கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 டிசம்பர், 2022

2362. சுடோக்கு : கவிதை

சுடோக்கு 

பசுபதி


சதுரனென நான்பெருமை சாற்றப் புதிய 

புதிரொன்றைத் தேடுகின்ற போது -- முதியர்

இளைஞர்கைச் செய்தித்தாள் ஏடுகளில் கண்டேன்

சுளுவாய்த் தெரிந்த சுடோக்கு.


கட்டத்தில் எண்களிடக் காலொன்றில் நின்றாலும்

கட்டம்தான் மிச்சம்! களைத்தயர்ந்தேன் !-- துட்டர்கள் 

ஒன்பதின்மர் தந்தனரே உன்மத்தம்! சித்ரவதைத் 

துன்பத்தின் எல்லை சுடோக்கு.


எண்ணும் எழுத்துமிரு கண்களெனப் போற்றென்றார்;

எண்நம்மைக் கைவிட்டால் என்செய்வோம்? -- நண்பரே!

போக்கு குறுக்கெழுத்துப் போட்டிகளில் உன்பொழுது! 

தூக்கிக் கடாசு சுடோக்கு! 

இது ‘திண்ணை’ மின்னிதழில் 2006 -இல்  வெளியானது )


தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

புதன், 30 நவம்பர், 2022

2335. ஓமெனும் சக்தி : கவிதை

ஓமெனும் சக்தி 

பசுபதி




உமையென ஒலிமாறும் -அந்த

. ஓமெனும் சக்தியை வேண்டிடுவேன்.

அமைதியைத் தந்திடவே - வினை

. ஆற்றிடு வாய்மதி தேற்றிடுவாய் ! 

சமைத்திடு வியனுலகை  - இந்த

. சகந்தனி லேநரர் அகந்தனிலே!

தமிழ்க்கவி பூத்திடவே - தலை

. தாழ்த்துகி றேன்எமை வாழ்த்திடுவாய்!

( அ+உ+ம் =ஓம் => உ+ம்+அ ) 

தொடர்புள்ள பதிவுகள்:


பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

புதன், 2 நவம்பர், 2022

2294. பெற்ற மனம்: கவிதை

பெற்ற மனம்

பசுபதி


'தினமணி'யில் 2 நவம்பர் 2015 அன்று வெளியான கவிதை.வாராவாரம் கொடுக்கப்படும் தலைப்புக்கேற்ப எழுதி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கவிதை.

====

பெண்ணின் மணமென்னும் போதினிலே – அந்தப்

  பெற்றோரின் உள்ளம் கலங்குவதேன்?

கண்ணின் மணியாய் வளர்ந்தவளோ – தாலி

  கட்டி யவனுடன் செல்வதனால்.


மைந்தன் திருமணம் ஆனபின்பும் – தாய்

  தந்தையர் நெஞ்சம் கலங்குவதேன்?

மந்திரம் போட்டவள் சொற்படியே – பிள்ளை

  வாழ்ந்திடச் செல்லும் தனிக்குடியால்.


உள்ளம் இரண்டையும் ஒன்றிணைக்கும் – இந்த

  உன்னதக் கல்யாண தீபவொளி

தள்ளாடும் பெற்றோரை ஆழ்த்திடுமோ – ஒரு

  தாபத் தனிமை இருட்டினிலே ? 

===


தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.                     

   

புதன், 26 அக்டோபர், 2022

2285. தண்ணீரின் கண்ணீர்:கவிதை

தண்ணீரின் கண்ணீர்

பசுபதி



'தினமணி'யில் 26 அக்டோபர் 2015 அன்று வெளியான கவிதை.வாராவாரம் கொடுக்கப்படும் தலைப்புக்கேற்ப எழுதி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கவிதை.

=====


கலசத்தில் நீர்நிரப்பிக் கடவுளை உள்ளழைக்க

வலிமைமிகு மந்திரங்கள் மனமொன்றிச் சொல்லிநின்றேன்.


வழிபாடு முடியுமுன்னே வந்துநின்றாள் நீர்த்தேவி.

விழிகளிலே நீர்பொங்க விளித்தனள்: “மானுடனே! 


பரிசுத்தம் வேண்டாமா பரிபூர்ண பலன்கிட்ட?

அருகதையும் எனக்குளதோ ஆண்டவனை உள்ளிறக்க?


ஆறுகளில் சேர்த்துவிட்டாய் ஆலைகளின் கழிவுகளை ;

நாறுதே மாசுகளால் ஞாலத்துச் சூழலெல்லாம்! 


பூதமென்னுள் நஞ்சிட்டுப் பூதனையாய் மாற்றிவிட்டாய்!

மாதவனும் எனையுறிஞ்சி மறுபிறவி தருவானோ? “

===

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

2224. இன்னும் கொஞ்சம்: கவிதை

இன்னும் கொஞ்சம்

பசுபதி


வியப்பூட்டும் அறிவுச் சக்தி ,

. . வியாபார வெற்றி யுக்தி

வியர்வையின்றி கிட்டா என்றே

. . மேல்நாடு கூறும் புத்தி !

'ஜயமுண்டு ' ஜபமே செய்து

. . பயமின்றி இன்னும் கொஞ்சம்

உயர்வானில் பறக்க வேண்டும்,

. . உழைப்பென்னும் சிறகை வீசி !


தொன்மையிலும் சொன்னம் உண்டு

. . தொலைநாட்டில் கழிவும் உண்டு !

அந்நியத்துத் தண்ணீர்ப் பாலை

. . அருந்திடுவோம் அன்னம் போல !

கந்தலான கருத்தை ஓட்டிக்

. . காற்றடிக்க இன்னும் கொஞ்சம்

சன்னல்கள் திறக்க வேண்டும் ,

. . சாரலிலே புதுமை வீச !


தாய்மொழியில் கல்வி ஊட்டத்

. . தடைஇருப்பின் உடைக்க வேண்டும் !

ஆய்வுகளின் தாக்கம் ஓங்க

. . ஆழமாக உழுதல் வேண்டும் !

சாய்வற்ற நீதி என்றே

. . சரித்திரம் படைக்க வேண்டும் !

பாய்ச்சலிலே இன்னும் கொஞ்சம்

. . பெளருஷத்தைக் காட்ட வேண்டும் !

[ 18 நவம்பர், 2001 'திண்ணை' யில் வெளியான கவிதை]

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


வெள்ளி, 14 ஜனவரி, 2022

2003. புதுமைப் பொங்கல்: கவிதை

புதுமைப் பொங்கல்

பசுபதி



தொன்மைத் திருநாள் பொங்கலின்முன்
 . . தொல்லை களைதல் முறையன்றோ?
இன்னல் கக்கும் வன்முறையை
. . எரித்து மகிழ்வோம் போகியன்று;
இன்பத் தையை வரவேற்போம்
. . எல்லோன் அறத்தைக் கும்பிட்டே!
பொன்னார் வையம் சமைத்திடுவோம்!
. . புதுமைப் பொங்கல் படைத்திடுவோம் !

பதக்கு வாய்மை அரிசியுடன்
. . பண்பாம் அன்புப் பால்சேர்த்து
மதநல் லிணக்கச் சீனியுடன்
. . வாழ்க்கைப் பானை தனிலிடுவோம்!
முதியோர் நூல்கள் பருப்புடனே
. . மொழியில் ஆர்வத் திராட்சையிட்டுப்
புதுமைப் பொங்கல் படைத்திடுவோம் !
. . பொருந்தாப் பழமை தவிர்த்திடுவோம்!

[ 18-1-2016 'தினமணி' யில் வெளியான கவிதை]

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வியாழன், 6 ஜனவரி, 2022

2000. வெண்பா வீடு - 2: கவிதை

 எண்மையைக் காணல் எதற்கு?

                          


என் நண்பன் ‘நம்பி’, அவன் மனைவி ‘நங்கை, அவர்கள் குழந்தைகள் யாவரும் இருக்கும் வீட்டின் பெயர் ‘வெண்பா வீடு’.


இது என் வீட்டிற்கு அருகில்தான்  உள்ளது. எல்லோரும் அங்கே ‘வெண்பா’க்கள் மூலமாய்த்தான் பேசிக்கொள்வார்கள்.


ஒரு நாள் காலையில் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தபோது , ஒரு புதிய தமிழ்த் திரைப்படம் பற்றிய விளம்பரத்தைப் பார்த்தேன். வெண்பா வீட்டுக் குடும்பத்துடன் அப்படத்திற்குப் போகலாமே என்ற ஆசையுடன் வெண்பா வீட்டிற்குப் பத்திரிகையுடன் சென்றேன்.

என்ன ஆச்சரியம்! நம்பியும் அதே விளம்பரத்தை அப்போது பார்த்திருக்க வேண்டும்!  அவன் 'நங்கை'யிடம் கேட்டுக் கொண்டிருந்தான்:  

நம்பி:

ஆங்கிலத்தில் அன்றாடம் அக்கப்போர் கேட்டலுத்துத்
தாங்காத தாகம் தமிழைக் குடிக்க;
அரங்கை அணிசெய்தே அன்னைமொழி ஆர்க்கும்
திரைப்படம் காணலாம் சேர்ந்து.

இதற்குச் சுரீரேன்று உடனே பதில் சொன்னாள் நங்கை.
நங்கை:
தானுந்து நிற்பதற்குத் தண்டப் பணச்செலவு;
போனவுடன் சோளப் பொறிபானம் மாத்திருட்டு;
தண்டமிழ் மீனைத் தமிங்கலம் சாப்பிடும்
எண்மையைக் காணல் எதற்கு.
தானுந்து=automobile(நன்றி: C.R.Selvakumar)
தமிங்கலம்=தமிழ்+ஆங்கிலம் (நன்றி: an article in Kalki 100th yr malar)
எண்மை= இரங்கத்தக்க நிலை;பரிதாப நிலை.

பத்திரிகையைச் சுருட்டிக் கொண்டு வீட்டை விட்டு அவசரமாய் வெளியேறினேன்.

[ பல வருடங்களுக்கு முன்  எழுதியது, சிறு மாற்றத்துடன். முகநூல் தான் இதை எனக்கு நினைவூட்டியது! ]

 தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 23 நவம்பர், 2021

1976. நெல்மணி: கவிதை

நெல்மணி, கற்றோர்: சிலேடை

பசுபதி


[ஆறு வருடங்களுக்கு முன் 23-11-2015 அன்று தினமணி/கவிதைமணி -இல் வெளியான வெண்பா] 

( கொடுக்கப்பட்ட தலைப்பு: நெல்மணி)


உண்மை உழைப்பால் உயர வளர்வதால்,

தண்மைப் பணிவுடன் சாய்தலையால் – மண்ணுலகில்

பல்லோர் பசி*தீர்க்கும் பண்பால், அகச்சத்தால்,

நெல்மணிக்குக் கற்றோர் நிகர்


* (வயிற்று/அறிவு)ப் பசி

தொடர்புள்ள பதிவுகள் :
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


புதன், 17 நவம்பர், 2021

1971. தேர்தல்: கவிதை

தேர்தல் 

பசுபதி 


[ஆறு வருடங்களுக்கு முன் -  17-11-2015 அன்று -  தினமணி/கவிதைமணி -யில் வெளியான கவிதை. ( கொடுக்கப்பட்ட தலைப்பு: தேர்தல் ) ]


தேர்தல் முடிந்து போச்சு தம்பி!

  . . திரையும் தூக்கி யாச்சு!

தில்லு முல்லு திரைப்ப டத்தைத்

  . . திடுக்கி டாமல் பாரு!


வாக்குத் தேடி வீடு வந்த

 . .  மனிதர் மறைந்து போவார்!

சாக்குப் போக்கு சொல்லி வாக்கைத்  

. . தட்டிக் கழிப்பார் பாரு!


எனக்குக் கல்வி ஒன்றே தெய்வம்

  . . என்ற வெற்றி வீரர்

தினமும் மறைவாய் லக்ஷ்மி பூஜை

  . . செய்யும் காட்சி பாரு!


இனிமேல் ராம ராஜ்யம் தருவேன்

  . . என்று சொன்ன ஹீரோ

சினிமா முடிவில் வில்ல னாதல்

  . . சினப்ப டாமல் பாரு!


 விளக்கு மாறு பழசாய்ப் போனால்

 . .  வேலை செய்யு மாப்பா?

களைத்த மக்கள் புதுசு வாங்கக்

  . . காத்தி ருத்தல் பாரு!

 

தொடர்புள்ள பதிவுகள் :
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


வியாழன், 11 நவம்பர், 2021

1968.பேயெனப் பெய்யும் மழை : கவிதை

பேயெனப் பெய்யும் மழை 

பசுபதி


'தினமணி'யில் 30 நவம்பர் 2015 அன்று வெளியான கவிதை.வாராவாரம் கொடுக்கப்படும் தலைப்புக்கேற்ப எழுதி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கவிதை.

====

"வானம்பார் பூமியென்றெம் மண்ணுலகை ஏன்படைத்தாய்?!”

வானத்தை எட்டியதே மழைவேண்டும் கதறல்கள்.


சொக்கட்டான் நிறுத்திவிட்டுத் துயருற்ற தேவிக்குப்

பக்கத்தில் இருந்தவனோ பதிலிறுத்தான் சலிப்புடனே.


ஒருகாசு கொடுத்தாலென்? ஒருகோடி கொடுத்தாலென்?

உருப்படியாய்ச் சேமிக்கத் தெரியாத மக்களுக்கு! “


“போதாதோ ஒருசூடு புத்தியுள்ள மாட்டுக்கு?

தாதாவே! தந்திடுவாய்! “ தர்மபத்னி சொல்கேட்ட


மாயவனும் ஆழிமழை வருணனுக்கோர் ஆணையிடப்

பேயெனவோர் கனமழையும் பெய்ததுகாண் சென்னையிலே!

             

தொடர்புள்ள பதிவுகள் :

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 9 நவம்பர், 2021

1967. சினிமாவில் வெற்றி! : கவிதை

 சினிமாவில் வெற்றி! 

 பசுபதி


'தினமணி'யில் 9 நவம்பர் 2015 அன்று வெளியான கவிதை.வாராவாரம் கொடுக்கப்படும் தலைப்புக்கேற்ப எழுதி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கவிதை.

====

சினிமாவில் வெல்லுவழி ஒன்றே

  சிந்தித்துக் கடைப்பிடிப்பாய் இன்றே


“அஞ்சாமல் திரைகடல் ஓடு

  அங்குள்ள திரவியத்தைத் தேடு “


என்றவ்வை பொன்மொழியைச் சொல்லு!

  இவ்வழியில் உறுதியாய் நில்லு!


சுயமாக யோசித்தல் எதற்கு?

  துட்டொன்றே போதும் நமக்கு!


பிறமொழிகள் ‘திரை’க்கடலில் தேடு!

  பிடித்ததற்குத் தமிழ்வேடம் போடு!


கலகலப்பாய்ப் பாடல்கள் போடு!

  காசுவந்து குவியும்கண் கூடு!

====


தொடர்புள்ள பதிவுகள் :
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வியாழன், 4 நவம்பர், 2021

1964. தீபாவளித் திருநாளினிலே: கவிதை

தீபாவளித்  திருநாளினிலே

பசுபதி



தெய்வக் கண்ணனைக் கொண்டாடும் – இந்தத்
  தீபா வளித்திரு நாளினிலே
பொய்மை இருட்டினைப் போக்கிடுவோம் – நம்
  புந்தி எனுமகல் விளக்கெடுத்தே !

குளிக்கும் நீரினில் கங்கையென – அன்பு
  கொடுக்கும் நற்குணம் பொங்குகவே !
களிப்பைப் பகிர்ந்திடும் நன்னாளில் – நாம்
  அளிப்போம் உதவியை வறியவர்க்கே!

அரக்கன் நரகனின் வதத்தினிலே – உதவி
  அளித்த பாமையை மறப்போமா?
கருணை காட்டிடும் தாய்க்குலமும் – தீக்
  கயமை அழிப்பதில் முன்வரட்டும் !   

வெட்டிச் செலவுகள் தவித்திடுவோம் – இன்று
  வெடிப்போம் சினத்தினைப் பட்டாசாய்!
நட்பின் சுடர்களைத் தூண்டிடுவோம் – இந்
  நாட்டின் பெருவிழாப் போற்றிடுவோம் !

07-11-15 

( 'தினமணி'யில்  2015 -இல் வந்த கவிதை) 

தொடர்புள்ள பதிவுகள் :
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 19 அக்டோபர், 2021

1951. மது ஒழிப்பு: கவிதை

மது ஒழிப்பு

பசுபதி


குட்டிச் சுவராய்ப் போகும் அய்யா
குடியில் மூழ்கும் நாடு!
சட்ட திட்டம் போதா துங்க
சாரா யத்தை ஒழிக்க!

வெட்டிப் பேச்சு மேடைப் பேச்சால்
வெற்றி வந்தி டாது!
திட்ட வட்ட மாகச் சொல்றேன்
திருந்தும் வழியும் ஒன்றே!

பட்ட துன்பம் சொல்லும் ஜனங்க
பள்ளி எல்லாம் சென்று
சுட்டிப் பசங்க மனத்தில் உண்மை
சுட்டுப் போட வேணும்

குட்டிப் பசங்க வீடு போயி
குடியின் கேடு சொன்னால்
புட்டி போடும் வீடும் மாறும்
புள்ளை கெஞ்சல் கேட்டே!

(19 அக்டோபர் 2015 ‘தினமணி’ கவிதைமணியில் வெளியாகிய கவிதை)

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

சனி, 11 செப்டம்பர், 2021

1933. பாரதி பாதையிலே : கவிதை

பாரதி பாதையிலே

பசுபதி


பழமைதள் ளாமல் புதுமையை மொள்ளாமல்

. பண்பாடு வெல்லும்படி

பழகு தமிழிலோர் பாலத்தைக் கட்டுவோம்

. பாரதி சொன்னபடி.   (1)


தேசம் மொழி,இறை என்றமுக் கண்ணால்

. திரிபுரத் தீமைகள்மேல்

மீசைப் புலவன்போல் வீசுவோம் அம்புகள்

. மேதினி மேம்படவே     (2)


தீரத் துடுப்பு, தெளிந்த இலக்குடன்

. சிந்தா நதியினிலே 

ஈர இதயப் படகினை ஓட்டுவோம்

. எம்கவி பாதையிலே      (3)


வாரிதி நீள்மலை வானப் பறவைநம்

. மக்களாய்க் கண்டவன்போல்

பாரெங்கும் நம்மையே பார்த்தால் பகையேது

. பாரதி பாதையது        (4)


சுட்டும் வழிச்சுடர் சுப்பிர மண்யன்

. துருவநட் சத்திரம்டி! 

பட்டை வயிரம்போல் பன்முகம் காட்டுதல்

. பாரதி பாதையடி !       (5) 


தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

1932. பாடலும் படமும் - 140

போ!வேக மாகவே போ! 

பசுபதி 



தும்பிக்கை யால்நமக்கு  நம்பிக்கை தந்திடும்

அம்பிகை பாலனை ஐங்கரனை - நம்பனை 

நால்வாய் விநாயகனை நாடியொரு கோயிலுக்குப்

போ!வேக மாகவே போ!   


[ ஈற்றடி ஒரு மாலைமாற்று ( palindrome)  ]



[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

மாலைமாற்று

ஓவிய உலா 

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

புதன், 7 ஜூலை, 2021

1896. முத்தமிழ் வாணி : கவிதை

முத்தமிழ் வாணி 

பசுபதி


புள்ளி மயிலேறி - முருகன் 

  பொன்னொளிர் மாலையிலே 

கள்ளச் சிரிப்புடனே - குறத்தி 

  வள்ளி யிடம்சொல்வான். 


"சோலை மலர்நடுவே - தினமும்

   தோகை விரித்தாடும் 

கோல மயிலழகு - சிறிதும் 

  கிட்டிடு மோவுனக்கு " 


"கூவுங் குரலழகன் - எனது 

    கோதிலா அன்பனவன் 

 சேவலின் கம்பீர - நடைதான் 

   சேருமோ உந்தனிடம் "


கன்னித் தமிழ்வேந்தன் - தனது

   கைவேலைக் காட்டிடுவான் .

"மின்னிடும் வேலழகை - உன்விழி 

   மிஞ்சிடு மோயுரைப்பாய் "


குஞ்சரி  யின்கணவன் - குறும்பு 

   கொப்பளிக்  கப்பகர்வான் ;

" விஞ்சிட வல்லார்யார் - உலகில் 

    விண்ண வளினழகை ".


கெக்கலித் துச்சிரித்து  -வம்புக் 

     கேள்விகள் கேட்டிடுவான் ;

செக்கரெ  னச்சிவந்து - சினத்தில் 

    சீறுவாள் வள்ளியுமே. 


" விண்ணத்தி சேவலுடன் - மயிலும் 

      மின்னிடும் வேலிருக்கப்

   பின்னென்ன என்னிடமே - கண்டீர் 

      பின்னேவந் துமணந்தீர் ?"


சின்னஞ்  சிறுமுருகன் - அவளது 

   சீற்றம்  தணித்திடுவான்; 

மன்னிப்பு வேண்டுமென்று - மொழிந்து 

   மாற்றம் விடுத்திடுவான் .


"தண்டமிழ்ப் பாவலரின் -பொய்த்துதி 

    திகட்டிப் போனதடி!

 வண்டமிழ்க் கற்கண்டே - உன்நாவில் 

    வசவும்  இனிக்குதடி ! "


"எத்தவம் செய்தேனோ - எனக்கென்(று)

    ஏந்திழை நீகிடைக்க 

முத்தமிழ் வாணியன்றோ -மயங்கி 

   மோகித் துனைமணந்தேன் ."

தொடர்புள்ள பதிவுகள் :

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

புதன், 14 ஏப்ரல், 2021

1850. இன்று புதிதாய்ப் பிறந்தோம்: கவிதை

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

பசுபதி




"இன்று புதிதாய்ப் பிறந்தோம் – எம்
   எஞ்சிய வாழ்விற் கிதுவே முதல்நாள் ”
என்றே தினமும் உரைப்போம் ! – நம்
    யந்திர வாழ்வின் சுமையைக் குறைப்போம்!

துன்பத்தின் வேரைத் தகர்ப்போம் ! – நம்
   சோர்வை மறக்கக் கரங்கள் இணைப்போம் !
அன்பின் பெருமை உணர்வோம்! – எமை
   ஆளும் நெறியாய் அவிரோதம் ஏற்போம்!

பார்க்க ஒளிர்ந்திடும் யாவும் – பொற்
   பாளத் துகள்கள் எனவெண்ணல் வேண்டா!
தேர்வுகள் செய்திடக் கற்போம்! – நல்ல
   தேன்மலர் தேடிடும் வண்டுகள் போல!

முப்பால் தினமும் குடிப்போம்! – நம்
   முன்னோரின் நூல்களைப் பட்டாய் மதிப்போம்!
ஜப்பான் மொழியையும் கற்போம் – மேலைச்
   சாத்திரச் சாற்றை வாழ்வில் கலப்போம்!

மின்வான் தனிலே உலாவி – விண்
   மீன்கள் பறித்துத் தமிழில் பதிப்போம்!
வன்பால் சகத்தினை மாற்றி – நம்
   வாழ்வின் வளத்தைப் பெருக்குவோம் வாரீர்!

[ தினமணியில் 2016-இல் வந்த கவிதை ] 

தொடர்புள்ள பதிவுகள் :

வெள்ளி, 27 நவம்பர், 2020

1704. கணையும் கானமும்; கவிதை

கணையும் கானமும் 

மூலம்: Henry Wadsworth Longfellow ( லாங்ஃபெல்லோ)            

தமிழில்: பசுபதி 


( அமுதசுரபி 2004 தீபாவளி மலரில் வெளியான கவிதை )

கணையும் கானமும் 

***

விண்ணில் எய்தேன் அம்பொன்றை --மண்ணில்

. . வீழ்ந்த தெங்கோ; தெரியவில்லை

கண்பின்  தொடர முடியாத -- கடிய 

. . கதியில் கணையும் பறந்ததுவே.


விண்ணில் உயிர்த்தேன் பாடலொன்றை -- மண்ணில்

. . வீழ்ந்த தெங்கோ; தெரியவில்லை.

கண்வலு நுட்பம் எவர்க்குண்டு -- பறந்த 

. . கானப் பயணம் தொடர்வதற்கு? 


கண்டேன் பலநாள் கழிந்தபின்னர் -- உடையாக்

. . கணையை ஆல மரமொன்றில் 

கண்டேன் மீண்டும் முழுப்பாடல் -- என்றன்

. . நண்பன் ஒருவன் இதயத்தில் .



The original poem:

Arrow and the Song, The 

by Henry Wadsworth Longfellow 


I shot an arrow into the air, 

It fell to earth, I knew not where; 

For, so swiftly it flew, the sight 

Could not follow it in its flight. 


I breathed a song into the air, 

It fell to earth, I knew not where; 

For who has sight so keen and strong, 

That it can follow the flight of song? 


Long, long afterward, in an oak 

I found the arrow, still unbroke; 

And the song, from beginning to end, 

I found again in the heart of a friend. 


தொடர்புள்ள பதிவுகள் :