புதன், 2 நவம்பர், 2022

2294. பெற்ற மனம்: கவிதை

பெற்ற மனம்

பசுபதி


'தினமணி'யில் 2 நவம்பர் 2015 அன்று வெளியான கவிதை.வாராவாரம் கொடுக்கப்படும் தலைப்புக்கேற்ப எழுதி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கவிதை.

====

பெண்ணின் மணமென்னும் போதினிலே – அந்தப்

  பெற்றோரின் உள்ளம் கலங்குவதேன்?

கண்ணின் மணியாய் வளர்ந்தவளோ – தாலி

  கட்டி யவனுடன் செல்வதனால்.


மைந்தன் திருமணம் ஆனபின்பும் – தாய்

  தந்தையர் நெஞ்சம் கலங்குவதேன்?

மந்திரம் போட்டவள் சொற்படியே – பிள்ளை

  வாழ்ந்திடச் செல்லும் தனிக்குடியால்.


உள்ளம் இரண்டையும் ஒன்றிணைக்கும் – இந்த

  உன்னதக் கல்யாண தீபவொளி

தள்ளாடும் பெற்றோரை ஆழ்த்திடுமோ – ஒரு

  தாபத் தனிமை இருட்டினிலே ? 

===


தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.                     

   

கருத்துகள் இல்லை: