ஜே.எஸ்.ராகவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜே.எஸ்.ராகவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 மார்ச், 2022

2041. கதம்பம் - 76

ஜே.எஸ். (நகைச்சுவை) ராகவன்

எஸ்.சந்திரமௌலி



24 பிப்ரவரி 2022 அன்று காலமான நண்பர் ஜே.எஸ்.ராகவனுக்கு அஞ்சலியாய் இந்தக் கட்டுரை. 'மாம்பலம் டைம்ஸ்'இல் வந்தது.


[ நன்றி: மாம்பலம் டைம்ஸ்]

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவு:

ஜே.எஸ்.ராகவன்: பசுபதிவுகள்

கதம்பம் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

1927. சங்கீத சங்கதிகள் - 289

கர்நாடக சங்கீதப் பாதுகாப்புச் சட்டம் - 1982

ஜே.எஸ்.ராகவன் 


1982 -ஆ? சரி, ஆனால் 2022 -க்கு ஒரு சட்டம் வேண்டாமா?  வருகிறதா என்று பார்க்கலாம்! 



[ நன்றி: கல்கி ]

 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்  
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

திங்கள், 23 செப்டம்பர், 2019

1362. சங்கீத சங்கதிகள் - 202

வித்தியாச விருதுகள் 
ஜே.எஸ்.ராகவன் 




'கோபுலு'வின் ஓவியங்களுடன் 17, ஜனவரி2010 'கல்கி' யில் வந்த படைப்பு.






[ நன்றி: கல்கி, ஜே.எஸ்.ராகவன் ]

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்: 

சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்

திங்கள், 21 ஜனவரி, 2019

1221. சங்கீத சங்கதிகள் - 176

பக்கத்து சீட்டில் பாலமுரளி
ஜே.எஸ்.ராகவன்

[ ஓவியம்: அரஸ் ]


ஐதராபாத் போக ஏர்பஸ் விமானத்தில் ஏற பாதுகாப்புத் தடவல்களை முடித்த கையோடு, கைப்பையுடன் ஏர்பஸ் விமானத்தில் ஏறினேன். வழக்கமாக சன்னமாக ஆலாபனை செய்யும் ஆனந்த பைரவி ராகத்தின் அரவணைப்பு என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தது. அனந்தராம தீட்சிதர் எல்லா ஸ்லோகங்களையும் அதே ராகத்தில்தான் சொல்வார். ஆகையினாலே அவருடைய அடையாளப் பெயர், ஆனந்த பைரவி அனந்தராம தீட்சிதர்.

கை குவித்து வரவேற்ற ஏர்ஹோஸ்டஸை எனக்குத் தெரியும். நர்கீஸ் மாதிரி இருப்பார். ஆனால், அவருக்கு என்னைத் தெரியாது. வழிதவறி விடப்போகிறேனே என்கிற கரிசனத்துடன் என்னை என் சீட் வரை அழைத்துக் கொண்டு உத்தரவு வாங்கிக் கொண்டு போனார். என்னுடைய இருக்கையைப் பார்த்தபோது ஒரு இன்ப அதிர்ச்சி. அட! அட!. நடு சீட்டில் சங்கீத கலாநிதி பால முரளி கிருஷ்ணா உட்கார்ந்திருந்தார். அடுத்த கணமே ஆனந்த பைரவி பவர் அவுட்டேஜ் வந்தது மாதிரி வாயில் பொசுக்கென்று உறைந்து போயிற்று. கேட்டிருப்பாரோ?

‘நம்ஸ்காரம்’ என்றார். அப்பா! என்ன குரல். நான் மேலும் திகைத்தேன். நானல்லவோ முந்திக் கொண்டு நமஸ்காரம் சொல்லி இருக்க வேண்டும்?. அசட்டுச்சிரிப்புடன், கைகளைக் கூப்பி, அருகில் உட்கார்ந்து கொண்டேன்.

நெடுங்காலம் சபாக்களில் தொலை தூரத்திலிருந்து பார்த்த அவரை, டைட் க்ளோசப்பில் பார்ப்பது பிரமிப்பாக இருந்தது. . கருப்பு சாந்து சூடிய அகன்ற நெற்றி.. கீழே கொழுக்கட்டை மூக்கில் இறங்கி, இரண்டு தாடைகளாக விரிவடைந்து நின்றது. வலது காதிலிருந்து இடது காதுவரை நீண்ட. வசீகரம், அன்பு, கரிசனங்களின் ராகமாலிகைப் புன்னகை. ‘’எல்லாம் இன்ப மயம்’ என்கிற சித்தாந்தத்துடன் இன்ப லாகிரியுடன் உட்கார்ந்திருந்த பாங்கு.

‘நடு சீட்டாச்சே? இம்சையாக இருக்குமே’ நான் வேணா மாறிக்கட்டுமா?’ என்றேன்.

சௌகரியமாய் சம்மணம் போட்டுக் கொண்டு சங்கீத சபா மேடையில் உட்கார்ந்திருப்பது போல ஏர் லைன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர்,. ‘எனக்கு இதுதான் சௌகரியம். அந்தப் பக்கம் வயலின். இந்தப் பக்கம் மிருதங்கம்’ என்றிருக்குமோ? நான் வயலின் வாசிப்பவர் போல அவர் இடது பக்கத்திலிருந்தது சந்தோஷமாக இருந்தது.

பாலமுரளிக்கு, வயோலா ( வயலினின் குண்டு அண்ணாத்தை ), கஞ்சிரா, மிருதங்கம் எல்லாம் வாசிக்கத் தெரியும் என்று கேள்விம் பட்டிருக்கறேன். ஒரு முறை ஏற்பாடு செய்திருந்த வயலினிஸ்ட் வராததால் அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கே வயலின் வாசித்திருக்கிறாராம். பின் என்ன வேணும்? அதைப் பற்றிச் சொன்னபோது உங்களுக்கு ஏதாவது இன்ஸ்ட்ருமென்ட்ஸ் வாசிக்கத் தெரியுமா என்று கேட்டார். கல்யாணமான எல்லோரையும் போல மனைவிக்கு இரண்டாவது பிடில்தான் வாசிக்கத் தெரியும் என்று சொன்னேன். சிரித்தார்.

பாலமுரளி கார் பிரியர். பல கார்களை லாயத்தில் வைத்திருந்த அவர், காரோட்டியை வைத்துக் கொள்ளாமல் தானே ஓட்டுவதை விரும்புவார் என்று கேட்டிருக்கிறேன். அதைக் குறிப்பிட்டு, அதே மாதிரி இந்தஃ ஏரோப்ளேனை ஓட்டுவீர்களா? அப்படி ஓட்டும்போது, கற்பனைச் சிறகை விரித்து, ஆகாஷ் ரஞ்சனி, மேகதூத் வர்ஷினி, பர்ஸாதி பந்தினி என்கிற புது ராகங்களை இயற்றிவிடுவீர்களா என்று கேட்க நினைத்தேன். ஆனால், அது தப்பு, கேலி செய்வது போல ஆகி விடும் என்று வாயைப் பொத்திக் கொண்டேன்.
சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு ஹம்மிங் செய்ய ஆரம்பித்தார். சில்க் ஜிப்பாவால் உறை போட்டிருந்த கைகள் அவர் முன்னால், நீண்டு வளைந்து, விரிந்து ராகத்தின் விரிவுக்கு ஏற்ப அபிநயம் பிடித்துக் கொண்டுருந்திருக்க வேண்டும்.

அவருடைய வலது பக்க ஜன்னல் சீட்டில் உட்கார்ந்திருந்த பான்-பராக் வாசனைப் பெருந்தகை, தன் பக்கத்தில் இருப்பவர் பால முரளி கிருஷ்ணாவா இருந்தால் என்ன? பகவான் கிருஷ்ணாவா இருந்தால் எனக்கென்ன என்று அன்றைய ஷேர் மார்க்கெட் விவரங்களை ஹிந்தி பேப்பரில் வாசித்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று கண்களைத் திறந்து என்னப் பார்த்தவர், ‘உங்கள் மனைவி ஒரு பாடகியா? கச்சேரிகள் செய்வாரா?’ என்று கேட்டு என்னை மிரள வைத்தார்.

எ…ன்…ன்…னது பாடகியா? கச்சேரிகள் செய்வாரா? என்னய்யா இது? என்னைப் பார்த்தால் ஒரு பிரபல பாடகியின் கணவன் மாதிரியாத் தெரிகிறது. ஓரிரு இஞ்ச் உயர்ந்த மாதிரி தோன்றியது. நான் இல்லை என்றால் பெருத்த ஏமாற்றம் அடைவேன் என்கிற பாவனையுடன் என்னைப் பார்த்திருந்தவரை ஏமாற்றாமல் இருக்க முடியவில்லை. ‘’கர்நாடக சங்கீதம் அவ்வளவு புண்ணியம் செய்யவில்லை’ என்று சொன்னேன். அழகாக சிரித்தார்.

ஆகாய வண்டி சிறிது தொலைவில் தென்பட இருக்கும் ஐதராபாத்தை மோப்பம் பிடித்து இறங்கத் தயாரானது. வழக்கமான பயிற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. கற்பனை உலகத்தில் மறுபடியும் சஞ்சரிக்கப் போன பாலமுரளி, நினைவு உலகத்திற்கு வந்து சீட் பெல்ட்டைப் பூட்டிக் கொண்டார்.

விமானம் இறங்கி ஓடி நின்றவுடன், கைப்பையை எடுத்துக் கொண்டு வெளிக் கதவை நோக்கி நகர்ந்தார். வாசற் கதவருகில் நின்றருந்த ஏர் ஹோஸ்டஸுடன் இரண்டு உபசார வார்த்தைகளைப் பேச நின்றவர், பின்னால் ஒரு அடி விட்டு மரியாதையாக நின்ற எனக்கு வழி விட நகர்ந்து, ‘ம். நீங்க போங்க.. நாம மறுபடியும் சந்திக்கணுமே?’ என்றார்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது. ‘ஆமாம், சார். ஒரு நாள் போறுமா? இன்றொரு நாள் போறுமா? என்று கேட்டு விட்டு இறங்கினேன்.

-----oOo------
[ நன்றி: மாம்பலம் டைம்ஸ், ஜே.எஸ்.ராகவன் ]


தொடர்புள்ள பதிவுகள்: 

சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்

புதன், 4 ஏப்ரல், 2018

1024. சங்கீத சங்கதிகள் - 150

சேமிக்க வேண்டும் ஐயா..!
ஜே.எஸ்.ராகவன்

சங்கீதம் தொடர்புள்ள நகைச்சுவைக் கதைகள் தமிழில் மிகக் குறைவு.  இதோ அவற்றுள் ஒன்று.
=====

பாட்டு வாத்தியார் பட்டு, காபிக்கு அப்புறம் வெத்தலை சீவல் போட்டுக்கலாம் என்ற முக்கிய முடிவு எடுத்தார்.

காபி கொண்டுவந்த பார்வதி மாமி, ‘‘சாமளா இதோ அஞ்சு நிமிஷத்திலே வந்துடுவா. தலையைப் பின்னிண்டு இருக்கா’’ என்றாள்.

‘‘மொள்ள வரட்டும். எப்படி இருக்கேள் மாமி?’’

‘‘அமோகமா இருக்கேன். அப்புறம்... உங்களை ஒண்ணு கேக்கணுமே!’’

‘‘சாமளா எப்படிப் பாடறான்னுதானே? ஜோராப் பாடறாளே! உங்க காதிலேதான் விழுந்துண்டு இருக்குமே!’’

‘‘அதில்லை. உங்களை வேற ஒண்ணு கேக்கணும். சாமளா ஸ்கூல்லே அவளுக்கு ஒரு வேலை குடுத்திருக்கா. சிறு சேமிப்பு பத்தி இவ ஒரு பாட்டுப் பாடணுமாம். நீங்கதான் ஒண்ணு எழுதி, மெட்டமைச்சுக் குடுக்கணும். அவ அப்பாக்கு பாட்டெல்லாம் எழுத வராது. ஆபீஸ் கணக்கைத்தான் லெட்ஜர்ல எழுதுவார். எனக்குக் கறிவேப்பிலை கொத்தமல்லி கணக்குகூட சரியா எழுத வராது!’’'

‘‘மாமி, நான் பாட்டு வாத்தியார். பெரியவா எழுதி மெட்டமைச்ச பாட்டுக்களைப் பாடுவேன். அவ்வளவுதான்! ஏதோ பகவான் படி அளந்துண்டு இருக்கார்.’’

‘‘அப்படிச் சொல்லிடக்கூடாது. சாமளா சரின்னு அவ டீச்சர்கிட்டே சொல்லிட்டாளாம். ஒரு வாரம்தான் டயமிருக்கு!’’

‘‘நான் என்ன சொல்றதுன்னு புரியலே...’’

‘‘நீங்க புதுசா எழுத வேண்டாம். ஏற்கெனவே யாராவது பாடின பாட்டு ஒண்ணை எடுத்து, வார்த்தைகளைக் கூரைக்கு ஓடு மாத்தற மாதிரி மாத்திக் கொடுத்தாகூடப் போதும்!’’

சூடான காபியை ஒரு வாய் தொண்டைக்கு இதமாக முழுங்கியதும் சுறுசுறுப்பு பிறந்தது பட்டுவுக்கு. பளிச்சென்று பல்லவியைப் பிடித்த வாக்கேயக்காரர் மாதிரி அவருடைய முகம் பிரகாசித்தது.

‘‘சேவிக்க வேண்டும் ஐயா... அதையே, ‘சேமிக்க வேண்டும் ஐயா...’னு மாத்தறேன். இது எப்படி இருக்கு?’’

‘‘சூப்பர்’’ என்றாள் பார்வதி மாமி.

அடுத்த மாதம், முதல் வாரம் வீட்டில் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார் பட்டு.

‘‘டியூஷனுக்குக் கிளம்பலியா?’’ என்றாள் மனைவி.

‘‘சியாமளா வீட்டுக்குத்தானே? அந்த டியூஷன் நின்னாச்சு!’’

‘‘ஏன்... என்ன ஆச்சு? ஏதோ பாட்டுகூட எழுதிக் குடுத்து அந்தப் பொண்ணு ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கித்துன்னு சொன்னீங்களே?’’

‘‘அதனாலே வந்த வினைதாண்டி! சும்மா இல்லாத தவளை கொர கொரன்னு கத்தி பாம்பு வாயிலே ஆப்புட்டுக்குமாம். அந்த மாதிரி... அந்தப் பொண்ணோட அம்மா கேட்டுண்டா ளேன்னு உசுரைக் குடுத்து வார்த்தைகளைத் தேடித் தேடிப் போட்டு சேமிப்போட அவசியத்தைப் பத்தின அந்தப் பாட்டை எழுதினேன்...’’

‘‘அதனாலே என்ன?’’

‘‘என்னவா..? அந்தப் பொண்ணு திருப்பித் திருப்பி ‘சேமிக்க வேணும் ஐயா’ன்னு பாடினதைக் கேட்ட அவளோட அப்பா பொண்ணோட கல்யாணத்துக்கு சேமிக்கணும்னு நெனைச்சு, முதல் ஸ்டெப்பா மாசம் 700 ரூபா சேமிக்கலாமேனு என்னோட டியூஷனை நிறுத்திட்டார்!’’

[ நன்றி: விகடன் ]

 தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

பி.ஜி. உட்ஹவுஸ்

கனிந்த சிரிப்பாம்பழம்! 
ஜே.எஸ்.ராகவன் 


பிப்ரவரி 14. பி.ஜி. உட்ஹவுஸின் ( P.G.Wodehouse ) நினைவு தினம்.

உட்ஹவுஸின் எல்லாப் படைப்புகளையும் கரைத்துக் குடித்து,  அவரைப் பற்றி எழுத முழுத் தகுதி உடையவர் , இன்றைய நகைச்சுவை எழுத்துலகில் சிம்ம நடை போடும் ஜே.எஸ். ராகவன் சார் ஒருவர் தான்!

உட் ஹவுஸின் அமர பாத்திரமான ஜீவ்ஸின் தமிழ்நாட்டு அவதாரமாய்ச் ‘சிவசாமி’யைப் படைத்து நம்மிடையே உலாவ விட்டவர் ராகவன். அவருடைய ‘சிவசாமியின் சபதம்’ நூலைப் படிக்காதவர்கள் இன்றே வாங்கிப் படிக்கவும்!

இதோ அவருடைய கட்டுரை!



ண்டன் செயின்ட் பால்ஸ் கதீட்ரலின் குவிந்த கூரையை நினைவூட்டும் பளிங்குத் தலை, தீர்க்கமான மூக்கு.  ஜாடியின் கைப்பிடிகளாகத் துருத்தி நிற்கும் காதுகள். அரேபியக் கூடாரத் தையல்காரர் குத்துமதிப்பாகத் தைத்த ஃபாஷனில் தொளதொள உடை. கையில் புகை விடும் பைப் இருந்தும் உள்ளத்தில் இம்மி அளவும் புகைச்சல் இல்லை என்று சூடம் அடித்து சத்தியம் பண்ணிச் சிரிக்கும் கண்கள் கன்னங்கள், உதடுகள், ஜாலியான உருவம். தொண்ணுற்றி மூன்று வயது வரையிலும் சளைக்காமல் தமாஷா மில்க் ஷேக்கை மிக்ஸியில் அடித்து வாரி வழங்கிய பி.ஜி. உட்ஹவுஸ், ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர்களில் "ப்ளம் என்று அறியப் பட்ட ஒரு கனிந்த சுவையான சிரிப்பாம்பழம்!


டொப் என்ற சப்தத்துடன் கார்க் பாய்ந்து குதித்த உடனே, குபுகுபு என்று பொங்கி வரும் ஷாம்பெயினாக மிக உயர்ந்த நகைச்சுவையை வாரி வழங்கிய பிரிட்டிஷ் அமெரிக்க இரட்டைக் குடிமகனான உட்ஹவுஸின் மீது வழக்கமாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு, பலரை அவர் நகைச்சுவைக் குடிமகன்களாக மாற்றி விட்டார் என்பதுதான். இதோ, இலவச சாம்பிளாக கொஞ்சம் சுவைத்துப் பாருங்களேன்!

*ஆஸ்பத்திரியில் ஒரு சர்ஜன் என்னோட உடம்பு மேலே பிராய்டரி வேலை செஞ்சிண்டு இருந்தார்!
*நரை முடிக்கு ஃபிரெஞ்சுக்காரர்கள் கண்டுபிடித்த ஒரே ஒரு வைத்தியம்தான் உண்டு. அதற்குப் பெயர் கில்லட்டின் (கில்லட்டின் என்பது ஃப்ரெஞ்சு புரட்சிக் காலத்து சிரச்சேத சாதனம்)
*பல கிளிகளே கிளி மாதிரி இருக்கமாட்டா; ஆனால் மார்ட்டிமர் கிளி மாதிரியே இருந்தார்.
*பார்த்த உடனேயே அவர் யாருக்கோ தாத்தாவாக, ஏன் கொள்ளுத் தாத்தாவாகக் கூட இருக்கலாம் என்று தோன்றியது. விருந்திலே பாடி முடித்த ஆபரா பாடகி கோரா பெலிஞ்சரின் தொண்டையைக் குறைத்து எடை போட முடியாது. கூரையிலிருந்து  காரை இன்னும் விழுந்துகொண்டு இருக்கிறது.  
* பொதுவாகவே இராண்டு சாரார்களுக்குக் கல்யாணம் செஞ்சுக்கிறதன்னா அலர்ஜி.  ஒண்ணு ஃபாஷன் போட்டோகிராபர்கள். வங்க அழகான பெண்களைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போயிடறாங்க. இரண்டு பால்காரங்க. அவங்க பெண்களைத் தூங்கி எழுந்த கோலத்திலே பார்த்துப் பார்த்து அரண்டுடறாங்க!



 பி.ஜி.உட்ஹவுஸ் அவர்கள் பிரமாதீஸா ஆண்டு, புரட்டாசி மாதம் 31-ம் தேதி (15.10.1881) அன்று புனர்பூச நட்சத்திரத்தில் இங்கிலாந்தில் உள்ள கில்ஃபர்டில் நீதிபதி எர்னஸ்ட் உட்ஹவுஸுக்கும் திருமதி எலனார்க்கும் மூன்றா வது திருமகனாக அவதரித்தார் என்று நமுத்துப் போன பாணியில் குறிப்பிடுவது தகாது. பிறப்பு, இறப்பு மற்றும் அந்த இரண்டு மைல் கல்களுக்கு இடையே எழும் மெகா விசும்பல்கள், சொத சொத சென்டிமென்ட்டுகள் ஆகியவற்றைத் தன்னுடைய மனோரம்யமான படைப்புகளில் தலை யெடுக்க விடாமல் கண்குத்திப் பாம்பாகப் பார்த்துக் கொண்ட அவருக்கு இழைக்கப்படும் அநீதி யாகும்.

ராதா கல்யாண மகோத்ஸவ சிங்கிள் ரீடு ஆர்மோனியக்காரர் மாதிரி வாழ்க்கை முழுவதும் டைப்ரைட்டர் சமேதராகக் காட்சி அளித்த உட்ஹவுஸ், வாலிபப் பருவத்தில் ஹாங்காங் ஷாங்காய் வங்கியில் குமாஸ்தாவாக வேலையில் இருந்தபோது, புத்தம் புதிய லெட்ஜரின் முதல் பக்கத்தில், லெட்ஜர் திறப்பு விழாவைப் பற்றி நகைச்சுவைக் கட்டுரை ஒன்றை எழுதினார். லெட்ஜரின் அந்தத் தவறான என்ட்ரி அவருடைய வேலையைக் கிழித்து விடப் போகிறது என்ற அச்சத்தில் எழுதிய ஃபோலியோவைக் கிழித்து எறிந்து விட்டார்! ஆனால் ஆங்கில நகைச்சுவை என்ற கனக்கும் மெகா லெட்ஜரில் அவருடைய படைப்புகள் பொன்னெழுத்தில் பொறிக்கப்படப் போகின்றன என்று அவர் அப்போது அறிந்திருக்க நியாயமில்லை!

'பிரசுரத்துக்கு ஏற்றதில்லை' என்று தமக்கு வந்த ரிஜக்ஷன் ஸ்லிப்புகளா லேயே ஒரு பெரிய டைனிங் ஹாலுக்கு வால் பேப்பர் ஒட்டி இருக்க முடியும் என்று தம் ஆரம்ப கால முயற்சிகளைப் பற்றிக் கிண்டலடித்த உட்ஹவுஸ், ஒரு முறை லெட்ஜர் கணக்கு உதைத்த வெறுப்பின் உச்சத்தில் பேங்கிலிருந்து கற்றை காசோலைகளுடன் கிளம்பி அருகில் உள்ள தேம்ஸ் நதியில் கடாசினார் என்ற கதை ஒன்று அவரைப் பற்றி உண்டு. இது நிஜமா என்பது தேம்ஸுக்குத்தான் வெளிச்சம்!

வயதான காலத்தில் அவர் எழுதிய கடிதங்களை வீட்டு ஜன்னல் வழியாக வீசி எறிந்து விடுவார் என்றும், அக்கம் பக்கத்தினர் அவற்றைச் சேகரித்து தபாலாபீஸில் உள்ள பெட்டியில் கர்ம சிரத்தையுடன் போட்டு விடுவார்கள் என்றும்கூட ஒரு கதை அவரைப் பற்றி உண்டு.


இறுக்கமான சூழ்நிலையிலும் நகைச்சுவையைத் தேடிப் பிடித்துச் சிரிப்பால் அதைத் தளர்த்தும் ஆற்றல் படைத்திருந்த அவர், ஒரு சிக்கல் இல்லாத வண்ண உல்லன் நூல் கண்டு. தம்மைப் பற்றியே ஜோக் அடித்துத் தாழ்த்திக் கொண்டு அந்த நிலையையே ஒரு பாதுகாப்பு வளையமாக, ஒரு வியூகமாக அமைத்துக்கொண்ட உட்ஹவுஸின் எழுத்து, சுமார் எழுபத்தி ஐந்து வருஷங்கள் கழித்தும், ஜொலி ஜொலிப்பும், புதுத் தன்மையும் மாறாத ஒரு மாபெரும் சமஸ்தானத்துக்குச் சொந்தமான தங்கச் சிம்மாசனமாக இன்றும் பொலிவுடன் மிளிர்கின்றது.

லார்டு எம்ஸ்வொர்த், ட்யூக்ரிட்ஜ், ஆன்ட் அகாதா, முல்லினர், ஸ்மித் போன்ற நகைச்சுவை முலாம் பூசிய பாத்திரங்களைப் படைத்த உட்ஹவுஸை மிகவும் பிரபலமாக்கிய இரண்டு தங்கப் பாத்திரங்கள் பெர்டி ஊஸ்டரும், ஜீவ்ஸும்தான். ஷெர்லாக் ஹோம்ஸ் டாக்டர் வாட்ஸன் ஜோடியில் துப்பறியும் நிபுணர் ஹோம்ஸை அதி புத்திசாலி யாகவும், அவருடைய இணை பிரியா நண்பர் வாட்ஸனை வாயைப் பிளக்கும் ரசிகராகவும் ஆர்தர் கானன் டாயல் படைத்தார் என்றால், உட்ஹவுஸ் அதைத் தலை கீழ் திருப்பம் செய்து, பட்லர் ஜீவ்ஸை நாலும் தெரிந்த அடக்கி வாசிக்கும் அறிவு ஜீவியாகவும் அவருடைய எஜமானரான பெர்ட்டி ஊஸ்டரை ஏறக்குறைய "மேல் மாடி காலி லெவலுக்கு இறக்கியும் காமெடி காக்டெயில் பண்ணி இருக்கிறார்.

எக்கச்சக்க பணம், யாருக்கும் கைகட்டி வாழாமல், எந்த நிற டை கட்டி உடை அணிவது என்று தலையைச் சொறியும் மேல்மட்ட வாழ்க்கை, லண்டனில் வீடு. ட்ரோன்ஸ் கிளப்பில் மெம்பர். கல்யாணம் என்றால் கசப்பு. அத்தை அகாதா என்றால் உதைப்பு என்ற நிலையில் காலத்தை நம்மூர் பெரியபுரம் மைனர் பாணியில் கழித்தவன் ஊஸ்டர். அவனுடைய பட்லர் ஜீவ்ஸ், தன் எஜமானரைப் பல இன்னல் களிலிருந்து காப்பாற்றும் சூழ்நிலைகளை விவரிக்கும் பிளாட்டுகளை உட்ஹவுஸ் மாதிரி யாராலும் போட்டு யானை விலைக்கு விற்றிருக்க முடியாது.

ஷெர்லாக் ஹோம்ஸைக் கிண்டலடிக்கும் ஒரு ஜோக்.

"ஒன்டர்ஃபுல் மிஸ்டர் ஹோம்ஸ் மேஜர் மர்ஃபி உல்லன் அண்டர்வேர்தான் போட்டிருந்தார்னு எப்படிக் கண்டு பிடிச்சீங்க?"

'எலிமென்டரி, மை டியர் வாட்ஸன். அவர் அப்போ பேன்ட் போட்டுண்டு இல்லே."

இதை நினைவூட்டக் கூடிய ஊஸ்டர் - ஜீவ்ஸ் உரையாடல்.

ஊஸ்டர் :ஜீவ்ஸ், இந்தக் கட்டம் போட்ட சூட் நன்னா இல்லை.?

ஜீவ்ஸ் : என்னுடைய ஒபினியன்லே விசித்திரமா இருக்கு ஸார்.

ஊஸ்டர் : ம்? ரொம்ப பேர் இதைத் தைச்ச டெய்லர் யாருன்னு கேட்டாங்க.

ஜீவ்ஸ்: அவர்கிட்டேந்து தப்பிச்சிக்கிறதுக்காக கேட்டிருப்பாங்க ஸார்!
தொண்ணுற்றி மூன்று வயதிற்குள் தொண்ணூற்றி ஆறு புத்தகங்கள், நூற்றுக் கணக்கான சிறு கதைகள், பதினாறு நாடகங்கள், ஹாலிவுட் படங்களுக்கு ஸ்க்ரிப்ட்டுகள், பாடல்கள் என்று எழுதிக் குவித்த அவருடைய ரசிகர்களில், ராணி எலிஸபெத் மட்டுமின்றி ருட்யார்டு  கிப்ளிங், டி.எஸ்.எலியட், ஹிலாய்ர் பெலாக், டாரதி பார்க்கர், சல்மான் ருஷ்டி போன்ற இலக்கியப் பெருசுகளும் அடக்கம். எலிஸபெத்தின்  அம்மா ஒரு முறை உட்ஹவுஸின் புத்தகங்கள் எல்லாவற்றிலும் ஒரு காப்பியை படிப்பதற்காக அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டாராம்.


 நகைச்சுவை வெல்வெட் பிடியிலிருந்து தன்னுடைய புத்தக முன்னுரைகளையும் அவர் விட்டு வைக்கவில்லை.

'தி ஹார்ட் ஆஃப் எ கூஃப்" என்ற நாவலின் சமர்ப்பணம் இவ்வாறு அமைந்திருக்கிறது:

என்னுடைய மகள் லெனோராவுக்குச் சமர்ப்பணம். இவளுடைய இடைவிடாத அனுதாபமும், ஊக்கமும் மட்டும் இல்லாதிருந்தால் இந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்ட பாதி நேரத்திலேயே முடித்திருப்பேன்!
 சம்மர் லைட்னிங் நாவலின் முன்னுரையில் தன்னுடைய விமர்சகர்களை இவ்வாறு ஒரு பிடி பிடிக்கிறார்:

ஒரு விமர்சகர் (அப்படி சில பேர் இருப்பதுதான் சோகம்) நான் எழுதிய கடைசி நாவலில் என்னுடைய பழைய கேரக்டர்களே புதி பெயரில் வருகிறார்கள் என்ற ஒரு அருவருப்பான பழியை அபாண்டமாகச் சுமத்தி இருக்கிறார். இந்தத் தெய்வ குற்றத்துக்காக அவரை ஏற்கெனவே கரடிகள் தின்று இருக்கும். ஒரு வேளை அவர் உயிரோடு இருந்தால், இந்த நாவலைப் பற்றி அதே ரீதியில் என்னைக் கொத்த முடியாது. ஏனென்றால், இதில் என்னுடைய பழை கேரக்டர்களை அவர்களின் பழைய பெயர்களிலேயே கொண்டு வந்திருக்கிறேன்/




ம் நாட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் நகைச்சுவை எழுதும் முக்காலே மூணு வீசம் எழுத்தாளர்களுக்கு உட்ஹவுஸ் ஓர் அரிச்சுவடி. பின்னர் கடைந்து விட்டு உற்சாகம் தரும் மத்து. இருபது வயதிலேயே எழுத ஆரம்பித்து நாற்பத்து நாலு வயதுக்குள் இமாலய சாதனை புரிந்து, சிரஞ்சீவி கேரக்டர்களை உலவவிட்டு மறைந்த தேவனின் எழுத்துகளில் உட்ஹவுஸின் தாக்கம் சில இடங்களில் இருந்ததாகச் சொல்லலாம்.

தேவனின் மைதிலியில் ஒரு காட்சி:

'கோபால சாஸ்திரியின் மனைவி தன் கையிலிருந்த குடம் ஜலத்தையும் செடிகளின் பக்கமாக வீசி விட்டுப் போனாள். (செடிகளில் பூனையாக மறைந்து இருந்த) செல்வமணி ஒரு பொட்டு விடாமல் அதைத்தன் தேகத்துக்குள் வாங்கிக் கொண்டான்.

"அந்தச் செடியிலே பாக்கி ஜலம் ஒட்டிக் கொண்டிருக்கிறதா? நீங்களே பூராவையும் வாங்கிக் கொண்டீர்களா?’ மைதிலி கலகலவென்று சிரிப்பது கேட்டது.

ஜீவ்ஸ் இன் த ஆஃபிங்கில் உட்ஹவுஸின் வார்த்தை ஜாலம்:

நான் வீசி எறிந்த டீ ஆப்ரேயின் நிஜாரை தாராள மாக நனைத்து, நிஜாரை விட அவர் டீயையே அணிந்த மாதிரி எனக்குத் தெரிந்தது.

தேவனின் மல்லாரி ராவ் கதைகளைப் படிக்கும் போது உட்ஹவுஸின் முல்லினர் கதைகள் போன தீபாவளியில் சுவைத்த ரோஸ் ஜாங்கிரி மாதிரி ஞாபகத்துக்கு வரும்.

ஒரு மகாராஜாவுடன் தங்கி இந்தியாவைச் சுற்றிப் பார்க்கலாம். யானை, ஒட்டக சவாரி செய்யலாம். வேட்டை ஆடலாம் என்று மனைவி எதெல் அவரை அழைத்த போதிலும், இந்தியாவிலே இருக்கிற தாஜ்மகாலை விட, பெருமையாக சொல்லிக்க ஒண்ணுமில்லாத டிராய்ட்விக் கிராமமே எனக்குச் சொர்க்கம் என்று உட்ஹவுஸ் மூட்டை கட்ட மறுத்து விட்டார். உட்ஹவுஸின் இந்திய உறவு என்று பார்த்தால், எதல், மைசூர் அருகில் சுரங்க இன்ஜினியராக இருந்த தன் கணவனை இழந்து, உட்ஹவுஸை மறுமணம் செய்து கொண்ட பெண். உட்ஹவுஸின் அண்ணா ஆர்மைன் சென்னை அடையாறுக்கு வந்தி ருக்கிறார். தியோசாபிகல் சொஸைடியில் ஈடுபாடு கொண்டிருந்த அவர், பூனா டெக்கான் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தபோது அவரிடம் பயின்ற  வி.ஐ.பி. (வெரி இம்பார்டன்டு ஃபிலாஸபர்) மாணவர் ஜே.கிருஷ்ணமூர்த்தி!

அமெரிக்காவில் உட்ஹவுஸின் 80-வது பிறந்த நாளை முன்னிட்டு
1960-ல் நியூயார்க் டைம்ஸில் வெளி வந்த இரண்டு - பத்தி விளம்பரம்:

அதாவது பி.ஜி.உட்ஹவுஸ்"க்கு நாளைக்கு எண்பது வயது நிறைவடைகிறது என்கிறபடியாலும், நாம் யாரும் அவருடைய எண்து புத்தகங்களில் சிலவற்றையாவது பரவசத்துடன் படிக்காமல் முதிர்ச்சி அடைந்ததில்லை என்ற காரணத்தாலும், உட்ஹவுஸ் ஒரு சர்வதேச நகைச்சுவை நிறுவனம் மட்டும் அன்றி ஒரு கைதேர்ந்த நகைச்சுவையாளர் என்பதாலும், கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் அவரை அன்புடனும், நன்றியுடனும் வணங்குகிறோம்."

விளம்பரத்தின் கீழே இடம் பெற்ற எண்பது இலக்கிய மணம் பரப்பும் பெரிய தலைகளில் சில: ஜான் அப்டைக், ஜேம்ஸ் தர்பர், எவலின் வா. கிரஹாம் க்ரீன். ஆக்டன் நாஷ், போதுமா?

நம்மூர் போஸ்டர்களில்வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்வாசகத்தை நினைவூட்டுகிறது இல்லையா?

குறித்த நேரத்தில் தவறாது கையெழுத்து பிரதிகளைப் பிரசுரத்துக்குத் தந்து வந்த உட்ஹவுஸ் தன்னுடைய தொண்ணூறாவது வயதில் இருதய நோயாலும், பின்னர் சரும உபாதையாலும் பாதிக்கப்பட்டார் என்றாலும் அந்த நிலையிலும் விடாது எழுதிக் கொண்டிருந்தார்.
"ஸர் பட்டம் கொடுத்து லண்டனில் என்னுடைய மெழுகுச் சிலையையும் வைத்து விட்டார்கள். சாதிக்க எனக்கு இன்னும் என் இருக்கிறது?’ என்று கேட்ட உட்ஹவுஸ், தாம்டன் ஆஸ்பத்திரியில் இருக்கும்போதும் முடிவு பெறாத நாவலின் கையெழுத்துப் பிரதியைச்
சரி பார்த்துக் கொண்டிருந்தார்.




பிப்ரவரி 14-ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு டாக்டர் பெர்னார்டு அவரைச் சோதிக்க வந்தார். உட்ஹவுஸ் சாய்வு நாற்காலியில் அமைதியாகச் சாய்ந்து படுத்து இருந்தார். கண்கள் மூடியிருந்தன. அருகில் வேண்டிய 'பிளான்டிங்கில் சூரிய அஸ்தமனம்நாவல். கைகளில் புகையிலைப் பை. மற்றும் பைப்.


பைப்பிலிருந்து புகை மறைந்து போயிருந்தது.


நகைச்சுவை மீது நாயகி - நாயக பாவத்துடன் மீளாக் காதல் கொண்டு, அந்தக் காதல் நோயைப் பல எழுத்தாளர்களிடமும் பல்லாயிரக் கணக்கான வாசகர்களிடமும் பளிச்சிடும் சூரிய வெளிச்சமாகப் பரவ விட்ட சிரிப்புச் சக்கரவர்த்தி மறைந்த தினம் சாதாரண நாள் அல்ல. வாலன்டைன்ஸ் டே எனக் கொண்டாடப்படும் காதலர் தினமாகும்! 

[ நன்றி : கல்கி ] 

தொடர்புள்ள பதிவுகள்:


பி.ஜி. உட்ஹவுஸ்  

வெள்ளி, 27 ஜனவரி, 2017

சங்கீத சங்கதிகள் - 109

அகாடமியில் முதல் நாள்
ஜே. எஸ். ராகவன்




மாற்றம் ஒன்றே மாறாதது என்பதன் விதிவிலக்காக வருடக் கணக்காக மாறாமல் இருப்பது மியூசிக் அகாடமியின் டிசம்பர் மாத சங்கீத நடன விழாக்களின் நிகழ்ச்சிகள்தான். ஒரு மாதத்திற்கு முன்னாலேயே அழைப்பிதழ், சீஸன் டிக்கெட், புது வருட பிரேக் ஃபாஸ்ட் விருந்து. சுவனிர் கூப்பன்களைக் கூரியர் மூலமாக இந்த வருடமும் அனுப்பி வைத்ததில் ஆச்சரியம் இல்லை. சூரியன் மேற்கே உதிக்கலாம். சந்திரன் அமாவாசை அன்று கல் தோசை போலத் தோன்றலாம். ஆனால் அகாடமி மாறாது.

ஆரம்ப மாலையில் அகாடமியின் லாயத்தில் கார்களின் மேட்டுக்குடி மாடல்கள் நிரம்பி வழிந்தன. நேராகக் கான்டீனுக்குப் போனோம். வழக்கம் போல் பத்மநாபனின் உணவு உற்சவம். வருடா வருடம் பார்க்கும் அதே வெயிட்டர்கள். ஓரிரண்டு பேர்கள் நமஸ்காரம் மாமா. இப்போதைக்கு ஆனியன் பக்கோடா, காபி மட்டும். ராத்திரிக்கு நிறைய ஐட்டங்கள் உண்டு என்றார்கள்.

ஆடிட்டோரியத்தில் சுவாமிமலை மணிமாறன் பார்ட்டியின் நாதஸ்வரம் ஒலித்துக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்த ஒரு நொடிக்குள் சன்மானத்தை கிடுகிடு என்று அம்மன் கோவிலில் தீ மிதிப்பவர் போல ஒடி வந்து கொடுத்தார்கள். இது அகாடமி ஸ்டைல், சீஸனுக்கு நெடும் தூரத்திலிருந்து பறந்து வரும் நாரைகள், கொக்குகள் போலத் தவறாது வரும் ரெகுலர்கள் அவரவர் சீட்டில் மாறாது உட்கார்ந்து ஆண்டிராய்டு செல்பேசிகளின் திரைகளைத் தம்புராவைப்போல் மீட்டிக் கொண்டிருந்தார்கள். தூணுக்கு அருகே இருக்கும் இரட்டை சீட்டுகள் எங்களுடைய இரண்டு பேரைத் தவிர யார் உட்கார்ந்தாலும் பழகாத குதிரை போலத் தள்ளிவிடலாம். எங்களுடைய ஆக்கிரமிப்பு அப்படி,

வருடா வருடம் சக்கர நாற்காலியில் வரும் வயோதிகரைக் காணவில்லை. என்ன ஆச்சோ என்று பேசிக் கொண்டோம். வைரங்கள் ஜொலிக்க வாக்கருடன் நடந்து வரும் மூதாட்டியையும் காணோம். சர்தார்ஜி ஒருவர் வருவார். வரணும். முகர் சிங் என்ற பெயர் சூட்டியிருந்தோம். அன்றைக்குத் தென்படவில்லை.

 சினிமா தியேட்டர் போல பெல் அடிப்பார்கள். இந்த வருடம் மணி இல்லை. திரை விலகியவுடன் மூன்று இளம் மாணவிகள் எலெக்டிரானிக் சுருதிப் பெட்டி வண்டுபோல் ரீங்கரிக்க, சித்தரஞ்சனி ராகத்தில் நாததனுமனிசம் கீர்த்தனையைக் கடவுள் வாழ்த்தாகப் பாடினார்கள். தியாகராஜரே நேரில் தோன்றி "ஏம்மா? எத்தனை கிருதிகளை ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி மேலே படைச்சிருக்கேன்! வருடா வருடம் இதே கிருதி தானா, ஏன்னு கேட்டாலும் "சம்பிரதாயம்' என்று பதில் வரலாம். வரவேற்புரை,

| குத்து விளக்கு ஏற்றுதல, அகாடமி தலைவரின் வரவேற்புரை போன்ற சம்பிரதாயங்களைத் தொடர்ந்து சங்கீத கலாநிதி பட்டம் பெறவிருக்கும் வயலின் விற்பன்னர் கன்யா குமரியை சுதா ரகுநாதனும், சஞ்சய் சுப்ரமணியனும் ரத்தினச் சுருக்கமாக முன், வழி மொழிந்தார்கள். ஏற்புரையை வாசிப்பது வயலினை வாசிப்பதைவிட சுளுதான் என்று சொல்லாமல் சொல்லி கன்யாகுமரி அசத்தினார். சங்கீத கலாநிதி உயரத்துக்கு வளர்ந்திருந்தாலும் லெக்டர்ன் மைக்கின் உயரத்துக்கு உயராதலால் சிறிய படியின் மேல் ஏறி நின்று படித்தார். 90வது விழாவைத் துவக்கி வைத்த மத்திய அமைச்சர் (நம்ம மதுரை பக்கம்) திருமதி நிர்மலா சீதாராமன். தமிழை சுவாசித்த உ.வே. சாமிநாத ஐயர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, கோபாலகிருஷ்ண பாரதி போன்ற மஹான்களை மேற்கோள் காட்டி எக்ஸ்டம்போராக வெளுத்து வாங்கினார். வங்கிகளில் பணம் இல்லாத கடும் வறட்சி இருக்கலாம். ஆனால் மோடியின் தலைமையில் இயங்கும் இந்த அமைச்சரிடமிருந்து விஷயங்கள் அருவியாகக் கொட்டின.

கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது பூந்தமல்லி சாரியைப் பார்த்தேன். பரஸ்பர விசாரிப்புக்குப் பிறகு ஒரு மேட்டரை கவனிச்சியா? இந்த வருஷ சாயங்கால ஸ்டார் கச்சேரிகளிலே ஒரு விசேஷம் என்னன்னு சொல்லு பார்க்காலம்னு கேட்டேன். தெரியலேன்னு சாரி உதட்டைப் பிதுக்கினான். 'பிரசன்ன வெங்கட்ராமன்லேயிருந்து ஆரம்பிச்சு செளம்யா, ரஞ்சனிகாயத்ரி, அருணா சாய்ராம், சுதான்னு நீண்டு நித்யஸ்ரீ மகாதேவன் வரை பதினாறு நாட்களிலும் சாயங்கால நாலு மணி ஸ்லாட்டிலே பாடப்போகிறவர்கள் எல்லாமே லேடீஸ்தான்.

"ரியலி! இது உன் கண்டுபிடிப்பா?
இல்லேப்பா, புதிய தலைமுறை நாவலாசிரியர் இரா. முருகனோடது. அதோட சங்கீத கலாநிதியாகப் போகிறவரும், விழாவுக்குத் தலைமை தாங்கினவரும் லேடீஸ் தான்! அகாடமியின் எம்பவர் மென்ட் ஆஃப் விமன்"

"பாடப் போற கீர்த்தனைகளின் விவரங்களை அச்சிட்டுக் கொடுத்தால் நன்றாக இருக்கும். அதை செய்ய மாட்டேங்கிறாங்க. ஆனா அகாடமிலேயும், பார்த்தசாரதி சுவாமி சபாலேயும் கேன்டீன் நடத்தற மின்ட் பத்மநாபனும், 'மெளன்ட்பேட்டன்' மணி அய்யரும் புளியோதரை டிராவல்ஸ் வெப்சைட்டிலே போட் டிருக்கும் நாளைய லஞ்ச் மெனு என்னன்னு சொல்லட்டுமா? கேட்டுக்கோ! 'பாலாஜி லட்டு (அதாவது திருப்பதி லட்டாக இருக்கணும் ) காபேஜ் வடை, லெமன் ரைஸ், ஆனியன் ரைத்தா, வெஜிடபிள் கூட்டு, பிரிஞ்சால் ரோஸ்ட், பொடெட்டோ சிப்ஸ், ரேடிஷ் சாம்பார், மணத்தக்காளி வத்தல் குழம்பு, டொமேட்டோ ரசம், சேமியா பால் பாயசம், மாங்காய் தொக்கு, மோர் மிளகாய், இலை. விலை ரூ. 230,

'உருப் போட்டுண்டு வந்து ஒப்பிக்கறயா? என் பங்குக்கு மெளன்ட் பேட்டன் மெனுவைச் சொல்றேன், கேட்டுக்கோ. 'கோதுமைப் பிரதமன், கேரட் தயிர் பச்சடி, வெற்றிலை சாதம், பிரிஞ்சால் ஃபிரைடு காரக் கறி, அவரைக்காய் கோகோநட் கறி, செளசெள கூட்டு, ரேடிஷ் சாம்பார், லெமன் ரசம், ஒயிட் பம்ப்கின் மோர்க்குழம்பு, மாங்காய் தொக்கு, பருப்பு, நெய், தயிர். விலை ரூ. 300, ”

இப்ப இலை போட்டால்கூட நான் ஒரு கட்டு கட்டுவேன். சாயந்திரப் பாடகர்கள் எல்லாம் பெண்கள் என்கிற மாதிரி உன் பங்கிற்கு ஏதாவது கண்டுபிடிப்பு உண்டா?”

 'உண்டு, உண்டு. பத்மநாபனும், மணி அய்யரும் நாளைக்குப் பரிமாறப் போறதிலே ஒரு ஒற்றுமை. அது என்ன தெரியுமா? ரேடிஷ், அதாவது முள்ளங்கி சாம்பார். ரைட்?"

செவிக்கு உணவு ஆயிற்று. வயிற்றுக்கு ஈயக் கேன்டீனை நோக்கி நகர்ந்தோம்.


[ நன்றி: மாம்பலம் டைம்ஸ், 24-12-2016 இதழ் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்