டி.கே.பட்டம்மாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டி.கே.பட்டம்மாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

2208. டி.கே.பட்டம்மாள் - 12

விடுதலையும் மணிக்கொடியும்


ஆகஸ்ட், 1947 மாத 'கல்கி' இதழொன்றில் வந்த இசைத்தட்டு விமரிசனமும்,  அந்த இசைத்தட்டுகளின்  படங்களும்.


                                          







 விமரிசனத்தில் குறிப்பிட்ட "கதம் கதம்" ( நேதாஜியின் போர்க் கீதம்) பாடலை ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் என் பள்ளியில் யாவரும் சேர்ந்து பாடியது நினைவுக்கு வருகிறது. இதோ அந்தப் பாடல்:


டி.ஆர். மகாலிங்கம்  "நாம் இருவரில்" பாடிய "விடுதலை" பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா?


மேலும் இரண்டு! :

விடுதலை

தாயின் மணிக்கொடி


[ நன்றி: கல்கி,  Valliyappan Ramanathan ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 

சங்கீத சங்கதிகள் - 1 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 


ஞாயிறு, 20 மார்ச், 2022

2054. டி.கே.பட்டம்மாள் - 11

 சுருதி சேர்ந்தது! 


மார்ச் 19. டி.கே.பட்டம்மாளின்  பிறந்த நாள். 

'ஸ்ருதி'( Sruti)  பத்திரிகையின் முதல் இதழின் ( அக்டோபர், 1983) அட்டைப்படத்தை அலங்கரித்தார் டி.கே.பி. அந்த  இதழ் வெளியீட்டு விழா நிகழ்ச்சியைப் பற்றிய கட்டுரை இதோ! 

 ( இதழின் இணையத்தளம் தொடர்புள்ள பதிவுகளில் உள்ளது.)

 
   



[ நன்றி: கல்கி, Sruti ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 

சங்கீத சங்கதிகள் - 1 

Sruti Magazine Website


பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

புதன், 15 ஜூலை, 2020

1585. டி.கே.பட்டம்மாள் - 10

தலைமுறைகளின் கலைஞர்!
என்.விஜய் சிவா


ஜுலை 16.டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். கல்கியில் வந்த அஞ்சலி.








[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்

செவ்வாய், 17 மார்ச், 2020

1494. டி.கே.பட்டம்மாள் - 9

கான ஸரஸ்வதி டி.கே.பட்டம்மாள் 




1945-இல் வந்த ஒரு 'கல்கி' இதழின் அட்டைப்படமும், பட விளக்கமும் .




உபரி: அவ்விதழில் வந்த ஒரு விளம்பரம்!




[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

ஞாயிறு, 16 ஜூலை, 2017

773. டி.கே.பட்டம்மாள் - 8

இசைத்தட்டு விளம்பரங்கள் -1


ஜூலை 16. டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம்.

பழைய தமிழ் இதழ்களில் வந்த சில விளம்பரங்கள் இதோ!





தொடர்புள்ள பதிவுகள்:

சனி, 16 ஜூலை, 2016

டி.கே.பட்டம்மாள் - 7

பட்டம்மாள் என்கிற பாட்டம்மாள்!
நெல்லை பாரதி
ஜூலை 16. டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். 



தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள் என்கிற டி.கே.பட்டம்மாள் 1919ஆம் ஆண்டு, காஞ்சிபுரம் அருகேயுள்ள தாமல் கிராமத்தில் பிறந்தார். ஆசிரியராகப் பணியாற்றிய அப்பா கிருஷ்ணசுவாமிக்கு மகளை சங்கீதத்துறையில் பெரிய இடத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அதற்கேற்றபடி பட்டம்மாளுக்கும் சின்ன வயதிலேயே திறமை பளிச்சிட்டது. உறவினர் இல்ல விழாக்களில் பலகுரலில் பேசி, தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார். அப்பாவிடம் பெற்ற சங்கீதப் பயிற்சியால் நான்கு வயதிலேயே சுலோகங்களைப் பாடி, பாராட்டுகளை அள்ளினார். பள்ளிக்கூடத்தில் நடந்த இசை நாடகத்தில் தங்கப்பதக்கம் கிடைத்தது. ஹெச்.எம்.வி கிராமபோனில் முதல்முறையாகப் பாடியபோது அவருக்கு பன்னிரண்டு வயது. மேடைக்கச்சேரி ஆரம்பிக்கும்போது பதினான்கு வயது.
 



காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்துக்கு மகாத்மா காந்தி வந்திருந்தபோது, வீர சுதந்திரம் வேண்டி நின்றார் வேறொன்று கொள்வாரோ…’ என்ற பாரதி பாடலைப்பாடி, பார்வையாளர்களின் கைதட்டல்களைக் குவித்தார். கே.சுப்ரமணியம் இயக்கத்தில் தியாக பூமிபடம் உருவானபோது பாபநாசம் சிவனும் அவரது சகோதரர் ராஜகோபால ஐயரும் பாடல்களை எழுதினார்கள். பாபநாசம் சிவன் மற்றும் மோதிபாபு இசையில் தேச சேவை செய்ய வாரீர்…’, ‘பந்தம் அகன்று நம் திருநாடு உய்த்திட…’ என இரண்டு பாடல்களைப் பாடி பாட்டுச்சாலைப் பயணத்தைத் துவக்கினார் பட்டம்மாள்.


திருநெல்வேலியில் ஒரு கச்சேரி. அதில் பாரதியார் பாடலைப் பாடிக்கொண்டிருக்கும்போது ஒரு பெண்மணி அழுதபடி இருக்க, கச்சேரி முடிந்ததும், அவர் யார் என்று விசாரித்ததும், பாரதியாரின் மனைவி செல்லம்மா என்று தெரிய வந்திருக்கிறது. பாட்டைப் புரிந்துகொண்டு உணர்ச்சியோடு பாடினீர்கள். இதை கேட்க அவர் இல்லையேஎன்று நெகிழ்ந்திருக்கிறார் செல்லம்மா. 1947 ஆம் ஆண்டில் பொங்கல் திருநாளில் வெளிவந்தது ஏவி.எம்மின் நாம் இருவர்’. அந்தப்படத்துக்கு சுதர்சனம் இசையமைத்திருந்தார். ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே…’ என்ற பாரதியார் பாடலுக்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைத்திருந்தார். பட்டம்மாள் குரலில் ஒலித்த அந்தப்பாடல் தமிழகமெங்கும் எதிரொலித்தது. அதே படத்தில் வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே…’ என்ற பாடலைப் பாடி வாழ்த்துகளையும் புகழையும் வாரினார்.

1947
ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு. நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்க இருப்பதை எண்ணி மக்களெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருந்த நேரம். வானொலியில் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே…’ பாடலை நேரலையில் பாடினார் பட்டம்மாள். கேட்டவரெல்லாம் உணர்ச்சிப்பெருக்கால் ஆனந்தக்கண்ணீர் விட்டார்கள். வானொலி நிர்வாகம் அவருக்கு ஒரு காசோலையை நீட்டியது. நாட்டுக்காகப் பாடினேன், பணம் தேவையில்லைஎன்று மறுத்திருக்கிறார். கொத்தமங்கலம் சீனு- விஜயகுமாரி நடித்த மகாத்மா உதங்கர்படத்தில் காண ஆவல் கொண்டேங்கும் என் இருவிழிகள்…’ என்ற பாடலைப் பாடினார். காதல் டூயட் பாடமாட்டேன்என்று விரதமிருந்த பட்டம்மாளின் பாட்டுப்பட்டியலில் அந்தப்பாடலில் மட்டும் காதல்ரசம் பொங்கியது. அதே படத்தில் எஸ்.வி.வெங்கட்ராமன் - வீணை ராமநாதன் இசையில் குஞ்சிதபாதம் நினைந்துருகும்…’ என்கிற பக்தி ரசத்தையும் பொங்கவைத்தார் பட்டம்மாள்.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த தியாகய்யாவில் ராதிகா கிருஷ்ணா…’ மற்றும் நினைந்துருகும் என்னை…’ என இரண்டு பாடல்கலைப் பாடினார். இந்தியிலிருந்து ராம ராஜ்யாவை தமிழுக்குக் கொண்டு வந்தார் ஏவி.மெய்யப்பச் செட்டியார். அதில் அருணாசலக் கவிராயரின் எனக்குன் இருபதம்…’ என்கிற டைட்டில் பாடலைப் பட்டம்மாள் பாடினார். அந்த ஆறுநிமிடப் பாட்டில் ராமாயணத்தின் முன்கதை சொல்லப்பட்டதை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள்.  வேதாள உலகம்படத்தில் சுதர்சனம் இசையில் அவர் பாடிய தீராத விளையாட்டுப் பிள்ளை…’ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.  அதே படத்தில் தூண்டிற் புழுவினைப்போல்…’ பாடலும் ரசிக்கப்பட்டது.

ஜி.அஸ்வத்தாமா இசையில் பிழைக்கும் வழிபடத்தில் சுந்தர வாத்தியார் எழுதிய எங்கள் நாட்டுக்கெந்த நாடு பெரியது…’ பாடலின் நிறைவில் நேரு எங்கள் நாடு…’ என்று பட்டம்மாள் குரலில் ஒலித்தபோது காங்கிரஸ் தொண்டர்கள் கைதட்டி வரவேற்றார்கள். அந்தப்படத்தில் முதலை வாயில்…’, ‘கோட்டை கட்டாதேடா…’ என இரண்டு பாடல்களையும் பாடினார்.

வாழ்க்கைபடத்தில் பாடிய பாரத சமுதாயம் வாழ்கவே…’ பாடல் அவரது புகழுக்கு மேலும் மெருகூட்டியது. லாவண்யாபடத்தில் இடம்பெற்ற பழம் பாரத நன்நாடு…’ பாடலில் ஏழைகளின் குரலை ஏற்ற இறக்கத்தோடு ஒலித்து, பாராட்டுப்பெற்றார் பட்டம்மாள்.


ஜெமினியின் நாட்டிய ராணிபட விளம்பரத்தில் பாடல்கள்: டி.கே.பட்டம்மாள்என்று பெரிய எழுத்துக்களில் அவரது பெயர் அறிவிக்கப்பட்டு, பெருமை சேர்த்தது. லலிதா-பத்மினி நடனமாடிய நாடு செழித்திடவும் உள்ளமே நாடு…’ பாடல், பட்டம்மாள் குரலில் வனசுந்தரிபடத்தில் ஒலித்து, வசீகரித்தது. 1948ஆம் ஆண்டு, ஜனவரி 30ஆம் தேதி காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட அன்று, ‘சாந்தி நிலவ வேண்டும்…’ பாடலை மெட்டமைத்து, வானொலியில் பாடினார். கேட்டவர் கண்களெல்லாம் ஈரமாகின. அந்தப்பாட்டுக்காக வனொலி நிலையம் வழங்கிய காசோலையை வாங்க மறுத்துவிட்டார் பட்டம்மாள்.

எல்.சுப்ரமண்யம் மெட்டமைத்த வைஷ்ணவ ஜனதோ…’ பாடலை கமல்ஹாசனின் வேண்டுகோளை ஏற்று ஹேராம்படத்தில், நீண்ட இடைவெளிக்குப்பின் பாடினார். அவரது வீட்டுக்கே இசைக் கருவிகளை எடுத்துச்சென்று, பாடல்பதிவுசெய்து, அந்த இசை மேதைக்கு மரியாதை செய்தார் இளையராஜா. கான சரஸ்வதிஎன்று கலா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பட்டம்மாள் பத்ம பூஷண்’, ‘பத்ம விபூஷண்விருதுகளைப்பெற்ற பெருமையாளர். 2009ஆம் ஆண்டில் முதுமையின் காரணமாக மரணமடைந்தார் பட்டம்மாள்.


[ நன்றி : http://kungumam.co.in/ ] 

தொடர்புள்ள பதிவுகள்:

திங்கள், 28 மார்ச், 2016

டி.கே.பட்டம்மாள் - 6

பாட்டம்மாள் 
வீயெஸ்வி 

ஆனந்த விகடனில் பிரபல இசை விமர்சகர், எழுத்தாளர்  வீயெஸ்வி  2007-இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ! 
==============

கர்னாடக இசை உலகில் முப்பெரும் தேவியருள் ஒருவராக இருந்து பட்டொளி வீசிப் பிரகாசித்தவர் டி.கே.பட்டம்மாள். வீட்டில் செல்லமாக பட்டா!
குழந்தைப் பருவத்திலேயே பகவான் ரமணராலும், காஞ்சிப் பெரியவராலும் ஆசீர்வதிக்கப்பட்டு, குருமார்கள் பலரிடம் இசை பயின்று படிப்படியாக உயர்ந்து உச்சம் தொட்டவர். காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் கூரை வேயப்பட்ட வீட்டில் விடியற்காலை மூன்றரை மணிக்கு எல்லாம் எழுந்து, சுலோகங்களையும் பக்திப் பாடல்களையும் பாடிப் பயிற்சி செய்யும்போது பட்டாவுக்கு வயது நான்கு!

வருடம் 1931. பட்டம்மாள் படித்த காஞ்சிபுரம் பெண்கள் பள்ளியில் 'சத்தியவான் சாவித்திரி' நாடகத்தை மேடை ஏற்றிய சமயம். 12 வயது பட்டம்மாளுக்கு சாவித்திரி வேடம். 'தாயார் இருந்தென்ன... தந்தையார் இருந்தென்ன?' பாடலை உணர்ச்சிப்பெருக்குடன் டி.கே.பி. பாட, குழுமி இருந்தவர்கள் கண் கலங்கி இருக்கிறார்கள். இந்த நாடகத்துக்கு அனுமதிக் கட்டணம் நாலணா. அன்று வசூலான தொகை 900 ரூபாய்!

டி.கே.பி-க்குப் பதக்கம் கிடைத்தது. மறுநாள் சுதேசமித்திரன் நாளேட்டில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியது. திகைத்துப் போனார் தந்தை. ''இதென்ன அநியாயம்? பேப்பர்ல இப்படி போட்டோ எல்லாம் வந்தா உன் பொண்ணுக்கு யாரும் மாப்பிள்ளை கொடுக்கப் போறது இல்லை. பட்டாவோட எதிர்காலம் அவ்வளவுதான்...'' என்று கிருஷ்ணஸ்வாமியின் சகோதரி கள் எட்டுப் பேரும் கூச்சல் போட்டார்கள். இன்னொரு பக்கம், பேப்பரில் செய்தியைப் பார்த்துவிட்டு கொலம் பியா கிராமபோன் கம்பெனியினர் இவரை அணுகி, பட்டம்மாளின் குரலைப் பதிவுசெய்ய அனுமதி கேட்டு இருக்கிறார்கள். தந்தைக்கு விருப்பம் இல்லை. ''கவலைப்படாதே... வெளியே மாப்பிள்ளை கிடைக்கலேன்னா என் மருமானையே பட்டம்மாளுக்குக் கல்யாணம் செய்துவைக்கிறேன்...'' என்று உறுதி கொடுத்து அவரைச் சம்மதிக்கவைத்திருக்கிறார் டாக்டர் சீனிவாசன் என்ற அவரது குடும்ப நண்பர்.

திருநெல்வேலி சபாவில் டி.கே.பி. கச்சேரி. பாரதியாரின் பாடல் ஒன்றை மெய்மறந்து பாடிக்கொண்டு இருந்தவர், முதல் வரிசையில் உட்கார்ந்து இருந்த பெண்களில் ஒருவர் கண்ணீர்விட்டு அழுதுகொண்டு இருந்ததைக் கவனித்தார். அந்தப் பெண்மணி மகா கவியின் மனைவி செல்லம்மாள். கச்சேரி முடிந்ததும், ''என் கணவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் நீங்கள் பாடியதைக் கேட்டுக் குளிர்ந்திருப்பார்...'' என்று தொண்டை அடைக்கச் சொன்னாராம் செல்லம்மாள்.

1940-ல் கீழ்த் திருப்பதியில் உள்ள திருச்சானூரில் பட்டமாவுக்குக் கல்யாணம். மணமகன் ஈஸ்வரன், முன்பே உறுதியளித்த குடும்ப நண்பர் டாக்டர் சீனிவாசனின் மருமகன். திருமண நாள் அன்று வைர அட்டிகையுடன் ஜொலித்தார் பட்டம்மாள். ''விலை மதிப்பற்ற இசை உன்னிடம் இருக்கும்போது இந்த வைர அட்டிகை உனக்கு எதற்கு?'' என்று திருமணத்துக்கு வந்திருந்த ராஜாஜி கேட்க, அதற்குப் பிறகு அந்த அட்டிகையை அணியவே இல்லையாம் டி.கே.பி!

திருமணமான புதிதில் தங்களுடன் திருநெல்வேலிக்கு வரும்படி ஈஸ்வர ஐயரை வற்புறுத்தினார்கள் இவருடைய நண்பர்கள். பட்டமாளுக்குக் கணவர் தன்னை விட்டு விட்டுத் தனியாகச் செல்வதில் விருப்பம் இல்லை. இருப்பினும், 'மனைவிதாசன்' என்று நண்பர்கள் கிண்டல் செய்வார்களே என்பதால் சம்மதித்தார் ஈஸ்வர ஐயர். ஆனால், சில மணி நேரத்துக்குள்ளாகவே வீடு திரும்பிவிட்ட அவர் சொன்னார்...
''நீ இல்லாம என்னால இருக்க முடியாது பட்டா!''

நன்றி: "Gana Saraswathi D.K.Pattammal:
Dimensions of a divine songster"  by Nithya Raj, Bharatiya Vidya Bhavan, 2007.

[ நன்றி: விகடன் ] 

*  பின் குறிப்பு:

டி.கே.பட்டம்மாள் பேசுகிறார் : 



==== 

சனி, 3 மே, 2014

சங்கீத சங்கதிகள் - 37

டி.கே.பட்டம்மாள் - 5


[ நன்றி: ஸ்ருதி, அக்டோபர் 83 ] 


முந்தைய பதிவுகள் :

டி.கே.பி -1
டி.கே.பி -2
டி.கே.பி -3
டி.கே.பி -4


எனது இசைப்பயணம் -3
டி.கே.பட்டம்மாள்  

( தொடர்ச்சி ) 

டைகர் வரதாச்சாரியார் எனக்கு “கான சரஸ்வதி”னு பட்டம் கொடுத்தார். அரியக்குடி ஸ்ரீராமானுஜ ஐயங்கார் என்னைப் பாராட்டி “பாட்டம்மா ..” “ ஸங்கீதத்துக்காகப் பாடு பட்ட அம்மா”னு வர்ணிச்சார்.

தமிழ் இசையில் எனக்கு ஆர்வம் வருவதற்குத் “தமிழ் தியாகய்யா” பாபநாசம் சிவன் அவர்களும் ஒரு முக்கிய காரணம். எத்தனை தமிழ் கீர்த்தனைகள். அப்பப்பா...வற்றாத இசைக் கடல்னா அவர். நேரிடையாக அவரிடமே கற்றுக் கொள்கிற வாய்ப்பு எனக்குக் கிடைச்சுது.

மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், வீருசாமி பிள்ளை மற்றும் டி.என்.ஸ்வாமிநாதப் பிள்ளை ஆகியோரது சஷ்டியப்த பூர்த்தி விழாக்களின்போது பாடும் பாக்கியம் கிடைச்சுது. அதே போல் நாதஸ்வர சக்ரவர்த்தி T.N.ராஜரத்தினம் பிள்ளையின் மருமான் கக்காயியின் கல்யாணத்துக்கு நானும் ஜெயராமனும் பாடினோம். Dr.S.ராமநாதனின் ( தியாகராஜர் இயற்றிய) பிரஹ்லாத பக்தி விஜயம் வெளியீட்டு விழா மைலாப்பூர் சாஸ்திரி ஹாலில் நடைபெற்றது. அரியக்குடி ஸ்ரீராமானுஜ ஐயங்கார் முன்னிலையில் ஆலத்தூர், எம்.எஸ். நான் எல்லோரும் பாடினோம், மறக்க முடியாத நிகழ்ச்சி.

1947-ல ஆகஸ்டு 14 ராத்திரி 12 மணிக்கு இங்க மெட்ராஸே ஜகஜ் ஜோதியாயிருந்தது. எங்க பார்த்தாலும் மாவிலைத் தோரணங்கள். எல்லோரும் அவா அவா ஆத்துல கல்யாணம் மாதிரி கொண்டாடிண்டிருந்தா. ஆல் இண்டியா ரேடியோவுல என்னைப் பாடக் கூப்பிட்டா. “விடுதலை, விடுதலை..” “ஆடுவோமே பள்ளு பாடுவோமே..” “வெற்றி எட்டுத் திக்கும் எட்ட” “ வந்தே மாதரம்” பாடல்களைப் பாடினேன். பாடி முடிச்சப்பறம், அப்போ டைரக்டராயிருந்த கோபாலன் சன்மானமா செக் கொடுத்தார். கண்டிப்பாக வாங்கிக்கவேணும்னு கட்டாயப்படுத்தினார். என் தேசத்துக்கு, என்னோட பிறந்த மண்ணுக்கு, என் தாய் திருநாட்டுக்கு ஸ்வதந்திரம் கிடைச்சிருக்கு. நான் கைநீட்டி காசு வாங்க மாட்டவே மாட்டேன்னு சொல்லிட்டேன். என்னோட பாரதத் தாய்க்கு அடிமை விலங்கெல்லாம் நீங்கி விடுதலை கிடைச்சதுக்குக் காசு வாங்கிண்டு பாடுவதா... அபச்சாரம் இல்லையா?

[ நன்றி: ஸ்ருதி, ஆகஸ்ட் 2009 ]

எனக்குப் பாரதியார் பாடல்கள் மேல் அதீதமான ஆசை வரக் காரணமாயிருந்தவர் என் கணவரின் மாமா டாக்டர் ஸ்ரீநிவாசந்தான். தேசபிதா மகாத்மா காந்திஜி காஞ்சிபுரம் வந்தப்போ என்னை ஊக்குவித்துத் தைரியமாகப் பாரதியார் பாடல்களைப் பாடச் சொன்னார். காந்திஜி முன்பாக, “வீர சுதந்திரம் வேண்டி நின்றார்..” பாடினேன். பாரதி பாடல்கள் பாட ஆரம்பிச்சது இதுலேர்ந்துதான். இன்னி வரைக்கும் ஏராளமான பாரதி பாடல்கள் பாட அஸ்திவாரமாய் அமைஞ்சது இந்நிகழ்ச்சி தான். தேசபிதா மகாத்மா காந்தி காலமானபோது 1948 ஜனவரியில ரேடியோவில் “வைஷ்ணவ ஜனதோ” “ சாந்தி நிலவ வேண்டும்” “காந்தி மகான் பிறந்தார்”..போன்ற பாடல்களைக் கண்ணீர் மல்கப் பாடினேன்.

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் தாயார் ஸ்ரீமதி வீணை சண்முக வடிவு அவர்களுக்கு என் மீது அதீதமான பிரியமும், வாஞ்சையுமுண்டு. அதேபோல் ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, காலஞ்சென்ற எம்.எல்.வி போன்ற இன்னும் பல இசைக் கலைஞர்களுக்கு என்மீது மிக்க பந்துப்பிரியமுண்டு.

நமது கர்நாடக இசையானது பிராச்சீனமானது. அது வெறும் கலை மட்டுமல்ல, ஒரு சாஸ்திரமும் கூட. மனசுக்கும், காதுக்கும் சுகம் அளிக்க வல்லது. சாதகம் மூலம் அந்த இறைவனையே அடையலாம். ”


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

( தொடரும் )

[ நன்றி : ஸரிகமபதநி, டிசம்பர் 2000 இதழ் ]

தொடர்புள்ள பதிவுகள் :

டி.கே.பட்டம்மாள்

சங்கீத சங்கதிகள்

DKPATTAMMAL-FILM-SONGS

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

சங்கீத சங்கதிகள் - 36

டி.கே.பட்டம்மாள் - 4

 முந்தைய பதிவுகள் :


எனது இசைப்பயணம் -2
டி.கே.பட்டம்மாள்  


( தொடர்ச்சி ) 

எங்க ஸ்கூல் ஹெட்மிஸ்டிரஸ் ஸ்ரீமதி அம்முகுட்டி அம்மாள் இசை நாடகம் ஒண்ணு தயாரிச்சு என்னை நடிக்கவும் பாடவும் வெச்சா. நான் அதுலே சாவித்திரி வேஷம் போட்டேன்.”நாடகத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக தங்கப் பதக்கம் பரிசுபெற்ற காஞ்சிபுரம் கவர்ன்மெண்ட் உபாத்தியாயினி பயிற்சி பாடசாலையைச் சேர்ந்த டி.கே.பட்டம்மாள் “ என கொட்டை எழுத்துக்களுடனும், போட்டோவுடனும் அடுத்தநாள் பேப்பரில் நியூஸ் வெளியாயிடுத்து! அந்தக் காலத்துல இது ஒரு மாபெரும் புரட்சியாக்கும்! 
[ நன்றி: ஸ்ருதி ] 
இந்தச் செய்தியைப் படிச்சுட்டு, Columbia Gramaphone கம்பெனிகாரர்கள் ரிகார்டு கொடுக்கணும்னு என் அப்பாவை அணுகினார்கள். அந்தக் காலத்துல, ஸ்திரீகள் போட்டோ எடுத்துக்கறதே மகாபாவம். மற்றும் துர்லபமும் கூட. அதுலேயும் ரிகார்டு வேற கொடுப்பதா? என் அப்பா வேண்டாவிருப்பாகச் சம்மதித்தார். “முக்தியளிக்கும் திருமூல ஸ்தலத்தைக் கண்டு” பாடல்தான் நான் முதன்முதலா கொடுத்த ரிகார்டு!

திருப்புகழ் மாதிரி ஒரு இசை வடிவம் எந்த நாட்டு இசையிலும் கிடையாது. 108 அங்க தாளங்களையும் உள்ளடக்கி இந்த சந்தத் திருப்புகழை நமக்கு அளித்துள்ளார் அருணகிரிநாதர். சிம்ம நந்தன தாளம் கூட இதுல இருக்கிறதாகச் சொல்லுவா. காஞ்சிபுரத்தில திருப்புகழ் பாடல்களைப் பாடி வந்த வேலூர் ஸ்ரீ அப்பாதுரை ஆசாரி என்பவர்தான் எனக்கு திருப்புகழ், திருப்பாவை-திருவெம்பாவை, இராமலிங்க ஸ்வாமிகளின் அருட்பா ஆகியவைகளைக் கற்றுக் கொடுத்தார்.

ஆரம்ப காலத்தில் நான், ஜகன்மோகினி ராகத்தில் அமைந்த “ நெஞ்சே நினை அன்பே துதி நெறி நீ குருபரனை ..” என்கிற பல்லவியைப் பாடுவேன். இது எனது மானசீக குரு காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையவர்கள் பாடிப் பிரபலமானதாகும். மிகவும் கடினமான பல பல்லவிகளை திருப்பதி ஸ்ரீமான் வித்யால நரசிம்மலு நாயுடு கற்றுக் கொடுத்தார்.

1929-ல் மதராஸ் கார்பரேஷன் ரேடியோவில் பாடினேன்.

1930-ல் ப்ரொபசர் சாம்பமூர்த்தி நடத்திண்டுருந்த Summer School of Music -ல நான் சேர்ந்தப்போ நல்ல நல்ல கிருதிகளைச் சொல்லிக் கொடுப்பார். ஒவ்வொரு வாரக் கடைசியிலும், ரஸிகர்கள் முன்னிலையில் நாங்கள் மாணவ, மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து பாடுவோம். வீணை மற்றும் வயலினும் சொல்லிக் கொடுப்பா.உங்களுக்கு ஒண்ணு தெரியுமோ... நான் வீணையும், வயலினும் கத்துண்டு வாசிச்சும் இருக்கேன்! இந்த சமயத்துலதான் நன்னா பாடும் மாணாக்கர்களுக்கு கச்சேரி செய்ய வாய்ப்பும் கொடுப்பார்கள். எங்களுக்கு மயிலாப்பூர் ரஸிக ரஞ்சனி சபாவிலேயும், ஜார்ஜ் டவுன் கான மந்திரத்திலுமாக இரண்டு chance கிடைச்சுது.

முதன் முதலாக 1933-ல் ( எக்மோர் லேடிஸ் கிளப் ) சென்னை எழும்பூர் மஹிளா ஸமாஜத்தில் தான் என்னுடைய முதல் Public Performance  அரங்கேறியது. இதே வருஷம்தான் சென்னைக்கு குடிபெயர்ந்தோம். ஸ்ரீ அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் சிஷ்யர் ஸ்ரீமான் வி.சி.வைத்யநாதன் அவர்களிடம் பல ‘அட தாள’ வர்ணங்களும், க்ஷேத்ரஞர் மற்றும் தமிழ் பதங்களும் கத்துண்டேன். காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளை சிஷ்யர் என்.எஸ்.கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரிடம் “நாயனாப்பிள்ளை பாணி”யில் பாடல்கள் பாடமாச்சு .

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் கிருதிகள்னாலே எனக்கு உயிர். அவற்றை எனக்குக் கற்றுக் கொடுத்தவர் “ஸங்கீத கலாநிதி” நீதியரசர் T.L.வெங்கடராமய்யர் அவர்கள். அவரிடம் என்னை அம்பி தீக்ஷிதர்தான் அறிமுகப் படுத்தினார். அவர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு சொல்லிக் கொடுப்பார். நான் கீழே பாயில் உட்கார்ந்து கத்துப்பேன். பின்னர், அதைப் பிராக்டீஸ் பண்ணுவேன். அதையே திருப்பித் திருப்பிப் பாடிப் பார்த்துப்பேன். எத்தனை கிருதிகள் சொல்லிக் கொடுத்திருப்பார்! மகாமேதை அவர். அவர் மாதிரியெல்லாம் மனுஷாபிமாமானத்தோடும், பிரியத்தோடும் மனுஷர்களைப் பார்ப்பது அபூர்வம்...!

ஸ்ரீமான் T.L.வெங்கடராமய்யர் பற்றி இன்னொரு விசேஷமான விஷயம். ‘உனக்கு சங்கீத கலாநிதி பட்டம் கொடுக்கறதைப் பார்த்துட்டுதான் நான் உயிரையே விடுவேன்” என்று சொன்னார். அதன்படியே 1971 ஜனவரி 1 அன்று சதஸ் நடந்தபோது எனக்கு ஸங்கீத கலாநிதி பட்டம் வழங்கப் பட்டது. மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த அவரால் விழாவுக்கு வரமுடியலை. பின்னர், அவர் வீட்டுக்குச் என்று விருதைக் காண்பித்து ஆசீர்வாதம் வாங்கிண்டேன். சொல்லி வைத்தாற்போல் அன்றே அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். ஏதோ, நான் விருது வாங்குவதற்காகக் காத்து கொண்டிருந்தது போல் இருந்தார். என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி இது. அது மட்டுமில்லே. என்னால் தாங்கிக்க முடியாத பிருவுகள்ல இது ஒண்ணு. மற்றது என்னோடேயே உயிரோடு உயிராக கலந்திருந்த தம்பி D.K.ஜெயராமன் காலமானது.....”

( தொடரும் )

[ நன்றி “ ஸரிகமபதநி, டிசம்பர் 2000 ]

தொடர்புள்ள பதிவுகள் :


ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

சங்கீத சங்கதிகள் - 35

டி.கே.பட்டம்மாள் -3
[ நன்றி; dkpattammal.org ]

முந்தைய பதிவுகள் :

( தொடர்ச்சி ) 
டி.கே.பி அவர்கள் மனம் திறந்து தன் வாழ்க்கை விவரங்களைப் பல நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். இப்படி ‘ஒரு திறந்த புத்தகமாய்’ப் பேசிய இசைமேதைகள் ஒரு சிலரே. சில கட்டுரைகளிலும் அவை பதிவாகியிருக்கின்றன. ‘ஸ்ருதி’ என்ற ஆங்கிலப் பத்திரிகையின் முதல் இரு இதழ்களில் ( அக்டோபர் , நவம்பர் 83) வெளிவந்த கௌரி ராம்நாராயணனின் ஆங்கிலக் கட்டுரை அவற்றுள் ஒன்று. அதே போல் ‘ஸரிகமபதநி’ என்ற தமிழ்ப் பத்திரிகையில் டிசம்பர் 2000-இல் வெளிவந்த தமிழ்க் கட்டுரையும் ஒன்று. அந்தத் தமிழ்க் கட்டுரையிலிருந்து , டி.கே.பட்டம்மாளின் சொற்களிலேயே, அவருடைய சில வாழ்க்கை நிகழ்வுகளையும், சில இசை நினைவுகளையும் இப்போது பார்ப்போம்.
எனது இசைப்பயணம் -1
டி.கே.பட்டம்மாள்  
[ ஒரு தொகுப்பு; நன்றி: சங்கர் வெங்கட்ராமன், ஸரிகமபதநி ]
நான் மூணு மாசக் குழந்தையாய் இருந்தபோது, எங்கள் அப்பாவும், அம்மாவும் திருவண்ணாமலையில் அருளாட்சி செய்துவந்த மகான் ஸ்ரீரமண மகரிஷி அவர்களது காலடியில் என்னைப் போட்டனர். அப்போ, பகவான் ரமணர் தேன்துளிகளை என் நாக்கில் தெளித்து ஆசீர்வாதம் செய்தாராம். இப்பேர்ப்பட்ட பாக்கியத்தை அடைய நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கணும்!

[ ஒரு குறிப்பு: தான் பிரபலமாக்கிய ”வள்ளி கணவன் “ என்ற கிளிக்கண்ணி மெட்டில் அமைந்த “வள்ளல் ரமணர் பேரை வழிபோக்கர் பாடினாலும் ...” என்ற ஒரு பாடலை டி.கே.பி பலமுறை பாடியிருக்கிறார். ] 
வட ஆற்காடு மாவட்டம் ஆரணியிலிருந்து, ‘தெலுங்கு வாத்தியார்னு ஒருத்தர். ஒரு கல்யாணத்துல நானும் என் அண்ணா ரங்கநாதனும் பாடினதைப் பார்த்துட்டு அப்படியே என்னை உச்சி முகர்ந்து ஆசீர்வதித்து “நான்தான் உனக்குப் பாட்டு சொல்லிக் கொடுபேன்”னார். எனக்கு அப்போ 6 வயசுதான். அவராகவே ஆசைப்பட்டு “கொலுவமரகத” “கோரினவரமு”, “லேகனா” “துளசி பில்வ” போன்ற கிருதிகளைச் சொல்லிக் குடுத்தார். நான் பிரபல பாடகியானதுக்கு அப்புறமா ஒருநாள் எங்காத்துக்கு ஒரு வயசான கிழவர், தலையெல்லாம் நரைச்சுப்போய் தள்ளாடிண்டு வந்தார். கடைசியிலே பார்த்தா இவர்தான். நான் அப்படியே அழுதுட்டேன். எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த குருவாச்சே. வேஷ்டி, அங்கவஸ்திரம், மற்றும் ஆயிரம் ரூபாய் சன்மானத்தோட கொடுத்தேன். அப்படியே திருப்பிக் கொடுத்துட்டார். “ என் பொண்ணு மாதிரியம்மா நீங்க! என் அன்பளிப்பா இதைக் கருதி வேஷ்டி, அங்கவஸ்திரத்தை என் மாப்பிள்ளைக்குக் கொடுக்கிறேன்”னு திருப்பிக் கொடுத்துட்டார். இன்னி வரைக்கும் அவரோட பெயர் தெரியாது! 
’கவர்ன்மெண்ட் டெக்னிகல் எக்ஸாமினேஷன் இன் மியூஸிக்’ பரிட்சைக்காக அப்பாவும், நானும் மதராஸ் வந்தோம். புரொபசர் சாம்பமூர்த்தி, டைகர் வரதாச்சாரியார் மற்றும் ஸ்ரீமான் அம்பி தீக்ஷிதர் ஆகியோர் எக்ஸாமினர்களாக இருந்தனர். அம்பி தீக்ஷிதர் “ ஸ்ரீசுப்ரமண்யாய நமஸ்தே ..” ( காம்போதி) பாடச் சொன்னார். டைகர் வரதாச்சாரியார் பிலஹரியில் “நா ஜீவாதார” பாடச் சொன்னார். பரீட்சை முடிந்ததும் எனக்கு ரொம்ப நல்ல எதிர்காலம் இருப்பதாக ஆசீர்வதித்து, தானே எனக்குப் பாட்டுக் கற்றுக் கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார் அம்பி தீக்ஷிதர். இவர் சாட்சாத் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பேரன். எனக்கு வீணையோட பாட்டு சொல்லிக் கொடுத்தார். அப்போதான் குரல் அழகா இழைஞ்சு, குழைஞ்சு வரும்னு சொல்லுவார். 
“பாலகோபால..” “கஞ்சதளாயதாக்ஷி”...கிருதிகளைச் சொல்லிக் கொடுத்து ஆசீர்வதித்தார். என்ன ஒரு மகாபாக்யம்? இது தவிர ராக ஆலாபனை செய்யும் முறைகளை காஞ்சிபுரம் பட்டு ஐயங்கார் அவர்களிடமும் “ரக்ஷபெட்டரே”(பைரவி), “இகநன்னுப்ரோவ” போன்ற கிருதிகளை சின்னமாள்னு ஒரு அம்மாளிடமும் கற்றேன். 
என்னோட மானசீக குருவாக காஞ்சிபுரம் சுப்பிரமணிய பிள்ளை அவர்களைத்தான் கருதுகிறேன். இவர் யார் தெரியுமா? காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையேதான்! வயலின், மிருதங்கம், கடம், கஞ்சிரா, டோலக், மோர்சிங் மற்றும் கொன்னக்கோல்னு ஒரு ஃபுல் பெஞ்ச் கச்சேரியைத் துணிஞ்சு நடத்திக் காட்டிய இசைமேதை ஸ்ரீமான் நாயனாப் பிள்ளையவர்கள்தான். ராக பாவத்தையும், லய சமத்காரத்தையும் ஒரே தராசில் நிறுத்தாற்போல் சரிசமமாக பங்கிட்டு அளிப்பார்.



காஞ்சிபுரத்துலே என் பாட்டைக் கேட்டு, ரஸிச்சு தங்கள் வீட்டு நவராத்திரி கொலுவின்போது என்னைப் பாட அழைத்தார். என்னுடைய பாட்டைக் கேட்டுவிட்டு நாயனாப் பிள்ளை மிகவும் மனமகிழ்ந்து பாராட்டினார். அதன் நற்பலனாக அவருடைய தாயார் காமாட்சி அம்மாள் எனக்கு மாஞ்சி ராகத்தில் “ப்ரோவவம்மா” கிருதியைச் சொல்லிக் கொடுத்தார். அந்த சமயத்தில் தான் பிருந்தா-முக்தா ஸகோதரிகள் சின்னப் பெண்களா வருவா ....” 

( தொடரும் )

[ நன்றி : ஸரிகமபதநி, டிசம்பர் 2000 இதழ் ]

தொடர்புள்ள பதிவுகள் :


ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

சங்கீத சங்கதிகள் - 34

டி.கே.பட்டம்மாள் -2 


[ நன்றி: http://www.dkpattammal.org/  ]

முந்தைய பதிவு :
டி.கே.பட்டம்மாள் -1

( தொடர்ச்சி)
28-1-45 கல்கி இதழில் ’கல்கி’ எழுதியது :

கர்நாடக சங்கீத வித்தை மிக அருமையானது. அந்த வித்தையிலே தேர்ச்சி அடைதல் எளிய காரியமன்று. அதற்கு இயற்கையோடு பிறந்த இசை உணர்ச்சி வேண்டும். இடைவிடாத உழைப்பும் பயிற்சியும் வேண்டும். இப்படி அரிதில் பெற்ற வித்தை நன்கு சோபிப்பதற்கு இனிய சாரீரம் வேண்டும். இந்த மூன்று அம்சங்களும் நன்கு பொருந்திய பாக்கியசாலி, கான ஸரஸ்வதி டி.கே.பட்டம்மாள். மதுரமும் கம்பீரமும் பொருந்திய சாரீரம், அசாதாரண லயஞானம், அழுத்தமான கமகப் பிடிகள், தெளிவான சாஹித்ய உச்சரிப்பு - இவை ஸ்ரீமதி பட்டம்மாளின் பாட்டில் விசேஷ அம்சங்கள். 

சவுக்க கால தீக்ஷிதர் கிருதிகளைப் பூரண ராக பாவத்துடன் பாடுவதிலும், அபூர்வ லய வேலைப்பாடுகள் பொருந்திய பல்லவிகள் பாடுவதிலும் பெயர் பெற்றவர். தமிழிசை இயக்கத்தின் முன்னணியில் நிற்பவர். ஸ்ரீமதி பட்டம்மாளின் கச்சேரிகளில் சாதாரணமாக எப்போதுமே தமிழ்ப் பாடல்கள் நிறைய இருக்கும். அவருக்கே தனி உரிமையான துக்கடாக்களில் கரகோஷம் நிச்சயம் உண்டு. 
[ நன்றி: பொன்னியின் புதல்வர், ‘சுந்தா’ ] 

‘கல்கி’ பட்டம்மாளைப் பற்றி எழுதினதைப் பார்த்தோம். ஆனால், பட்டம்மாள் ‘கல்கி’யைப் பற்றி எழுதினதைப் படிக்கவேண்டாமா? இதோ, அவர் “ அமரர் கல்கி பாடல்கள்” என்ற நூலுக்கு ( வானதி பதிப்பகம், 2003) கொடுத்த அணிந்துரையில் எழுதியது :

கல்கியின் தமிழ்ப் பற்றும் இசைப் பிரேமையும் அவருடைய ரசிகத்தனமையும் ஒன்று சேர்ந்துதான் பாடல்களாக வெளிப்பட்டன. அநேகம் பாடல்கள், ஏற்கனவே அமைந்த மெட்டுக்குள் பொருந்தும்படி எழுதப்பட்டவை. 

‘பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்’ என்ற பாட்டு, சைகால் பாடிய ஹிந்திப் பாட்டின் மெட்டுக்குள் அப்படியே பிசகாமல் பொருந்தும்.

இந்தப் பாடலை கல்கி எழுதியதும், நான் அதை முதன்முதலில் பாடியதும், பின்னர் அது இசைத்தட்டாக வெளியாகி அமோக வரவேற்பு பெற்றதும் பசுமையாக ஞாபகமிருக்கிறது. ‘பூங்குயில் பட்டமாள்’ என்று எனக்கொரு இனிய பட்டமும் வாங்கிக் கொடுத்தது இப்பாடல்! 
அழகான , எளிமையான தமிழ்; வெறும் வார்த்தையால் பாடலை வளர்க்காமல் காட்சி விவரணை மூலம் கதை சொல்லிக் கொண்டு போவது - இவை கல்கி பாடல்களின் முத்திரை.”  
[ நன்றி : அமரர் கல்கி பாடல்கள், வானதி பதிப்பகம், டிசம்பர் 2003 ]  

டி.கே.பட்டம்மாள் கச்சேரியில் பாடுவதற்கென்றே ‘கல்கி’ அவரிடம் நான்கு பாடல்கள் எழுதிக் கொடுத்தார். அவை : 1)குழலோசை கேட்டாயோ -கிளியே 2) பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள் 3) திரைகடல் தூங்காதோ 4) இன்பக் கனவொன்று துயிலினில் கண்டேன். 
இவை 1940-களில் இசைத்தட்டுகளாகவும் வெளிவந்தன.

டி.கே.பட்டம்மாள் திரைப்படங்களில் பாடியுள்ள பாடல்களையும் பலர் அறிவர். முதன் முதலில் எஸ்.எஸ்.வாசன் ’தியாகபூமி’யில் அவரைப் பாட அழைத்தபோது, டி.கே.பட்டம்மாள் போட்ட ‘கண்டிஷன்’ என்ன? அவரே சொல்லட்டும்!

சினிமாவில் பாடுவதற்கு ஜெமினி நிறுவனத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. வாசன் அவர்கள் தான் என்னை வரவேற்று உபசரித்தார்.

“எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நீங்களும் பாட்டுப் பாட வேண்டும். வருகிறீர்களா? “ என்று கேட்டார்.

”மிகவும் மகிழ்ச்சி” என்று சம்மதம் தெரிவித்ததோடு “ஒரேயொரு கண்டிஷன்” என்றேன். 

“என்ன” என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தார் வாசன்.

“சினிமாவின் டூயட் பாடல்கள் பாடுவதில் எனக்கு விருப்பமில்லை. தேசபக்தி மற்றும் பொதுவான பாடல்கள் பாடுகிறேன்” என்று சொன்னேன்.

வாசனும் சந்தோஷமாகத் தலையசைத்தார். அதன்பின் ‘தியாகபூமி’, ‘மிஸ் மாலினி’ உட்பட சில படங்களில் பாடியிருக்கிறேன்” 
 [ நன்றி : அமரர் வாசன் நூற்றாண்டு மலர், விகடன், 2004]

( பின் குறிப்பு: ‘மிஸ் மாலினி’க்காக டி.கே.பி ‘ஸ்ரீ ஸரஸ்வதி நமோஸ்துதே’ என்ற பாடலைப் பாடினார். ஆனால், வாசன் கடைசியில் அதைப் படத்தில்  பயன்படுத்தவில்லை! ஏனென்றால் மாலினி என்ற அந்த பெண்மணியின் திரைப்படக் குணசித்திரப்படி அவள் அவ்வளவு அழகாக ஒரு பாடலைப் பாடி இருக்கமுடியாது என்று முடிவு செய்தார் ! இது ராண்டார் கை ஒரு கட்டுரையில் கொடுத்த தகவல்! )

‘தியாகபூமி’ படத்தில் ‘கல்கி’ யின் ‘பாரத புண்ணிய பூமி ‘, 'தேச சேவை செய்ய வாரீர்’, ‘பந்தம் அகன்று’ ஆகிய மூன்று பாடல்களையும் டி.கே.பட்டம்மாள் பாடியிருக்கிறார்.


இதோ இன்னும் சில திரையுலகப் பாடல்கள் பற்றிய தகவல்கள்:
[ நன்றி: ஸரிகமபதநி, டிசம்பர் 2000 ]

“பிழைக்கும் வழி” என்ற படத்தில் டி.கே.பி. பாடிய ஒரு பாட்டு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று! மதுரை சுந்தர வாத்தியார் எழுதிய பாடல். 

எங்கள் நாட்டுக்கெந்த நாடு ஈடு
பேரின்ப ஞான வீடு (எங்கள்)
கங்கை யமுனை பொருனை
காவேரியும் பாயும்
திங்களும் மும்மாரி பெய்து தீங்கனிகள் ஈயும் (எங்கள்)

தெள்ளுதமிழ் வேதம் தரும் வள்ளுவர் இந்நாடு
அள்ளும் கவி ஔவை கம்பன் அவதரித்த நாடு
சாந்தி தனில் நீந்தும் உயர் காந்தியர் இந்நாடு
தேர்ந்த ஞானி ராஜாஜி நேரு இந்த நாடு
தேர்ந்த வீரர் நேதாஜி நேரு இந்த நாடு (எங்கள்) 

பின் குறிப்பு: 


TAMIL RARE D.K. PATTAMMAL SONG-- Bharatha punya boomi(vMv)--THIYAGA BOOMI 1939


https://www.youtube.com/watch?v=V5tWnLDzoKE&feature=youtu.be


நண்பர் அனுப்பிய  “ குழலோசை கேட்டாயோ?”  என்ற பாடல்:


http://www.4shared.com/mp3/Fj7GTdCEce/Kuzhalosai_Kettayo_DKP.html


குழலோசை


இன்பக் கனவொன்று

பூங்குயில்


( தொடரும்) 
தொடர்புள்ள பதிவுகள் :

டி.கே.பட்டம்மாள்

சங்கீத சங்கதிகள்

DKPATTAMMAL-FILM-SONGS