வியாழன், 23 ஜூன், 2016

குறும்பாக்கள்: 9,10,11 : கானம், கனவு, கல்யாணம்

கானம், கனவு, கல்யாணம்
பசுபதி 



9. கானம் 



"மெருகுடனே பாட்டிசைக்கக் குரல் !
வீணை,குழல் மற்றதற்கு விரல் ! "
. . குருசொல்வார் சீடனுக்கு,
. . "குரல்,விரலில் வீணனுக்கு,
இருப்பதொரு தொழில்இட்லி உரல் ! "


10. கனவு 


வந்தமர்ந்தாள் என்படுக்கை ஓரம்,
மனங்கவர்ந்த நடிகைஇரா நேரம்.
. . இன்னுமொரு நொடியினிலே,
. . இருந்திருப்பாள் மடியினிலே .
என்கனவைக் கலைத்தகடி காரம்!

11.. கல்யாணம் 



முறைமனைவி மூன்றுடைசிங் காரம்,
மும்மணத்திற்(கு) அவன்விளக்க சாரம் :
. . "மறைசொல்லும் பெருங்கடமை !
. . மணமொன்றோ முழுமடமை !
சிறைதள்ளும் குற்றம்இரு தாரம் ! "

தொடர்புள்ள பதிவுகள்:

குறும்பாக்கள்

கவிதைகள்

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

எங்கள் பேராசிரியர் எனது பார்வையில்

குறும்பாக்கள் குரும்பாக எழுதுவார் பசுபதி
குணம் கொண்ட பாக்களுக்குத் தளபதி
இலக்கணத்தில் கணக்கு வளையா பதி
இலங்குகின்ற அவர்முகம் முழு மதி

ELANDHAI RAMASAMI சொன்னது…

வந்தமர்ந்தாள் என்படுக்கை ஓரம்,
மனங்கவர்ந்த நடிகைஇரா நேரம்.
. . இன்னுமொரு நொடியினிலே,
. . இருந்திருப்பாள் மடியினிலே .
என்கனவைக் கலைத்தகடி காரம்!- எனக்குப் பிடித்த திது.

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி.