திங்கள், 13 ஆகஸ்ட், 2012

கவிதை இயற்றிக் கலக்கு - 8

பிழை திருத்தம்

கவிதை இயற்றிக் கலக்கு” என்ற நூலைப் பற்றிய தகவல்கள்

கவிதை இயற்றிக் கலக்கு - 5 

என்ற பதிவில் உள்ளன. 

அந்நூலின் முன்னுரையில் சொன்னபடி, அந்நூலில் உள்ள ( நான் இதுவரை பார்த்த ) சில முக்கியமான பிழைகளின் திருத்தங்களை மட்டும் இங்கிடுகிறேன். ‘பிழை’ யும், ‘திருத்தம்’ என்று இரண்டையும் இடாமல், சரியான சொற்றொடரை மட்டும் இடுகிறேன்.

பக்கம்        வரி /இடம்/பகுதி                                             திருத்தம்

50                  10                                                  றொருத்தி

53                  பயிற்சி 8.2 அ)                          எரிபுகு மகளி ரேய்க்கும்

57             கீழிருந்து 8                                   [ சூடிய + அரசரை என்பது வகர ....]

82            அளபெடை பகுதி            கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

92             15.3                                       விட்டுப் போன மூன்றாம் அடி :
                                                                யானும் நீயும் எவ்வழி யறிதும்

101            17.7            ....கட்டளை அடிகளாய்ப்  பல வஞ்சி விருத்தங்கள்  அமையும்

121            7                                             இட்டலி எண்ணெய்நற்

124           23.3            ஓசைவிந்து ... ( பட்டினத்தார் )

129        24.1.2 , ஐந்தடி வெண்பா                  செருவென்ற

133         24.3.1                                 கெட்டாலும் மேன்மக்களே மேன்மக் களேசங்கு

134           கடைசி                                 கடைநோக்கிற்

149            தலைப்பு                                27. கட்டளைக் கலித்துறை

152          பலபட்டடைச் சொ. பாடல்       பெருவா    ( மூன்றாம் அடி முதல் சீர்)

164         28.5                               அடி = மா + நான்கு விளம் + காய்

173    * சிறிது வேறுபட்ட வாய்பாடு
                                    காய், காய், காய், காய்
                                    காய், மா, மா
202                4                                            .....கொலைசெய்த மதர்வேர்கண்

231             கடைசியில்                               [சேர்க்க வேண்டியவை :]
                                                                   வஞ்சிப்பா ( 32), கலிப்பா ( 33-35 ) 

260          40.4.1 கம்பன் பாடல்              மிளையானொடு .... ( இரண்டாம் அடியில்)

265           சிலம்பு,கந்துக வரி            வாய்பாட்டில் ஒரு தேமா(3) 
                                                                   குறைகிறது.

268           42.5, 3-ஆம் காட்டு,                  செருவிளை 

270             42.3   முதல் அடி                   ..... உண்மைஎ   னும்போதே                            

285             பயிற்சி எண் 38.2                                44.2   என்று இருக்கவேண்டும்.

295              பயிற்சி 45.6, முதல் அடி                             பரவை

318              கீழிருந்து 12                       என்பதை 25-26 இல் பார்க்கலாம்.

        

342            கீழிருந்து 8                                   விளங்காய்ச் சீர்கள் வரும்.

351              கீழிருந்து 4                                    வள்ளி கணவன்

355            கடைசிப் பாடல்          சூழ்ந்தது பகைப்படை சூழ்ந்தது சூழ்ந்ததென்று
                                                 தொடர்மதில் காக்கநொச்சி சூடினார் சூடினார் --ஆடி
                                                       வீழ்ந்திடப்   பகையின்மேல் .....

362            6.1                                     செயற்/பா/ல தோ/ரு மற/னே யொரு/வற்
                                                         குயற்/பா/ல/ தோ/ரும்/ பழி.

364            6.6                         11 21 22 121

 ============
அன்பர்கள் நூலில் வேறு பிழைகள் பார்த்தால், கருத்துரைகளின் மூலம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அவற்றை இங்கே சேர்த்துவிடுவேன்.
நூலில் விளங்காதவற்றையும், மற்ற யாப்பிலக்கணக் கேள்விகளையும் இங்கே கேட்கலாம்.  தெரிந்தால் தொடரும் பதிவுகளில் விடை சொல்கிறேன். நேரம் கிட்டினால், நூலில் இடாத சில பகுதிகளையும் இங்கே இட முயல்வேன்.

தொடர்புள்ள பதிவுகள்:
கவிதை இயற்றிக் கலக்கு!

9 கருத்துகள்:

Unknown சொன்னது…

அன்புள்ள ஐயா,

ப. 153 , ப. 154: "வாளாய்ப் பிறந்தனை" எனத் தொடங்கும் அடி மாறுபட்ட இருவேறு பட்டியல்களில் (கோவைக் கலித்துறை, மற்றும் அவை அல்லாத காட்டுகள்) தரப்பட்டுள்ளதோ?

மிக்க நன்றி.
அர்விந்த்

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, அர்விந்த்.

இது சீதக்காதி பற்றி நமச்சிவாயப் புலவர் பாடியது.

http://www.tamilvu.org/slet/l5100/l5100pd1.jsp?bookid=124&pno=46

அதனால் ‘கோவைக் கலித்துறை’யில் சேர்க்கமுடியாது. ( தற்போது இதைப் படிக்கும்போது, வீரசோழியம் சொன்ன இந்தக்’கோவை’ ‘திலதம்’ போன்ற பழைய பாகுபாடுகள் வேண்டுமா என்று கேட்கத் தோன்றுகிறது. பொதுவாக, க.க.து -இல் எப்படி வகையுளி சிலசமயம் அவசியமாக வருகிறது ? எப்படி முன்னோர் பயன்படுத்தினர்? என்பதை மட்டும் இலக்காகக் கொண்டால் போதும் என்று தோன்றுகிறது.

கவனமாகப் படித்ததற்கு நன்றி.

Unknown சொன்னது…

> தற்போது இதைப் படிக்கும்போது,
> வீரசோழியம் சொன்ன இந்தக்
> ’கோவை’ ‘திலதம்’ போன்ற
> பழைய பாகுபாடுகள் வேண்டுமா
> என்று கேட்கத் தோன்றுகிறது.
> பொதுவாக, க.க.து -இல் எப்படி வகையுளி
> சிலசமயம் அவசியமாக வருகிறது ?
> எப்படி முன்னோர் பயன்படுத்தினர்?
> என்பதை மட்டும் இலக்காகக் கொண்டால் போதும்
> என்று தோன்றுகிறது.

சிந்தனையைத் தூண்டும் கருத்து; நினைவில் கொள்வேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா! ☺

அன்புடன்,
அர்விந்த்

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, அர்விந்த்!

A Rajagopalan சொன்னது…

பக். 270 சந்தக் கலித்துறை. - பயிற்சிகள். 42.3 கண்ணதாசன் பாடல்.

கூவிளம் 4 + தேமாங்காய்.
முதலடியில் நான்காவது சீர் 'உண்மை' என்று மாச்சீராகவும் ஈற்றுச்சீர் 'எனும்போதே' என்று புளிமாங்காயாகவும் அச்சாகியிருக்கிறது. அடுத்த அடியில் 'செய்திஅ றிந்தோமா' என்று சீர் பிரித்து, வகையுளியாக அச்சிட்டிருப்பதால், முதலடியிலும் 'உண்மைஎ னும்போதே' என்றே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

அ.ரா

Pas S. Pasupathy சொன்னது…

மிக்க நன்றி, அ.ரா.

“பிழைதிருத்தங்களில்” சேர்த்து விடுகிறேன்.

Unknown சொன்னது…

அன்புள்ள ஐயா,

பக்கம் 265, சிலப்பதிகாரம் கந்துக வரிப்பாடலுக்கான வாய்பாட்டில் ஒரு "தேமா(3)" குறைகிறது.

பக்கம் 157 பாரதி பாடல் திரு. சீனி. விசுவநாதன் பதிப்பில் இவ்வாறுள்ளது:

இதந்தரு மனையி னீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதந்திரு விரண்டு மாறிப்
*பழிமிகுத் திழிவுற் றாலும்*
விதந்தரு கோடி யின்னல்
விளைந்தென்னை யழித்திட் டாலும்
சுதந்திர*த்* தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே.

பாடலுக்கான அடிக்குறிப்பில் "பாரதி பிரசுராலயம் - அரசாங்கப் பதிப்பு" பாட பேதம்: சுதந்திர தேவி.

("கவி பாடலாம்" நூல் அத்தியாயம் மூன்றில் "பழிமிகுந் திழிவுற் றாலும்" என்றும், அத்தியாயம் நான்கில் "பழிமிகுத் திடருற் றாலும்" என்றும் உள்ளது.)

நன்றி.
அர்விந்த்

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, அர்விந்த்.

Unknown சொன்னது…

ஐயா, பக்கம் 124 பட்டினத்தார் பாடல் மூன்றாம் அடியில் ஒரு சின்ன தட்டச்சு: "ஓசைவிந்து."