திங்கள், 20 ஆகஸ்ட், 2018

1141. பாடலும் படமும் - 43

இராமாயணம் - 15
யுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம்


[ ஓவியம் : கோபுலு ]

வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ
நின்று இக் கடை தாழுதல் நீதியதோ?
சென்று, இக்கடி வேள்வி சிதைத்திலையேல்,
என்று, இக் கடல் வெல்குதும் யாம்?’ எனலும்,

[ வீடணன் வென்றிச் சிலை வீரனை - வீடணன், வெற்றி மிக்க
வில்வீரனாகிய  இலக்குவனை  (நோக்கி); 
நீ இக்கடை நின்று தாழுதல் நீதியதோ? - நீ இவ்விடத்து (இ்ந்திரசித்தன் வேள்வியைச்  சிதைக்காது) நின்று  காலந்தாழ்த்துதல்  முறையாகுமா? 
இக்கடி  வேள்வி  சென்று சிதைத்திலையேல்  -  இந்தக்  காவல் மிக்க வேள்வியை  மேற்சென்று சிதைத்து   அழிக்காமல்   விடுவாயாயின்;   
இக்கடல்   யாம்  என்று வெல்லதும்?  எனலும்  -  (அரக்கர்  சேனையாகிய)  இக்கடலை நாம் எக்காலத்தில் வெல்ல வல்லோம்? எனக் கூறிய அளவில்.]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

1 கருத்து:

Jayabarathan சொன்னது…

நண்பர் பசுபதி,

நலமா ?

என் புதுநோக்கு சீதாயாணம் நாடகத்தை உங்கள் வலை இதழில் இட விழைகிறேன்.

tps://jayabarathan.wordpress.com/2009/04/19/சீதாயணம்-முழு-நாடகம்/

அன்புள்ள நண்பர்களே,

“சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது.

கனிவுடன்,
ஜெயபாரதன், கனடா