கி.வா.ஜகந்நாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கி.வா.ஜகந்நாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

2418. கி.வா.ஜகந்நாதன் - 36

தைக் கதிர்

கி.வா.ஜகந்நாதன்


1939-இல் வந்த கட்டுரை.



[ நன்றி: சக்தி]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்: 

கி.வா.ஜகந்நாதன்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வியாழன், 8 டிசம்பர், 2022

2348. கி.வா.ஜகந்நாதன் - 35

வளரும் கலைமகள்

கி.வா.ஜகந்நாதன்

                                   



1957-இல் 'கலைமகள்' வெள்ளிவிழா மலரில் வெளியான இன்னொரு அரிய கட்டுரை இது. 'கலைமகள்' இதழ் எப்படிப் பிறந்தது என்பதை விவரிக்கிறார் கி.வா.ஜ.





  
                                                 






[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்: 

கி.வா.ஜகந்நாதன்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


புதன், 16 பிப்ரவரி, 2022

2028. கி.வா.ஜகந்நாதன் - 34

முள்ளு முனை

கி.வா.ஜகந்நாதன்


1943-இல் 'சுதேசமித்திரனி'ல் வந்த ஒரு கட்டுரை.




[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்: 

கி.வா.ஜகந்நாதன்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

1924. கி.வா.ஜகந்நாதன் - 33

"பத்து மாற்றுத் தங்கம்"

கி.வா.ஜகந்நாதன்




[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்: 

கி.வா.ஜகந்நாதன்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

1842. கி.வா.ஜகந்நாதன் - 32

தொல்காப்பியம்

கி.வா.ஜகந்நாதன்


“பழைய காலத்தில் உரை நடையில் நூல்கள் இருந்தனவா? ஆங்கிலேயர்கள் இந்த நாட்டுக்கு வந்த பிறகு தான் உரைநடை நூல்கள் எழுந்தனவா?”

இப்படி ஒரு கேள்வி.

“பாட்டும் பாட்டுக்கு உரையுமாக இருக்கலாம். தனியே உரைநடையில் நூல்கள் இருந்தன என்று தெரியவில்லை."

இப்படி ஒரு சமாதானம். . . இந்தச் சமாதானம் சரியா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? தக்க ஆதாரத்துடன் சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.

"பாட்டுக்கு உரை எழுதுவது அல்லாமல் உரை. நடையில் நான்கு வேறு வகைகள் இருந்தன. பாட்டும் உரை நடையுமாகச் சில நூல்கள் உண்டு. அவற்றில்   பாட்டுக்களுக்கு இடையில் உரைநடை வரும். அது ஒரு வகை. பாட்டே இல்லாமல் கருத்தைத் தொடர்ந்து உரை நடையில் தெரிவிப்பது ஒரு வகை. புனைந்துரையாக அமைந்த கதை ஒரு வகை. உள்ளதைப் பரிகசித்து எழுதியது ஒரு வகை. இப்படி நான்கு வகையில் உரை நடை பயன்பட்டது; உரைநடை நூல்கள் இருந்தன.”

இப்படிச் சொன்னால், 'எந்த நூற்றாண்டில்?’ என்று கேள்வி உடனே எழும். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே தமிழில் இப்படி உரைநடை நூல்கள் நான்கு வகையாக இருந்தன" என்றால் நம்பாதவர்களே பெரும் பான்மையாக இருப்பார்கள்; நம்புபவர்கள் மூக்கின் மேல் கை வைப்பார்கள். 

உரைநடையைப் பற்றிய இந்தக் கருத்து உண்மையானது; கற்பனை அன்று. ஆதாரம் வேண்டுமா? தொல்காப்பியம் என்ற இலக்கண நூலை எடுத்துப் பாருங்கள்.

தொல்காப்பியனார் என்ற பெரும் புலவர் இயற்றியது தொல்காப்பியம் என்ற இலக்கணம். அதுதான் இப்போது கிடைக்கும். தமிழ் நூல்களில் மிக மிகப் பழமையானது. அதன் காலத்தைப் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சங்க காலத்து நூல்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை. அவற்றுக்கும் முந்தியது தொல்காப்பியம்; இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டு முதல் மூவாயிரம் ஆண்டுவரை முந்தியது என்று சொல்லலாம்.

தொல்காப்பியர் அகத்தியருடைய மாணாக்கர் என்று ஒரு வரலாறு உண்டு. அகத்தியர் மூன்று தமிழுக்கும் ஒர் இலக்கணம் இயற்றினார். அதற்கு அகத்தியம் என்று பெயர். அவருடைய மாணாக்கராகிய தொல்காப்பியர் இயல் தமிழுக்கு இலக்கணம் இயற்றினார். ஆசிரியர் பெயர் காரணமாகத் தொல்காப்பியம் என்ற பெயரை அது பெற்றது. மிகப் பழங்காலத்தில் அது தோன்றினாலும் இன்றும் புலவர்கள் படிக்கும் நூலாகவும், இலக்கண அமைதியைத் தெரிந்து கொள்வதற்கு ஏற்ற ஆதார நூலாகவும் அது விளங்குகிறது.

எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பெரும் பகுதிகளை உடையது அது. ஒவ்வொரு பகுதியையும் அதிகாரம் என்ற பெயரால் வழங்குவர். எழுத்ததிகாரம் முதலிய மூன்று அதிகாரங்களிலும் தனித்தனியே ஒன்பது ஒன்பது பிரிவுகள் உள்ளன. அவற்றை இயல்கள் என்று சொல்வார்கள்.

எழுத்ததிகாரத்தில் தனியெழுத்துக்களின் பெயர் தன்மை, பிறப்பு முதலியவற்றைக் காணலாம். எழுத்தும் எழுத்தும் சேர்வதைப் புணர்ச்சி என்று சொல்வது இலக்கண பரிபாஷை. அவ்வாறு சேரும்போது உண்டாகும் மாற்றங்களை மூன்று இயல்கள் சொல்கின்றன. விழா-ஆட்டம்-விழாவாட்டம்; மரம்+ஒடிந்தது=மரமொடிந்தது; இலை+தடுக்கு=இலைத்தடுக்கு; கால்+தடுக்கிற்று = காறடுக்கிற்று. இப்ப்டி யெல்லாம் ஏன் மாற வேண்டும்? இவற்றுக்குரிய விதிகளை இந்தப் பகுதிகளில் காணலாம். எந்த எழுத்துக்கும் பின்னால் எந்த எழுத்தும் வரலாம் என்று பொதுவாக நமக்குத் தோன்றும், க் என்ற எழுத்துக்குப் பின் ழ வருமா? வராது. க் என்ற எழுத்தும் க என்ற எழுத்தும் தக்க என்பதில் சேர்ந்து வருகின்றன. அப்படியே சகரம் தச்சன் என்பதில் வருகிறது. ழகரம் அப்படி வருமோ? பழ்ழம் என்பது போலச் சொல் உண்டா? இல்லை. இதைப் பற்றி யோசிக்கிறபோதுதான் உண்மை தெரிகிறது. இவற்றையெல்லாம் எழுத்ததிகாரத்தில் காணலாம்.

 சொல்லதிகாரத்தில் பெயர், வினை, இடை, உரி என்று உள்ள நால்வகைச் சொற்களைப் பற்றிய இலக்கணம் வருகிறது. மனிதர்களில் ஆண் பால் என்றும். பெண் பால் என்றும் வேறுபாடு தெரிகிறது. இரண்டு பாலும் அல்லாத அலி ஒருவர் இருக்கிறார். அவரை எந்தப் பாவில் சொல் கிறது? இது ஒரு சிக்கல். ஆணும் அல்லாமல் பெண்ணும் அல்லாமல் இருந்தாலும் அந்தப்பேர்வழி ஒன்று ஆணோடு சேர்ந்திருப்பார்; அல்லது பெண்களோடு சேர்ந்திருப்பார், அலி யென்று தனியாக இருப்பது வழக்கம் அன்று. எந்தப் பாலோடு சேர்கிறாரோ அந்தப் பாலைச் சொல்வி விடு என்று தொல்காப்பியம் வாழ்க்கையை ஒட்டி வழி வகுக்கிறது. கடவுள் ஆண் பாலா, பெண் பாலா, ஒன்றன் பாலா? அவர் எல்லாம் கடந்தவர். எப்படிச் சொல்வது? எப்படிச் சொன்னாலும் ஏற்பார். எப்படி வழக்கமோ அப்படியே சொல்லலாம்; தவறு இல்லை. இப்படிப் பல செய்திகள் சொல்லதிகாரத்தில் வருகின்றன.

 மூன்றாவது பகுதியாகிய பொருளதிகாரந்தான் பெரியது. பொருள் இலக்கணம் தமிழுக்கே சிறப்பாக அமைந்தது என்று சொல்வார்கள். பொருளை அகப் பொருள் என்றும், புறப்பொருள் என்றும் பிரிப்பார்கள், காதலைப் பற்றிச் சொல்வது அகப்பொருள். பெரும் பாலும் வீரத்தைப் பற்றிச் சொல்வது புறப்பொருள். அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லும் உறுதிப் பொருள்கள் நான்கில் இன்பத்தைப் பற்றிச் சொல்வது. அகம் என்றும் மற்ற மூன்றையும் பற்றிச் சொல்வது புறம் என்றும் ஒரு வகையில் கூறுவது வழக்கம்.

 ஒருவனும் ஒருத்தியும் சந்திக்கும் போது; முன் பிறவிகளில் அமைந்த தொடர்பினால் அவர்கள் உள்ளத்தே அன்பு உண்டாகும். யாரும் அறியாமல் அவர்கள் மனம் ஒன்றிக் காதல் செய்வார்கள். இந்தக் காதலுக்குக் களவுக் காதல் என்று பெயர். பிறகு அவர்கள் மணந்து கொண்டு இல்லற வாழ்வை மேற்கொள்வார்கள். அதைக் கற்பொழுக்கம் என்று சொல்வார்கள். இந்த இரண்டையும் பற்றிய இலக்கணங்களைப் பொருள் அதிகாரத்தில் காணலாம். காதலனைத் தலைவனென்றும், காதலியைத் தலைவி யென்றும் வழங்குவது மரபு. காதலிக்கு ஓர் உயிர்த் தோழி இருப்பாள். காதலியைப் பெற்ற தாயை நற்றாய் என்றும், வளர்த்த தாயைச் செவிலி என்றும் சொல்வார்கள். காதலனுக்கும் தோழன் உண்டு. அவனுக்குப் பாங்கன் என்று பெயர். காதல் வரலாறாகிய நாடகத்தில் வரும் இத்தகைய பாத்திரங்களின் இயல்புகளை யெல்லாம் விரிவாகத் தொல்காப்பியம் சொல்கிறது.

 புறப்பொருளைப் பற்றிச் சொல்லும்,பகுதியில் போர் பற்றிய பலவேறு நிலைகளைக் காணலாம். "சண்டைக்கு எடு பிடி மாடு பிடி “ என்பது ஒரு பழமொழி. போர் நிகழ்வதற்கு முன்பு, பகைவர் நாட்டில் உள்ள மாடுகளை பிடித்துக்கொண்டு வருவார்கள். இதை வெட்சித்திணை என்பார்கள். பாரதத்தில் விராட பர்வத்தில் வரும் கதை போல் இருக்கிறதல்லவா? மாட்டைப் பகைவர் பிடித்துப் போகும்போது அவற்றை மீட்டு வருவதும், பின்பு போர் மூளுவதும், மதிலை முற்றுகையிட்டுச் சண்டையிடுவதும் போன்ற பலவேறு உத்திகளும் நிலை களும் இந்தப் பகுதியில் விரிக்க்ப்பெறுகின்றன. காதலுக்கும் வீரத்துக்கும் எவ்வளவு சிறப்பை அளித்தனர் தமிழர் என்பதை அகப்பொருள் புறப்பொருள் இலக்கணங்கள் காட்டுகின்றன.

இவற்றை யன்றிக் கவியின் இலக்கணம், நூல்களின் இலக்கணம், இலக்கியங்களின் வகை, உவமைகளின் வகை, குணங்களைக் காட்டும் பாவங்களாகிய மெய்ப்பாடுகளின் இலக்கணம், எந்தப் பொருளை எந்த எந்தச் சொல்லால் சொல்ல வேண்டும் என்ற மரபு ஆகியவற்றைப் பற்றிய கருத்துக்களையும் பொருளதிகாரத்தில் காணலாம். இலக்கிய வகைகளைப் பற்றிச் சொல்லும் பகுதியில் அடி வரையறை இல்லாதவை இவை என்று ஒரு பிரிவு வருகிறது. அதில்தான் உரைநடையைப் பற்றிய இலக்கணம் வருகிறது. முதலில் சொன்ன நால் வகை உரைநடைகளைப் பற்றிய செய்திகள் அங்கேதான். இருக்கின்றன. -

 பொருளதிகாரத்தில் உள்ள சில கருத்துக்கள்:

பெண்களோடு கடலைக் கடந்து செல்லக் கூடாது.

 . காதலன் தன் காதலியோடு வாழும்போது அவள் உணவு பரிமாறுகிறாள். வேப்பங் காயைப் போலக் கசப்பாக உணவு இருந்தாலும், 'நீ கை தொட்டது. வானோர் - அமுதத்துக்கு ஒப்பானது" என்று பாராட்டுகிறான்.

 அப்பர் என்பது ஆட்டுக்குப் பெயர். புறத்தில் வயிரம் உடைய மரங்களுக்குப் புல் என்று பெயர், அகத்தில் வயிரம் உடையவை மரமெனப் பெயர்பெறும். நிலம், தீ, நீர் வளி, விசும்பு ஆகிய ஐந்தும் கலந்த கலப்பு உலகம்.

 - 1610 . சூத்திரங்களை உடையது. தொல்காப்பியம். அது தமிழ்ப் புலவர்களுக்கு ஆணை நூலாக வழங்குகிறது.

 “ தொல்காப்பியன் தன் ஆணையின் தமிழ் நூல் அறிந்தோர்க்குக் கடனே' என்று ஒரு புலவர் சொல்கிறார்.


தொடர்புள்ள பதிவுகள்: 

கி.வா.ஜகந்நாதன்

செவ்வாய், 3 நவம்பர், 2020

1676. கி.வா.ஜகந்நாதன் - 31

 கி.வா.ஜ.

கி.ராஜேந்திரன்


நவம்பர் 4. கி.வா.ஜகந்நாதனின் நினைவு தினம். அவர் மறைவுக்குப் பின் கல்கியில் வந்த அஞ்சலி இதோ. 


1943-இல் 'சுதேசமித்திரனி'ல் வந்த ஒரு கட்டுரை.





[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்: 

கி.வா.ஜகந்நாதன்

திங்கள், 2 செப்டம்பர், 2019

1350. கி.வா.ஜகந்நாதன் - 30

கிழவியும் காதம் 
கி.வா.ஜகந்நாதன்

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]


இந்தக் கட்டுரை 'கல்கி' இதழில் 'கிழவியும் காதமும்' என்ற தலைப்பில் 1959-இல் வந்தது. இதில் வரும் ஒரு காட்சியை அட்டைப்பட ஓவியமாய் வழங்கினார் எஸ்.ராஜம். இக்கட்டுரை பின்னர் கி.வா.ஜ வின் ' சித்திவேழம்' என்ற நூலில் இடம்பெற்றது.
=====


எந்தக் காரியம் செய்தாலும் செய்யா விட்டாலும் விநாயகனைப் பூசித்து வழிபடுவதை மறக்க மாட்டாள் பாட்டி தமிழ்ப் பாட்டியாகிய ஒளவையைத்தான் சொல்கிறேன். தமிழ் தளரா நாவும் அன்பு தளரா உள்ளமும் உடைய அந்தப் பெருமாட்டி, -

'பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை 
நாலும் கலந்துனக்கு நான்தருவேன்;-கோலஞ்செய் 
துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீஎனக்குச் 
சங்கத் தமிழ்மூன்றும் தா" – 

என்று விநாயகப் பெருமானை வேண்டித் தமிழ்ப் புலமை பெற்றவள் அல்லவா? - இன்று சுந்தரமூர்த்தி நாயனார், இறைவன் ஆனையும் ஆணையும் அனுப்பத் திருக்கைலை போகிறார், அவரைத் தொடர்ந்து பரியின்மேல் பரிவுடன் சேரமான் பெருமாள் நாயனாரும் போகிறார் சேரனுடன் தமிழ்ச் சுவையை அளவளாவிப் பருகும் ஒளவைக்கு இச் செய்தி தெரிந்தது. “எத்தனை காலம் இந்த மண்ணுலகில் வாழ்வது! நாமும் கைலை செல்வோம்' என்ற எண்ணம் வந்தது. 

மனத்தினை அடக்கமாட்டாமல் அதன் போக்கிலே செல்பவர்களுக்கு மரணம் வரும் காலம் இன்னதென்று தெரியாது. இறைவனிடம் பேரன்பு கொண்டு அவன் அருளால் மனத்தை வசப்படுத்தியவர்களுக்கு மரணம் வருங் காலம் முன்பே தெரியும். தவத்திலும் யோகத்திலும் முதிர்ந் தவர்களுக்கோ, தாம் வேண்டும் போது பூவுலக வாழ்வை நீத்து விடமுடியும், - - - 
பழுத்த பழமாகிய ஒளவை, நெடு வழிக்கு நல்ல துணை அமைந்திருக்கிறது என்று எண்ணிச் சேர மன்னருடன் கைலை செல்ல எண்ணினாள். விநாயக பூசை செய்யும் நேரம் அது. தான் நினைத்த காரியம் முட்டின்றி முடிய வேண்டு மென்று பூசையைப் புரியத் தொடங்கினாள். கைலை போகும் வேகம் உந்தியது. பூசையும் வேகமாக நடந்தது. 

அப்போது ஒரு குரல் கேட்டது: 'ஏன் இத்தனை விரைவு' அமைதியாகப் பூசை செய். உன் விருப்பம் நிறைவேறும்” என்று ஒளவையின் காதில் விழுந்தது. சுற்று முற்றும் பார்த்தாள்: யாரும் இல்லை. விநாயகப் பெருமானே இவ்வாறு அருளினான் என்று உணர்ந்து, அமைதியாகவே பூசையைத் தொடர்ந்து செய்தாள். 

பூசை முறைப்படி நிறைவேறியது. பாட்டிக்குத் திருப்தி பிறக்கவில்லை. நம் விருப்பத்தை நிறைவேற்றும் பெருந் துணையாகக் கரிமுகக் கடவுள் இருப்பதை மறந்து அவசரப் பட்டோமே!’ என்று உருகினாள். அப் பெருமானுடைய திருவருளால் தனக்கு வாழ்வில் கிடைத்த நலங்களையெல்லாம் எண்ணிப் பார்த்தாள். அருந்தமிழ்ப் புலமையும் பெரும் புகழ் நிலைமையும் அவன் வழங்கினான். குருவடிவாகி வந்து உவட்டா உபதேசம் புகட்டினான். தெவிட்டாத ஞானத் தெளிவைக் காட்டினான். ஐம்புலனை அடக்கும் உபாயத்தை அருளினான். கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, இருவினைதம்மை அறுத்து இருள் கடிந்தான். தவம் பலிக்கச் செய்தான். யோகம் நிறைவுற அருளினான். 'என்னை அறிவித்து எனக் கருள் செய்து, முன்னை வினையின் முதலைக் களைந்தான்.' "

 அவை மட்டுமா? வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கிய அவளுடைய சிந்தை தெளிவித்தான். அருள் தரும் ஆனந்தத்தில் அழுத்தினான். அல்லல் களைந்தே அருள் வழி காட்டினான். அஞ்சு அக்கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சில் நிறுத்தினான். இவ்வாறெல்லாம் தத்துவ நிலையைத் தந்து ஆட்கொண்ட விநாயகப் பிரானை மறக்கலாமா? புலமை பெறுவது எளிது; அருள் இன்பம் பெறுவது அரிது. அதனே அருளிய பெருமானுடைய கருணையை எண்ணி எண்ணிக் கண்ணீர் ஆறாகப் பெருகப் புளகம் போர்ப்ப அமர்ந்திருந்தாள். 
இப்போது அவளுக்குக் கைலையின் நினைவு மறந்தது. சேரமானைப் பற்றிய சிந்தனை ஒழிந்தது. தன்னேயே மறந்து விநாயகப் பெருமானுடைய திருவருள் இன்ப உணர்ச்சியிலே மிதந்தாள். அவள் உள்ளத்தில் அந்த இன்ப அலைகள் மோதின. அப்போது ஒரு பாட்டு எழுந்தது. கவித் திறமை படைத்தவர்கள் உள்ளம் உணர்ச்சி வசப்படும்போதெல்லாம் கவி பிறக்கும். நாம் துயரத்தில் ஆழும்போது புலம்பலும், மகிழ்ச்சியில் திளைக்கும்போது ஆ ஊ என்ற ஆரவாரமும் எழுகிறதுபோல, கருவிலே திருவுடைய கவிஞர்களிடம் கவி எழும். 

 அப்போது உதயமான கவிதையே விநாயகர் அகவல் என்ற அழகிய திருப்பாட்டு. எழுபத்திரண்டு அடிகளே உடைய அப்பாட்டில் ஒளவைப் பாட்டி முதல் முதலில் விநாயகப் பெருமானுடைய திருவடியை எண்ணி, அதன் கண் பலவிசை பாடும் சிலம்பைத் தியானித்து, அவனுடைய திருவுருவம் முழுவதையும் சொல்லால் கோலம் செய்கிறாள். 

சீதக் களபச் செந்தா மரைப்பூம் 
பாதச் சிலம்பு பல இசை பாடப் 
பொன்அரை ஞாணும் பூந்துகில் ஆடையும் 
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் 
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் 
வேழ முகமும் விளங்குசிந் தூரமும் – 
அஞ்சு கரமும் அங்குச பாசமும் 
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் 
நான்ற வாயும் நாலிரு புயமும் 
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் 
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் 
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான 
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!" (1)

இவ்வாறு தொடங்கி, தான் விநாயகன் அருளால் பெற்ற பேற்றையெல்லாம் சொல்லி, கடைசியில் அப்பெருமானைச் சரண் புகுகிறாள் தமிழ்ப் பாட்டி. 

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட 
வித்தக விநாயக, விரைகழல் சரணே! 

உலக வாழ்வை நீக்கும்போது இறைவனுடைய திருவடியே சரணமென்று புகுவது அறிஞர் இயல்பு. அந்த முறைப்படியே ஒளவை பாடி நிறைவேற்றினாள். பாட்டு முடிந்தும் அவள் உள்ளக்கிளர்ச்சி நிற்கவில்லை. பாட்டின் கார்வை போல இன்பம் உள்ளத்தே தேங்கி நின்றது. . 

அப்போது விநாயகப் பெருமான் தன் துதிக்கையினால் அப்பெருமாட்டியைத் தூக்கிக் கைலையிலே கொண்டு சேர்த்தான். ஒளவை பாட்டால் துதிக்கை செய்து நிறைவேற்றின அளவிலே, விநாயகன் துதிக்கை அவள் விருப்பத்தை நிறைவேற்றியது. கண்ணை விழித்துப் பார்த்தாள் ஒளவை. புதிய இடம்: புதிய தோற்றம்; எல்லாம் மாசு மறுவற்ற வெள்ளி மயம். இதுதான் திருக்கைலாயம் என்று அங்குள்ள சிவகணத்தினரில் ஒருவர் சொன்னார் பாட்டி வியப்பினால் மலர்ந்த கண்களுடன் பார்த்தாள். நாலு திசைகளையும் பார்த்தாள். என்ன சாந்தமான சூழ்நிலை! ஏதோ புதிய ஆனந்தம் தன்னைக் கரைத்துக் கொண்டது போன்ற உணர்ச்சி அல்லவா எழுகிறது?
  
சிறிது நின்று நிதானித்தாள். கணபதியின் கருணையால் சிறிதும் முயற்சி இல்லாமலே கைலை வந்ததை எண்ணி உருகி வழுத்தினாள். அப்போதுதான் சேரமான் பெருமாளின் நினைவு வந்தது. அவர்கள் முன்னே போயிருப்பார்களோ? இந்த ஐயத்தை அருகில் நின்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்; அவர்கள் இன்னும் வந்து சேரவில்லை. 

+ பாட்டி நின்றாள். சுந்தரர் வந்தார். அவர் சிவபெருமான் நினைவையன்றி வேறு ஒன்றும் இன்றி வந்தவர்; பாட்டியைக் கவனிக்கவில்லை. பின்னாலே,சேரமான் பெருமாள் வந்தார். பாட்டி நிற்பதைக் கண்டு வியந்து. "எப்படி வந்தீர்கள்? காலால் நடந்தா?’ என்று கேட்டார்; அருகில் வாகனம் ஒன்றும் இல்லையல்லவா? 
'இல்லை; கையால்' என்றாள் பாட்டி. 
“கையாலா? விளங்கவில்லையே!” 
'விநாயகப் பெருமான் தம் துதிக்கையாலே என்னை இங்கே கொண்டு வந்து விட்டார். வாகனத்தில் வரும் உங்களுக்கு முன்னே நான் வந்து விட்டேன். எல்லாம் உமை மைந்தர் திருவருள் வலிமை” என்று சொல்லி ஒரு பாடலையும் கூறினாள். - - 

மதுர மொழிநல் உமையாள் 
  புதல்வன் மலர்ப்பதத்தை 
முதிர நினையவல் லார்க்குஅரி 
  தோ? முகில் போல்முழங்கி 
அதிர நடந்திடும் யானையும் 
  காதம்; அதன்பின்வரும் 
குதிரையும் காதம்; கிழவியும் 
  காதம், குலமன்னனே! ( 2)

தமிழ்ப் பாட்டியைத் திருக்கைலையில் ஏற்றக் காரணமாக இருந்த விநாயகர் அகவல் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெரு வரமாக இன்றும் நின்று நிலவுகிறது. அதைப் பாராயணம் செய்து தம் விருப்பம் நிறைவேறப் பெறும் அன்பர்கள் பலர். -

======================================
(1) களபம் - கலவைச் சந்தனம். துகில் ஆடை - மிக மெல்லிய ஆடை, வன்ன மருங்கில் - அழகிய இடையில். எறிப்ப - வீச. பேழை - பெட்டி. கோடு - தக்தம், சிந்துரம் - சிவப்புத் திலகம். நான்ற - தொங்கிய, சொற்பதம் - சொல்லின் நிலை. துரியம் - கருவி கரணம் கழன்ற நிலை.
======

பி.கு;
( 2)  பொருள் : " உயர்ந்த சேரர்குடியில் பிறந்த மன்னனே! இனிய சொற்களைப் பேசும் உமையம்மையாரின் மகனாகிய விநாயகரின் திருவடிகளை வணங்குவோர்க்கு எந்தச் செயலும் அரிதன்று. நிலம் அதிரப் போகும் யானையும் தேரும், அதற்குப் பின்னர்ப்  புறப்பட்டு வந்த குதிரையும் நாழிகை ஒன்றுக்கு காதவழி நடக்கும். நடக்க இயலாத கிழவியான நானும் நடந்து வந்தது காத வழியே ஆகும் "

தொடர்புள்ள பதிவுகள்: 
கி.வா.ஜகந்நாதன்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

* ரசபதி அவர்களின் விநாயகர் அகவல் உரையை இங்குக் காணலாம்: 

விநாயகர் அகவல்: மதுரைத் திட்டம்

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

1334. கி.வா.ஜகந்நாதன் - 29

இலக்கியக் கட்டுரை
கி.வா.ஜகந்நாதன்


‘பாரதமணி’ யில் 1939-இல் வந்த ஒரு கட்டுரை.





[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்: 
கி.வா.ஜகந்நாதன்

சனி, 6 ஏப்ரல், 2019

1262. பாடலும் படமும் - 58

கேது
கி.வா.ஜகந்நாதன்



[ ஓவியம்: எஸ்.ராஜம் ] 


படத்தில் கருகிற மேனியனாகிய கேதுவைப் பார்க்கிறோம். அவன் இடமாக வரும் மேரு செந்நிறத்தோடு பின்னே தோற்றம் அளிக்கிறது. கேதுவின் வலப்பக்கத்தில் ஏடும் எழுத்தாணியுமாக உட்கார்க்திருப்பவன் சித்திரகுப்தன். அவனே கேதுவுக்கு அதிதேவதை.

இடப்பக்கத்தில் நான்முகன் வீற்றிருக்கிருன். அவனுடைய மூன்று முகம் முன்னே தெரிய மற்றொரு முகம் அப்பால் மறைந்திருக்கிறது. அவன்தான் கேதுவின் பிரத்தியதி தேவதை.

கேது, கழுகு வாகனத்தின்மேல் கொடியின் உருவமைந்த ஆசனத்தில் எழுந்தருளியிருக்கிறான். அவன் தலையில் சிவப்பு, நீலம், மஞ்சள் முதலிய பன்னிற மணிகள் பதித்த பெரிய கிரீடம் மின்னுகிறது. அதற்குமேலே குடை, நிழல் தருகிறது. அவனுடைய முகம் செதில்களே உடையதாய்ப் பாம்புமுகம் என்பதைக் குறிப்பிக்கிறது. அவனுடைய விழிகளில் உள்ள சிவப்பு அவன் சினமுடையவன் என்பதற்குச் சாட்சி சொல்கிறது. அவனுடைய வலக்கை அபயமாகவும் இடக்கை கதையை எந்தியதாகவும் இருக்கின்றன. ஆடையில் பல வண்ணங்கள் கலந்திருக்கின்றன.

பொன்னங் கிரிஇடமாப் போதுவான்; மோகினியால் 
முன்னம் தலையிழந்த மூர்த்தியான் - மன்னுகையில் 
மோதுகதை அஞ்சல்உள்ளான் மூண்ட கருநிறத்தான் 
கேதுஎன்று சொல்வர் கிளந்து .


தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

சூரியன்

சந்திரன்

செவ்வாய்

புதன்


பிருகஸ்பதி

சுக்கிரன்

சனி

ராகு

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

[ மேலும் நவக்கிரகங்களைப் பற்றி அறிய விரும்பினால், 
  என்ற நூலைப் படிக்கவும்.]

சனி, 30 மார்ச், 2019

1258. பாடலும் படமும் - 57

ராகு
கி.வா.ஜகந்நாதன்



[ ஓவியம்: எஸ்.ராஜம் ]

ராகுவின் ஒவியத்தில் அவனுடைய உருவம் அச்சத்தைத் தருவதாக இருக்கிறது. திருமுகம் மாத்திரம் தேவனைப் போல இருப்பினும் உடல் முழுவதும் செதில்கள் அமைந்து பாம்பு, என்பதைப் புலப்படுத்துகின்றன. சூலமும் கட்கமும் ஏந்திய கைகளும் வரதமுடைய கை ஒன்றும், சும்மா தொங்கப்போட்ட கை ஒன்றும் உடைய கோலத்தில் கரிய உடையோடு தோலையும் அணிந்து வீற்றிருக்கிறான். மேலே உள்ள சிங்கக் கொடி, அவனுடைய வாகனமும் அது என்பதை உய்த்துணர வைக்கிறது. கொடியும் குடையும் கருநிறம் உடையன. முறத்தைப் போன்ற ஆசனத்தில் ராகு வீற்றிருக்கிறான். -

வலப்பக்கத்தில் அதிதேவதையாகிய பசுவையும் இடப்புறம்
பிரத்தியதி தேவதையாகிய சர்ப்பத்தையும் காண்கிறோம். மேருவை
இடமாகச் சுற்றுபவன் ராகு பின்னால் உள்ள மலை இதைக் குறிப்பிக்
கின்றது. பின்னே நிலைக்களம் பயங்கரமாக அமைந்திருக்கிறது.

கரவின் அமுதுண்டான் ; கார்நிறத்தான் ; மேனி
அரவம் முகம்அமரன் ஆனான் ; - மருவுமுறம்  
ஆகும் இருக்கையான்; அஞ்சுதகு தோற்றத்தான் ;
ராகுநிழற் கோளென் றிசை.


தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

சூரியன்

சந்திரன்

செவ்வாய்

புதன்


பிருகஸ்பதி

சுக்கிரன்

சனி

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

[ மேலும் நவக்கிரகங்களைப் பற்றி அறிய விரும்பினால், 
  என்ற நூலைப் படிக்கவும்.]


புதன், 20 மார்ச், 2019

1253. பாடலும் படமும் - 56

புதன்
கி.வா.ஜகந்நாதன்

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]


வண்ண ஒவியத்தில் விளங்கும் புதன் பொன்னிறமேனியோடு மஞ்சளாடை புனைந்து, சிங்க வாகனம் ஏறி, வாளும் பரிசையும் கதையும் வரதமும் திருக்கரங்களில் ஏந்தி, அழகு பொலிய வீற்றிருக்கிறான். அவனுடைய கொடியில் சிங்கம் இருக்கிறது. மேருவை வலஞ் செய்யும் குறிப்பைப் பின்னே தோன்றும் அதன் உருவம் தெரிவிக்கிறது.

வலப்புறத்தில் மேலே அதிதேவதையாகிய விஷ்ணு, சங்க சக்ர கதா தாரியாகத் திருமகளுடன் நிற்கிறார். இடப் பக்கத்தில் பிருகு முனிவருடைய அடிச்சுவடு மார்பில் தோன்ற இரண்டு திருக்கரங்களுடன் நாராயணனாகிய பிரத்தியதிதேவதை வீற்றிருக்கிறார்.

கீழே கன்னி யொருத்தியின் உருவமும் ஆணும் பெண்ணுமாகிய இரட்டையுருவமும் கன்னியா ராசிக்கும் மிதுன ராசிக்கும் தலைவன் புதன் என்பதை நினேப்பூட்டுகின்றன. பச்சைப் பசேலென்ற நிலைக்களத்தில் புதன், அறிவின் உருவாகவும் அழகின் உருவாகவும் திகழ்கிறான். சந்திரன் உள்ளங்கவர் அழனாக இருப்பதுபோலவே இவனும் அழகனாகக் காட்சி தருகிறான். சந்திரனுடைய மகன்தானே இவன்? 

புந்திவலி சேரப் புரிவான்பொன் மேனியினான்
சந்திரன்சேய் வாள்பரிசை தாங்குகதை - உந்துகையான் 
வெம்புசிங்க ஊர்தியான் மேனாள் இளைதழுவும் 
அம்புதன்என் றோதும் அவன்.

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

சூரியன்

சந்திரன்

செவ்வாய்

பிருகஸ்பதி

சுக்கிரன்

சனி

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam


[ மேலும் நவக்கிரகங்களைப் பற்றி அறிய விரும்பினால், 
  என்ற நூலைப் படிக்கவும்.]

சனி, 16 மார்ச், 2019

1250. பாடலும் படமும் -55

சனி பகவான்
கி.வா.ஜகந்நாதன்

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]


படத்தில், கழுகு வாகனத்தின்மேல் அமர்ந்திருக்கும் சனிபகவான் திருவுருவத்தைக் காணலாம். இவன் உருவமும் உடையும் அணியும் மணியும் மலரும், கருமையும் நீலமும் உடையனவாக ஒவியர் எழுதியிருக்கிறார் சடையுடையவனாகவும் சூலமும் வில்லும் அம்பும் பூண்டவனாகவும் காட்சி தருகிறான் சனி, வலக்கால், சற்றே மெலிந்து தோன்றுகிறது. இடப்பக்கத்தில், மேலே கும்பமும் முதலையும் உள்ளன. அவை கும்ப ராசிக்கும் மகர ராசிக்கும் இவன் தலைவன் என்பதைக் குறிப்பிக்கின்றன. பின்னே உள்ள மேருமலை, சனி அதனை வலம் வருபவன் என்பதற்குச் சான்றாக நிற்கிறது.

பார்ப்பதற்கு அச்சத்தை விளைவிக்கும் உருவங்கொண்ட இவனுடைய வலப்பக்கத்தில் கீழே, எருமைக் கடாவின்மேல் யமன் அமர்ந்திருக்கிறான். இவன் சனிக்கிரகத்தின் அதிதேவதை. இடப்பக்கத்தில் பிரத்தியதி தேவதையாகிய பிரஜாபதி ஆசனத்தில் வீற்றிருக்கும் கோலத்தில் தோன்றுகிறான்.

சனியை ஆயுஷ்காரகனாகச் சொல்வது சோதிட நூல். இவனை வழி பட்டு இவனுடைய அருளுக்கு உரியவர்களானால் நீண்ட ஆயுளுடன் வாழலாம். இவனைப்போல் கெடுப்பவரும் இல்லை; இவனைப்போல் கொடுப்பவரும் இல்லை.

வெய்யசுட ரோன்சாயை மேவுமகன், சூற்கரத்தான் 
பைய நடக்கின்ற பங்கு, கரு-மெய்யன் 
இனியன் அருளுங்கால், இன்றேல் கொடியன், 
சனியன்.அவன் சீற்றம் தவிர்

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

[ மேலும் நவக்கிரகங்களைப் பற்றி அறிய விரும்பினால், 
  என்ற நூலைப் படிக்கவும்.]

பி.கு. தமிழ்நாட்டில் காகமே வாகனமாகச் சொல்லப்படுவதைக் குறிப்பிடும் கி.வா.ஜ. வடமொழி தியான ஸ்லோகங்கள் பலவற்றில் கழுகைக் குறிப்பிடுவதைச் சொல்கிறார். எஸ்.ராஜம் அதன்படி வரைந்திருக்கிறார். மேலும் அறிய மேலே  இணைப்பில் உள்ள கி.வா.ஜ. வின் 'நவக்கிரகங்கள்' என்ற நூலைப் படிக்கலாம்.

செவ்வாய், 24 ஜூலை, 2018

1126. கி.வா.ஜகந்நாதன் - 28

தவளையின் புலம்பல்
கி.வா.ஜகந்நாதன்



1943-இல் சுதேசமித்திரனில் வந்த ஒரு கட்டுரை.




[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்: 
கி.வா.ஜகந்நாதன்

வியாழன், 10 மே, 2018

1058. கி.வா.ஜகந்நாதன் - 27

கூத்து வாத்தியார் 
கி.வா.ஜகந்நாதன்




1943-இல் சுதேசமித்திரனில் வந்த ஒரு கட்டுரை.







[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்: 
கி.வா.ஜகந்நாதன்