வெள்ளி, 31 ஜனவரி, 2020

1449. கதம்பம் -2

ஜே.சி.குமரப்பா 10
ராஜலட்சுமி சிவலிங்கம்



ஜனவரி 30.  ஜே.சி.குமரப்பாவின் நினைவு தினம்.

பொருளாதார மேதை, காந்தியவாதியான ஜே.சி.குமரப்பா (J.C.Kumarappa)  பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l தஞ்சாவூரில் (4, ஜனவரி,1892) பிறந்தார். தந்தை அரசு ஊழியர். பெற்றோர் இட்ட பெயர் ஜோசப் செல்லதுரை கொர்னிலியஸ். இவரது 12-வது வயதில் குடும்பம் சென்னையில் குடியேறியது. சென்னை கிறிஸ் தவக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். 1913-ல் இங்கிலாந்து சென்று சார்ட்டர்ட் அக்கவுன்ட்ஸ் மற்றும் பொருளாதாரம் பயின்றார்.

l பம்பாயில் சிறிதுகாலம் ஒரு நிறுவனம் நடத்தினார். 1928-ல் அமெரிக்கா சென்று, பொருளாதாரத்தில் மேற்படிப்பு பயின்றவர், இந்தியாவின் ஏழ்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

l இந்தியாவின் ரத்தத்தை எப்படியெல்லாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சுரண்டுகிறது என்பதை அறிந்தார். தனது ஆராய்ச்சிக் கட்டுரையை காந்திஜியின் முகவுரை வேண்டி அவருக்கு அனுப்பினார். இதுவே இருவருக்கும் நெருக்கம் ஏற்படக் காரணமாக அமைந்தது.

l நாடு திரும்பியவர், 1934-ல் ராஜேந்திர பிரசாத்துடன் இணைந்து ஓராண்டு காலம் பூகம்ப நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். டை, கோட் என இருந்தவர் கதர் ஜிப்பா, பைஜாமாவுக்கு பதிலாக ‘தோத்திஜாமா’ என்ற ஒன்றை வடிவமைத்து அணிந்தார். ‘கொர்னிலியஸ்’ என்ற பெயரை மாற்றி, குடும்ப பெயரான குமரப்பாவை சேர்த்து, ‘ஜோசப் செல்லத்துரை குமரப்பா’ ஆனார்.

l காந்திஜி தண்டி யாத்திரையின்போது ‘யங் இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியராக இவரை நியமித்தார். காந்திஜி நினைப்பதை குமரப்பாவின் எழுத்துகள் சொல்லும் என்ற நிலை ஏற்பட்டது. ‘குமரப்பாவுக்கு நன்கு பயிற்சி அளித்துவிட்டீர்களே’ என்று மதன்மோகன் மாளவியா காந்திஜியிடம் பாராட்டிக் கூறியபோது, ‘நான் பயிற்சி அளிக்கவில்லை. அவர் எனக்கு ரெடிமேடாக கிடைத்தார்’ என்றார் காந்திஜி.

l ‘யங் இந்தியா’வில் வெளிவந்த இவரது கட்டுரைகள் ஆங்கிலேய அரசை தடுமாறச் செய்தன. அச்சகத்தை அரசு பறிமுதல் செய்தது. அசராத இவர், தட்டச்சு செய்து நகல்கள் எடுத்து வெளிட்டார். இதனால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோதும் ஆங்கில அரசுக்கு எதிராக கட்டுரைகள் எழுதினார். மூன்றரை ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

l காந்திஜியைத் தலைவராகக்கொண்ட அகில பாரத கிராமத் தொழில்கள் சங்கத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார். குடிசைத் தொழிலுக்கான பல உபகரணங்கள் இங்குள்ள ஆய்வுக்கூடங்களில் உருவாக்கப்பட்டன. இதற்கென்று ஒரு பத்திரிகையையும் நடத்தினார். குடில் ஒன்றைக் கட்டிக்கொண்டு 20 ஆண்டுகள் அங்கு தங்கியிருந்தார்.

l ‘இயற்கையோடு இயைந்த உற்பத்தி முறைதான் இயற்கை ஆதார வளங்களை சிதைக்காது’ என்பார். காந்தியடிகளின் பொருளாதாரக் கருத்துகளுக்கு வடிவம் கொடுத்து அதை பொரு ளாதார அறிவியலாக மாற்றியவர். பல நூல்களை எழுதியுள்ளார். அதில் பலவற்றுக்கு காந்திஜி முன்னுரை எழுதியுள்ளார்.

l ஜெர்மானியப் பொருளியலாளர் ஷமாக்கர் தனது நூலில் ‘இந்திய தத்துவ மேதை’ என்று குமரப்பாவைக் குறிப்பிட்டுள்ளார். இவரது சித்தாந்தங்களை தனது வாதங்களுக்கு மேற்கோளாகவும் காட்டியுள்ளார்.

l பைக்கில் ஏறி காடு, மலைகளில் சுற்றுவார். புகைப்படக் கலையி லும் ஈடுபாடு கொண்டவர். சூழலியலைக் கெடுக்காத, வளம் கொடுக் கும் பொருளியல் மாதிரியை வடிவமைத்த பேரறிஞர் எனப் புகழப்பட்டார். 1960-ல் நோய்வாய்ப்பட்டவர் 68-வது வயதில், காந்திஜியின் நினைவு தினத்தன்று (ஜனவரி 30) மறைந்தார்.

[  நன்றி: https://www.hindutamil.in/news/blogs/201092-10.html  ]

குமரப்பா மறைந்தவுடன் 'கல்கி'யில் வந்த நினைவுக் குறிப்பு.



தொடர்புள்ள பதிவுகள்:

கதம்பம்

வியாழன், 30 ஜனவரி, 2020

1448. காந்தி - 50

பொய்யா விளக்கே விளக்கு!
டி.கே.சி.




காந்தி மறைந்தபின் 'கல்கி'யில் வந்த கட்டுரை.




[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:
மகாத்மா காந்தி 

புதன், 29 ஜனவரி, 2020

1447. ஓவிய உலா - 10

சிலேடைச் சித்திரங்கள் - 1

'கல்கி' இதழின் மழலைப் பருவத்தில் வந்த சில அரிய ஓவியங்கள்.



தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா

செவ்வாய், 28 ஜனவரி, 2020

1446. சத்தியமூர்த்தி - 12

பேசும் படமும் நாடகமும்,  சித்திரக் கலை
எஸ். சத்தியமூர்த்தி 



1944-இல் ’சுதேசமித்திர’னில் வந்த இரு கடிதங்கள்.






பி.கு.

இந்தக் கடிதங்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எஸ்.நீலமேகம் ( இசை விமர்சகர் “ நீலம்”, சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவும் இருந்தார் ) . நூலாக முதலில் தமிழ்ப் பண்ணையும், பின்னர் கலைமகளும் வெளியிட்டன. 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
சத்தியமூர்த்தி

திங்கள், 27 ஜனவரி, 2020

1445. சிறுவர் மலர் - 14

துப்பறியும் சுப்புடு -2
‘சந்தனு’





ஓவியர் சந்தனு ( ரா. சந்தான கிருஷ்ணன்)  மதுரையிலிருந்து வந்து, ’சாவி’ நடத்திய வெள்ளிமணியில் 46-47-இல் பணிபுரிந்தார். அவர் அவ்விதழில் வரைந்த ஒரு கார்ட்டூனைஇங்கே யும் , ’வெள்ளிமணி’ 47 தீபாவளி மலரில் அவர் வரைந்த ஒரு படத்தை இங்கே யும் பார்க்கலாம்.

’துப்பறியும் சாம்பு’வை நினைவுபடுத்தும் இந்தத் தொடர் சுதேசமித்திரனில் 1956-இல் வந்தது.



[ நன்றி : சுதேசமித்திரன் ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]



தொடர்புள்ள பதிவுகள்:

சிறுவர் மலர்

சனி, 25 ஜனவரி, 2020

1444. சங்கீத சங்கதிகள் - 212

நெடுமரம் சாய்ந்தது 


23, ஜனவரி, 1967-இல் அரியக்குடியார் மறைந்தபின், பிப்ரவரி 5, 1967 கல்கி இதழில் வந்த படமும், அஞ்சலிக் குறிப்பும்.


[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[ நன்றி : கல்கி ]
தொடர்புள்ள பதிவுகள்:

வெள்ளி, 24 ஜனவரி, 2020

1443. கதம்பம் -1

சுபாஷ் சந்திர போஸ், சரத் சந்திர போஸ்


ஜனவரி 23. சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினம்.

சுபாஷின் படத்தை 1946-இல் அட்டையில் வெளியிட்டுக் கௌரவித்தது 'கல்கி' இதழ்.



சுபாஷ் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்றெல்லாம் எல்லோரும் கவலையுடன் பேசிக் கொண்டிருந்தபோது, 'கல்கி' சுபாஷின் சகோதரர் சரத்சந்திர போஸின் படத்தை 45-இலேயே இதழ் அட்டையில் வெளியிட்டதும் குறிப்பிடத் தக்கது.



தினமணியில் 41-இல் வந்த ஒரு பக்கம்.





[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


  [ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:
கதம்பம்

வியாழன், 23 ஜனவரி, 2020

1442. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 20

ன் வாழ்க்கையின் அம்சங்கள் -16
வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி 



சுதேசமித்திர’னில்  1941-இல் வந்த  நான்கு கட்டுரைகள்











[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி: சுதேசமித்திரன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி

திங்கள், 20 ஜனவரி, 2020

1441. பாரதியும் அறிவியலும்

பாரதியும் அறிவியலும்
பசுபதி 


'கோபுர தரிசனம்' 2019 தீபாவளி மலரில் வந்த கட்டுரை.









[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள் :

சங்கச் சுரங்கம் 

பசுபடைப்புகள்

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

1440. நட்சத்திரங்கள் - 4

வீணை பாலசந்தரின் சினிமா அத்தியாயம்
அறந்தை நாராயணன்


ஜனவரி 18. எஸ்.பாலசந்தரின் பிறந்த தினம்.








[ நன்றி: தினமணி கதிர் ]

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
நட்சத்திரங்கள்

வியாழன், 16 ஜனவரி, 2020

1439. சங்கீத சங்கதிகள் - 211

தியாகராஜர் 100 : 1


தியாகராஜரின் 100-ஆவது  ஆராதனை விழாவை ஒட்டி,  சென்னையிலும் மற்ற இடங்களிலும்  1946-டிசம்பர்/1947-ஜனவரி களில்  பல நிகழ்ச்சிகள் நடந்தன; கட்டுரைகள் வந்தன. அவற்றைப் பற்றி எனக்கு கிட்டும் சில தகவல்களை  இந்த இழையில் அவ்வப்போது கொடுக்க எண்ணுகிறேன். 

முதலில், 'கல்கி' யில் வந்த ( மேலே காணும் ) அட்டைப் படமும் , விளக்கமும்.



அப்போது வெளியான சில இசைத்தட்டுகளின் விளம்பரம்.

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[ நன்றி : கல்கி ]
தொடர்புள்ள பதிவுகள்:

புதன், 15 ஜனவரி, 2020

1438. பாடலும் படமும் - 88

ஞாயிறு போற்றுதும்
துறைவன்








'துறைவன்' ( எஸ்.கந்தசாமி) சென்னை வானொலி நிலைய  இயக்குநராய்ப் பணி புரிந்தவர். பேரா. அ.சீ.ரா வின் மாணவர். 


[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

திங்கள், 13 ஜனவரி, 2020

1437.பாடலும் படமும் - 87

செந்தமிழ் பேசப் பிறந்தோம் நாம்! 



'கல்கி' இதழில் 1946-இல் வந்த அட்டைப்படமும், விளக்கமும். 'கல்கி'யில் பொங்கலைப் பற்றிக் கூறும் முதல் அட்டைப் படம் இது  என்று எண்ணுகிறேன். நடராஜரும், கலைகளும் சேர்ந்து பொங்கும்  விளக்கம்!


                                   
    
                                              

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்