வி.வி.சடகோபன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வி.வி.சடகோபன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 ஜனவரி, 2016

சங்கீத சங்கதிகள் - 68

வி.வி.சடகோபன் -5

காத்தானும் கிரேக்க சங்கீதமும் !



ஜனவரி 29. 

சங்கீத  வித்வான்  பேராசிரியர் வி.வி.சடகோபனின் பிறந்த 
தினம்.

தினமணி கதிரில் வெளியான ஒரு கட்டுரை இதோ! 






[  If you have trouble reading from an image, double click and 

read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


[ நன்றி : தினமணி கதிர் ]

தொடர்புள்ள பதிவுகள்:


வி.வி.சடகோபன் 


சங்கீத சங்கதிகள் 


Vidwan V V Sadagopan 78RPM recordings

VV Sadagopan - His Legacy Our Mission 


வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

சங்கீத சங்கதிகள் - 50

வி.வி.சடகோபன் -4 

காத்தானும் கர்நாடக இசையும் !



சடகோபன் ஒரு படத்தில் நடித்தார் என்றாலே நிச்சயம் அவர் பாடியிருப்பார் என்றுதானே நாம் நினைப்போம் ? அதுதான் இல்லை! ஜெமினியின் “ஜீவன்முக்தி” என்ற தெலுங்கு படத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசாத விஷ்ணுவாக நடித்தார் என்கிறார் ராண்டார் கை! (1)

சடகோபன் நடித்த இன்னொரு திரைப்படம் "அதிர்ஷ்டம்”. 1939-இல் அது வெளிவந்தது (2).  அது கவிஞர்  ச.து. சு.யோகியாரின் தயாரிப்பு .  அதைப் பற்றி “ஆனந்த விகடன்” தீபாவளி மலரில் இரு அரிய, முழுப்பக்க  விளம்பரப் படங்கள் வெளிவந்தன! அவை இதோ:





சரி, சடகோபன் அவர்களின்  இன்னொரு கட்டுரையைப் படிப்போமா ?

தலைப்பே வித்தியாசமாய் இல்லை? இந்தத்  ”தியாகபாரதி”க் கட்டுரையில் பாரதியின் வரிகள் தெரிகிறதா என்று பாருங்கள்? “ சோனையும் ...” என்று தொடங்கும் செய்யுளின் பொருள் புரிகிறதா?








[ நன்றி : தினமணி கதிர் ]

பி. கு.

கட்டுரையில் வரும் “ சோனையும் காத்து” என்ற பாடல் ”அந்தகக் கவி’ வீரராகவ முதலியாரால் ( 15-ஆம் நூற்றாண்டு) இயற்றப் பட்டது.  

சோனை = மழை ; நல் ஆனை = நல்ல பசுக்களை ( கோவர்த்தன கிரியைத் தூக்கியதால் மழையைத் தடுத்து பசுக்களைக் காத்து)  தானை= ஆடை; அடைந்தான் = விபீஷணன் ; அகலிமான் = அகலிகை ; மடுவில் விழும் ஆனை= கஜேந்திரன். 

பாரதியின் “காட்டில் விலங்கறியும் ...”  என்ற வரிகள் அவருடைய “ குயில் பாட்டில்’ வருகிறது என்றும், அது “ பசுர் வேத்தி சிசுர் வேத்தி வேத்தி கான ரசம் பணீ “ என்ற ஸம்ஸ்கிருத வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு என்பதையும்  பலரும் அறிந்திருப்பர்.

( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்:


வி.வி.சடகோபன் 

சங்கீத சங்கதிகள்

வி.வி.எஸ் -ஸின் சில பாடல்கள்

மதனகாமராஜனில் வி.வி.சடகோபன்

Prema prema neeyillaamal(vMv)--MADHANA KAMARAJAN

(1) வேணுகானம் : 1941 திரைப்படம்: ராண்டார் கை (ஆங்கிலம்)

( 2) அதிர்ஷ்டம்: ராண்டார் கை ( ஆங்கிலம் )

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

சங்கீத சங்கதிகள் - 49

வி,வி.சடகோபன் -3 

நாத வனத்திலோர் ஆண்டி!

’கான கலாதரா’ சடகோபன்  ஒரு கவிஞரும் தான்!

 “ இசை கற்பித்தலை குறித்து தீவிரமாகச் சிந்தித்து, கல்வி முறையில் அதை இணைக்கும் வழிவகைகளை ஆராய்ந்து வந்தார். குழந்தைகள், ஆடிப்பாடி இசை கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாடல்கள் புனைந்து, இசை அமைத்து, அவற்றை குழந்தைகளுடன் குழந்தையாகப் பாடியும் வந்தார். இந்த லட்சிய உணர்வுடன், அவர் பாரத நாட்டைச் சுற்றி வந்தார்.” என்கிறார் ‘வாமனன்’. 

 “ நந்த வனத்தில் ஓர் ஆண்டி” என்ற ஆனந்தக் களிப்பு மெட்டில் ‘ நாதம், பாவம், தாளம்’ பற்றி அவர் இயற்றிய ஒரு பாடலை இந்தக் கட்டுரையில் படித்துப் பாருங்கள்!  ’ஓடம்’ மெட்டில் இன்னொரு பாடலும் உண்டு!


[ நன்றி: அரசி ]



[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
 

[ நன்றி : தினமணி கதிர் ]

தொடர்புள்ள பதிவுகள் 

வி.வி.சடகோபன் 


சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

சங்கீத சங்கதிகள் - 48

வி.வி.சடகோபன் -2 

பாகவத சம்பிரதாயம் 



[ நன்றி : அனந்த் ] 


[ நன்றி: அரசி ] 
வி.வி. சடகோபனின் மாணவர் ஸ்ரீராமபாரதி சடகோபனின் சில ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்து 1984-இல் தினமணி கதிரில் வெளியிட்டார். அத்தகையக் கட்டுரைகளில் இதோ இன்னொன்று :





[ நன்றி ; தினமணி கதிர் ]

( தொடரும்)

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

புதன், 28 ஜனவரி, 2015

சங்கீத சங்கதிகள் - 47

வி.வி. சடகோபன் -1
சங்கீத மும்மூர்த்திகள் 

ஜனவரி 29, 1915.
சங்கீத வித்துவான் வி.வி.சடகோபன் பிறந்த நாள் .


[ நன்றி: அரசி ] 

ஆம், இந்த வருடம் ( 2015)  பிப்ரவரி மாதத்தில் அவருடைய நூற்றாண்டு விழா கொண்டாடப் பட இருக்கிறது. அவர் பிறந்த ஊரான வீரவநல்லூரில் தொடங்கிச் சென்னையில் பல நிகழ்ச்சிகள் நடைபெறும்.

திரைப்பட நடிகர், இசைப்பேராசிரியர், எழுத்தாளர்,  கவிஞர், சங்கீத வித்வான் என்று பல முகங்கள் கொண்டவர். கவர்ச்சி மிகுந்த இவரை என் சிறிய வயதில்,  அவர் சென்னையில் தியாகராயநகரில் வசித்தபோது  பலமுறை பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். ( அந்தக் காலத்தில் ( 50-களில்) சைதாப்பேட்டையில் வசித்துவந்த லால்குடி ஜயராமன், “ மின்சார ரயிலில் தி.நகருக்குச் சடகோபன், தண்டபாணி தேசிகர் ஆகியவர்களைச் சந்திக்க வருவேன்”  என்று ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.)

 “கவர்ச்சியும் அழகும் மிகுந்த சடகோபனைக் கதாநாயகனாய்ப் போடப் படத் தயாரிப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர்.  அதனால் எனக்கு நிச்சயம் அந்த வாய்ப்புக் கிட்டாது என்றே முடிவு செய்தேன்” என்ற தொனியில்  பிற்காலத்தில் தன் வாழ்க்கை வரலாற்றில் எம்.ஜி.ஆர் எழுதியிருக்கிறார். ! சடகோபன்  நடித்த நவயுவன்’ (1937) தான் வெளிநாட்டில் சில காட்சிகள் எடுக்கப் பட்ட முதல் தமிழ்ப் படம் என்று கூறப்படுகிறது .


இவரைப் பற்றி ஒரு சுருக்கமான குறிப்பு இதோ!
தினமணி கதிரில் 1984-இல் வந்தது.



இவர் எழுதிய சில ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழாக்கங்கள்  தினமணி கதிரில் அந்தக் காலத்தில் வந்தன. அவற்றில் சிலவற்றை என் வலைப்பூவில் இடலாம் என்று நினைக்கிறேன்.

இதோ முதல் கட்டுரை! 1-1-84 - இதழில் வெளிவந்தது..






அடுத்த இதழில் ‘தினமணி கதி’ரில் வந்த ஒரு பிழைதிருத்தம் :


[ நன்றி : தினமணி கதிர் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]