ஞாயிறு, 24 ஜூன், 2018

1101. பாடலும் படமும் - 35

இராமாயணம் - 7
கிட்கிந்தா காண்டம், அனுமப் படலம்



[ ஓவியம்: கோபுலு ]


சிந்தையில் சிறிது துயர்
     சேர்வுற, தெருமரலின்
நொந்து அயர்த்தவர் அனையர்; நோ
     உறச் சிறியர் அலர்;
அந்தரத்து அமரர் அலர்; மானிடப்
     படிவர்; மயர்
சிந்தனைக்கு உரிய பொருள்
     தேடுதற்கு உறு நிலையர்;


     [ சிந்தையில் - (இவர்கள்) மனத்தில்; சிறிது துயர் சேர்வுற - சிறிது
துன்பம் வந்து அடைய; தெருமரலின் - அத்துன்பத்தால்; நொந்து
அயர்த்தவர் அனையர் - மனம் வருந்திச் சோர்ந்தவர்கள் போன்று
காணப்படுகின்றனர்; நோவுற - (அவ்வாறு) எளிதில் துன்பம் அடைவதற்கு; 
சிறியர் அலர் - எளியவர்கள் அல்லர்; அந்தரத்து- தேவலோகத்து வாழும்; 
அமரர் அலர் - தேவர்கள் அல்லர்; மானிடப் படிவர் - மானிட
வடிவமுடையார்; மயர் சிந்தனைக்கு- மயங்கத்தக்க மனத்திற்கு; உரிய
பொருள் - ஏற்ற ஒரு சிறந்த பொருளை; தேடுதற்கு - தேடுவதற்கு; உறும்
நிலையர் - பொருந்திய நிலைமையினை உடையராக விளங்குகின்றனர்.]

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

கருத்துகள் இல்லை: