வெள்ளி, 20 மே, 2016

பாடலும், படமும் - 12

முகச்சிங்க முராரி 



இன்று நரசிம்ம ஜெயந்தி.



மேலே அமரர் எஸ்.ராஜம் அவர்களின் அருமையான ஓவியத்தை பார்க்கலாம்.

இதற்குப் பொருத்தமாய்ப் பல ஆழ்வார்களின் பாசுரங்களைக் குறிப்பிடலாம்.
சற்று வித்தியாசமாய், வண்ணம் என்ற மிகக் கடினமான தமிழ்ப் பாடல்வகையில் நரசிம்மரைக் குறிக்கும் ஒரு பாடல் பகுதியை இங்கிடுகிறேன்.

பதினைந்துக்கும் மேற்பட்ட திருப்புகழ்களில் நரசிம்ம அவதாரத்தைக் குறிப்பிட்டிருக்கிறார் அருணகிரிநாதர்.

இதோ ஒரு பகுதி:

உரியதவ நெறியில்நம நாராய ணாயவென
     ஒருமதலை மொழியளவி லோராத கோபமுட
          னுனதிறைவ னெதனிலுள னோதாய டாவெனுமு ...... னுறுதூணில்

உரமுடைய அரிவடிவ தாய்மோதி வீழவிரல்
     உகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை
          உவணபதி நெடியவனும்



இந்தப் பாடலின் பொருளை அறிந்திடவும், இந்தத் திருப்புகழை குருஜி ராகவன் பாடுவதைக் கேட்கவும்
http://www.kaumaram.com/thiru/nnt0870_u.html  - க்குச் செல்லவும்.

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்


S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam


கருத்துகள் இல்லை: