ஞாயிறு, 27 மே, 2018

1075. பாடலும் படமும் - 31

இராமாயணம் - 3
அயோத்தியா காண்டம், குகப் படலம் 

   



[ ஓவியம்: கோபுலு ]


பணி மொழி கடவாதான்,

     பருவரல் இகவாதான்,
பிணி உடையவன் என்னும்
     பிரிவினன், விடைகொண்டான்;
அணி இழை மயிலோடும்
     ஐயனும் இளையோனும்
திணி மரம், நிறை கானில்
     சேணுறு நெறி சென்றார்.

[ பணி மொழி கடவாதான் - இராமன் இட்ட கட்டளை வார்த்தையை 
மீறாது; 

பருவரல்இகவாதான் - இராமனது பிரிவினால் ஏற்பட்ட துன்பமும்
நீங்காது; 
பிணி உடையவன்என்னும் பிரிவினன் - நோயுற்றான் என்று
சொல்லும்படியான பிரிவுத் துன்பத்தை உடையனாய்;
விடை கொண்டான்(குகன்) உத்தரவு பெற்றுச் சென்றான்; 
அணி இழை மயிலோடும் ஐயனும் இளையோனும்- அழகிய ஆபரணங்களை அணிந்த மயில் போல்பவளாகிய
சீதையோடும் இராமனும் தம்பி இலக்குவனும்; 
திணி மரம் நிறை கானில்வலிய பெரு மரங்கள் நிறைந்துள்ள காட்டில்;  
சேண் உறு நெறி  - நெடுந் தொலையான வழியில்;  
சென்றார்- சென்றார்கள்.]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

கருத்துகள் இல்லை: