செல்லம்மாள் பாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செல்லம்மாள் பாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 டிசம்பர், 2019

1417. பாரதி - 5

பாரதி மணிமண்டபத் திறப்பு விழா -1




முந்தைய 'பாரதி மண்டபப் 'பதிவுகளின் தொடர்ச்சியாகக் கல்கி இதழ்களில் வந்த சில படைப்புகளைத் தொடர்ந்து  இடுகிறேன்.

அக்டோபர் 12, 1947  கல்கி இதழிலிருந்து இரு கட்டுரைகள். 




நவம்பர் 2, 47 இதழிலிருந்து ஒரு கட்டுரை.

திறப்பு விழாப் படங்கள் சில.






[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள சில பதிவுகள்:

பாரதி மணிமண்டபம்: மற்ற கட்டுரைகள் 

பாரதி

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

981. சங்கீத நினைவுகள் - 145

பாரதியும் சங்கீதமும் 
செல்லம்மா பாரதி 

‘சக்தி’ இதழில் 1941-இல் வந்த ஒரு கட்டுரை.



[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்

புதன், 12 செப்டம்பர், 2012

பாரதி மணிமண்டபம் - 3

செல்லம்மாள் பாரதியின் கடிதம்

முந்தைய பகுதிகள்:

பாரதி மணிமண்டபம் - 1   ,    பாரதி மணிமண்டபம் - 2




(தொடர்ச்சி)

“ பாரதி பிறந்தார்” கட்டுரைக்குப் பின் பாரதி ஞாபகச் சின்னம் பற்றிக் 'கல்கி' ஆசிரியர் பல கட்டுரைகளைக் 'கல்கி'யில் எழுதி இருக்க வேண்டும். அவற்றுள் எனக்குக் கிடைத்த ஒன்றை இத்துடன் இணைத்திருக்கிறேன். ( மே 13, 45- இதழில் வந்தது )

எட்டயபுரம் ராஜா நிலம் கொடுத்தது பற்றி எழுதி இருக்கிறார். ராஜாஜியின் தலைமையில்  3-6-45-இல் அஸ்திவார விழா நடத்துவதென்ற தீர்மானத்தையும் சொல்கிறார்.





அதே கட்டுரையில் ஸ்ரீமதி செல்லம்மாள் பாரதி 30-4-45 -இல் எழுதிய  ஒரு கடிதத்தையும் பிரசுரிக்கிறார் 'கல்கி'. ( 29-4-45 தேதி 'கல்கி' யில் வெளியான 'விஷயம்' ஒன்றைக் குறிப்பிடுகிறார் செல்லம்மாள் பாரதி; போன பதிவில் எழுதியபடி, சேர்ந்த பணத்திலிருந்து அவருக்கு  ஓர் உபகார நிதி அளிப்பது பற்றிய  கீழ்க்கண்ட அறிக்கை அது .



 'கல்கி'க்கும் ஓர் அன்பளிப்பு வைத்திருக்கிறேன் என்கிறார் செல்லம்மாள். அது என்ன என்று அறியக்  கடிதத்தைப் படியுங்கள்!







பாரதி மணிமண்டபத்தின் அடிக்கல் நாட்டு விழா எப்படி நடந்தது? பார்க்கலாமா?


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

பாரதி நினைவுகள்

" பாரதி அறியாத கலை” : செல்லம்மாள் பாரதி
[ கலாரசிகன்; தினமணி: 12 டிசம்பர் 2011]

அகில இந்திய வானொலி நிலையம் 1938 முதல் ஒலிப்பதிவு செய்த இசை நிகழ்ச்சிகளைக் குறுந்தகடுகளாக வெளியிட்டு வருகிறது. இதேபோல, வானொலியில் நிகழ்த்திய உரைகளையும் குறுந்தகடுகளாக வெளிக்கொணர்ந்தால் நன்றாக இருக்கும். சமீபத்தில், திருமதி. செல்லம்மாள் பாரதி, "பாரதி அறியாத கலை' என்கிற தலைப்பில் வானொலியில் பேசிய உரையை சமீபத்தில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த உரையிலிருந்து சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

" மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயதுவரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டுக்கு உபதேசித்ததோடு, நாட்டில் பரப்பியதோடு நிறுத்திக் கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம்! தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார், என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

ஒரு சம்பவம் என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை.

மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. ""இனி மிஞ்ச விடலாமோ?'' என்று அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க மனம் துடிதுடித்தது. ஆனால், பயமும் ஒருபுறம் ஏற்பட்டது. "ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது, என்ன விஷயமோ?' என்று திகில் கொண்டேன்.

கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். "செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். "நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார்.

"கரும்புத் தோட்டத்திலே' என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மி விம்மி அழுதோம். பாரதியார் அறியாத கலை, "பணம் பண்ணும் கலை". என் கணவர் மறந்தும் காசுக்காகத் தமிழ்த்தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாக்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. ஆற அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ, பகலோ, வீட்டிலோ, வெளியிலோ, கடற்கரையிலோ அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்''.

செல்லம்மா பாரதியின் இந்த உரையைப்போல, பல அறிஞர்களின் உரைகள் வானொலியில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவை புத்தகங்களாகவும், குறுந்தகடுகளாகவும் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.”
--

பி.கு.
முழு உரையையும் 

இங்கே  படிக்கலாம்.