அசோகமித்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அசோகமித்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 மார்ச், 2022

2058.அசோகமித்திரன் - 6

மறக்க முடியாத மாமனிதர்!

திருப்பூர் கிருஷ்ணன் 


மார்ச் 23. அசோகமித்திரனின் நினைவு தினம். அவர் மறைந்தபின் 'அமுதசுரபி'யில் வந்த அஞ்சலி.



[ நன்றி: அமுதசுரபி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

அசோகமித்திரன்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


வியாழன், 25 மார்ச், 2021

1832. அசோகமித்திரன் - 5

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன்!

எஸ்.சந்திரமௌலி


மார்ச் 23. அசோகமித்திரனின் நினைவு தினம். 

'கல்கி'யில் வந்த அஞ்சலி.


[ நன்றி: கல்கி]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

அசோகமித்திரன்

செவ்வாய், 17 நவம்பர், 2020

1693. தி.ஜானகிராமன் - 7

தி.ஜானகிராமன் - ஒரு அஞ்சலி 

அசோகமித்திரன்


நவம்பர் 18. தி.ஜா.வின் நினைவு தினம்.  அசோகமித்திரன் கல்கியில் எழுதிய அஞ்சலி இதோ .


[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

தி.ஜானகிராமன்

ஞாயிறு, 19 ஜூலை, 2020

1587. ஆதவன் - 1

ஆதவன்
அசோகமித்திரன்


ஜூலை 19. ஆதவனின் நினைவு தினம்.



[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவு:

ஞாயிறு, 17 மே, 2020

1542. கதம்பம் - 22

செல்வாக்கு மிக்க படைப்பாளி
அசோகமித்திரன்



மே 17.
எழுத்தாளர் நகுலனின் நினைவு தினம்


' அமுதசுரபி'யில் வந்த அஞ்சலி.




'தினமணி'யில் வந்த ஒரு கட்டுரை இதோ.

நனவோடை எழுத்தாளர் 'நகுலன்'




[ நன்றி : அமுதசுரபி, தினமணி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

நகுலன் (எழுத்தாளர்): விக்கிப்பீடியா

ஞாயிறு, 15 மார்ச், 2020

1493. கதம்பம் - 11

தமிழை உலகமறியச் செய்தவர்
அசோகமித்திரன்


மார்ச் 16. பேராசிரியர் ஏ.கே.இராமானுஜனின் பிறந்த தினம்.

அவர்  93-இல்  மறைந்தவுடன் 'கல்கி'யில் வந்த ஓர் அரிய கட்டுரை.




[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:

கதம்பம்


வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

993. அசோகமித்திரன் - 4

என்னையும் ஆட்கொண்டவர்
அசோகமித்திரன் 


’ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ இதழில் 2007-இல் வந்த கட்டுரை.



[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[ நன்றி : ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ]

தொடர்புள்ள பதிவுகள்:
அசோகமித்திரன்

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

845. அசோகமித்திரன் - 3

கல்கியும் தேவனும்
அசோகமித்திரன்

[ தேவன் நினைவு தினம், 2005; நன்றி: சாருகேசி ] 

செப்டம்பர் 22. அசோகமித்திரனின் பிறந்த தினம்.

அவர் 1997-இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ.









[ நன்றி: படைப்பாளிகள் உலகம், கலைஞன் பதிப்பகம் ]

தொடர்புள்ள பதிவுகள்:
அசோகமித்திரன்
'கல்கி’ கட்டுரைகள்
தேவன் படைப்புகள்

ஞாயிறு, 14 மே, 2017

722. அசோகமித்திரன் - 2

பாண்டிபஜார் பீடா
அசோகமித்திரன்

மார்ச் 23, 2017 அன்று அசோகமித்திரன் காலமானார்.

அவருடைய கதை ஒன்று இதோ! பாண்டி பஜார் என் ‘பேட்டை’யாகவும் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்!
==

''ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க... முதல் போணியாகட்டும்' என்று பீடாக்கடை கோபாலகிருஷ்ணா சொன்னான்.

''ஏன்... என்னுதே முதல் போணியா இருக்கட்டுமே?'' என கடைக் கண்ணாடி அலமாரி மீது ஒரு ரூபாயை எடுத்துவைத்தார் வெங்கையா.
இரண்டு ஸ்பெஷல் பீடாக்களை ஒரு காகிதத் துண்டில் பொட்டலம் கட்டி வெங்கையாவிடம் கொடுத்தான் கோபாலகிருஷ்ணா. கடை கல்லாப்பெட்டியில் சில்லறை இல்லை. அவன் சட்டைப் பையில் இருந்து அரை ரூபாய் நாணயத்தை எடுத்து, வெங்கையாவிடம் கொடுக்க வந்தான்.
'உன்கிட்டேயே இருக்கட்டும். நாளைக்குப் போணி' எனச் சொல்லிவிட்டு, பாண்டிபஜார் பக்கம் வந்தார் வெங்கையா.

அப்போதுதான் ஒவ்வொரு கடையாகத் திறந்துகொண்டிருந்தார்கள். கீதா கபேயும் அதன் பக்கத்தில் இருந்த வெற்றிலை பாக்குக் கடையிலும் மட்டும், ஜனங்கள் அதிகம் தென்பட்டார்கள். 'பீடாக்கடைக்காரனிடம் வீம்பு காட்டியிருக்க வேண்டாம்’ என, வெங்கையாவுக்குத் தோன்றியது. அந்த எட்டணா இருந்தால், டிபன் - காபி சாப்பிட்ட பிறகு பீடாவைப் போட்டுக்கொள்ளலாம். வெங்கையா காத்திருந்தார்.

பிரமாண்டமான பழைய கார் ஒன்று, தடபுடவென சத்தம் போட்டுக்கொண்டு கீதா கபே முன்னால் வந்து நின்றது. சி.எஸ்.ஆர் இறங்கினான். வெங்கையாவைப் பார்த்துவிட்டான். வெங்கையா அவனிடம் சென்றார்.

'இன்னும் இந்தக் கார் உன்னை விட மாட்டேங்குது' என்றார்.


காரை ஓட்டி வந்த டிரைவர் சி.எஸ்.ஆரிடம், 'சார், சரியா ஒம்பது மணிக்கு என்னை விட்டுடணும். இல்லாட்டி வண்டியை இங்கேயே விட்டுட்டுப் போயிடுவேன்' என்றான்.

'பயப்படாதே. காபி சாப்பிட்ட அப்புறம் வீட்டுக்குப் போயிடலாம்' என்றான் சி.எஸ்.ஆர்.

'ஒவ்வொரு தடவையும் இதையேதான் நீ சொல்ற!'
சி.எஸ்.ஆர்., வெங்கையா பக்கம் திரும்பினான்.
'ஐயா, நமஸ்காரம்.'
'உனக்கும் வீட்ல காபி கிடைக்கலையா?'
'பணம் சம்பாதிச்சுண்டு வந்தா, வீட்ல காபி என்ன, பூரிக்கிழங்கே கிடைக்கும். இப்போதைக்கு எனக்கு 'ராம-ஹனுமான் யுத்தம்’ படம் மட்டும்தான் இருக்கு. இன்னும் ஒரு படம் வந்தா, இந்தக் காரை வித்துத் தொலைச்சுடுவேன். ஆயிரம் ரூபா கிடைக்கும்.'
இருவரும் கீதா கபேயினுள் நுழைந்தார்கள். அங்கு இருந்த இரண்டு மூன்று பேர் அவர்களைப் பார்த்து 'யார் இவர்கள்?’ என நினைவுபடுத்திக்கொள்ள முயல்வது தெரிந்தது.

சி.எஸ்.ஆர் சொன்னான்...
''நம்ம புரொடியூசர்களுக்கு நம்ம நினைவே வராமல் இருக்கலாம். ஆனா, பப்ளிக்குக்கு நாம இன்னும் ஸ்டார்கள்தான்.'
'எனக்குத் தெரியும்பா. 'ஜீவிதம்’ வந்தப்போ, அந்த வசுந்தரா பொண்ணைவிட உன்னைத்தான் எல்லாரும் நினைச்சு நினைச்சுச் சிரிச்சாங்க.'
'முகூர்த்தமெப்புடு பொம்மக்கா?'
'அதோ ஆள் வந்துட்டார். சி.எஸ்.ஆர்., எங்கிட்ட ஒரு காசு கிடையாது.'
'பயப்படாதே. நான் பாத்துக்கிறேன். அப்பா கண்ணா... இரண்டு பிளேட் இட்லி, சாம்பார்.'
'இப்போ பீடாக்கடைக்காரன்கூட, நான் நெருங்கினாலே கடனுக்குனுதான் நினைக்கிறான். நீ சொல்றே ஸ்டார்னு... நல்ல ஸ்டார்!'

இட்லி, சாம்பார் வந்தது. சி.எஸ்.ஆர் இன்னும் கொஞ்சம் சாம்பார் வரவழைத்து, இட்லியை சாம்பார் சாதம் மாதிரி செய்தான். பிறகு, அரை அரை ஸ்பூனாக எடுத்துச் சாப்பிட்டான். வெங்கையாவுக்கு வருத்தமாக இருந்தது. பணம் வந்தபோது, ஏன் கொஞ்சம் ஜாக்கிரதையா இல்லை? வெங்கையாவாவது மூன்று படங்கள் எடுத்தார். சி.எஸ்.ஆர்., அவனாக ஒரு படம்கூட எடுக்கவில்லை.

இருவரும் ஒரு கப் காபி சொல்லி அதைத் டம்ளரும் டபராவுமாகக் குடித்தார்கள். பில்லுக்குப் பணம் கொடுத்தான் சி.எஸ்.ஆர். இருவருமாக வெளியே வந்தபோது ஒரு பிச்சைக்காரன், ''ஐயா தர்மதுரைங்களா... பிச்சை போடுங்க' என்றான்.

சி.எஸ்.ஆர்., வண்டி அருகே சென்றான்.
'வர்றீங்களா, உங்களை வீட்ல விட்டுட்டுப் போறேன்.'
''இன்னும் கொஞ்ச நேரம் இங்கே நிக்கிறேன். எவனாவது கர்ணன் மாதிரி வருவான்.'

சி.எஸ்.ஆர் போய்விட்டான். வெங்கையா இன்னும் சிறிது தூரம் நடந்து கேரளா ஹேர் டிரெஸ்ஸர்ஸ் கடை அருகே சென்றார். அவர் கடைக்குச் சென்று முடி வெட்டிக்கொண்டு மாதக்கணக்கில் ஆயிற்று. அங்கே முடி வெட்டிக்கொள்ள வரும் இளைஞர்களில் பாதிப்பேர் அந்த சலூனில் சிதறிக்கிடக்கும் சினிமா பத்திரிகைகளுக்குத்தான் வருவார்கள். இளைஞர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் சினிமா என்றால் அவ்வளவு பைத்தியம்.

''ஐயா!'
வெங்கையா திரும்பிப் பார்த்தார். பளிச்சென்ற சட்டை-பேன்ட் அணிந்துகொண்டு ஓர் இளைஞன், அவர் கால்களைத் தொட்டு வணங்கினான்.
'என்னப்பா இது... தெருவுல எல்லாம்...'
'உங்களை எங்கே பார்த்தாலும் இப்படி வணங்கலாம் ஐயா. நேத்துகூட வணங்கினேன். நீங்க கவனிக்கல.'
'நேத்தா?'
'ஆமா... ஐயா.'
வெங்கையா சற்றுச் சங்கடமாக உணர்ந்தார்.
'ஐயா... நீங்க ஏன் இந்த 'மீசைக்காரனுக்கு மீசைக்காரன்’ மாதிரி படத்துல நடிக்க வர்றீங்க? உங்க அருமை பெருமை தெரியாதபடி
பத்து கௌபாய்களோடு உங்களையும் ஒரு கௌபாயா நிக்கவெச்சுட்டாங்க.'
வெங்கையா, 'உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டார்.
'நான் ரங்காராவ் அசிஸ்டென்ட்... சவுண்டு இன்ஜினீயர் ரங்காராவ்.'
வெங்கையா திகைத்து நின்றார்.
'ஆமா ஐயா. அவரும் ரொம்ப வருத்தப்பட்டுண்டார்.'
'அவர் புதுசா?'
'ரெண்டு மூணு வருஷங்கள் இருக்கும். அவர் அமெரிக்காவுல படிச்சுட்டு வந்தவர். அங்கே உங்க படங்களைத்தான் பாடமா சொல்லித்தருவாங்களாம்.'
''நான் பெரிசா என்ன பண்ணிட்டேம்பா? பாடுவேன்...'
'அதான் ஐயா... அங்கே பாட்டுனா தனியா நிக்கும். நீங்க பாடி எல்லார் மனசையும் உருக வெச்சுடுறீங்க. பால்முனியெல்லாம் ஆச்சர்யப்பட்டாங்களாம். உங்களைக் கூப்பிடுறதா இருக்காங்களாம்.'
'உன் பேர் என்ன?'
'சிட்டிபாபு.'
'சிட்டிபாபு, இப்படி ஓரமா வா. இந்த மாதிரி பேச்செல்லாம் நான் நிறையக் கேட்டிருக்கேன். இதுக்கெல்லாம் அர்த்தமே கிடையாது.'
'எங்க அம்மாவுக்கு நீங்கதான் யோகி வேமனா.'
வெங்கையாவுக்கு எரிச்சலாக இருந்தது.
''ரொம்ப சரி... இப்போ வேமனாவும் ஒண்ணுதான் கௌபாயும் ஒண்ணுதான். நேத்து அந்த புரொடியூசர் என் பாட்டுக்கும் நடிப்புக்கும் கூப்பிடலை. அவருக்கு என் மேலே ரொம்ப மரியாதை உண்டு. எனக்கு ஒரு காதுல இருந்து இன்னோரு காது வரைக்கும் மீசை வெச்சு, பேன்ட், கட்டம் போட்ட சட்டை எல்லாம் போடுறதுக்கு ரொம்ப வருத்தப்பட்டார். அவர் எடுக்கிற படங்கள் எல்லாம் பைத்தியக்காரத்தனமாத்தான் இருக்கும். நேத்து எனக்கு மட்டும் நூறு ரூபா கொடுத்தார். மளிகைக் கடை, வீட்டு வாடகை எல்லாம் தீர்த்து, கொஞ்சம் பருப்பும் உப்பும் வாங்கிப்போட முடிஞ்சது. பால் பாக்கிதான் இருக்கு.'
'அதை நான் தீர்த்திடுறேன் ஐயா. இப்போ எங்கே இருக்கீங்க... திருமலைப்பிள்ளை வீடுதானே?'
'அதெல்லாம் போய் ரொம்ப நாள் ஆச்சு. இப்போ கமலா கோட்னிஸ் வீட்ல ஒரு ரூம்ல இருக்கேன். நல்ல பொண்ணு. அந்த வீடும் போயிடப்போறது. வெளிக் கதவுல நோட்டீஸ் ஒட்டிட்டான்.'


''நீங்க பேங்க் லோன் வாங்கித்தான் கஷ்டப்பட்டீங்கனு சொன்னாங்க.'
'உனக்கு இன்னிக்கு வேலை கிடையாதா?'
'இன்னிக்கு ரங்காராவ் சாருக்கு கால்ஷீட் இல்லை. நான் அடுத்த தெருவுல இருக்கிற மேன்ஷன்லதான் இருக்கேன். ஐயாவைப் பார்த்துட்டு ஓடிவந்தேன்.'
''சந்தோஷம். நான் கிளம்புறேன்.'
''ஐயா... சின்ன உதவி.'
'நான் என்ன உதவி பண்ண முடியும்?'
'ஒண்ணு, உங்க பால் கணக்கைத் தீர்க்க எனக்கு அனுமதி தரணும். ரெண்டு, எங்க வீட்டுக்கு வரணும்.'
'நீ ரூம்லதானே இருக்கே?'
'எங்க வீடுனா சித்தூர்ல ஐயா. உங்க ஊர்தான். எங்க சார் கார்லயே போயிட்டு வந்துடலாம். எங்க அப்பா - அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.'
'நீ அப்பா - அம்மா மேல இவ்வளவு பக்தி வெச்சிருக்கியே! உன் குடும்பம் பேர் என்ன?'
'என் அப்பா - அம்மாவைப் பார்த்தா உங்களுக்குத் தெரிஞ்சுபோயிடும்.'
'உன்கிட்டே ஒண்ணு சொல்லிடணும். நான் பேங்க் லோன் வாங்கி, அதைச் சரியாத் திருப்பித் தராததுனால, அந்த மேனேஜருக்குத்தான் ரொம்பக் கஷ்டம். அவரை ஒரு சின்ன ஊருக்கு மாத்திட்டாங்க. அவருக்குத் தெரியும், தெய்வத்துக்குத் தெரியும் நாங்க யாரையும் ஏமாத்தலைனு. படத்தை உடனே ரிலீஸ் பண்ண முடியலை. அவர் உதவி பண்ணலைன்னா,
'பக்த ராம்தாஸ்’ படம் வந்திருக்காது.'
'எங்க அம்மாவுக்கு நீங்கதான் ராம்தாஸ், வேமனா, ரமண மகரிஷி எல்லாம்.'
'ரமண மகரிஷியைப் பார்த்திருக்கியா?'
'இல்லை ஐயா.'
'நீ குழந்தையா இருக்கிறப்பவே, அவர் சமாதி ஆகிருப்பார்.'
'ஆமா ஐயா. எங்க குடும்பமே அவரை சாமியா கும்பிடுவாங்க.'
'நீ ஒரு சினிமாக்காரப் பையனாவே இல்லையே!'
'ஒரு நிமிஷம் இருங்க ஐயா. எங்கிட்டே மோட்டார் சைக்கிள் இருக்கு. உங்களை வீட்டுல விட்டுட்டு, பாலுக்கு ஏற்பாடு பண்றேன். ஆனா, எனக்கு ரெண்டு மூணு நாள் ஆஃப் இருக்கிறப்ப, நீங்க சித்தூர் வரணும். முடிஞ்சா நம்ம சவுண்டு இன்ஜினீயரையும் கூட்டிண்டு போகலாம்.'
''அவரை எதுக்குத் தொந்தரவு பண்ணணும்?'
'அவர் ரொம்பப் பெருமையா நினைப்பார் ஐயா.'
வெயில் தெரிய ஆரம்பித்ததோடு அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் சேர ஆரம்பித்தது.
'சிட்டிபாபு, நான் கிளம்புறேன். இன்னொரு நாள் பார்ப்போம்.'
'ஒரு நிமிஷம் இருங்க ஐயா. இதோ மோட்டார் சைக்கிள் கொண்டுவந்துடுறேன்.'

பத்து நிமிடங்கள் கழிந்தது. சிட்டிபாபுவைக் காணோம். அவன் வர மாட்டான். ஆனால், என்னவெல்லாம் பேசிவிட்டான்! வெங்கையா, வீட்டுப் பக்கம் நடக்க ஆரம்பித்தார். பிரகாசம் தெருவும் கிழக்கு மேற்கு. நல்ல வெயில் தொடங்கிவிட்டது. முடிந்தவரை நிழலாகப் போனார்.
ஆனால் அவன் வந்தான்.

[  நன்றி: விகடன், ஓவியம்: செந்தில் ]

தொடர்புள்ள பதிவுகள்:
அசோகமித்திரன்

வியாழன், 23 மார்ச், 2017

அசோகமித்திரன் -1

எனது படைப்பில் பெண்கள்! 
அசோகமித்திரன்
 (அவள் விகடன்: 21.01.2000)

[ நன்றி: தடம் ] 


மார்ச் 23, 2017. இன்று அசோகமித்திரன் காலமானார். அவருக்கு ஓர் அஞ்சலியாய் அவருடைய நேர்காணல் ஒன்றை இங்கிடுகிறேன்.

====
 ஆணென்ன பெண்ணென்ன...

பெண்ணின் ஆழ்மன உணர்வுகளாகட்டும், அன்றாட நடைமுறையில் அவளுடைய சின்னச் சின்ன இயல்பான சிந்தனைகளாகட்டும் - போகிறபோக்கில் இயல்பாகச் சொல்கிற தொனி அசோகமித்திரனுடையது. பெண்ணியல் நோக்கில் எழுதுகின்ற பெண் எழுத்தாளர்களுக்குக்கூட, எப்போதாவது எழுத்தில் பெண்ணின் உணர்வுகளைச் சொல்வதில் ஒரு நாளும் இந்தத் தர்மசங்கடம் நிகழ்ந்ததில்லை!

இப்படி ஒரு பெண்முகம் உங்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று?

எந்தக் கதையும் யோசிச்சு, இந்த முடிவுக்காக - இந்தக் கருத்துக்காகன்னு நான் எழுதறது கிடையாது. நம்மைச் சுற்றி நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். நிறைய சம்பவங்கள் நடந்துகொண்டு இருக்கு. பார்க்கப் போனா எழுத்தாளனுக்கு எழுத ஏராளமான சூழ்நிலைகள் கிடைக்குது. நாம அதை எடுத்து விரிவுபடுத்திக் கையாளறோம். எனக்கு பெண்களைப் பற்றி இந்தப் பார்வை, ஆணைப் பற்றி இந்தப் பார்வைன்னு தனியாக ஒண்ணும் கிடையாது. கற்பனை சக்திக்கு ஆண் - பெண் பேதம் உண்டா என்ன? நாம, நம்ம கற்பனையை எதுல செலுத்தறோம்கிறது இருக்கு. நம்ம வீட்டுக்கு அன்றாடம் வந்துட்டுப் போறவங்க - கறிகாய்காரி, வேலை செய்யவர்றவங்க... பார்க்கப் போனா இவங்ககிட்டதான் வாழ்க்கைக்கான நிறையப் பரிமாணங்கள் இருக்கு.


அவங்களோட வாழ்க்கை, உங்களுக்கு எப்படிப் பிடிபடுது?

நாம பார்க்கிற எல்லோர்கிட்டயும் வாழ்க்கை இருக்கு. நாம கண்ணைத் திறந்து வெச்சுட்டுப் பார்த்தா தானா வெளிச்சம் ஆகும். நான் எல்லாத்தையும் தெரிஞ்சுட்டு எழுதறது கிடையாது. எழுதற போக்கிலதான் தெளிவு வருது. நிறையப் பேருக்குச் சின்ன வயசிலேயே வாழ்க்கை மரத்துப் போயிடுது. புதுசாகச் சிந்திக்கிறது இல்லை. எல்லா விஷயத்தைப் பற்றியும், பழகின பாதையிலேயே பார்க்கப் பழகிடறோம். எனக்கு எந்த நேரமும், மனுஷங்க எல்லாம் புதுசாகவே படறாங்க. யாரையும், இவங்க இப்படித்தான்னு நான் ஃபிக்ஸ் பண்றதில்லை. சின்னவங்க - பெரியவங்க, வேலை தேடறவங்க - தேடாதவங்க, ஒல்லியானவங்க - குண்டானவங்க இப்படி எல்லோருக்கும் ஏதோ விஷயம் இருக்கு. தடிமனா இருக்கிறதை ஒரு பெண் எப்படி உணர்றாங்கிறதைப் பத்தி நான் ஒரு தடவை கதை எழுதி இருக்கேன். நம்மைச் சுற்றி நிறைய விஷயங்கள் இருந்துகொண்டு இருக்கு.

பொதுவாகப் பெண்ணினுடைய உணர்வுகளைச் சொல்ற எழுத்தில், சமயத்தில் ஆண் பாத்திரங்கள் மேல் கறுப்புச் சாயம் பூசறது நடக்கும். உங்க எழுத்தில் அது நிகழாதது எப்படி?

எல்லா விஷயத்திலும் ஒரு பாலன்ஸ் வேணும். ஒரு மனுஷன், பெண் வர்க்கத்துக்கிட்ட நியாயமில்லாம நடந்துகிட்டா அவன் - அவன் வர்க்கத்துக்கிட்டயும் நியாயமில்லாமதான் இருப்பான். இது எதிர்மறையாகவும் பொருத்தும். அடிப்படையில் எந்த மனிதப் பிறவியும் பாவி இல்லை.

இந்த நிதானம் எப்படி வருது?

வாழ்க்கையில் நாம் தொடர்ந்து வளர்றோம்னு சொல்றாங்க. தேடல்னு சொல்றாங்க. நான் அப்படி நினைக்கலை. எல்லோர்க்கும் வாழ்க்கை பத்தின புதிர் எதோ ஒரு காலகட்டத்துல புரிஞ்சுடுதுன்னு நினைக்கறேன். புரிஞ்சதுதான் நம்மளைச் செலுத்தறது. ஆண் வேறு, பெண் வேறு இல்லை. அடிப்படையில நாம எல்லோரும் மனுஷங்கதான்கிறது பதிஞ்சுபோச்சு. பேதம் பார்க்க முடியலை. பெண்ணையும் தப்பாக்க முடியறதில்லை. ரெண்டு பேருக்கும் கஷ்டங்கள் இருக்கு; தாபங்கள் இருக்கு.

கிட்டத்தட்ட 40 வருஷத்துக்கு மேலாக எழுதறீங்க. திருமணமாகாமல், ஆகி, தந்தையாகி, தாத்தாவாகி என வெவ்வேறு காலகட்டத்துல எழுதி இருக்கீங்க. யோசித்துப் பார்த்தா, பழைய கதைகளை, குறிப்பாக, பெண் தொடர்பான கதைகளை இப்ப எழுதினா, வேறு சிந்தனையில் எழுதி இருப்பீங்கன்னு நினைக்கிறீங்களா?


பார்க்கப் போனா, 'தண்ணீர் நாவலை எழுதறபோது எனக்கு வயசு 38. அந்த மாதிரி கதை எழுதறதுக்கு அது சின்ன வயசுன்னுகூடச் சொல்லலாம். எப்பவும் கதையோட மையம் மாறாதுன்னு நினைக்கறேன். கொஞ்சம் எக்ஸ்ட்ராவா விளக்கங்கள் வேணும்னா கொடுக்கலாம். சின்னதா தட்டி நாகாசு வேலை பண்ணலாம்.

பெண்களைப் புரிஞ்சுண்டு எழுதுறது பத்தி, பெண் வாசகிகள் சொல்லி இருக்காங்களா?

இல்லை... அப்படி யாரும் சொல்லாததுதான் சரின்னு நினைக்கிறேன். என் எழுத்து வலிஞ்சு இல்லை. எதைப் பத்தியும் யாரும் என்கிட்ட வலிஞ்சு பேசாததுதான் சரியா படறது. நான் எப்பவுமே சுயமுக்கியத்துக்காக முயற்சி செய்தது கிடையாது. அதனால எனக்கு ஒரு கஷ்டமும் கிடையாது. என் எழுத்து யாரையும் கெடுதல் செய்யாம இருக்கணும். எனக்குக் கிடைக்கிற அனுபவத்தை நேர்மையாக நடைமுறை இயல்போடு சித்திரிக்கிறேன். இப்படி செய்யவே, எழுதவே இன்னும் ஏராளமாக இருக்கு!

-மா
[ நன்றி : அவள் விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:
அசோகமித்திரன்