வெள்ளி, 30 ஜூன், 2017

755. சங்கீத சங்கதிகள் - 125

கலாநிதிகள் மறைவு 


ஜூன் 30, 1945. இரு சங்கீத கலாநிதிகள் காலமான தினம். 

இதோ, அச்சமயம் ‘சுதேசமித்திரனில்’ வந்த கட்டுரை.


[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்

வியாழன், 29 ஜூன், 2017

754. கொத்தமங்கலம் சுப்பு - 20

வேம்பண்ணா பட்டணம் பார்க்கிறார் 
கொத்தமங்கலம் சுப்பு 



‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை !





 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

கொத்தமங்கலம் சுப்பு

புதன், 28 ஜூன், 2017

753. திருப்புகழ் - 12

கடல் கடந்த திருப்புகழ்
தாரா கிருஷ்ணன்


அண்மையில் ( 23 -06-2017) முருகன் திருவடியை அடைந்த  திருப்புகழ் குரு தாரா கிருஷ்ணனுக்கு அஞ்சலியாக   ‘திருப்புகழ் வைபவம்’ என்ற திருப்புகழ் அன்பர்களின் 1988 மலரில் அவர் எழுதிய கட்டுரை.
===














[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

செவ்வாய், 27 ஜூன், 2017

752. ச.து.சுப்பிரமணிய யோகி - 2

"பாலபாரதி' ச.து.சுப்பிரமணிய யோகியார்
 பி.தயாளன்


ஜூன் 27. ச.து.சுப்பிரமணிய யோகியாரின் நினைவு தினம்.
====
பாரதிக்குப்பின், தமிழ்க் கவிஞர்களில் சொல்வளமும், பொருட்செறிவும் நிறைந்த கவிதைகளை அளித்தவர்களில் ஒருவர். 20-ஆம் நூற்றாண்டில் இணையற்ற கவிஞராய் விளங்கியவர்; இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; தமிழில் சிறு காப்பியங்கள் இயற்றியவர்; தமிழ்நாட்டில் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்; கம்பர் வழிக் கவிஞர் - என்றெல்லாம் போற்றப்படுபவர், அவரே பைந்தமிழை நேசித்த "பாலபாரதி' ச.து. சுப்பிரமணிய யோகியார்.

  கேரளாவில் உள்ள எல்லப்பள்ளி என்ற சிறிய கிராமத்தில் 1904-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி, துரைசாமி - மீனாட்சியம்மாள் தம்பதிக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். ஆனால் அது நாளடைவில் சங்ககிரி துரைசாமி சுப்பிரமணிய யோகியார் என்றானது. வழக்குரைஞராகப் பணிபுரிந்த தமது தந்தையிடம், ஆங்கிலம் கற்றார். தந்தை திடீரென்று காலமாகிவிட்டதால், குடும்பம் சங்ககிரிக்குக் குடிபெயர்ந்தது.

  சங்ககிரி தொடக்கப் பள்ளியிலும் பின்னர் ஈரோடு மகாஜன உயர்நிலைப் பள்ளியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார். இளமையிலேயே தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்று விளங்கினார் யோகியார். தமது ஒன்பதாவது வயதில் பாரதியைப் போல, "பாலபாரதி' எனும் பட்டம் பெற்றார்.

  1925-ஆம் ஆண்டு கமலாம்பாள் என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.

  உதகமண்டலம் காவல்துறை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, காந்தியடிகள் ஊட்டிய விடுதலை வேட்கை, யோகியாரை, அரசாங்க வேலையைத் தூக்கியெறியச் செய்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டம் கொள்ளவைத்தது.

  சென்னையில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார் யோகியார். பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

  1932-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி ஈரோட்டில் நடந்த மறியல் போராட்டத்தில், தடையை மீறிக் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார், ராஜாஜி ஆகியோருடன் சிறையில் இருந்துள்ளார் யோகியார். தனது சிறை அனுபவங்களை, ""சிறைச்சாலை ஓர் தவச்சாலை; அது ஒரு "புன்மைக் கோட்டம்'; இழிவுக்குகை; ஆனால், அதுவே நமது சுதந்திர தேவியின் கோயில் வாயில்! அடிமைத்தனத்தின் குறுகிய சந்துகளில் சென்றால்தான், நாம் அழகிய அகண்ட விடுதலையின் ராஜபாட்டையில் நடக்க முடியும். ஆகவே, சிறைச்சாலையை நான் வணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்; போற்றுகிறேன்; சிறைகள் நீடு வாழ்க!'' என, "எனது சிறைவாசம்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

  நூலகம் சென்று நூல்களை ஆழ்ந்து படிப்பார் யோகியார். கண்டதும் கற்பார்; கண்டதையும் கற்பார். எறும்பின் வாழ்க்கை தொடங்கி விண்ணில் விரையும் விண்கலம்வரை, நன்கு கற்றறிந்தவர் யோகியார்.

  "தேசபக்த கீதம்' என்ற கவிதை நூலை 1924-ஆம் ஆண்டு, முதன் முதலாக வெளியிட்டார். "புதுமை', "பித்தன்', "குடிநூல்', "குமாரவிகடன்', "சுதந்திர சங்கு', "ஆனந்தபோதினி' ஆகிய இதழ்களில் ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ள யோகியார், இந்து நாளிதழில் தமிழ் மற்றும் ஆங்கில நூல்களுக்கு விமர்சன உரையும் எழுதியுள்ளார்.

  ""யோகியாரின் விமர்சனம் யார் மனதையும் புண்படுத்தாது, வசைபாடாது. தவறு இருந்தால் நாசூக்காகச் சுட்டிக்காட்டும் தன்மையுடையது. எந்த விதத்திலும் எழுத்தாளரின் மனம் நோகும் வண்ணம் அதில் ஓர் எழுத்துக் கூட இருக்காது'' எனக் கவிஞர் கண்ணதாசன், யோகியாரின் விமர்சனம் குறித்து கருத்துரைத்துள்ளார்.

""சாதிச் சேற்றில் சமயத்தின் குப்பையில்
சாத்திரக் கந்தலில் தடுமாறக் கூடாதென்றும்''

  என்பது யோகியாரின் கவிதை வரிகள். ""கவிதை மனிதனை உயர்த்த வேண்டும். உள்ளங்களை உருக்க வேண்டும், புதுப்பாதை காட்ட வேண்டும். சமுதாயத் தீமைகளைச் சாட வேண்டும். சமுதாயத் தேவைகளை எடுத்துரைக்க வேண்டும்'' என்பார் யோகியார்.

  1935-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் பொன்விழா கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார்!

  தேசபக்த கீதம், தமிழ்க்குமரி, கதையைக் கேளடா தமிழா ஆகிய கவிதை நூல்களையும், "கவி உலகில் கம்பர்' என்ற உரைநடை நூலையும், "குளத்தங்கரைக் குயில்கள்', "மரண தாண்டவம்' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், "காமினி', "பவானி', "நவபாரதம்' ஆகிய கவிதை நாடகங்களையும், "எனது சிறைவாசம்' என்ற தன் வரலாற்றையும், "கவிபாரதி' என்ற திறனாய்வையும், "கொங்கர் குறவஞ்சி' என்ற நாட்டிய நாடகத்தையும் அளித்து, இலக்கியத் தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளார் யோகியார்.

  ஆங்கிலத்திலிருந்து, "ரூபையாத்', "மனிதனைப் பாடுவேன்', "அத்தர்', "இதுதான் ருசியா', "கடலும் கிழவனும்', "மான்குட்டி' ஆகிய நூல்களைத் தமிழுக்கு மொழிமாற்றம் செய்துள்ளார். மேனாட்டுக் கவிஞர்கள், வால்விட்மேன், ஹெமிங்வே ஆகியோரது ஆங்கிலக் கவிதைகளையும் தமிழில் கவிதை வடிவிலே மொழி பெயர்த்து அளித்துள்ளார்.

  காரைசித்தர் எழுதிய "கனகவைப்பு' என்ற தமிழ் நூலையும், கம்பராமாயணத்தில், "சீதா கல்யாணம்' என்ற பகுதியையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளித்துள்ளார். சாத்தனார் எழுதிய கூத்த நூலுக்கு (பரதநாட்டியம் பற்றியது) பொழிப்புரையும் பதவுரையும் எழுதியுள்ளார்.
  புதுதில்லியில் சுதந்திர தினக் கவிதையை அப்போதைய பிரதமராக இருந்த நேரு முன்னிலையில் பாடி, பாராட்டைப் பெற்றார். அவரது அக்கவிதை, தமிழிலும், ஆங்கிலத்திலும் அகில இந்திய வானொலியில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது.

  இரு சகோதரர்கள், பக்த அருணகிரி, அதிர்ஷ்டம், கிருஷ்ணகுமார், லஷ்மி, கிருஷ்ணபக்தி ஆகிய தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியதுடன், அவற்றைத் தானே இயக்கியும் உள்ளார். திரைப்படத்தின் மூலம் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பி, அரும்பாடு பட்டுள்ளார் யோகியார்.

  1963-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம், யோகியாருக்கு, சிறந்த திரைப்பட வசன கர்த்தாவுக்கான தங்கப் பதக்கம் வழங்கிப் பாராட்டியது. மேலும் யோகியாரின் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  ""சொல்லினாலே கவி சொல்ல வந்தேன்'' என்று வாழ்ந்து, தமிழுக்குத் தொண்டாற்றிய யோகியார், தமது 59 வயதில் 1963-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி காலமானார். யோகியார் மறைந்தாலும் அவரது தமிழ்த் தொண்டினால் அவரது பெயர், தமிழ் இலக்கிய உலகில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

ச.து.சுப்பிரமணிய யோகி

சனி, 24 ஜூன், 2017

751. 'சிட்டி' சுந்தரராஜன் -3

பெயரும் பாத்திரமும் 
“சிட்டி”



ஜூன் 24. ‘சிட்டி’ அவர்களின் நினைவு தினம்.

1938-இல் ‘பாரதமணி’யில் வந்த ஒரு கட்டுரை.




[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]



தொடர்புள்ள பதிவுகள்:

'சிட்டி' சுந்தரராஜன்

வெள்ளி, 23 ஜூன், 2017

750. தேவன்: துப்பறியும் சாம்பு - 8: மாங்குடி மகராஜன்

மாங்குடி மகராஜன் 
தேவன் - கோபுலு 

இந்தப் பதிவுக்குக் காரணங்கள் இரண்டு!

1) போன மாதம் நான் படித்த ஒரு செய்தித் தலைப்பு:
'துப்பறியும் சாம்பு' விஷால்

அட, “துப்பறிவாளன்” படத்தின் இயக்குநர் மிஷ்கினுக்குத் “துப்பறியும் சாம்பு” பற்றித் தெரிந்திருக்கிறதே என்று மகிழ்ந்தேன்!


2) இந்த மாதம், டொராண்டோவில் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதைப் பெற வந்த மிஷ்கினை நேரில் சந்தித்தேன்!

3)  சரி,  மூன்றாவதாக என் பதிவாக ஒரு ‘சாம்பு’க் கதை வருவதுதானே பொருத்தம் ?

இதோ அது!

இது தேவனின்  ‘துப்பறியும் சாம்பு’ கதைகளில் (1942) இரண்டாவது கதை. கோபுலுவின் காமிக்ஸ் வடிவம் 58 -இல் விகடன் இதழிலும், பிறகு மீண்டும் ’விகடன் பேப்பரில்’ 97-இலும் வந்தது. இந்தச் சித்திரத் தொடர் இன்னும் நூலாக வெளிவரவில்லை.

முதல் ‘சாம்பு’க் கதையின் படவடிவை இங்கே  பார்க்கலாம்.








[ படம் : நன்றி , புகாரி ]

 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


வியாழன், 22 ஜூன், 2017

749. கண்ணதாசன் - 3

பிரிவு 
கண்ணதாசன் 



1945-இல் ‘திருமகள்’ இதழில் கண்ணதாசன் எழுதிய கவிதைகள்:





   
[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
கண்ணதாசன்

புதன், 21 ஜூன், 2017

748. ராஜாஜி - 7

ராஜாஜி : சில நினைவுகள் -2 
சுப்புடு

ஜூன் 21, 1948.  ராஜாஜி இந்தியாவின்  கவர்னர்-ஜெனரலாகப் பதவி ஏற்றுக் கொண்ட நாள்.





ராஜாஜி : சில நினைவுகள் -1





  [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

ராஜாஜி
சுப்புடு

செவ்வாய், 20 ஜூன், 2017

747. ம.பொ.சி - 6

எழுத்தாளர் தீர்ப்பு!
ம.பொ.சிவஞானம் 


1947  ‘சக்தி’ பொங்கல் மலரில் வந்த ஒரு கட்டுரை:




 
  [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:



திங்கள், 19 ஜூன், 2017

746. சின்ன அண்ணாமலை - 4

தமிழ்ப்பண்ணை
சின்ன அண்ணாமலை 



ஜூன் 18, 1920. சின்ன அண்ணாமலையாரின் பிறந்த தினம்.
ஜூன் 18, 1980.  அவர் காலமான தினம்.

சிறுவயதில், அவருடைய “ தமிழ்ப்பண்ணை”யிலிருந்து நான் வாங்கிய நூல்கள் பல!  இன்றும் பனகல் பார்க் ( சென்னை, தியாகராயநகர் )  பக்கம் போனால் அதன் நினைவும், அவர் நினைவும் எனக்கு வராமல் போவதில்லை.



 இதோ ‘தமிழ்ப்பண்ணை’யைப் பற்றி அவர் எழுதின ஒரு கட்டுரை:
======

சென்னைக்கு வந்துவிட்டேன். என்ன செய்வது என்று திகைத்திருக்கையில் திரு.ஏ.கே.செட்டியார் அவர்கள் என்னைத் தன் வீட்டில் கூட்டிக் கொண்டு போய் வைத்துக் கொண்டார்.

திரு.ஏ.கே.செட்டியார் அவர்கள் ’உலகம் சுற்றும் தமிழன்' என்று புகழ் பெற்றவர், பிரயாணக்கட்டுரைகளை மிகவும் சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர். 'குமரி மலர் என்ற அற்புதமான மாத இதழ் நடத்திக் கொண்டிருந்தார்.

அவருடன் கூடவே அவர் செல்லுமிடமெல்லாம் கூட்டிச் சென்று என்னை அறிமுகம் செய்து வைப்பார். அடிக்கடி ’சக்தி’ காரியாலயத்திற்குச் செல்வோம். சக்தி வை.கோவிந்தன் அவர்கள் எனக்கு ஏற்கனவே பழக்கமானவர். தமிழ்ப் புத்தகங்களை அழகிய முறையில் போடுவதற்கு முன்னோடி அவர் தான். ஏராளமான தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டவர். திரு.ஏ.கே.செட்டியார். சக்தி வை. கோவிந்தன் இவர்களுடன் எப்பொழுதும் கூட இருக்கும் நண்பர் சத்ருக்கனன் அச்சுத் தொழிலில் பெரிய திறமைசாலி. இந்த மூவரும் இணை பிரியாத நண்பர்கள், இவர்கள் மூவரும் ஏனோ என்னிடம் மிகுந்த பாசம் காட்டினார்கள். தங்களின் செல்லப்பிள்ளை'யாக என்னைக் கட்டிக் காத்தார்கள்.

இவர்கள் அடிக்கடி போகும் இடம் தியாகராய நகரில் உஸ்மான் ரோடில் இருந்த திரு.வெ.சாமிநாத சர்மா அவர்களின் இல்லத்திற்குத்தான் இவர்களுடன் நானும் செல்வேன். ஒரு நாள் நாங்கள் பஸ்ஸில் திரு.சாமிநாதசர்மா அவர்களின் இல்லத்திற்குப் போகும்போது தியாகராய நகர் பனகல்பார்க் நாகேஸ்வரராவ் தெருவில் ஒரு சிறு அழகிய கட்டிடம் பூட்டிக் கிடந்தது. அதைப் பார்த்த மூவரும் என்னைக் கூட்டிக் கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கினார்கள்.

அந்தக் கட்டிடம் காலியாக இருப்பதை விசாரித்து தெரிந்துகொண்டு, இதில் நம் அண்ணாமலைக்கு தமிழ்ப் பண்ணை புத்தக நிலையம் வைத்துக் கொடுக்கலாம் என்று அவர்களுக்குள் பேசி முடிவு செய்தார்கள். என்னிடம் விஷயத்தைச் சொன்னபோது, நான், "என்னிடம் போதியபணம் இல்லையே, என்ன செய்வது?" என்று கையைப் பிசைந்தேன்.

அவர்கள் மூவரும் சிரித்துவிட்டு 'நாங்கள் உனக்கு வேண்டிய உதவி செய்கிறோம் தைரியமாகத் தொழிலை ஆரம்பி" என்றார்கள்.

இடத்தைப் பிடித்துக் கொடுத்தார்கள். பல புத்தகக் கம்பெனிகளில் புத்தகங்களை ஏராளமாக வாங்கிக் கொடுத்தார்கள். புத்தகம் போட பேப்பர் தந்தார்கள். அடடா அவர்கள் செய்த உதவியை நினைத்தால் இப்பொழுதுகூட என் மெய்சிலிர்க்கிறது.

'தமிழ்ப்பண்ணை’யை ராஜாஜி துவக்கி வைத்தார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை விளக்கேற்றி வைத்தார். சக்தி வை. கோவிந்தன் புதுக்கணக்கு எழுதினார்.

எழுத்தாளர்கள் அனைவரும் விழாவிற்கு வந்தனர்.

தமிழ்ப்பண்ணையின் முதல் புத்தகமான ”தமிழன் இதயம்” என்ற நூலைப் பார்த்து அனைவரும் பிரமிப்படைந்தனர். அப்புத்தகத்தை மிகஅழகாகப் போட்டுக் கொடுத்தவர் சக்தி வை. கோவிந்தன் அவர்கள்.

அதன்மேல் அட்டையை கண் கவரும் வண்ணம் அச்சடித்துக் கொடுத்தவர் திரு.சத்ருக்கனன் அவர்கள். தமிழ்ப்பண்ணை எழுத்தாளர்களுக்கும், தேச பக்தர்களுக்கும் நிழல் கொடுத்து வந்தது. தமிழ்ப்பண்ணையின் மூலம் அரிய பெரிய காரியங்களைச் சாதிக்க முடிந்தது.

'நாமக்கல் கவிஞருக்குப் பண முடிப்பு அளிக்க முடிந்தது. அதைப் பார்த்த திரு.சி.என்.அண்ணாதுரை அவர்கள் என்னை நேரில் வந்து பாராட்டி விட்டு, தானும் பாரதிதாசனுக்கு அப்படி ஒரு நிதி அளிக்க வேண்டும். அதற்கும் கூடவே இருந்து உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பின்னர் பலமுறை திரு.அண்ணாதுரை அவர்கள் சார்பில், திரு.என்.வி. நடராஜன் என்னைப் பலமுறை வந்து சந்தித்து பாரதிதாசன் நிதி அளிப்பு விழாவைச் சிறப்பாக நடத்தினார்கள்.

ராஜாஜியின் நூல்கள், கல்கி கிருஷ்ணமூர்த்தி, வ.ரா., டி.எஸ்.சொக்கலிங்கம், பொ.திருகூடசுந்தரம் பிள்ளை, நாடோடி, தி.ஜ.ர. இப்படி ஏராளமானவர்களின் நூல்களை வெளியிட்டு, பெரிய விழாக்கள் நடத்தி எழுத்தாளர்களுக்குக் கெளரவம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தியது தமிழ்ப் பண்ணையே!


 ஆண்டுதோறும் பாரதிவிழா, பாரதி பாட்டுப்போட்டி, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டன. திரு.வி.க. மணிவிழாவை மிகச் சிறப்பாக நடத்தியது தமிழ்ப் பண்ணையே! காந்தியடிகளின் 'ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் நடத்தியதும் தமிழ்ப் பண்ணையே!

தமிழ்ப்பண்ணைக்கு அடிக்கடி புத்தகம் வாங்க வருவார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள். அவருடன் நெருங்கிய பழக்கம் எனக்கு அப்பொழுதுதான் ஏற்பட்டது.

தமிழ்ப்பண்ணை புத்தகப் பதிப்பகத்திற்கு எல்லாத் தமிழ் எழுத்தாளர்களும் வருவார்கள். தவறாமல் வ.ரா., புதுமைப் பித்தன், தி.ஜ.ர.முதலியவர்கள் வருவார்கள். வ.ரா.சத்தம் போட்டுத்தான் பேசுவார். யாரும் அவருக்கு நிகரில்லை. புதுமைப் பித்தனோ ரொம்பக் கிண்டலாகப் பேசுவார். தி.ஜ.ர.எதுவும் பேசமாட்டார். அப்படிப் பேசினாலும் ரொம்ப மெதுவாகப் பேசுவார்.

ஒருநாள் நான் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும் போது வ.ரா.வந்தார். "என்னடா எழுதுகிறாய்" என்று கேட்டார். 'ஒரு பிரயாணக் கட்டுரை எழுதுகிறேன்' என்றேன். 'கொடு பார்க்கலாம்  " என்றார். கொடுத்தேன். 'டேய்! நீ பெரிய ஆளுடா, என்னமா எழுதியிருக்கிறாய்' என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தபோது தி.ஜ.ர.வந்து விட்டார்."பார்த்தியா, இதைப் பார்த்தியா' என்று தி.ஜ.ர.விடம் நான் எழுதியதைக் காட்டி வ.ரா.புகழ ஆரம்பித்தார்.

தி.ஜ.ர. அதைப் படித்துப் பார்த்து, 'நன்றாகத்தான் இருக்கிறது" என்றார். "சும்மா சொல்லி விட்டுப் போகாதே. சக்தி' பத்திரிகையில் இவனிடம் கட்டுரை வாங்கிப் போடு" என்று வ.ரா. சொன்னார். எனக்கு மெய் சிலிர்த்தது. அவர் பெரிய எழுத்தாளர் மட்டுமல்ல, பெரிய மனது உடையவர், நான் எழுதிய அந்தக் கட்டுரையின் ஆரம்பம் இது தான்.

"கட்டுரையாகட்டும் கதையாகட்டும் ! வேகமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டுமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அதனால் இக்கட்டுரையைத் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் ஆரம்பிக்கிறேன்"

அவர் சொற்படி பின்னர் சக்தி பத்திரிகையில் எனது கட்டுரையை தி.ஜ.ர.நிறைய வெளியிட்டார். அதன் பின்னர்கல்கி பத்திரிகையில் எனது கதைகளும் கட்டுரைகளும் வெளி வந்தன. எனது முதல் புத்தகத்தின் பெயர் "சீனத்துச் சிங்காரி'

சொன்னால் நம்பமாட்டீர்கள்!  அந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியவர் பேராசிரியர் சீநிவாசராகவன் அவர்கள்.  அவர் என்னை ஒரு "சிறுகதை மன்னன்” என்று நிரூபிப்பதற்கு பெரிய ஆராய்ச்சி செய்து ஒரு அருமையான கட்டுரையை முன்னுரையாக அதில் எழுதியிருக்கிறார்


தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை