ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

1137. பாடலும் படமும் - 42

இராமாயணம் - 14
யுத்த காண்டம், நாகபாசப் படலம்


[ ஓவியம்: கோபுலு ]

உழைக்கும்;   வெய்து   உயிர்க்கும்;   ஆவி   உருகும்;
                                  போய் உணர்வு சோரும்;
இழைக்குவது அறிதல் தேற்றான், ‘இலக்குவா! 
                                  இலக்குவா!’ என்று
அழைக்கும்;  தன்  கையை  வாயின்,  மூக்கின்  வைத்து
                                  அயர்க்கும்; ‘ஐயா!
பிழைத்தியோ!’ என்னும்-மெய்யே பிறந்தேயும் 
                                   பிறந்திலாதான்

[ மெய்யே     -  உண்மையாக; 
பிறந்தேயும்  பிறந்திலாதான்  - 
பிறந்திருந்தும்    வினை   வசத்தால்    பிறவாதவனாகிய    இராமன்;
உழைக்கும்  -  வருத்தப்படுவான்; 
வெய்து உயிர்க்கும் - பெரு மூச்சு விடுவான்;  
ஆவி  உருகும்  -  உயிர் உருகுவான்;  
உணர்வு போய் சோரும் -  அறிவு   நீங்கிச்  சோர்வான்;   
இழைக்குவது   அறிதல் தேற்றான் -  செய்வது  இன்னது  என்று  அறிந்து  தெளியாதவனாய்;
இலக்குவா,  இலக்குவா   என்று    அழைக்கும்  -  இலக்குவனே,
இலக்குவனே என்று பலமுறை  அழைப்பான்;  
தன் கையை  மூக்கின் வைத்து - (தனது) கையை (இலக்குவனது) மூக்கின் மேல் வைத்து (மூச்சு உளதா) (என்று பார்த்து); 
அயர்க்கும்  -  வருந்துவான்;  
ஐயா - ஐயா;
பிழைத்தியோ என்னும் - (நீ) பிழைப்பாயோ என்று கூறுவான்.]

  
தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

கருத்துகள் இல்லை: