வெள்ளி, 12 ஏப்ரல், 2019

1268. பாடலும் படமும் - 59

ஐம்பூதத் தலங்கள் - 3
திருவண்ணாமலை

[ ஓவியம்: எஸ்.ராஜம் ] 


அருணாசலத் திருப்புகழ் ஒன்றின் உரையில்  தணிகைமணி செங்கல்வராய பிள்ளை  எழுதியது:

”யாமே பரம், யாமே பரம் என்று பிரமனும் திருமாலும் தர்க்கித்துப் போர் புரியும்போது அவ்விருவர் நடுவில் பெரிய சோதி மலையாய் நின்றனர் சிவபிரான். அன்னமாய்ப் பிரமன் முடியைத் தேடியும், பன்றியாய் நிலத்தைக் கீண்டு திருமால் தேடியும் அடிமுடி காணக் கிடைக்காமல் இருவரும் அயர்ந்தனர். இதுவே திருஅண்ணாமலை" (அண்ணா - எட்ட முடியாத)


 ''மணிகொண்ட நெடுங்கடலில் விழிவளரும் மாதவனும் 
அணிகொண்ட புண்டரிகம் அகலாத சதுமுகனும் 
ஞானக்கண் ணதுகொண்டு நாடுமா றுணராதே 
ஏனத்தின் வடிவாகி எகினத்தின் வடிவாகி 
அடிதேடி அறிவலென அவனியெலாம் முழுதிடந்தும் 
முடிதேடி வருவலென மூதண்ட மிசைப் பறந்தும் 
காணரிய ஒருபொருளாய்க் களங்கமற விளங்குபெருஞ் 
சோணகிரி யெனநிறைந்த சுடரொளியாய் நின்றருள்வோய்"  
                                                                              (அருணைக் கலம்பகம்)

                       
[ ஓவியம்: சில்பி ]
                                 

தொடர்புள்ள பதிவுகள் ;

காஞ்சிபுரம்


திருவானைக்கா

பாடலும், படமும்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

கருத்துகள் இல்லை: