வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

1479. ராஜேந்திர பிரசாத் - 2

ராஜன் பாபு


பிப்ரவரி 28. ராஜேந்திர பிரசாத்தின் நினைவு நாள்.

'கல்கி'யில் ராஜாஜி எழுதிய அஞ்சலித் தலையங்கம்.


'சக்தி' இதழில் 1946-இல் வந்த ஒரு கட்டுரை . அவருடைய நூலின் ஓர் அத்தியாயம் இது.





[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

ராஜேந்திர பிரசாத்

வியாழன், 27 பிப்ரவரி, 2020

1478. கதம்பம் - 8

சர்தார் அ. வேதரத்தினம் 




பிப்ரவரி 25. சர்தார் வேதரத்தினத்தின் பிறந்த தினம்.
=====

வேதரத்தினம் என்ற பெயரைக் கேட்டமாத்திரத்தில், வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் நினைவுக்கு வரும். ராஜாஜி நினைவுக்கு வருவார். கடுமையான தியாகமும், முரட்டு கதர் உடையும் நம் நினைவுக்கு வரும். அது மட்டுமா? வேதாரண்யத்தில் சிறப்பாக நடைபெற்று வரும் ‘கஸ்தூரிபா காந்தி கன்னியா குருகுலம்’ நம் நினைவுக்கு வரும். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி அவர் காலமான அறுபதுகள் வரை, வேதரத்தினம் பிள்ளையின் பெயர் சொல்லாமல் எந்த காங்கிரஸ் இயக்கமும் தமிழ்நாட்டில் இல்லை எனலாம். அந்த அளவுக்கு அவர் தன்னை காங்கிரஸ் இயக்கத்தோடு இணைத்துக் கொண்டவர், பொதுநலத்துக்காக சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து தியாகசீலராக விளங்கியவர். அவரது வரலாற்றை இப்போது சுருக்கமாகப் பார்ப்போம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடற்கரை கிராமமான வேதாரண்யம் இவரது ஊர். இவரது தந்தையார் அப்பாகுட்டி பிள்ளை என்பவர். உப்பு சத்தியாக்கிரகம் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது, இவரது உடமைகளுக்கும் ஆபத்து வந்து, இவர் கைது செய்யப்படப்போகிறார் என்ற நிலையில் அவ்வூர் மாஜிஸ்டிரேட் ஒருவர் 90 வயதைக் கடந்த முதியவர் அப்பாக்குட்டி பிள்ளையிடம் வந்து, “ஐயா! நீங்களோ பெரிய குடும்பத்தில் வந்தவர். கெளரவமான குடும்பம். உங்கள் மகன் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டால், அவர் மீது எந்த வழக்கும் வராமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்றார். அதற்கு அந்த முதிய தேசபக்தர் என்ன சொன்னார் தெரியுமா? எப்படியாவது தனது மகன் ஜெயிலுக்குப் போகாமல் தப்பி, சொத்துக்களும் பறிமுதல் ஆகாமல் போனால் சரி, கேவலம் ஒரு மன்னிப்புக் கடிதம் தானே, கொடுத்துவிடலாம் என்றா எண்ணினார். இல்லை. இல்லவே இல்லை. அவர் சொன்னார், “என் மகன் வேதரத்தினம் உங்களிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பதிலும், அவன் சிறைக்குச் செல்வதையே நான் விரும்புவேன்” என்றார். அந்த முதியவரின் தேசப்பற்றுக்கு எதனை உவமை கூற முடியும்? அப்படிப்பட்ட தியாக பரம்பரையில் பல தலைமுறைகளுக்கு முந்தி உதித்தவர் தாயுமானவ சுவாமிகள். இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? தாயுமானவர் கோயில் கொண்டுள்ள திருச்சியில் உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கியது. தாயுமானவரின் குலவாரிசுகள் வாழும் வேதாரண்யத்தில் முடிவடைந்தது. இதனை முன்னின்று நடத்தியவரும் தாயுமானவ சுவாமிகளின் வாரிசுதான். என்ன ஒற்றுமை.

சர்தார் வேதரத்தினம் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பல ஆண்டுகள் இருந்திருக்கிறார். 1929இல் வேதாரண்யத்தில் தமிழ் மாகாண காங்கிரஸ் மகாநாட்டை சர்தார் வல்லபாய் படேலை அழைத்து வந்து ராஜாஜி முன்னிலையில் வெற்றிகரமாக நடத்தினார். இவர் விரல் அசைந்தால் தஞ்சாவூர் மாவட்டம் அசையும் நிலை அன்று இருந்தது. இவ்வளவுக்கும் இம்மாவட்ட நிலப்பிரபுக்கள் அனைவரும் ஆங்கிலேயர்களின் ஆதரவாளர்களாகவும், நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகள் கம்யூனிஸ்ட் ஆதிக்கத்தின் கீழ் ஓர் வர்க்கப் புரட்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், நடுத்தர மக்கள் மட்டுமே தஞ்சை மாவட்ட சுந்ததிரப் போரில் பங்கு கொண்டார்கள். அவர்களுக்குத் தலைமை வகித்தவர் சர்தார் வேதரத்தினம் பிள்ளை.


இவர் சென்னை சட்டசபைக்கு 1952இல் மன்னார்குடி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957இல் திருத்துறைப்பூண்டி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார். 1961இல் சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்த போது இவர் பேசிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு வந்து, உடல் நலம் கெட்டு இறந்து போனார். இவர் உடல் வேதாரண்யம் கொண்டு வரப்பட்டு கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் இறுதி அஞ்சலி செய்யப்பட்டது. இவரது சமாதியை இன்றும் அங்கு பல்லாயிரக்கணக்கானோர் சென்று பார்த்து வழிபட்டு மரியாதை செய்கின்றனர். வாழ்க சர்தார் வேதரத்தினம் பிள்ளை புகழ்!

முழுக்கட்டுரையையும் படிக்க :
https://tamizhagathiyagigal.pressbooks.com/chapter/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/

'கல்கி'  1952-இல் ' கன்யா குருகுல'த்தைப் பற்றி எழுதிய கட்டுரை இதோ:






[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:

கதம்பம்

வேதரத்தினம் பிள்ளை : விக்கிப்பீடியா

புதன், 26 பிப்ரவரி, 2020

1477. சுஜாதா- 5

சுஜாதா - ஒரு சகாப்தம்
சீதா ரவி 
பிப்ரவரி 27. சுஜாதாவின் நினைவு தினம். அவர் மறைந்தபின் 'கல்கி'யில் வந்த ஓர் அஞ்சலிக் கட்டுரை.






[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]



தொடர்புள்ள பதிவுகள்:

சுஜாதா

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

1476. எம்.வி.வெங்கட்ராம் - 2

கால்கள்

எம்.வி.வெங்கட்ராம்



2020. வெங்கட்ராமின் நூற்றாண்டு.





[ நன்றி: கல்கி]


[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:


திங்கள், 24 பிப்ரவரி, 2020

1475. கதம்பம் - 7

மதுரை அ. வைத்தியநாதய்யர்


பிப்ரவரி 23.  வைத்தியநாதய்யரின் நினைவு தினம்.  அவர் மறைவுக்குப் பின் 1955-இல் 'கல்கி'யில் வந்தவை.



   


  



  


[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:


கதம்பம்

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

1474. கதம்பம் - 6

சிவகவிமணி, சி. கே., சுப்பிரமணிய முதலியார். (சம்பந்த சரணாலயர்)
முனைவர் மு, பழனியப்பன்



பிப்ரவரி 20சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பிறந்த நாள்.
===========

தெய்வச் சேக்கிழார் தந்த திருத்தொண்டர் புராணத்திற்கு( பெரிய புராணத்திற்கு) மிக விரிவான உரையைத் தந்தவர். இவருடைய உரை ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஒவ்வொரு தொகுதியும் கடல் போல் கருத்துக்கள் நிரம்பியன. வேறு எந்த இந்திய மொழிகளில் இத்துணைப் பெரிய விரிவுரை இதுவரை வெளியாகவில்லை என்பதே இவரின் உரைக்குக் கிடைத்த பெருமையாகும். பெரியபுராணத்தினை பெருங்காப்பியம் என்று அரிதியிட்டு உரைத்தவர். பெரியபுராணத்தின் கதைத்தலைவர் சுந்தரர் என்றும், கதைத் தலைவியர் பரவையார், சங்கிலியார் என்றும் முதன் முதலாகத் தம் உரைநூலில் தக்க சான்றுகளோடு குறித்தவர். திருத்தொண்டர் புராணத்தைத் தன் வாழ்க்கை நூலாகக் கொண்டவர். அடிப்படையில் இவர் ஒரு வழக்கறிஞர். வழக்கு மன்றப் பணிகளோடு சைவப் பணிகளையும் தமிழ்ப் பணிகளையும் அயாராது ஆற்றி வந்தவர். இவரது உரையின் சிறப்பு அது தற்கால நடைமுறைக்கு ஏற்றவகையில் அமைக்கப் பெற்றிருப்பது தான். இந்த நூலைத் தவிர பல நூல்களையும் இவர்¢ படைத்தளித்துள்ளார். சைவ இலக்கியங்களுக்கு தகுந்த உரையாசிரியர் அமையவில்லை என்ற குறை இவரால் நீங்கியது.

வாழ்க்கை
சுப்பிரமணிய முதலியார் ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தெட்டாம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் இருபதாம் நாள் பிறந்தவர். இவருடைய பெற்றோர் பன்னூலாசிரியர் வித்வான் கந்தசாமி முதலியாரும், வடிவம்மையும் ஆவர். இவர் தொண்டை மண்டல மாங்காட்டிலிருந்து குடியேறிய கொண்டல் கட்டிக் குடியில் நெல்விளையார் மரபினைச் சார்ந்தவர்.

இவர் தனது கல்வியை கோயம்புத்தூரைச் சார்ந்த பகுதிகளில் தன் தொடக்கக் கல்விகளைக் கற்றுள்ளார். கோவைக் கல்லூரி வழியாக எப். ஏ, (F.A) பட்டத்தைப் பெற்றார். இதனையடுத்து பி.ஏ., (B.A), பி. எல்(B.L) ஆகிய பட்டங்களைச் சென்னையில் கற்றுப் பெற்றுள்ளார். பி.ஏ பட்டப்படிப்பில் தமிழ்ப் பாடத்தில் மாநில முதன்மையாராகத் தேர்வு பெற்றுத் தங்கப் பதக்கம் பெற்றார். இப்பொற்பதக்கத்தை இவர் திருப்பேரூர் கோயிலில் சேக்கிழாரின் ஐம்பொன் சிலை செய்து வைக்க விழைந்தபோது அச்சிலையில் தங்கம் சேர்க்கப் பெற வேண்டும் என்ற நிலை வந்தபோது அதற்காக அளித்துவிட்டார். இதன்வழி இவரின் பொருளை மிஞ்சிய சைவப் பணி தெரியவருகிறது.

இதன்பின் வழக்கறிஞராகக் கோயம்புத்தூரில் பணியாற்றினார். வழக்கறிஞர் பணியிலும் இவர் சிறந்து விளங்கினார். விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம் பிள்ளையின் சிறைக் கொடுமைகளை நீதிமன்றத்தில் தக்கவகையில் எடுத்துரைத்து அவரின் வழக்கை விசாரணைக்குக் கொண்டு வந்த பெருமை இவருக்கு உரியது. இந்தச் செயல் காரணமாக வ. உ. சிதம்பரம் பிள்ளை தன் மகனுக்கும் மகளுக்கும் இவர் பெயரையும் இவரின் மனைவி பெயரையும் இட்டார். இது போன்று பல வழக்குகளில் உண்மை நிலைக்க இவர் வாதாடினார்.

முறையாகக் கல்வி பயிலும் காலத்திலேயே இவருக்கு பெரியபுராணக் கல்வியும் வாய்த்துள்ளது. இவர் தன் பதினாறாம் வயதில் சு. திருச்சிற்றம்பலம் என்ற தமிழாசிரியர் வாயிலாகப் பெரியபுராணக் கல்வியைப் பெற்றார். அதன்பின் கயப்பாக்கம் சாதாசிவ செட்டியாரிடம் இவரது பெரியபுராணக் கல்வி வளர்ந்தது. கயப்பாக்கம் சாதாசிவ செட்டியார் கோயம்புத்தூரில் சில காலம் தங்கிப் பெரியபுராண உரை ஆற்றியபோது அவருக்குக் கையேடு படிக்கும்படியான ஒரு பணி சுப்பிரமணிய முதலியாருக்குக் கிடைத்தது. இது அன்னாரின் பெரியபுராண ஆர்வத்தை மேலும் தூண்டியது. இதன் தொடர்வாய் சுப்பிரமணிய முதலியார் நாள்தோறும் பன்னிருதிருமுறைப் பாராயணம் செய்து வரும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். இவ்வழக்கத்தின் காரணமாக பெரியபுராண செய்திகளையும், திருமுறைச் செய்திகளையும் இணைத்து அவர் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.

மேலும் அக்காலத்தில் வாழ்ந்த சைவச் சான்றோர்களான திருப்பாதிரிப்புலியூர் சண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரியார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், ந. மு. வேங்கடசாமி நாட்டார் முதலியவர்களுடன் கலந்து பழகும் வாய்ப்¢பும் அவர்களின் பெரியபுராண உரைகளைக் கேட்கும் வாய்ப்பும் இவருக்கு ஏற்பட்டது. இவை பிற்காலத்தில் பெரியபுராண உரை எழுதப் புகுந்தபோது இவருக்குப் பேருதவி புரிந்தன.

இவரின் தமிழ்ப் பணி இவரின் வாழ்வோடு என்றும் கலந்தே வந்துள்ளது. இவர் கோவைத் தமிழ்ச் சங்கம் கண்டவர். தேவாரப் பாடசாலை வைத்து நடத்தியவர். சேக்கிழார் திருக்கூட்டம் என்ற அமைப்பினையும் ஏற்படுத்தியவர். சென்னைப் பல்கலைக் கழக தமிழ் மொழி ஆணையராகப் பணியாற்றியவர். பல தமிழ் நூல்களைத் தந்தவர். மேலும் இவர் சமுதாயப் பணிகளையும் செய்து வந்தார். கோயம்புத்தூர்¢ நகர சபையின் உறுப்பினாராக அமைந்தும் இவர் சிறந்துள்ளார்.

இவரின் நூல்கள்
கவிதை நூல்கள்
 அவிநாசி கருணாம்பிகை பிள்ளைத்தமி¢ழ்
 கந்தபுராணப் போற்றிக் கலிவெண்பா
 திருப்பேரூர் இரட்டை மணிமாலை
உரைநடை நூல்கள்
 மாணிக்கவாசகர் (அ) நீத்தார் பெருமை
 வாகீசர் (அ) மெய்யுணர்தல்
 கருவூர்த்தேவர்
 சேக்கிழாரும் சேயிழையார்களும்
 சேக்கிழார்
 செம்மணித்திரள்
 அர்த்த நாரீஸ்வரர் (அ) மாதிருக்கும் பாதியான்
 தி¢ருத்தொண்டர் புராணத்துள் முருகன்
உரை நூல்
 திருத்தொண்டர் புராணத்திற்கான விரிவான உரை

பெற்ற பட்டங்கள்
இவருக்குச் சிவகவிமணி என்ற பட்டத்தை சென்னை மாகாண தமிழ்ச் சங்கம் அளித்தது. திருமறை ஞான பானு என்ற பட்டம் மதுரை ஆதினத்தாரால் வழங்கப் பெற்றது.
இல்லறம்
இவருக்கு இரு மனைவியர். ஒரு மனைவி பெயர் மீனாட்சி. மற்றவர் பெயர் அறியமுடியவில்லை. இவருக்கு ஒரு மகளார் உள்ளார். அவரும் அவர் கணவரும் தற்போது கோவைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் இவரின் உரைகளை மறுபதிப்பு செய்துள்ளனர். இல்லற வாழ்வின் வெற்றி விழாக்களாக தன் அறுபதாண்டு நிறைவு விழா, எழுபதாண்டு நிறைவு விழா ஆகியவற்றை முறையே திருக்கடவூர், திருப்பேரூர் ஆகிய இடங்களில் நடத்தினார்.

துறவறம்
இல்லற வாழ்வின் போதே சைவ நெறிக்கு ஏற்ப இவர் சிதம்பரம் முத்துக் குமாரக் குருக்களிடம் சிவ தீக்கை பெற்றார். இல்லற வாழ்வின் பிற்காலத்தில் இவர் அகத்துறவியாக வாழ்ந்தார். வாழ்வின் நிறைநிலையில் மதுரை ஆதீனத்தின் வழியாகப் புறத்துறவும் ஏற்றார். துறவு வாழ்வு மேற்கொண்டதும் இவர் சம்பந்த சரணாலயத் தம்பிரான் என்று ஞானப் பெயர் பெற்றார். 24. 01.1961ல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

இவரின் பெரியபுராண உரைச் சிறப்புகள்
பெரியபுராண உரை வரலாறு
பெரியபுராணத்திற்கு முதலில் வசனம் எழுதுதல், அதனைத் தொடர்ந்து குறிப்புரை சூசனம் எழுதுதல், பொழிப்புரை எழுதுதல் என்ற படிநிலைகளைக் கடந்தே விரிவான உரை தோற்றம் பெற்றுது. தொழுவூர் வேலாயுதம் முதலியார், ஆறுமுகநாவலர், திரு, வி. கல்யாண சுந்தரனார் முதலானோர் மேற்சொன்ன முயற்சிகளில் முறையே ஈடுபட்ட குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இதன் முடிநிலையாகச் சுப்பிரமணிய முதலியாரின் உரை அமைகிறது.

சுப்பிரமணிய முதலியாரின் உரைமுயற்சி
சுப்பிரமணிய முதலியார் பல ஏட்டுப்பிரதிகளையும், கையெழுத்துப் பிரதிகளையும், உரைப்பிரதிகளையும் ஒருங்கிணைத்து உரை செய்யப் புகுந்துள்ளார். இவரின் பெரியபுராண உரை எழுதும் பணி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தைந்தாம் ஆண்டில் தொடங்கப் பெற்றது. பல இடையூறுகளைக் கடந்த 13. 7. 1948 ஆம் நாள் முடிவு பெற்றது. இது எழுத்துப்பணி மட்டுமே. வெளியிடும் அச்சுப்பணியையும் துணிவுடன் இவரே செய்துள்ளார். கோவைத்தமிழ்ச் சங்கத்தின் சார்பாக இவ்வுரை 15.9.1937ல் முதன்முதலாக முதல்¢தொகுதி வெளியிடப் பெற்றது. பெரியபுராண நிறைவு உரைப்பகுதி 6.5.1954ல் வெளியிடப் பெற்றது. அதாவது பதிமூன்று ஆண்டுகள் உரையெழுதும் பணியும் பதினேழு ஆண்டுகள் அதனை அச்சாக்கும் பணியும் நடைபெற்றுள்ளன. ஒரு தனிமனிதரின் வாழ்வில் ஏறக்குறைய இருபது ஆண்டுகாலம் பெரியபுராணத்திற்கும் உரைசெய்யும் பணி நிகழ்ந்திருப்பது மிகப் பெரிய சாதனைதான்.

சுப்பிரமணிய முதலியாரின் உரை அமைப்பு
சுப்பிரமணிய முதலியார் சருக்கம், புராணம் இவற்றை விளக்கியபின் பெரிய புராணப் பாடல்களுக்கு உரை செய்யப் புகுவார்.

சேக்கிழார் வகுத்த சருக்கத்தின் அமைப்பினை சருக்கப் பெயர்க்காரணம், சருக்க நிகழ்வுச் சுருக்கம், சருக்க அளவு என்ற மூன்று நிலைகளாகப் பிரித்துக் கொண்டு இவர் உரை கண்டுள்ளார்.

இதுபோலவே புராணத்தினையும் அதன் பெயர்க்காரணம், புராண நிகழ்வுச் சுருக்கம், புராண அளவு என்ற மூநிலைகளில் விளக்குவார்.

இதன்பின் மூலபாடத்தின் செய்யுள் ஒன்றன்பின் ஒன்றாக அமைக்கப் பெறும். இதனைத் தொடர்ந்து பாடலின் பொருள் பாடல் எண் தரப்பெற்று 1. இதன் பொருள், 2. விளக்கவுரை என்ற இரு அமைப்புகள் வழியாகச் சொல்லப் பெறும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்கள் ஒரே கருத்து முடிவைப் பெற்றிருக்குமானால் அந்த பாடல்கள் முதலில் இடம்பெறும். அதன்பின் பாடல் எண்கள் தரப்பெற்று அந்தப்பாடல்கள் அனைத்திற்கும் இதன்பொருள் தரப்பெறும். அதன்பின் இதே அமைப்¤ல் விளக்கவுரை தரப் பெறும்.

பாடலுக்கான எண்கள் தொடர் எண்களாகத் தரப் பெற்றுள்ளன. உலகெலாம் எனத் தொடங்கும் முதல் பாடல் ‘1’ என்ற எண்ணில் தொடங்குகிறது. உலகெலாம் என நிறைவு பெறும் பாடல் ‘4286’ என்ற எண்ணில் முடிவு பெறுகிறது. இது தவிர புராணத்திற்¢கு உரிய எண்கள் தமிழ் எண்களாகவும் தரப் பெற்றுள்ளன.

ஒரு புராணப் பாடல்கள் அனைத்திற்கும் பொருள் கண்டபின் புராணம் முடிவுறும் தருவாயில் புராணத் தொகுப்புரை என்ற ஒன்றைச் சுப்பிரமணிய முதலியார் கற்பனை என்ற தலைப்பின் கீழ் அமைத்துள்ளார். இத்தொகுப்புரையி¢ல்¢ அப்புராணத்தின் வழியாகச் அறிந்து கொண்ட நாயன்மாரின் வாழ்வை ஒட்டிய கருத்துக்களைத் தொகுத்து உரைக்கிறார். இத்தொகுப்புரையைப் படித்தாலே புராணத்தைப் படித்த முழுநிறைவு கிடைத்துவிடுகிறது. இக்கற்பனைப் பகுதி குறித்து ” கற்பனை என்ற தலைப்பின் கீழ் அவ்வவ் புராணங்களினின்றும் நாம் அறிந்து கொள்ளக் கூடிய உண்மைகளை என் சிறிய அறிவுக்கு உட்பட்ட குறிப்புகளைக் குறித்துள்ளேன். அவை அவ்வப் புராணங்களில் ஆராய்ச்சியைத் தூண்டி மக்களை நல்வழிப் படுத்துமென்று நம்புகிறேன்” (சி. கே. சுப்பிரமணிய முதலியார் (உ. ஆ), திருத்தொண்டர் புராணம், முன்னுரை, ப.15) என்று கருத்துரைக்கிறார் சுப்பிரமணிய முதலியார்.

மேலும் இவரது உரையில் நன்னூல் கூறும் உரைப் பகுதிகளான பாடங்காட்டல், கருத்துரை, சொல்வகை, சொற்பொருள், தொகுத்துரை, உதாரணம், வினா, விடை, விசேடம், விரிவு, அதிகார வரவு காட்டல், துணிவு, பயன், ஆசிரிய வசனம் முதலான அனைத்தையும் பெற்றுள்ளன.

இவை தவிர சேக்கிழார் கவிநலம் காட்டல், பழமொழிகளைப் பயன்படுத்தல், பிறரது உரைகளை ஒப்புமை காட்டல், ஒரு கருத்தை விளக்க அதன் சார்பாய் மூன்று விளக்கங்களை பொருத்தமுற அமைத்தல், பாத்திரப் பண்புகளை எடுத்துரைத்தல், முரண்பாடு எழும் போது அதனை மூல நூலுக்குக் குறைவராதபடி காத்தல், இடைச் செருகல் பாடல்களைத் தக்க காரணம் காட்டி விலக்கல், பதிகத்தின் இடமாறுபாடு குறி¢த்துச் சரியான முடிவை எடுத்தல், பெரியபுராணத்தில் சுட்டப் பெறும் திருமுறைப் பதிகத்தினை தக்க இடத்தில் பதிகத்தின் முதல் பாடலையும்¢ இறுதிப்பாடலையும் அதன் பொருளோடு தருதல் , பெரியபுராண காலத்தில் இருந்துத் தற்போது மறைந்து போன இடங்களைக் கண்டறிந்து தருதல், பெரியபுராணத்தில் கூறப் பெறும் தலத்தைப் பற்றிய செய்திகளை தற்கால நிலைப்படி விளக்கல், தக்கப் புகைப் படங்களைத் தருதல், அப்பர், சம்பர்ந்தர் ஆகிய அருளாளர்கள் சென்ற வழித்தடத்தை நில வரைபடமாகத் தருதல் ஆகிய சிறப்புப் பண்புகள் இவரின் உரையில் உள்ளன.

மேலும் இவரது உரை இலக்கியப்புலமை, சாத்திர நூல் புலமை, இலக்கணப் புலமை, இசைப்புலமை, வழக்கு விவாதப் புலமை, சூழலியல் அறிவு, பிற சமய அறிவு, ஆங்கில மொழி அறிவு, அறிவியல் அறிவு, பழக்க வழக்கங்களின் முறைமை மரபு பற்றிய அறிவு ஆகியன கொண்டதாகும்.

இவற்றைச் சுப்பிரமணிய முதலியாரின் உரைநெறிகளாகக் கொள்ளலாம். அவரின் உரைப் பகுதிகள் சில பின்வருமாறு.

பெரியபுராணம் பெருங்காப்பியமே
”இது ஒரு பெருங்காப்பியம்; அங்ஙனமின்றி பல சரிதங்கள் சேர்ந்த ஒரு கோவை எனச் சிலர் எண்ணுவர். அது சரியன்று. சுந்தரமூர்த்திகளைத் தலைவராகவும், பரவையார் சங்கிலியார் என்ற இருவரையும் தலைவியராகவும் கொண்ட அவர்கள் கயிலையிலிருந்து ஒரு காரணம் பற்றிப் பூவுலக்தில் அவதரித்து, உலகத்தார்க்கு அறம், பொருள், இன்பம், வீடுஎன்ற நான்கு உறுதிப் பொருள்களையும் காட்டி, உணர்த்தி, உய்வித்து மீளவும் திருக்கயிலை சேர்¢ந்தார்கள் என்பது காப்பியத்தின் உட்பொருள். இதில் தலைவன் தலைவியர் கூட்டம், பிரிவு முதலிய அகப் பொருளும், போர் முதலிய புறப் பொருளும் சூரியன் உதயம் அத்தமணம் ஆகிய பொழுதின் சிறப்புகளும் பெரும் பொழுது சிறுபொழுது முதலிய பகுப்புகளும் இன்னும் பெருங்காப்பிய உறுப்புகள் முற்றும் சிறப்பாய் அறியக் கிடக்கும்”(சி. கே. சுப்பிரமணிய முதலியார் (உ. ஆ), திருத்தொண்டர் புராணம், பாயிரம் .2)

இவ்வுரைப்பகுதி வழியாக பெரியபுராணம் ஒரு பெருங்காப்பியம் என்று எள்ளளவும் சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவப்படுகிறது. மேலும் தண்டியலங்காரம் குறிப்பிடும் பெருங்காப்பிய இலக்கணம் இங்கு அடிப்படையாகப் போற்றப் பெற்றிருப்பதும் கவனிக்கத் தக்கது.

தற்கால நிகழ்வை இணைக்கும் உரைப்பாங்கு

” சில ஆண்டுகளின் முன் ஒரு சிறுவன் ஆற்றுமடுவில் முதலையினால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றுக்குள் போயினான். ஆனால் உயிர் நீங்கவில்லை. அங்கு அவ்வயிறு பெரியதொரு வளைவாகிய குகைபோலப் புலப்பட அவன் அதன் உட்புறத்தைத் தன் கை நகங்களினாலும், தன்னிடமிருந்ததொரு சிறு கத்தியாலும் பிறாண்ட அதற்கு வேதனையுண்டாகினமையின் முதலை அவளை மீளக் கொண்ரந்து (கக்கி) உமிழ்ந்துவிட்டது. உணர்வற்ற நிலையில் கிடந்த அவனைச் சிலர் கண்டு எடுத்து உபசரிக்க அவன் உயிர்பிழைத்தான். அவன் சொல்லிய வரலாறு இது. அவன் உடலில் முதலையின் பற்களால் முதலை விழுங்கிய போதும், பற்றும் போதும் உளவாகிய கீறல் புண்கள் மட்டுமே கண்டன. அவை நாளடைவில் ஆறிவிட்டன என்பது. இச்செய்தி பத்திரிக்கைகளிலும் வெளிவந்தது” என்ற பகுதி சுந்தரரின் முதலை உண்ட பாலகனை மீட்ட இடத்தில் உரையாசிரியரால் காட்டப் பெறுகிறது. பத்திரிக்கை செய்தி என்று அதனைப் புறந்தள்ளிவிடாமல் அதனைத் தக்கசான்றாக காட்டியுள்ள சுப்பிரமணிய முதலியாரின் உரைப் பாங்கு பாரட்டற்குரியது.

சேக்கிழார் கவிநலம் காட்டும் உரை
சேக்கிழார் பரவையாரிடம் தூதாகச் சென்றபோது அது முதன்முறை பலன் தராது போயிற்று. எனவே அவர்¢ மறுமுறையும் தூது போகவேண்டியவர் ஆனார். இச்சூழலில் முதல் தூதினைப் பாதித்தூதாக் கருதிச் சேக்கிழார் பின்வரும் பாடலைப் படைத்துள்ளார்.

பாதி மதிவாழ் முடியாரைப் பயில் பூசனையின் பணிபுரியும்
பாதியிரவி லிங்கணைந்த தென்னோ? னென்ற பயமெய்தி
பாதியுமையாடிரு வுருவிற் பரமராவதியறியாரோ
பாதிமதி வாணுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார் ” (3493)

இப்பாடலுக்குச் சுப்பிரமணிய முதலியார் தரும் உரை பின்வருமாறு.
”இந்நிலையில் இறைவரது தூது பாதிப்பயனுடன் நின்ற மீண்டும் வருதலுடன் முழுப்பயனும் தந்து நிறைவானது என்று குறிப்பு தர இப்பாட்டில் பாதி என்று நான்கடியிலும் எதுகை வைத்துச் சொற்பொருட் பின்வரும் நிலையில் அருளிய கவிநலமும் கண்டு கொள்க” (சி. கே. சுப்பிரமணிய முதலியார் (உ. ஆ), திருத்தொண்டர் புராணம், ஆறாம் பகுதி ப,383) என்ற உரைப்பகுதியில் சேக்கிழார் படைத்தார் என்பதைக் கூறவந்த ஆசிரியர்¢ அருளிய கவி நலம் தந்திருப்பதன் மூலம் இவர் எவ்வளவு மதிப்பை மூல நூல் ஆசிரியரிடம் வைத்திருந்தார் என்பது தெரியவருகிறது. இந்த முறைமை தற்போது உரைகாணும் பெருமக்கள் பின்பற்றவேண்டிய ஒன்று.

இவ்வாறு விரிக்க விரிக்கப் பொருள் செறிவும், இலக்கிய நயமும், உரைவிரிவும் கொண்டது சுப்பிரமணிய முதலியாரின் உரை. இதன்வழியாக சைவஉலகம் பெறற் கரிய பேற்றைப் பெற்றது என்பதில் ஐயமில்லை.

சுப்பிரமணிய முதலியாரின் பிறபடைப்புகள் ஒரு கண்ணோட்டம்
இவரின் நூல்களுள் சிறப்பானது சேக்கிழார் என்ற நூலாகும். இது சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1930 ஆம் ஆண்டு இவர் நிகழ்¢த்திய பொழிவின் பதிவாகும். இப்பொழிவு பல்கலைக்கழக அனுமதியுடன் பின்னர் நூல்வடிவம் பெற்றது. இந்நூலே இவரைப் பெரியபுராண உரை செய்யத் தூண்டியதாக இவர் குறிப்பிடுகிறார். இதனுள் சேக்கிழாரின் கவிச்சிறப்பும், அவரின் அருள் உள்ளமும், பக்திப் பெருமையும் சுட்டப் பெறுகிறது.

சேக்கிழாரும் சேயிழையாரும் என்ற மற்றொரு நூல் பக்க அளவில் சிறியதாயினும் பொருள் அளவில் சீரியது. பெண்களைப் புறக்கணித்த சமுதாயத் தொடர் ஒட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய சேக்கிழாரின் செந்நெறியை உலகிற்குக் காட்டியது இந்நூல்.

இதுபோன்று இவரின் அனைத்து நூல்களும் செம்மை வாய்ந்தன. அவை மறுபதிப்பு செய்யப் பெறவேண்டும். இதன்வழி சைவ உலகம் மேன்மேலும் சிறக்கும். இதற்கான முயற்சிகளில் அனைவரும் இறங்கவேண்டும்.



{  நன்றி : https://old.thinnai.com/?p=60701182   ]

தொடர்புள்ள பதிவுகள்:

கதம்பம்

சனி, 22 பிப்ரவரி, 2020

1473. கதம்பம் - 5

கோபால கிருஷ்ண கோகலே


பிப்ரவரி 19. கோபால கிருஷ்ண கோகலேயின் நினைவு தினம்.
======

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய சேவகர்கள் அமைப்பின் நிறுவனரும், நாட்டுக்கு உழைத்த நல்லவருமான கோபால கிருஷ்ண கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக, வன்முறையைத் தவிர்த்தல், இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டு வருதல் ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார். அடிப்படையில் மிதவாதியான இவரை, பாலகங்காதர திலகரின் தீவிரவாத குழுவுக்கு நேரேதிரானவராக சரித்திரம் பதிவு செய்துள்ளது. மகாத்மா காந்தியின் அரசியல் குருவாகவும் இவர் கருதப்படுகிறார்.

பிறப்பு: 1866.05.09 அன்று மஹாராஷ்டிராவின் கோதாலுக்கில், ஒரு சித்பவன் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார், அப்போது இந்த மாநிலம் இந்திய மேற்கு கடற்கரையோரம் இருந்த பாம்பே பிரெசிடென்சியின் ஓர் அங்கமாக இருந்தது. கோகலேவின் குடும்பம் ஏழ்மையில் இருந்த போதிலும், அவர்கள் கோகலேவுக்கு ஆங்கிலக் கல்வி கிடைப்பதை உறுதிசெய்தனர், இதன் மூலம் ஆங்கிலேய அரசில் ஒரு சிறு அதிகாரியாகவோ வேலை கிடைக்கும் நிலையில் கோகலே இருப்பார் என்று நம்பினர். அப்பாவை இளம் வயதிலேயே இழந்துவிட அண்ணன் வேலை பார்த்து இவரை படிக்க வைத்தார். பல்கலைக்கழக கல்வியைப் பெறும் முதல் தலைமுறை இந்தியர்களில் ஒருவராக இருந்த கோகலே, 1884 ம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தன் பட்டப் படிப்பை முடித்தார்.

கோகலேவின் கல்வி அவருடைய எதிர்கால வாழ்க்கைத் தொழிலின் போக்கை மிகப் பெரிய அளவில் தூண்டுவதாக அமைந்தது. ஆங்கிலம் கற்றதோடல்லாமல் அவர் மேற்கத்திய அரசியல் கோட்பாடுகளுக்கு உள்ளாகி, ஜான் ஸ்டூவார்ட் மில் மற்றும் எட்முண்ட் புர்கே போன்ற தத்துவ அறிஞர்களின் பெரும் ஆர்வலராக ஆனார். ஆங்கில காலனிய ஆட்சிமுறையின் பல அம்சங்களைத் தயக்கமின்றி விமர்சித்து வந்தபோதிலும், கோகலே தன்னுடைய கல்லூரி ஆண்டுகளில் பெற்ற ஆங்கிலேய அரசியல் கோட்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான மரியாதை அவருடைய வாழ்நாள் முழுவதற்கும் அவருடனேயே இருந்தது.

சமூக மறுமலர்ச்சியாளர் மஹாதேவ் கோவிந்த் ரானடேவின் ஆதரவாளரான கோகலேவுக்கு அரசாங்க வேலைகள் காத்துக்கொண்டிருந்த பொழுதே நாட்டுப்பணியே முக்கியம் என எண்ணிய கோகலே 1889ல் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரானார். அங்கே மிதவாத போக்கை கடைபிடித்தார் .வன்முறை இல்லாத போராட்ட முறைகள், இருக்கும் அரசு நிர்வாகத்தில் மாற்றம் என குறிக்கோள் கொண்டு செயல்பட்டார். பால கங்காதர திலகர், தாதாபாய் நௌரோஜி, பிபின் சந்திர பால், லாலா லஜபத் ராய் மற்றும் அன்னிபெசன்ட் போன்ற சமகாலத்திய தலைவர்களுடன் முரண்பாடுகளுடனும், இணைந்தும் கோகலே, சாதாரண இந்தியர்களுக்குப் பொதுத்துறை விஷயங்களில் அதிகமான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடினார்.

அவர் தன்னுடைய எண்ணங்களில் மிதமானவராகவே இருந்தார், இந்தியர்களின் உரிமைகளுக்கு ஆங்கிலேயர்களின் பெருமளவு மரியாதையைப் பெற்றுத் தரக்கூடிய பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் செயல்முறையை வளர்த்தெடுப்பதன் மூலம் ஆங்கில அதிகாரிகளிடத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணினார்.

அயர்லாந்து சென்ற கோகலே அங்கு ஐரிஷ் தேசியவாதியான ஆல்ஃப்ரெட் வெப்பை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பணிபுரிய 1894 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்தார். அதற்கு அடுத்த ஆண்டு, கோகலே திலகருடன் இணைந்து காங்கிரசின் இணைச் செயலாளர் ஆனார். திலகர் மற்றும் கோகலேவின் ஆரம்ப கால தொழில்வாழ்க்கை பல விதங்களில் இணையானதாகவே இருந்து வந்தது. இருவருமே எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்தனர், இருவருமே கணித பேராசிரியர்களானார்கள். டெக்கன் கல்வி அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாகவும் இருவரும் இருந்து வந்தனர். எனினும், இருவருமே காங்கிரசில் ஈடுபட ஆரம்பித்தவுடனே, இருவரது அரசியல் வழிமுறை தொடர்பான அவர்களின் செயல்பாடுகளில் வேறுபட்ட எண்ணங்கள் வெளிப்பட தொடங்கியது.

திலகருடனான கோகலேவின் முதல் முரண்பாடு அவருடைய விருப்பமான செயல்திட்டத்தின் மீது மையம் கொண்டிருந்தது, அது 1891-92 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏஜ் ஆஃப் கன்சன்ட் சட்டமாகும். கோகலே குழுவினர், இந்து மதத்தில் இருந்த மூடநம்பிக்கைகள் மற்றும் இழிவுபடுத்தல்களை தூய்மைப்படுத்த எண்ணி, குழந்தைத் திருமணத்தைத் தடுத்திடும் சட்டத்தை விரும்பினர். திலகர் அதை எதிர்த்தார்.

குழந்தைத் திருமணத்தை நீக்கும் எண்ணத்தை திலகர் எதிர்க்கவில்லை. ஆனால் இந்துக்களின் பாரம்பரியத்தில் ஆங்கிலேயர்கள் தலையிடும் எண்ணத்தை எதிர்த்தார். இத்தகைய சீர்திருத்தங்களை சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியர்கள் தாங்களே செய்து கொள்ள வேண்டும் என்பது திலகரின் கருத்தாக இருந்தது. எனினும் திலகரின் எதிர்ப்புகளுக்கு இடையில் கோகலே குழுவினர் ஆங்கிலேய அரசின் துணையுடன் அதற்கான மசோதாவை பாம்பே பிரெசிடென்சியில் சட்டமாக்கினர்.

1905 ஆம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரசின் தலைவரானார். கோகலே தன்னுடைய புதிய பெரும்பான்மை ஆதரவைப் பயன்படுத்தி தன் நீண்டகால எதிரியான திலகரை வலுவிழக்கச் செய்தார். 1906 ஆம் ஆண்டில் காங்கிரசின் தலைவர் வேட்பாளராக திலகரை ஆதரிக்க மறுத்துவிட்டார். சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரசின் இரு பிரிவுகளுக்குள் பலத்த மோதல் ஏற்பட்டு, காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. கோகலே, திலகர் இருவரும் முறையே காங்கிரசின் மிதவாதி, தீவிரவாதிகளின் தலைவரானார்கள்.

திலகர், ஆங்கிலேயப் பேரரசை வீழ்த்துவதற்கு உள்நாட்டு கலவரம் மற்றும் நேரடி புரட்சியின் ஆதரவாளர், கோகலேவோ ஒரு மிதமான மறுமலர்ச்சியாளர். இதன் விளைவாக காங்கிரஸ் கட்சி இரு பிரிவாக உடைந்து பத்தாண்டு காலத்துக்கு அதன் செயல்பாட்டுத்தன்மையை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. 1916 ஆம் ஆண்டில் கோகலே இறந்த பின்னரே இரு பிரிவுகளும் ஒன்று சேர்ந்தன.

1905 ஆம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தம்முடைய அரசியல் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது, ஏற்கெனவே இருக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியக் குடிமைச் சேவைகள், அரசியல் கல்வியை இந்தியர்கள் பெறுவதற்கான போதிய அளவு வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை என்று எண்ணிய கோகலே 'இந்திய சேவகர்கள்' எனும் அமைப்பினை தொடங்கினார். அதில் சேர்ந்தவர்கள் தங்களின் சொத்துக்களை நாட்டுக்கு எழுதி வைத்து விடவேண்டும். இந்திய சேவகர்கள் அமைப்பு இந்தத் தேவையை நிறைவேற்றும் என்று கோகலே நம்பினார். அதன் பலனாக இந்த அமைப்பு கல்வியறிவை எளிய மக்களுக்கு போதித்தது, நடமாடும் நூலகங்களை ஒருங்கிணைத்தது, பல பள்ளிக்கூடங்களைத் தோற்றுவித்தது. தொழிற்சங்க ஊழியர்களுக்கு இரவு வகுப்புகளை வழங்கியது. கோகலேவின் இறப்பினைத் தொடர்ந்து இந்த அமைப்பு தன்னுடைய வீரியத்தை இழந்தபோதிலும், அது இன்றும் நிலைத்திருக்கிறது.

கோகலே சுதந்திரத்தைப் பற்றி முதன்மையாகக் கவலைப்படவில்லை. ஆனால் சமூக மறுமலர்ச்சியில் அக்கறை கொண்டிருந்தார்; அத்தகைய மறுமலர்ச்சியை ஏற்கனவே இருக்கும் ஆங்கிலேய அரசு நிறுவனங்களுக்குள்ளேயே பணி செய்வதன் மூலம் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று அவர் நம்பினார், இந்த நிலை திலகர் போன்ற அதி தீவிர தேசியவாதிகளிடத்தில் பகைமையை ஏற்படுத்தியது. இத்தகைய எதிர்ப்புகளால் தைரியம் இழக்காமல், தன்னுடைய மறுமலர்ச்சி குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வதற்கு கோகலே தன்னுடைய அரசியல் வாழ்க்கை முழுவதும் ஆங்கிலேயர்களுடன் நேரடியான நட்புறவுடன் பணி செய்தார்.

1899 ஆம் ஆண்டு கோகலே மும்பை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1903, மே 22- ல் அவர் இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவைக்கு மும்பை பிராந்தியத்தை பிரதிநிதிக்கும் வகையில் பதவி வகிக்காத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் பேரரசின் சட்டப்பேரவை 1909-ல் விரிவடைந்த பின்னர் அதில் சேவை புரிந்தார். அங்கு அவர் ஆண்டு வரவு செலவு திட்ட விவாதங்களில் பெரிதும் பங்காற்றினார். இங்கிலாந்து நாட்டின் செயலாளர் லார்ட் ஜான் மார்லேவைச் சந்திக்க லண்டனுக்கு அழைக்கப்படும் அளவுக்கு அவர் ஆங்கிலேயர்களுடன் ஒரு சுமுகமான உறவை உருவாக்கிக் கொண்டார்.

1909 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மிண்டோ-மார்லே திருத்தங்களை செழுமைப்படுத்துவதில் கோகலே இந்த பயணங்களின் போது உதவினார். 1904 ஆம் ஆண்டு, கோகலே CIE (கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி இண்டியன் எம்பையர்) ஆக நியமிக்கப்பட்டார், இது அவருடைய சேவைக்காக ஆங்கிலேயப் பேரரசின் ஒரு முறையான அங்கீகாரமாகும்.

[ நன்றி: தினமணி]

தொடர்புள்ள பதிவுகள்:

கதம்பம்

கோபால கிருஷ்ண கோகலே: பசுபதிவுகள்

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

1472. பாடலும் படமும் - 89

ஆர்கொலோ சதுரர்?


[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

வியாழன், 20 பிப்ரவரி, 2020

1471. கதம்பம் - 4

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி 



பிப்ரவரி 17. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் நினைவு தினம். 'கல்கி'யில் 1969-இல் வந்த ஒரு கட்டுரை இதோ.

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

கதம்பம்

புதன், 19 பிப்ரவரி, 2020

1470. எஸ். வையாபுரிப்பிள்ளை - 5

ஆராய்ச்சி  மன்னர் மறைந்தார்


பிப்ரவரி 17. வையாபுரிப் பிள்ளை அவர்களின் நினைவு தினம் அவர் மறைவுக்குப் பின் 'கல்கி'யில் வந்த அஞ்சலிக் குறிப்பு.


.  [  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort.  Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்:
எஸ். வையாபுரிப்பிள்ளை

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

1469.ரசிகமணி டி.கே. சி. - 8

ரசிகமணி நினைவுகள் -1




பிப்ரவரி 16. டி.கே,சி.யின் நினைவு தினம்.  அவர் மறைவுக்குப் பின் 'கல்கி'யில் வந்த சில பதிவுகள்.



[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
ரசிகமணி டி.கே.சி.

திங்கள், 17 பிப்ரவரி, 2020

1468.சங்கு சுப்பிரமணியம் - 3

சங்கே, நீ ஒலிக்காயோ?
கோமதிஸ்வாமிநாதன்


பிப்ரவரி 15. ‘சங்கு’ சுப்பிரமணியத்தின் நினைவு தினம். அவர் மறைவுக்குப்பின் 'கல்கி'யில் வந்த ஒரு அரிய கட்டுரை. 




[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்

சங்கு சுப்பிரமணியம்

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

1467. சத்தியமூர்த்தி - 13

சிற்பக்கலை, சமூக சேவை, பிச்சைக்காரர் தொல்லை
எஸ். சத்தியமூர்த்தி 




1944-இல் ’சுதேசமித்திர’னில் வந்த மூன்று கடிதங்கள்.








பி.கு.

இந்தக் கடிதங்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எஸ்.நீலமேகம் ( இசை விமர்சகர் “ நீலம்”, சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவும் இருந்தார் ) . நூலாக முதலில் தமிழ்ப் பண்ணையும், பின்னர் கலைமகளும் வெளியிட்டன. 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சத்தியமூர்த்தி