சனி, 26 ஜூன், 2021

1893. முருகன் - 13

திருமலிவான பழமுதிர்சோலை 
குருஜி ஏ.எஸ்.ராகவன்








[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your pc and then read after zooming. ]

தொடர்புள்ள பதிவுகள்: 
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

வெள்ளி, 25 ஜூன், 2021

1892.சங்கீத சங்கதிகள் - 282

 நான்கு நாள் கல்யாணக் கச்சேரிகள் - 1943-இல்! 


1943-இல் ஒரு 'பெரிய வீட்டு'க்  கல்யாணத்தில் யாரெல்லாம் பாடியிருப்பார்கள் என்று அறிய ஆசையா? இதோ! 

வள்ளல், தொழிலதிபர்,  ராம. அழகப்ப செட்டியாரின் மகளின் திருமணம் 1943-இல் கோலாகலமாய் நடந்தது. 'கல்கி' 1943 தீபாவளி மலரில் மேலே உள்ள படத்தைப் போல்  பல புகைப்படங்கள் திருமண வைபவத்தை வர்ணித்தன.  

அந்தத் திருமணத்தில் நடந்த 4 நாள் இசை நடனக் கச்சேரிகளில் பங்கேற்றவர்களின் பேர்களைப் பாருங்கள்! அக்காலத்தில் இசை, நாட்டிய உலகில் கொடி கட்டிப் பறந்தவர்கள் யார் யாரென்று தெரியும்! 








[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 

சங்கீத சங்கதிகள் - 1

 பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 


திங்கள், 21 ஜூன், 2021

1891. சிட்டி' சுந்தரராஜன் - 7

மகாத்மாவும் சத்யமூர்த்தியும் 

'சிட்டி'


1969-இல் 'சிவாஜி' இதழில் வந்த கட்டுரை.






[ நன்றி: சிவாஜி ]

தொடர்புள்ள பதிவுகள்:

'சிட்டி' சுந்தரராஜன்

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ] 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 


ஞாயிறு, 20 ஜூன், 2021

1890. சங்கீத சங்கதிகள் - 281

 எட்டயபுரம் கச்சேரிகள்: 1945

'கல்கி'


1945-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதியன்று,  பாரதி மணிமண்டப அஸ்திவார விழாவில் நடந்த இசை நிகழ்ச்சிகளைப் பற்றிய கட்டுரை. 






[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : கல்கி ]



தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 

பாரதி மணிமண்டபம்

 பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it   will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 


சனி, 19 ஜூன், 2021

1889. ஜெகசிற்பியன் - 4

பொய்க்கால் குதிரை

'ஜெகசிற்பியன்'


ஜூன் 19. ஜெகசிற்பியனின் பிறந்த தினம். இதோ 'பாரிஜாதம்' இதழில் 1950-இல் வந்த ஒரு கதை.





[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:


ஜெகசிற்பியன்

 பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it   will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

புதன், 16 ஜூன், 2021

1888. ராஜா சர் அண்ணாமலை செட்டியார் - 2

உயிர் வாழ்கிறார் !

கல்கி 

ஜூன் 15. ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் நினைவு தினம்

1953-இல் கல்கி எழுதிய கட்டுரை இதோ.


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள  பதிவுகள்:


பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it   will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

செவ்வாய், 15 ஜூன், 2021

1887. பாடலும் படமும் - 138

விரக தாபம்

எஸ்.ராஜம் 

 


 எஸ்.ராஜம்   1938 ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வரைந்த ஒரு 'பழைய முறை' ஓவியமும்,  மலரில் வந்த படவிளக்கமும் . ( வலது கோடியில் உள்ள 'பழைய முறை' கையெழுத்தும் தான்! )

 படத்தின் பின்புலமே ஒரு சோகம் நிறைந்த ராமாயணக் கட்டத்தைச் சித்திரிக்கிறது.  ராஜம் பின்னர் கலைமகளிலும், ராமாயண நூலிலும் பல ராமாயணக் காட்சிகளைச் சித்திரித்திருக்கிறார். அவற்றுள் சிலவற்றைப் பின்னர்ப் பார்க்கலாம்.

அதே மலரில் ராஜம் வரைந்த இன்னொரு ஓவியத்தை 

இங்கே  பார்க்கலாம்.

இப்போது மலரில் வந்த இந்தப் பட விளக்கம். ( பி.ஸ்ரீ. எழுதியிருக்கலாம்.) 

===

மைத் தகு விழிக் குறு நகைச் சனகன் மான்மேல்

உய்த்த உணர்வத்தினன், நெருப்பிடை உயிர்ப்பான்,

வித்தகன், இலக்குவனை முன்னினன் " - கம்பராமாயணம் 

சீதையைப் பிரிந்த இராமன் அந்தக் கண்ணழகிற்கும் புன்னைகைக்கும் தவித்துக் கொண்டிருக்கிறான். அந்தத் தவிப்பு நெருப்பாக வெளிப்பட்டு அருகேயுள்ள லட்சுமணனையும் தகிப்பதுபோலக் காண்கிறது . அது இன்னும் பரவிச் சுற்றிலுமுள்ள மரங்களையும் சூழ்ந்து, மேலும் மேலும் அந்தக் காடெங்கும் வியாபித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.

இராமனுள்ளத்திலே காட்டுத் தீயைப்போல் ஜொலித்துக் கொண்டிருக்கும் விரகதாபத்தைச் சித்திரகாரர் விசேஷ மனோபாவத்தோடு எவ்வளவு பொருத்தமாக வெளியிட்டிருக்கிறார், பாருங்கள்! 

பி.கு.

  தமிழ்  இணையக் கல்விக்  கழகத்தில் உள்ள கம்பராமாயணத்தில் காணும் முழுப் பாடல்:

இத் தகைய மாரியிடை,

      துன்னி இருள் எய்த,

மைத் தகு மணிக் குறு

      நகைச் சனகன் மான்மேல்

உய்த்த உணர்வத்தினன்,

      நெருப்பிடை உயிர்ப்பான்,

வித்தகன், இலக்குவனை

      முன்னினன், விளம்பும்:

     இத்தகைய மாரியிடை - இத்தன்மை வாய்ந்த மழைக்காலத்தில்; 

இருள் துன்னி எய்த - இருந்து செறிந்து வந்தடைய; 

வித்தகன் - அறிவில் சிறந்த இராமன்

மைத்தக மணி - மணி என்று சொல்லத்தக்க கண்ணின்

கருமணியையும்; 

குறுநகை - புன்சிரிப்பையும் உடைய;

சனகன் மான்மேல் - சனகன் பெற்ற மகளான மான் போன்ற பார்வையுடைய சீதை மீது; 

உய்த்த உணர்வத்தினன் - செலுத்திய உணர்வுகளை உடையவனாய்; 

நெருப்பிடை உயிர்ப்பான் - நெருப்புப் போன்று இடையிடையே பெருமூச்ச விடுபவனாய்;

இலக்குவனை முன்னினன் - இலக்குவனை நோக்கி;

விளம்பும் - (சில சொற்களைச்) சொல்லலானான். ]

தொடர்புள்ள பதிவுகள்:

எஸ்.ராஜம் 

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam 

பாடலும், படமும்
ஓவிய உலா 


வெள்ளி, 11 ஜூன், 2021

1886. கதம்பம் - 65

தொல்காப்பியம்: ராஜாளியார் வீட்டுச் சொத்து!

மு.இளங்கோவன்

[ நன்றி: மு.இளங்கோவன் ]

தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு தெய்வச்சிலையார் எழுதிய உரையைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தெய்வச்சிலையார் எழுதிய உரையை 1929-ல் அரங்க.வேங்கடாசலம் பிள்ளை பதிப்பித்தபோது, பதிப்புச் செம்மைக்குத் தம்மிடம் இருந்த தொல்காப்பிய ஓலைச்சுவடியை அளித்து உதவியவர் ஹரித்துவாரமங்கலம் கோபாலசாமி ரகுநாத ராஜாளியார். தொல்காப்பிய ஆய்வாளர்களைப் போற்றியதால் ‘ராஜாளியார் வீட்டுச் சொத்து தொல்காப்பியம்’ என்று புலவர் பெருமக்கள் குறிப்பிடுவது வழக்கம்.

மதுரையில் பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கம் காணவும், தமிழ்க் கல்லூரி நிறுவவும் பெருந்துணையாக இருந்தவர் ராஜாளியார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தஞ்சையில் நடைபெற்ற ஏழு நாள் விழாவைப் பொறுப்பேற்று நடத்தி பாண்டித்துரையாரின் பாராட்டைப் பெற்ற பெருமை அவருக்கு உண்டு. தஞ்சையில் தமிழ்ச் சங்கம் தொடங்கவும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் உருவானபோதும் ராஜாளியார் பெரும்பொருள் நல்கி ஆதரவு அளித்துள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கக் கட்டிட நிதிக்கு ரூ.1,000 முதல் நன்கொடையாக வழங்கியவர் ராஜாளியார். அந்த சங்கத்தின் நிரந்தரப் புரவலராக விளங்கி, சங்கத்தின் நூலகத்தை மேம்படுத்தியும், தமிழ் நிகழ்வுகள் நடைபெறவும் நூல் வெளியீடுகள் நடைபெற நிதியுதவியும் நல்கியுள்ளார். குன்னூரில் நூலகம் தொடங்க ரூ.10,000 நன்கொடை வழங்கியதுடன் (இன்றைய மதிப்பு ரூ.60 லட்சம்) நூலகத்தில் 10.09.1911-ல் தொல்காப்பியருக்கு முதன்முதல் சிலை நிறுவியது இவரின் தொல்காப்பிய ஈடுபாட்டை அறிய உதவும் சான்றாக இருக்கிறது.

சமூகப் பணிகள்

‘அரதைப் பெரும்பாழி’ என ஞானசம்பந்தராலும் ‘சுத்தமல்லி வளநாட்டு வெண்ணி நாட்டு அரதைப் பெரும்பாழி’ எனச் சோழர் காலக் கல்வெட்டுகளாலும் அழைக்கப்பெற்ற ஹரித்துவாரமங்கலம் ஊரில் வாழ்ந்த வாசுதேவ ராஜாளியார், ஆயி அம்மாள் ஆகியோரின் புதல்வராக, கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் 01.12.1870-ல் பிறந்தவர். தனது இளமைக் கல்வியைப் பச்சைக்கோட்டையில் விஞ்சிராயரிடம் 8 ஆண்டுகள் குருகுலவாச அடிப்படையில் பயின்றார். மெட்ரிகுலேசன் படிப்பைக் கும்பகோணத்தில் முடித்தார். தஞ்சை எஸ்பிஜி கல்லூரியில் சேர்ந்து சிலகாலம் படித்தபோது தந்தையார் உடல்நலம் பாதிக்க, படிப்பைப் பாதியில் நிறுத்திக் குடும்பப் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு, தாமே பல துறை நூல்களைப் படித்து உயர் அறிவு பெற்றார். தான் பிறந்த ஊரில் சித்த மருத்துவமனையை நிறுவி, ஏழை எளிய மக்கள் இலவசமாக மருத்துவம் பார்த்துக்கொள்ள வழிவகுத்தார். தன் ஊரில் பள்ளிக்கூடம் ஒன்றைத் தொடங்கி, மக்களுக்குக் கல்வி கிடைக்கத் துணைநின்றார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் கள்ளர், மறவர் உள்ளிட்ட 89 சாதிகளைச் சேர்ந்த மக்கள், குற்றப்பரம்பரை என்ற கொடிய சட்டத்தின் வழியாக ஒடுக்கப்பட்டிருந்தனர். இந்தச் சமூகங்களைச் சேர்ந்த 16 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் இரவுப்பொழுதில் அருகில் உள்ள காவல் நிலையங்களில் கையொப்பம் இட்டுத் தங்கியிருக்க வேண்டும். வெளியூர் சென்றாலும் தாம் இன்ன ஊரிலிருந்து வந்துள்ளோம் என்ற விவரத்தைக் காவல் நிலையத்திலோ ஊர்ப் பெரியவர்களிடத்திலோ ‘ராத்திரிச் சீட்டுகள்’ பெற்றுத் தெரிவிக்க வேண்டும். ராஜாளியார் இத்தகைய கொடுஞ்சட்டத்தை நீக்க வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற முடிசூட்டு விழாவில் கலந்துகொண்ட ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடமும் ராணியாரிடத்தும் கோரிக்கை வைத்துத் தஞ்சைப் பகுதி ஈசநாட்டுக் கள்ளர்களைக் குற்றப்பரம்பரைச் சட்டத்திலிருந்து மீட்டவர்.

மும்மொழிப் புலமை

ராஜாளியார் தமிழ், ஆங்கிலம், வடமொழி என மும்மொழியிலும் ஆற்றல்பெற்றவர். மருத்துவ அறிவு, இசையறிவு, சமய அறிவு நிரம்பப் பெற்றவர். பரம வைணவப் பக்தரான இவர் ஹரித்துவாரமங்கலம் பெருமாள் கோயிலுக்குக் கோபுரம் எடுத்தவர். எனினும், அவ்வூர் சிவன் கோயிலுக்கு அருட்பணிகள் செய்தும் சமயப் பொதுமை கொண்டவராகவும் விளங்கினார். திருவாவடுதுறை ஆதீனகர்த்தரை அந்தச் சிற்றூருக்கு அழைத்துப் பட்டினப் பிரவேசம் செய்வித்தவர். ராஜாளியார் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த நூலகத்தைக் கண்ணுற்ற ஆதீனகர்த்தர், அதற்கு ‘சரசுவதி மகால்’ என்று பெயர் சூட்டி, திருமடத்தின் சார்பில் பச்சைக்கல் மாலை ஒன்றைப் பரிசிலாக வழங்கினார்.

ராஜாளியார் தமிழ்ப் புலவர்களிடத்துப் பேரன்பு கொண்டவர். அந்தக் காலத்தில் புகழுடன் விளங்கிய புலவர் பெருமக்கள் பலரை ஆதரித்தவர். உ.வே.சாமிநாதையருக்கு வெள்ளிப் பேழையில் வைத்து ரூ.1,000 நன்கொடை வழங்கினார். அரசஞ் சண்முகனார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், உ.வே.சாமிநாதையர், விஞ்சைராயர், சர்க்கரை இராமசாமி புலவர், அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ணன், சேதுராம பாரதியார், தூத்துக்குடி முத்தையா பிள்ளை, சாமிநாதப் பிள்ளை, வேங்கடேசப் பிள்ளை, முத்துசாமி ஐயர், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், கந்தசாமிப் பிள்ளை, பரிதிமாற் கலைஞர், இராகவ ஐயங்கார் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்தப் பெருமக்களுக்கு அன்புடன் பொருளுதவி செய்தும், நூல் பணிகளை ஆதரித்தும் உதவியவர் என்பதை அவர்கள் எழுதிய நூல்களின் முன்னுரைகளில் காண முடிகிறது.

பாயிர விருத்திப் பதிப்புதவி

அரசஞ் சண்முகனார் நோயுற்றிருந்தபோது தம் ஊருக்கு அழைத்துவந்து, மருத்துவம் பார்த்து, அவருக்கு ரூ.300 அன்பளிப்பாக அளித்தமையை, தொல்காப்பியப் பாயிர விருத்தி நூலின் முகப்பில் சண்முகனார் எழுதியுள்ளார். வா.கோபாலசாமி ரகுநாத ராஜாளியாரவர்களால் தஞ்சை ஸ்ரீ வித்தியா விநோதினி முத்திராசாலையில் பதிப்பிக்கப்பட்டது என்று நூல் முகப்பில் பதிவாகியுள்ளது (1905). மேலும், ‘பாயிர விருத்தி முதலாய நூலை அச்சிடுவதற்குத் தஞ்சை சென்றபோது, சுரம் கண்டு, உணவு உண்ண முடியாத நிலையில், கோபாலசாமி ரகுநாத ராசாளியார் தம் ஊருக்கு அழைத்துச்சென்று பல நன் மருத்துவரைக் கொண்டு மருந்தளித்தும் வேதமுணர்ந்த அந்தணரைக் கொண்டு கிரகசாந்தி முதலாயின செய்தும் பிணிதீர்த்து வெண்பொற்காசு முந்நூற்றின்மேலாக என் நிமித்தஞ் செலவு செய்ததூஉமன்றி, பாயிரவிருத்தி நூலினைப் பதிப்பிக்கும் பணியில் இராசாளியார் முன்னின்று உழைத்தார்’ என்று அரசஞ் சண்முகனார் பதிவுசெய்துள்ளார்.

‘கருணாமிர்த சாகரம்’ இயற்றிய ஆபிரகாம் பண்டிதர் இசைத்தமிழ் வளர்ச்சிக்கு 1912-ல் ஏற்படுத்திய ‘தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்க’த்தின் வளர்ச்சிக்கும் ராஜாளியார் துணையாக இருந்ததை ஆபிரகாம் பண்டிதர் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் நற்றிணை நூலுக்கு உரை எழுதிப் பதிப்பித்தபோது, பொருளுதவி செய்தோர்களுள் ராஜாளியாரின் உதவி இருந்ததைப் பின்னத்தூரார் பதிவுசெய்துள்ளார்.

ஔவை சு.துரைசாமிப் பிள்ளை புறநானூற்றுக்கு உரை வரைந்தபோது முன்னுரையில், ஹரித்துவாரமங்கலத்துக்கு அருகில் உள்ள பள்ளியூர் கிருட்டிணசாமி சேனைநாட்டார் என்பவர் வழியாக ராஜாளியார் பற்றி அறிந்ததாகவும், அவரிடம் இருந்த புறநானூறு ஏட்டுச்சுவடியைப் படியெடுத்து வைத்திருந்த சேனைநாட்டாரிடமிருந்து தாம் பல திருத்தங்களை அறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். உ.வே.சா.வின் பார்வைக்கு இந்தப் புறநானூற்றுச் சுவடி உட்படவில்லை என்பதையும் பதிவுசெய்துள்ளார். எனவே, ராஜாளியாரின் வீட்டு நூலகம் தமிழ்ச் செல்வங்களைப் பாதுகாத்து வைத்திருந்தமை புலனாகும். பின்னாளில் இந்த நூலகத்தின் நூல்கள் தருமபுரம் கல்லூரிக்குக் கொடையாக அளிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

இந்திய தேசிய காங்கிரஸின் கமிட்டி உறுப்பினராகவும் விளங்கியவர். ஆங்கிலேய அதிகாரிகளான லாலி, சென்னை ஆளுநர் ஆஸ்டின் துரை உள்ளிட்டவர்களுக்கு நண்பராக விளங்கியவர் ராஜாளியார். தாலுகா போர்டு தலைவராக இருந்தவர். தஞ்சைச் சிற்றூர் ஒன்றில் குறுநில மன்னர்போல் வாழ்ந்து, தமிழ்ப் புலவர்களை ஆதரித்து, சமய ஈடுபாட்டுடன் விளங்கிய ராஜாளியார் 06.04.1920-ல் இயற்கை எய்தினார். அவர் மறைந்து நூறாண்டுகள் ஆனாலும் தமிழ் வளர்ச்சிக்கு அவர் அளித்த கொடைகள் அவர் பெயரை என்றும் நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.

[ நன்றி: https://www.hindutamil.in/news/opinion/columns/657629-tholkappiyam.html ]


தொடர்புள்ள பதிவுகள்:

வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார்: விக்கிப்பீடியா 

http://muelangovan.blogspot.com/2021/04/blog-post.html  


பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it   will deliver my blog-updates to your e-mail regularly.

செவ்வாய், 8 ஜூன், 2021

1885. தேவன்: துப்பறியும் சாம்பு - 13

தோல்வியே வெற்றி!

தேவன்+கோபுலு



ஆகஸ்ட் 30, 1942-இல்  ’ஆனந்த விகட’னில் ராஜுவின் ஓவியங்களுடன் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு  சிறுகதைத் தொடரில் இது 6-ஆவது கதை. 

தேவன் 57-இல் மறைந்தபின்,   கோபுலுவின் கை வண்ணத்தில் 1958-இல் விகடனில் சித்திரத் தொடராய் வந்தது. நூலாய் வரவில்லை.









[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


[ நன்றி : நண்பர் ‘ரா’ ; விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:


 பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it   will deliver my blog-updates to your e-mail regularly. 
If you are already a Follower of my blog , thanks for reading! 

சனி, 5 ஜூன், 2021

1884.லக்ஷ்மி - 8

பெண்கள் உலகம் : 2. ஜானகி அம்மாமி

" லக்ஷ்மி" 





[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:


லக்ஷ்மி

பி.கு.  I have now switched to a new service , follow.it  which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog.  If you are already a Follower of my blog , thanks for reading!  

வெள்ளி, 4 ஜூன், 2021

1883. ரா.பி.சேதுப்பிள்ளை - 6

கொச்சைத் தமிழ் -1
ரா.பி.சேதுப்பிள்ளை



'கல்கி'யில் 50-களில் ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய ஒரு சிறிய தொடரிலிருந்து ஒரு சில முத்துகள்;




[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.  I have now switched to a new service , follow.it  which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog.  If you are already a Follower of my blog , thanks for reading!