ஞாயிறு, 22 ஜூலை, 2018

1124. பாடலும் படமும் - 39

இராமாயணம் - 11
யுத்த காண்டம், வீடணன் அடைக்கலப் படலம்



ஆழியான் அவனை நோக்கி, அருள் சுரந்து, உவகை கூர,

'ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எந் நாள்

வாழும் நாள், அன்றுகாறும், வாள் எயிற்று அரக்கர் வைகும்

தாழ் கடல் இலங்கைச் செல்வம் நின்னதே; தந்தேன்' என்றான்.


[ ஆழியான் அவனை நோக்கி- ஆணையாகிய   சக்கரத்தை உடைய   இராமபிரான்  வீடணனைப் பார்த்து; 
அருள் சுரந்துஉள்ளத்திலே கருணை   பொங்க; 
உவகை கூறி - மகிழ்ச்சி மிக; 
ஏழினோடு ஏழாய்   நின்ற உலகும்-   ஏழுடன்   ஏழாகிய பதினான்கு  உலகங்களும்;   
என் பெயரும் எந்நாள் வாழும் நாள் அன்று   காறும் -   எனது  பெயரும் எத்தனை காலம் இருக்குமோ அக்காலம்   வரை;   
வாள்   எயிற்று அரக்கர் வைகும்-   ஒளிபொருந்திய   பற்களை  உடைய அரக்கர்கள் வாழும்; 
தாழ்கடல் இலங்கைச்  செல்வம் - ஆழமான கடல் நடுவே உள்ள   இலங்கையின்   அரசுச்செல்வம்;   
நின்னதே தந்தேன்   என்றான் -   உனக்கே உரிமை உடையதாகக் கொடுத்தேன் என்று கூறினான். ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

கருத்துகள் இல்லை: