுதிய ‘ சொன்னால் நம்பமாட்டீர்கள்!’ என்ற நூலிலிருந்து  ஒரு தொகுப்பு.)





[ நன்றி : குமுதம் ]

பி.கு.

ஆசுகவி சிவசூரியின் பின்னூட்டம்:

மல்லருக்கும் மல்லர் சின்ன அண்ணாமலை!

சின்னஅண் ணாமலை செய்த தனைப்பார்த்தென்
சிந்தையி லேஇன்பம் தோன்றுதடா!
மன்னும் புவியினில் மல்லரைக் கூடவும்
மண்ணையும் கவ்விடச் செய்யுகிறார்!


விற்பனை செய்திடும் மார்க்கத்தைக் பேசிடும்
விற்பனர்க் கெட்டாத சிந்தையடா!
கற்பனை இப்படி ஊறிடும் மானிடர்
காசினி காணாத விந்தையடா!

சிவ சூரியநாராயணன்.
===============

பி.கு.2 

 A classmate recollects:

Krishnan Sevel Venkataraman due to the initiative taken by our Head Master, both King Kong and Dara Singh visited our School and met the students. they spent more than 45 minutes with us. When King Kong appreciated the tamil songs, he felt he could not enjoy it fully as he is unable to undertand the lyrics, our teacher Margabandhu Iyer sang DING DONG BELL in a carnatic ragam which was appreciated by him

(I recall that DING DONG BELL was sung in the tune of Tyagaraja's " sarasa sama dhana" made famous by Madurai Mani Iyer. - Pasupathy )

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை

6 கருத்துகள்:

Siva Suryanarayanan சொன்னது…

மல்லருக்கும் மல்லர் சின்ன அண்ணாமலை!

சின்னஅண் ணாமலை செய்த தனைப்பார்த்தென்
சிந்தையி லேஇன்பம் தோன்றுதடா!
மன்னும் புவியினில் மல்லரைக் கூடவும்
மண்ணையும் கவ்விடச் செய்யுகிறார்!


விற்பனை செய்திடும் மார்க்கத்தைக் பேசிடும்
விற்பனர்க் கெட்டாத சிந்தையடா!
கற்பனை இப்படி ஊறிடும் மானிடர்
காசினி காணாத விந்தையடா!


மிக அருமையான பதிவு!

சிவ சூரியநாராயணன்.

இன்னம்பூரான் சொன்னது…

நானும் திரு பசுபதி அவர்களும் ஒரே இடத்தில் நூலிரவல் செய்துள்ளோம். சின்ன அண்ணாமலை அவர்களுக்கு, மாணவனாக இருந்த என்னை தெஇர்ய்ம். நானும் ராஜாஜி பக்தன் அல்லவா. அதான்.

Pas S. Pasupathy சொன்னது…

:-)) ராஜாஜியின் வீட்டிற்கு அடுத்த வீட்டில் தான் என் இளமை. அது கல்கி முன்பு இருந்த வீடு.

Melasevel group சொன்னது…

Pasupathy will recall the visit made to our School by King Kong on the next day of his fight with Tara Singh. King Kong interacted with the students. Students presented varities of their talents and one of the students rendered a Carnatic music. King Kong appreciated the song but expressed that he is unable to understand the meaning but loved the tune ( raga). Immediately our teacher Margabandhu Vadhyar sang DING DONG BELL in the Carnatic tune and King Kong laughed and said that he liked it.

Pas S. Pasupathy சொன்னது…

:-)) I think Margabhandhu Sir sang DING DONG BELL in the tune of Tyagaraja's "sarasa sama dhana"! Thanks for recalling the incident which had completely vanished from my mind!

Sundaresa Venkatraman சொன்னது…

அச்சமயம் நான் பி எஸ் நடு நிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிறுந்தேன். நான் ஒரு ஒல்லிப்பிச்சாணி! நண்பன் ராம க்ருஷ்ணனோ தடித்தாண்டவராயன்!! பள்ளி இடைவேளையில், அவசர அவசரமாக தயிர் சாதம் சாப்பிட்டஉடன், இருவரும், முன் நாள் கிங்காங்-தாராசிங் மல்யுத்த ரீதியாக மோதுவோம். நாளடைவில் (சின்ன அண்ணாமலை இன்றியே) கூட்டம் பெருகியது. இறுதிக்கட்டம், ப்ரின்ஸிபால் நாகராஜ ராவ் முன்னிலையில்! ராமகிருஷ்ணன் ராமனை நொருக்க வந்தான்! ராமனோ, சார்லீ சாப்ளின் போல், வகுப்பை சுற்றி ஓடி ஓடியே எதிரியை களைப்படைய செய்து, பின்புரத்திலிருந்து குரங்குத்தாவாக தாவி, தலை குப்புற விழுந்த ராமகிருஷ்ணனை ஒரே அமுக்காக அமுக்கி வெற்றி பெற்றான். பின் இருந்து அடிப்பதுதானே ராமனின் வழக்கம்! மனச்சாலையில் அறுபத்து சொச்சம் ஆண்டுகள் பின் இழுத்துச்சென்றதற்கு நன்றி!!