வியாழன், 10 நவம்பர், 2022

2305. பாடலும் படமும் - 155

 இராமாயணம் - 24

 ஆரணிய காண்டம்




எஸ்.ராஜம் வால்மீகி ராமாயண நூலிற்கு வரைந்த ஓவியங்களில் ஐந்தாம் ஓவியத்தைப் பார்ப்போம். அதற்குப் பொருத்தமான கம்பனின் பாடலையும் பார்ப்போம்.  இந்த நூல் ( இரண்டாம் பதிப்பு)  கலைமகள் ஆசிரியர் நாராயணசாமி ஐயரால்   1958 -இல் வெளியிடப் பட்டது.



அந்த நூலில் மேலே உள்ள ராஜம் அவர்களின் படத்தின் அடியில் வால்மீகியின் இந்த ஸ்லோகம் காணப் படுகிறது.
आर्यपुत्राभिरामोऽसौ मृगो हरति मे मनः।
आनयैनं महाबाहो क्रीडार्थं नो भविष्यति
The basic meaning of this sloka is :
"O prince O longarmed one, this deer has captivated my mind. Fetch him for me.This will be our playmate."  Being attracted by the Golden Deer, Sita implores Rama to get it for her. 
கம்பன்
நெற்றிப் பிறையாள்  முனம் நின்றிடலும்,
முற்றிப் பொழி காதலின் முந்துறுவாள்,
'பற்றித் தருக என்பென்' எனப் பதையா,
வெற்றிச் சிலை  வீரனை மேவினளால்.

நெற்றிப் பிறையாள் முனம் - இளம் பிறை போலும் நெற்றியை
உடைய சீதை முன்; 
நின்றிடலும் - (மாய மான் வந்து) நிற்கவும்; 
முற்றிப் பொழி காதலின் - (அவள்) நிறைந்த ஆசை ததும்பி நிற்க;
 'பற்றித் தருக' என்பென் - 'இம் மானைப் பிடித்துத் தரவேண்டும்' என்று இராமனைக் கேட்பேன்; 
எனப் பதையா - என உணர்ச்சி மிக்கவளாய்; (சீதை);
வெற்றிச் சிலை வீரனை - வில்லால் வெற்றி கொள்ளும் வீரனாகிய
இராமனை; 
முந்துறுவாள்; மேவினள் - அடைந்தாள். (ஆல் - அசை)  
[ நன்றி : ஓவியம்- லலிதாராம் ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா 

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1 

இராமாயணம் 

எஸ்.ராஜம்

எஸ்.ராஜம்: 'வால்மீகி ராமாயண'நூல் படங்கள்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை: