பெ.சு.மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெ.சு.மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 ஏப்ரல், 2022

2094. பெ.சு.மணி - 2

குருதேவரின் திருவடியை அடைந்த எழுத்தாளர்

சுவாமி அபவர்கானந்தர்  


ஏப்ரல் 27. பெ.சு.மணியின் நினைவு தினம்.

அவர் மறைந்தவுடன் 'அமுதசுரபி'யில் வந்த அஞ்சலி.





[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : அமுதசுரபி ]

தொடர்புள்ள பதிவுகள்:

பெ.சு.மணி

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

திங்கள், 17 மே, 2021

1875. பெ.சு.மணி - 1

'தி ரிபப்ளிக்':சர்மாஜியைக் கவர்ந்த நூல்

பெ.சு.மணி 


27 ஏப்ரல், 2021 அன்று மறைந்த தமிழறிஞர் பெ.சு.மணிக்கு அஞ்சலியாய் 'தினமணி' யில் அவர் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே இடுகிறேன். 

==== 

 அரசியல் தமிழ் இலக்கியத்துறையின் முன்னோடி அமரர் வெங்களத்தூர் சாமிநாத சர்மா (1895 - 1978) பல வேறுபட்ட இவருடைய 78 நூல்களுள் 'பிளாட்டோவின் அரசியல்' தலைசிறந்தது. இவ்வுண்மையை அவரே என்னிடம் நேரில் குறிப்பிட்டுளார். சாக்ரடீஸ் (கி.மு. 470 - 399), பிளாட்டோ (கி.மு. 427 - 347) இணைப்பில் உருவான உலகப் புகழ் பெற்ற நூல் 'ரிபப்ளிக்' என்றழைக்கப்படும் 'பிளாட்டோவின் அரசியல்'.. பிளாட்டோவின் 26 நூல்களில் "இதுவே மணிமகுடம். என்னை அதிகமாக வசீகரித்ததும் 'ரிபப்ளிக்' நூல்தான்" என்று சர்மாஜியே கூறியுளார்.

 'பிளாட்டோவின் அரசியல்' வாசக உள்ளங்களை வென்று வாகை சூடியதற்கு முதற்காரணம் சர்மாஜியின் மொழிபெயர்ப்புச் சிறப்பு. மொழிபெயர்ப்பு கலையின் திட்ப - நுட்பங்களைத் தேர்ந்து தெளிந்தவர் அவர்.

  'பிளாட்டோவின் அரசியல்' நூலைப் படித்த டாக்டர் மு.வ., பிளாட்டோவும் சாக்ரடீஸும் தமிழிலேயே உரையாடியிருப்பார்களோ என்று தோன்றியதாக சர்மாஜியிடம் வியப்புடன் கூறினாராம். இதை சர்மாஜி என்னிடம் நினைவு கூர்ந்தார். 'பிரபஞ்சசோதி பிரசுராலயம்' இந்த நூலின் பல பதிப்புகளை வெளியிட்டது. நான்காம் பதிப்பில் 'பிளாட்டோவும் நானும்' எனும் தலைப்பில் சர்மாஜி எழுதினார். அதில் பிளாட்டோவிடம் தாம் கொண்ட ஈடுபாடு திரு.வி.க.வின் தேசபக்தன் நாளேட்டிலேயே தொடங்கியது என்று சுட்டிக்காட்டி அதன்  வளர்ச்சியை விவரித்துள்ளார். 'பிளாட்டோவின் அரசியல்' என் நெஞ்சை அள்ளியதற்கு மற்றொரு காரணம் சிந்தனைச் செம்மல் சாக்ரடீசின் நவில்தோறும் நயம் தரும் புதுமைகள். இவை சிந்தனைக் கருவூலத்துக் கலைச் செல்வங்களாகும். சாக்ரடீஸ் எதையும் எழுதவில்லை . அவர் இளம் வயதில் கற்சிலை வடிக்கும் சிற்பியாக மட்டுமே அரும்பினார். பிற்காலத்தில் சிந்தனைகளைச் செதுக்கி சொல்லோவியங்களைப் படைத்த நாவுக்கரசராய் மலர்ந்துவிட்டார். இந்த புத்தெழுச்சிக்கு மூலகர்த்தா, அவருடைய அருமைச் சீடர் பிளாட்டோ, குருநாதரின் உடையாடல் கலையில் விளைந்த கருத்துகளுக்கு எழுத்து வடிவம் அளித்தவர் பிளாட்டோ.

 'பிளாட்டோவின் அரசியல்' பத்து புத்தகங்களை, அதாவது பத்து அத்தியாயங்களைக் கொண்டது. உரையாடல் பாங்கில் அமைந்தது. உடையாடல் கலையின் நுட்பங்களையெல்லாம் இந்த நூலில் கற்றுத் தெளிவு பெறலாம். தனி மனிதனுடைய அறவாழ்க்கை , சமூதாயத்தின் அரசியல் வாழ்க்கை இரண்டையும் இயைபுப்படுத்திக் காட்டுகிறார் பிளாட்டோ.

 இந்த நூலின் மூலதத்துவம், "எல்லாவற்றிற்கும் மூலமாய் உள்ளது நீதி அல்லது தருமம் என்பதாகும். பிளாட்டோ கற்பிக்கிற அரசின் பல்வேறு இலட்சியங்கள், சமூக அமைப்புகள், தத்துவங்கள், கலைப்பயிற்சிகள், இலக்கியக் கோட்பாடுகள் முதலானவையெல்லாம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இந்த நூல் விரித்துரைகின்றது.

 நீதி (அ) தருமம் என்பது அறிவு, வீரம், தன்னடக்கத்தின் கூட்டுக் கலவையாகும் என்று விளக்கப்பட்டுள்ளது. இலக்கியத்தில் பொய் இலக்கியம், மெய் இலக்கியம் என்ற இருவகைகளைக் குறித்து உரையாடியபொழுது சாக்ரடீஸ் உலக மகாகவி ஹோமரைப் (கி.மு. 11-ஆம் நூற்றாண்டு) பற்றியும் கிரேக்கத்தின் மற்றொரு மகா கவிஞரான ஹெசியாட்டையும் (கி.மு. 8-ஆம் நூற்றாண்டு) விமர்சனம் செய்துள்ளார்.

"அழகில்லாத பொய்களை இவர்கள் தங்கள் கதைகளில் நுழைத்திருக்கிறார்கள். விபரீதமான குற்றங்களைச் செய்கிற கடவுளர்களைச் சிருஷ்டித்து, அந்தக் கடவுளர்களின் கதைகளைச் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போமானால் அவர்கள் என்ன நினைப்பார்கள் தெரியுமா?கடவுளர்களே பல குற்றங்கள் செய்கிறபொழுது நாமும் செய்தால் என்ன என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கிவிடுவார்கள். எனவே அவர்களுக்கு இந்தமாதிரியான கதைகளைச் சொல்லிக் கொடுக்கக் கூடாது. தவிர, ஒரு தெய்வத்திற்கு எதிராக மற்றொரு தெய்வம் சதி செய்வதாகவோ அல்லது யுத்தம் செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லலாகாது. ராட்சதர்களோ அல்லது தேவர்களோ ஒருவருக்கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது. மனிதர்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டுமென்றும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் நீதிகளைப் புகட்டுகிற கதைகளையே சொல்ல வேண்டும்.

 ஞானிகளே ஆட்சி செய்ய வேண்டும். ஆள்வோருக்கும் பாதுகாவலர்களுக்கும் தனிச்சொத்துரிமை கூடாது. ராஜ்யத்தில் கவிஞர்களை வெளியேற்ற வேண்டும். ஆத்மாவின் பரமார்த்திகத் தன்மையை வளர்த்து அதன் மூலம் ஆத்மாவைச் சுற்றிலும் இருக்கிற உலக பந்தங்களையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டும். அளவுக்கு மீறிய துர்ப்பழக்கங்களைப் பற்றிச் சொல்கிற வரலாறு, காமக் குரோத உணர்ச்சிகளை உண்டுபண்ணக் கூடிய கதைகளையும் ஆடம்பர வாழ்க்கையில் மோகங்கொள்ளத் தக்க நிகழ்ச்சிகளையும் நமது இளைஞர்களின் போதனா முறையில் இருந்து அகற்றிவிட வேண்டும்".

'பிளாட்டோவின் அரசியல்' இது போன்ற பல கருத்துகளை வினா - விடைப் பாங்கில் விளக்கும் இலக்கிய உத்தி வாசகர்கள் பலரையும் கவர்ந்திருக்கிறது.

'தெளிவு பெற அறிந்திடுதல், தெளிவு பெற மொழிந்திடுதல்' என்ற பாரதி வாக்கை சர்மாஜி இந்த நூலில் சாதித்துக் காட்டியுள்ளார்

=== 

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

 பெ.சு.மணி 

பெ. சு. மணி: விக்கிப்பீடியா

பி.கு.  I have now switched to a new service , follow.it  which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog. If you are already a Follower of my blog , thanks for reading! 


சனி, 2 ஏப்ரல், 2016

வ.வே.சு.ஐயர் - 1

தமிழ் மரபின் காவலர் வ.வே.சு.ஐயர்
 பெ.சு.மணி

ஏப்ரல் 2. வ.வே.சு. ஐயரின் பிறந்த தினம்.

தமிழறிஞர் பெ.சு.மணி தினமணியில் அவரைப் பற்றி  2009-இல் எழுதிய கட்டுரை இதோ:
================

வரகனேரி வேங்கடேச சுப்பிரமண்ய ஐயர் எனும் பெயரின் சுருக்கமான வ.வே.சு.ஐயர், கரூர் அருகில் உள்ள சின்னாளப்பட்டி என்ற கிராமத்தில் 1881-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி, வேங்கடேச ஐயர்-காமாட்சி தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

  ஐயரின் தொடக்கக் கல்வி முதல் பட்டப் படிப்பு வரையில் திருச்சிராப்பள்ளியில் நிகழ்ந்தது. 1895-இல் "மெட்ரிகுலேஷன்' தேர்வில், மாநிலத்தில் ஐந்தாவது மாணவராகத் தேறினார்.

  1897-இல் அவருடைய அத்தைமகள் பாக்கியலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு புதல்விகளும், ஒரு புதல்வரும் பிறந்தனர்.

  1899-இல் வரலாறு, பொருளாதாரம், லத்தீன் ஆகிய பாடங்களை எடுத்து பி.ஏ., பட்டம் பெற்றார். லத்தீன் மொழியில் முதன்மைச் சிறப்பும் பெற்றார். 1902-இல் "பிளீடர்' என்னும் வக்கீல் தேர்வில் தேறினார். திருச்சியில் மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாகத் தொழில் நடத்தினார்.

  வ.வே.சு.ஐயர், 1906-இல் பர்மா, ரங்கூனில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1907-இல் லண்டனில் "பாரிஸ்டர்' பட்ட மேற்படிப்பில் சேர்ந்தார். லண்டனில் அப்போது, ஷியாம்ஜி கிருஷ்ணவர்மா எனும் தேசபக்தர், இந்திய இளைஞர்களுக்காக நடத்தி வந்த "இந்தியா ஹவுஸ்' எனும் விடுதியில் சேர்ந்தார். அங்கு புரட்சி வீரர், வீரசாவர்க்காரைச் சந்தித்தார். இந்திய தேசியப் புரட்சி வீரரானார். சாவர்க்காரின் வலக்கரமாகப் புகழ்பெற்றார். ராஜவிசுவாச வாழ்த்துப் பாட மறுத்து, பாரிஸ்டர் பட்டத்தையும் துறந்தார். லண்டன், பாரீஸ், பெர்லினில் இயங்கிய இந்திய தேசிய புரட்சி வீரர்கள் குழுவில் இணைந்தார். புரட்சித்தாய் காமா அம்மையாரின் நட்புறவைப் பெற்றார்.

  லண்டனில் முப்பது மாதங்கள் வாழ்ந்த காலத்தில் வ.வே.சு.ஐயரின் அரசியல் இலக்கியத் தொண்டுகள் மலர்ச்சியுற்றன. 1908-இல் லண்டன் ஹைகேட் யூனிடேரியன் சர்ச்சில் முதன்முதலாக கம்பராமாயணச் சொற்பொழிவாற்றினார். இந்த ஆங்கிலச் சொற்பொழிவு, லண்டனில் இருந்து வெளிவந்த "ஸ்வராஜ்' (ஆசிரியர் பிபின் சந்திரபால்) பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

  தமிழில் அவருடைய எழுத்தும் பணியும் லண்டனில் தொடங்கியது. 1909-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி, புதுச்சேரியில் இருந்து வெளிவந்த "இந்தியா' (ஆசிரியர் பாரதியார்) இதழில், ஜுúஸ கரிபால்டி சரித்திரம் என்ற கட்டுரைத் தொடரை எழுதினார் வ.வே.சு.ஐயர்.

  இதைத்தொடர்ந்து 1909 ஜூன் 5-ஆம் தேதி இந்தியா இதழில், ""ழான் ழாக் ரூசோ எழுதிய ஜனசமூக ஒப்பந்தம்'' எனும் தலைப்பில் எழுதப்பட்ட வ.வே.சு.ஐயரின் தமிழாக்கக் கட்டுரைத்தொடர் வெளிவரத் தொடங்கியது. இக்கட்டுரை வ.வே.சு.ஐயரை மொழிபெயர்ப்பாளராக முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.

  வ.வே.சு.ஐயரின் எழுத்துலகப் பயணம் பாரதியாரின் "இந்தியா'வில் மேலும் தொடர்ந்தது. "இந்தியா'வில் 1908 நவம்பர் 28 முதல் வ.வே.சு.ஐயர் எழுதிய "லண்டன் கடிதங்கள்' வெளிவரத்தொடங்கின.

  1910-இல் ஐயர் புதுவையில் வசிக்கத் தொடங்கினார். புதுச்சேரி வாழ்க்கையில் அவருடைய அரசியல், இலக்கியப் பணிகள் தொடர்ந்தன. 1919-இல் இந்திய தேசிய அரசியலில் காந்தியுகம் தோன்றியதும், அதன் ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்பட்டு வன்முறைப் புரட்சி அரசியலைக் கைவிட்டு, காந்தியத்தைத் தழுவி, காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்றார்.

  வ.வே.சு.ஐயரின் தொடக்க கால எழுத்துப் பணியில் லண்டன் கடிதங்கள் குறிப்பிடத்தக்கன. பெரும்பாலும் "பாரதப்பிரியன்' எனும் பெயரில் எழுதி வந்தார். தேசிய-சர்வதேசிய அரசியல் நடப்புகள், சமூகம், வரலாற்றுக் குறிப்புகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு, தமிழக தேசிய மாவீரர்கள் பற்றிய செய்திகள் லண்டன் கடிதங்களில் வெளிவந்தன. "இந்தியா'வில் மட்டுமல்லாமல், புதுச்சேரி "சூரியோதயம்', "விஜயா' இதழ்களிலும் வ.வே.சு.ஐயரின் லண்டன் கடிதங்கள் வெளிவந்தன. பின்னாளில் அவர் 1924 அக்டோபரில் தொடங்கிய "பாலபாரதி' எனும் அருமையான இலக்கிய மாத இதழில், "ராஜகோபாலன் கடிதங்கள்' எனும் தலைப்பில் எழுதிய கடிதங்களும் பன்முகப்பார்வை கொண்டவை. ""அவர் எழுதிய "ராஜகோபாலன் கடிதங்கள்' என்பனவற்றிலும் அபூர்வமான கதைகள் உண்டு'' என்று நவ இலக்கிய மேதை புதுமைப்பித்தன் பாராட்டியுள்ளார்.

  சங்க இலக்கியம் முதல் பாரதி இலக்கியம் வரை கற்று, தமது இலக்கிய வாழ்க்கை மூலமாகத் தமிழ் மரபு செழிப்பதற்குப் பெரும் பங்களித்தார் ஐயர் அவர்கள். பழந்தமிழையும், நவீனத் தமிழையும் இணைத்தார்.

  பாரதியார், வ.உ.சி. ஆகியோரைக் காட்டிலும் தமது படைப்புகளில் சங்க இலக்கியத்தை ஐயரே பெருமளவில் ஆண்டுள்ளார்.

  வ.வே.சு.ஐயர், தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் (1920), ""குறுந்தொகையிலும், கலித்தொகையிலும் சில செய்யுள்கள் தெரிந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாக'' குறிப்பிட்டுள்ளார்.

  1918-இல் வெளிவந்த "கவிதை' எனும் கட்டுரைதான் கவிதை பற்றிய விமர்சனத்துறைக்கு ஓர் ஆரம்பம் செய்து வைத்திருக்கிறது என்பதை திறனாய்வாளர் சி.சு.செல்லப்பா சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அரிய ஒப்பியல் ஆய்வில் வ.வே.சு.ஐயர் சங்க இலக்கியமான "மலைபடுகடாம்' கவிதையை பிரெஞ்சு எழுத்தாளர் சேனாங்கூர், தாகூர், வேர்ட்ஸ்வர்த் ஆகியோரின் படைப்புகளுடன் ஒப்பிட்டு ஒப்பாய்வு செய்துள்ளார்.

  தொல்காப்பியம், சங்க இலக்கியம் கண்ட மூவேந்தர் மரபை, பாரதியார் போன்று வ.வே.சு.ஐயரும் நெஞ்சாரப் புகழ்ந்துள்ளார். வ.வே.சு.ஐயர் 1909 நவம்பர் 6-இல் "இந்தியா' இதழில் பாரத நாட்டின் பெருமைகளை விதந்தோதுமிடத்தில், ""சேரன், சோழன், பாண்டியன் புரந்தளித்த தாய்த் திருநாடு'' என்று சாற்றியுள்ளார். "மறுமலர்ச்சி' எனும் கட்டுரையில், ""சேர, சோழ, பாண்டியர்கள் காலத்திலும் தமிழறிவானது, லெüகீக விஷயங்களாகட்டும், ஆத்யாத்ம விஷயங்களாகட்டும் கம்பீரமான வேலைகள் செய்திருக்கிறது''. தமிழ் தேசியமும், திராவிட தேசியமும் மூவேந்தர் மரபைப் போற்றிப் புகழ்வதற்கு முன்னோடியாக வ.வே.சு.ஐயர் திகழ்ந்தார் என்பது வரலாற்று உண்மையாகும்.

  ""திருவள்ளுவரையும், கம்பரையும் வ.வே.சு.ஐயர் தமது வழிபடு தெய்வங்களாகவே கொண்டாடி வந்தாரென்று கொள்ளலாம்'' என்று ஐயருடன், தேசபக்தன் இதழில் பணியாற்றி, நெருங்கிப் பழகிய வெ.சாமிநாதசர்மா குறிப்பிட்டுள்ளார். குறள் நெறி பரப்பிய பணியில் வ.வே.சு.ஐயரின் மகத்தான சாதனை, அவர் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்ததும், அதில் எழுதிய மிக நீண்ட ஆய்வு முன்னுரையும் ஆகும்.

  அதேபோல் முதல் பதிப்பு 1916-இல் வெளிவந்தது. சுப்பிரமணிய சிவா, பதிப்பாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது பதிப்பு 1925-இல் வெளிவந்தது. தமது நூல்களில் இடமறிந்து குறட்பாக்களை ஆள்வதில் பேரார்வம் செலுத்தியுள்ளார் வ.வே.சு.ஐயர்.

  1916-இல் புதுச்சேரியில் பதிப்பகம் ஒற்றை மண்டயம் எஸ்.சீனிவாசாசாரியாருடன் இணைந்து தோற்றுவித்தபொழுது, அதற்கு "கம்ப நிலையம்' என்று பெயரிட்டார். வ.வே.சு.ஐயர் கம்ப நிலையம் வெளியீடுகளில் ஒன்றாக 1917-இல் வெளிவந்த "கம்பராமாயணம் (சுருக்கம்) பாலகாண்டம்' எனும் பதிப்பு நூல், வ.வே.சு.ஐயரின் கம்பராமாயணத் தவத்தில் வெளிவந்த முதல் சாதனை நூலாகும். பாலகாண்டத்தின் 1399 பாடல்களில் 545 பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்துப் பதிப்பித்தார் வ.வே.சு.ஐயர்.

  கம்ப நிலையம் சார்பில் வெளியிடப்பெற்ற வ.வே.சு.ஐயருடைய "மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்' எனும் நூல், வ.வே.சு.ஐயரை நவீன படைப்பிலக்கியம்-குறிப்பாக சிறுகதை இலக்கிய முன்னோடி என்று நிறுவியுள்ளது.

  1917-இல் வெளிவந்த முதற் பதிப்பில், "மங்கையர்க்கரசியின் காதல், காங்கேயன், கமல விஜயம், ழேன் ழக்கே, குளத்தங்கரை அரசமரம் ஆகிய ஐந்து சிறுகதைகள் உள்ளன. வ.வே.சு.ஐயர் மறைவுக்குப்பிறகு, லைலாமஜ்னுன், எதிரொலியாள், அனார்கலி எனும் மூன்று சிறுகதைகள் சேர்க்கப்பட்ட இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. வ.வே.சு.ஐயரின் மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் சார்பாக "சுதந்திர சங்கு' ஆசிரியர் சங்கு எஸ்.கணேசன் மூலம் அது வெளியிடப்பட்டது. ""இக்கதைகளை ஒருவன் படித்துப் புத்தகத்தைக் கீழே வைக்கும் காலத்தில் அவன் மனதில் பரிசுத்தமான உணர்ச்சிகளும், உன்னதமான எண்ணங்களும் ததும்பும்'' என்று ராஜாஜி 1927-இல் வெளிவந்த பதிப்பிற்கு அளித்த முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

[ நன்றி: தினமணி ] 

தொடர்புள்ள பதிவுகள்: