ஏ.கே.சேகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏ.கே.சேகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 ஜூன், 2022

2138. ராஜாஜி - 11

எங்கள் சிவப்பு அனுமார்

ராஜாஜி 






ஏ.கே.சேகரின் அருமையான படங்களுடன், 1940 விகடன் தீபாவளி மலரில் வந்த மூலக் கட்டுரை. 






 [ நன்றி:  விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
 

தொடர்புள்ள பதிவுகள்:

ராஜாஜி

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


திங்கள், 11 ஏப்ரல், 2022

2077. பி.ஸ்ரீ - 28

தர்ம மூர்த்தியைத் தந்த தர்ம மூர்த்தி

பி.ஸ்ரீ


'சித்திர ராமாயணம்' தொடரில் 1944-இல் வந்த விகடன்  இதழ்களிலிருந்து.

====

தசரத சக்கரவர்த்தியை ராமனுடைய தந்தை என்று தான் அறிமுகப்படுத்துகிறான் கம்பன்.

இம்மாண் கதைக்(கு) ஓர்

இறையாய இராமன்

என்னும்

மொய்ம்மாண் கழலோன்

தருநல்லற மூர்த்தி

அன்னான்.

ராமனைப் பெற்ற பெருமை தசரதனுக்குத்தானே? எனவே, தர்ம மூர்த்தியைத் தந்த தர்ம மூர்த்தி  என்கிறான். ''கங்கையின் உற்பத்தி' 'காவேரியின் உற்பத்தி' என்றெல்லாம் கெளரவிப்பதில்லையா? இந்தப் புண்ணிய நதிகளின் பெருமை முழுவதும் அந்த உற்பத்தி ஸ்தானங்களிலே காணப்படுகிறதா?

இப்படி ராமனின் தந்தையென்று தசரதனைக் கௌரவிக்கும் கவிஞன், இங்கே இந்தச் சக்கரவர்த்தி யின் முன்னோரைக் குறித்துப் பேசாததில் அதிசயம் இல்லை. மனு, இட்சுவாகு, மாந்தாதா, சிபி முதலான அந்தப் பெரிய பெரிய சக்கரவர்த்திகளின் வம்சப் பிரவாகத்தோடு வந்த பெருமையைக் காட்டிலும் எவ்வளவோ மேலானதல்லவா, சந்ததியாக ராமனைப் பெற்றுத் தசரதன் அடையப் போகும் பெருமை, அடையப் போகும் பாக்கியம்?!

அரசன் ஆட்சி செய்யவில்லை!

எனவே, இந்த 'அரசியல் படல’த்திலே 'குலமுறை’யாக வந்த பெருமை பேசப்படவில்லை. அந்தப் பிரமாண்டமான அரண்மனை கூட வர்ணிக்கப்படவில்லை. அந்தக் கொலு மண்டபமும்  ஏன்? அந்தச் சிங்காசனம் கூட  வர்ணிக்கப்படவில்லை. ராஜரீக ஆடம்பரங்களாவது, அதிகார படாடோபங்களாவது பிரஸ்தாபிக்கப்படவுமில்லை.

ராஜரீக ஆடம்பர மாட்சிகளிலே ராஜதர்மம் மறைந்து போகிறது; மறந்தும் போகிறது ராஜாக்களுக்கும் ராஜதந்திரிகளுக்கும். தசரதனோ, ராஜ குணங்களெல்லாம் தனக்குப் பணி செய்ய தான் ஜனங்களுக்குப் பணி செய்து வருகிறானாம். தசரத மன்னன் ஆட்சி செய்யவில்லை; பணி செய்கிறான்: இதுதான் இந்த மன்னன் மாட்சி!  என்கிறான் கவிஞன்.

 

[ ஓவியம்: ஏ.கே.சேகர் ]


இந்த மாட்சியைப் பாருங்கள்; அன்புப் பணியைப் பாருங்கள்;

தாய்ஒக்கும் அன்பின்;

தவம்ஒக்கும் நலம்ப யப்பின்;

சேய்ஒக்கும் முன்நின்(று)

ஒருசெல்கதி உய்க்கும்

நீரால்;

அன்பின் சிகரமல்லவா தாயன்பு? குழந்தைகளுக்குத் தாய் எப்படியெல்லாம் பணி செய்கிறாள்! எப்படிப்பட்ட தியாகங்களையும் அனாயாசமாய்ச் செய்து விடுகிறாளல்லவா? அப்படியெல்லாம் அன்புப் பணிகள் செய்கிறானாம் தசரதனும் தன் மக்களுக்கு.

பாக்கியத்திலே பங்கு

ஒரு பகல் உலகெலாம்

உதரத் துள்பொதிந்(து)

அருமறைக்(கு) உணர்வரும்

அவனை, அஞ்சனக்

கருமுகில் கொழுந்(து)எழில்

காட்டும் சோதியைத்

திருவுறப் பயந்தனள்,

திறம்கொள் கோசலை.

உலகங்களையெல்லாம் தன் வயிற்றிலே அடக்கி வைத்துக் காப்பாற்றிய அகில லோக ஜோதியாகிய பெருமாளையே கௌசலை தன் வயிற்றில் அடக்கி வைத்திருந்து பெற்றெடுத்தாளாம், பிள்ளையாக, எப்பேர்ப்பட்ட பாக்கியசாலி!

பாக்கியம் இவளுக்குத்தானா? கோசல நாட்டிற்கு மட்டுமா? இந்த உலகத்திற்கு மட்டுமா? பகவான், வயிற்றிலே வைத்து ரட்சிக்கிறானே அருமையாக, அந்த உலகங்களெல்லாம் பங்கு கொண்டனவாம் கௌசல்யா தேவியின் பாக்கியத்திலே. இவளுடைய புத்திர சம்பத்து, உலக மக்களுக்கெல்லாம் இகபர சம்பத்தாயிற்று! சாதுக்களுக்கெல்லாம் ஆத்ம சம்பத்தாகி விட்டது!

கைகேயி பரதனைப் பெற்றாள். சுமித்திராதேவி லட்சுமணனையும், சத்ருக்னனையும் பெற்றாள்.

இப்படித் தசரதனுக்கு நாலு பிள்ளைகள் பிறந்ததும், மண்ணுலகத்தோடு மேலுலகமும் ஆடிப் பாடி ஆனந்தம் அடைந்ததாம். ''துஷ்ட ராட்சஸர்கள் தொலைந்தே போனார்கள்!' என்று:

ஆடினர் அரம்பையர்;

அமுத ஏழிசை

பாடினர் கின்னரர்;

துவைத்த, பல்லியம்;

'வீடினர் அரக்கர்’ என்(று)

உவக்கும் விம்மலால்,

ஓடினர்; உலவினர்

உம்பர் முற்றுமே!

ஞான வசீகரம்

பிள்ளைகள் ஆண்டிலும் வளர்ந்து, அழகிலும் வளர்ந்து அறிவிலும் வளர்ந்து வருகிறார்கள், வசிஷ்ட முனிவனுடைய குரு குலத்திலே. அக அழகிலும் புற அழகிலும் ஒருங்கே வளர்ந்து வருகிறார்கள்,  'என்ன அதிசயமான குரு குலக் கல்வி?’ என்று பிரமிக்கும்படி. இவர்களில், ராம லட்சுமணர்கள் ஒருவரை யொருவர் பிரிவதில்லை; ஆறு, குளம், சோலை முதலான இடங்களில் விளையாடும்போதும் பிரிவதில்லை.

அப்படியே பரத சத்ருக்னர்களும் ஒருவரை யொருவர் பிரியாமலே கல்வி கற்று வந்தார்கள்; குதிரையேற்றம் முதலான போர்க் கலைகளில் பயிற்சி பெறும்போதும் பிரியாமலேயிருந்தார்கள். இத்தகைய குருகுலக் கல்வியால் கிடைத்த ஞான சௌந்தரியமும் ராமனுடைய வசீகர சக்தியை அதிகப்படுத்தியிருக்க வேண்டும்.

[ நன்றி: சக்தி விகடன் ]


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி.ஸ்ரீ படைப்புகள்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


புதன், 3 நவம்பர், 2021

1962. தீபாவளி மலரிதழ்கள் - 6

 "விகடன்" 1938 மலர் - 1

          


மலரிலிருந்து முதல் தொகுப்பு. 


[ ஓவியம்: வர்மா, ஆசிரியர் கல்கி எழுதியிருப்பார் என்று எண்ணுகிறேன்]

[ ஓவியம்: எல்.கே.தாஸ் ]










[ ஓவியங்கள்; ஏ.கே.சேகர்]

[ ஓவியம்: மாலி ]




[ ஓவியம்: ஏ.கே.சேகர் ]
( தொடரும்)

38 விகடன் மலரின் வேறு சில  பக்கங்கள்

பாடலும் படமும் - 4 : கவிமணி

1213. பாடலும் படமும் - 52: எஸ்.ராஜம்

சங்கீத முக பாவங்கள் : போட்டோ மாலி

சங்கீத சங்கதிகள் - 8: விக்டர் பரஞ்சோதி  

சங்கீத சங்கதிகள் - 6: அரியக்குடி


( தொடரும்) 

[ மாலியின் வண்ணப் படம்: நன்றி: வள்ளியப்பன் ராமநாதன்]


[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:


தீபாவளி மலர்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

1925. பாடலும் படமும் - 139

 கெடுக சிந்தை கடிது இவள் துணிவே


1936-ஆம் ஆண்டில் வந்த ஒரு  'விகடன்' இதழின் அட்டைப் படம். ஏ.கே.சேகர் வரைந்திருப்பார் என்று எண்ணுகிறேன். 'கல்கி' ஆசிரியராய் இருந்த சமயம். 

கெடுக சிந்தை கடிது இவள் துணிவே: 

மூதில் மகளிராதல் தகுமே: 

மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை, 

யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே, 

நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன், 

பெரு நிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே, 

இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி, 

வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇப், 

பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி, 

ஒரு மகன் அல்லது இல்லோள், 

செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே!

                                     - ஒக்கூர் மாசாத்தியார்( புறநானூறு) --

பொருள்:

இவளது சிந்தை மிகவும் கொடியது; இவள் துணிவு மிகக் கடுமையானது. முதிய மறக்குடியில் பிறந்தவள் என்ற சிறப்புக்கு இவள் மிகவும் பொருத்தமானவளே.

முன்னாளில் உண்டான போரில் இவள் தந்தை யானையைக்  கொன்று தானும் களத்தில் வீழ்ந்து மாண்டான்.  நேற்று நடந்த போரில் இவள் கணவன் பசு நிரைகளை மீட்கச் சென்றவன்  மாண்டான். 

இன்றும் போர்ப் பறை கேட்டு விருப்பமுற்று அறிவு மயங்கி வேலைக் கையில் தந்து வெண்மையான ஆடையை விரித்து உடுத்திப் பரட்டைத் தலை மயிர் முடியை எண்ணெய் இட்டு வாரி முடித்துக் குடிக்கு ஒரே மகன் அவனைச் போர்முகம் நோக்கிச் செல்க என்று அனுப்பி வைக்கிறாள்.

தொடர்புள்ள பதிவுகள்:

ஏ.கே.சேகர்


ஓவிய உலா 

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 27 நவம்பர், 2018

1188. பாடலும் படமும் - 50

சிங்கமும் சிறுவனும் 

[ நன்றி: வள்ளியப்பன் ராமநாதன் ]

இது ஏ.கே.சேகர் வரைந்த ஓர் அற்புத ஓவியம். 1938-இல் விகடன் தீபாவளி மலரில் வந்த முகப்பு ஓவியம்.  ஜெமினியில் ஆர்ட் டைரக்டராய்த் திகழ்ந்த சேகர் விகடனின் தொடக்க வருடங்களில் நிறைய ஓவியங்களை விகடனில் வரைந்துள்ளார். பிரபலமாய் இருந்த ‘சித்திர ராமாய’ணத்தில் முதலில்  ஓவியங்கள் வரைந்தவர் இவர்தாம். 

இதற்கு விகடனில் வந்த சித்திர விளக்கம் என்ன தெரியுமா? கீழே படியுங்கள்! இது இந்திய விடுதலைக்கு முன் வந்தது என்பதையும் நினைவில் கொண்டு!
======

சிங்கமும் சிறுவனும் 

“ சகுந்தலை பெற்ற பிள்ளை - சிங்கத்தினைத் 
       தட்டி விளையாடி - நன் (று)
உகந்ததோர் பிள்ளை முன்பாரத ராணி
       ஒளியுறப் பெற்ற பிள்ளை”  
                                                                 - பாரதி -

சிங்கத்தோடு விளையாடும் இந்தச் சிறுவனைப்  பாருங்கள், “ பயமென்றால், அது என்ன? வேறு எப்படி யிருக்கும்? அப்படியொன்று இருக்கிறதா? இருக்க முடியுமா? “ என்றெல்லாம் கேட்கக் கூடிய பிள்ளையென்று தோன்றுகிறதல்லவா?

இவந்தான் சகுந்தலை பெற்ற பிள்ளை, பரதன், - பரத நாட்டுச் சிறுவர்களின் லட்சியம். இப்படிப்பட்ட பிள்ளைகளே பாரத ராணியை ராணியாக்கினார்கள். மகுட பங்கம் செய்யப்பட்டிருக்கும் தாய்க்கு மறுபடி முடி சூட்டக் கூடியவர்களும் இத்தகைய பரதர்களே!

‘ பாரதராணி ஒளியுறப் பெற்ற பிள்ளை’ என்று கருதத்தக்க காங்கிரஸ், இன்று பிரிட்டிஷ் சிங்கத்துடன் ‘தட்டி விளையாடி’க் கொண்டிருக்கிறது என்றும் சொல்லலாமல்லவா? 
====
‘ கல்கி’ விகடன் ஆசிரியராய் இருந்த காலம் அது. ஒருவேளை அவரோ, பி.ஸ்ரீ. யோ இதை எழுதியிருக்கலாம்.


தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

பி.ஸ்ரீ. -12 :கம்பன் கண்ட சித்திரசாலை

சித்திர ராமாயணம்   
கம்பன் கண்ட சித்திரசாலை  
பி.ஸ்ரீ

ஏப்ரல் 16. பி.ஸ்ரீ. அவர்களின் பிறந்த நாள்.

அவர் நினைவில், இதோ அவர் விகடனில் எழுதிய ‘சித்திர ராமாயணம்’ தொடரின் முதல் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி: ( சித்திர ராமாயணம் 1944-இல் தொடங்கினது. முதலில் ஓவியங்கள் வரைந்தவர் ஏ.கே.சேகர்; பின்னர் ‘சித்திரலேகா’.]
=============
[  ஓவியம்: ஏ.கே.சேகர் ]

கும்பகோணத்திலுள்ள ஸ்ரீ ராமஸ்வாமி கோயிலின் உட்சுவர்களில் ராமாயணக் காட்சிகள் சித்திரிக்கப் பட்டிருக்கின்றன. அந்தக் கோயில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது என்றும், அந்த ராமாயணச் சித்திரங்கள் விஜயநகர மகாராஜ்ய காலத்துச் சித்திரங்கள் என்றும் சொல்லுகிறார்கள். ராமாயணக் கதை முழுவதும் 220 சித்திரங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கும்பகோணம் கோயிலில் உள்ள சித்திரங்கள் சில நூற்றாண்டுகளுக்குள்ளே ஒளி மழுங்கிப் போய்விட்டன. அவற்றைச் சமீப காலத்திலேதான் புதுப்பித்து வைத்திருக்கிறார்கள். பல நூற்றாண்டுகள் கழிந்தும் ஒளி குன்றாத  அழகு மங்காத  சித்திரங்களும் உண்டு; அவை நமது நாட்டிலும் காணப்படுகின்றன. எனினும், எந்தச் சித்திரமும் எப்போதும் அப்படியே பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா?

ஆனால், ஒரு சித்திரக்காரன்  சுமார் 800 வருஷங்களுக்கு முன் இருந்தவன்   என்றும் அழியாத சித்திரங்கள் எழுத வேணுமென்று ஆசைப்பட்டான். அவன் அந்தச் சித்திரங்களை உண்மையில் எழுதிவைக்கவில்லை; பாடி வைத்தான்! ''ஓஹோ! கவிச் சித்திரங்களா!' என்று உடனே கேட்கத் தோன்றுகிறதல்லவா? ஆம்; அவனுடைய சித்திரங்கள் 'பாடும்’ சித்திரங்கள்  'ஆடும்’ சித்திரங்கள் என்றும் சொல்லலாம். என்ன? அந்தச் சித்திரக்காரன் யார்?

மேடும் குளமும்
கும்பகோணத்திலிருந்து சுமார் பதினெட்டு மைல் தூரத்திலே தேரழுந்தூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது. பெரிய கிராமந்தான்; கும்பகோணம்போல் பிரசித்தமான ஊரன்று. அதன் சரியான பெயர் திருஅழுந்தூர் அல்லது திருவழுந்தூர்; அழுந்தை என்று தேவாரத்திலே திருஞானசம்பந்தர் பாடியிருக்கிறார். அந்த ஊரைச் சேர்ந்தவன்தான் மேலே சொன்ன சித்திரக்காரன். அவ்வூரில் கம்பன் மேடு என்று ஒரு இடம் இருக்கிறது. அங்கேதான் கம்பன் வீடு இருந்தது என்கிறார்கள். ஆம்; அந்தச் சித்திரக்காரன் கம்பன்தான். சரி; ஊர் தெரிந்தது, பேர் தெரிந்தது; இன்னும் ஏதாவது தெரிகிறதா?

திருவழுந்தூரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் விஷயமாகத் திருஞானசம்பந்தர் பாடியிருக்கும் தேவாரப் பதிகத்திலே, அது வேத கோஷம் நிரம்பிய ஊர் என்று வருணிக்கப்பட்டிருக்கிறது. கம்பன் காலத்திலே அவ்வூரில் வடமொழிப் பயிற்சியும் தமிழ்மொழிப் பயிற்சியும், வேத வேதாந்தங்களோடு கலைகளும் ஒருங்கே விளங்கின என்று கருதலாம்; சைவமும் வைஷ்ணவமும் சமரஸமாகச் சிறந்து வளர்ந்தன என்று ஊகிக்கலாம். திருவழுந்தூருக்கு வடக்கே சுமார் ஆறு மைல் தூரத்தில் வெண்ணெய் நல்லூர் என்ற ஊர் இருக்கிறது. அதைச் 'சடையப்ப பிள்ளை கிராமம்’ என்றும் சொல்லுகிறார்கள். கம்பனுடைய தோழனான சடையப்ப வள்ளலைத்தான் 'சடையப்ப பிள்ளை’யென்றும் 'சடையப்ப முதலியார்’ என்றும் சொல்லுகிறார்கள். அந்தக் கிராமத்திலே ஒரு குளம். அந்தக் குளத்தையும், அந்த ஊரையும், சடையப்ப வள்ளலையும் ஒருங்கே சேர்த்துச் சிறப்பித்துக் கம்பன் பாடியிருப்பதாக ஒரு பாட்டு.



மோட்டெருமை வாவிபுக, முட்டுவரால் கன்றென்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணையே:  நாட்டில்
அடையா நெடுங்கதவும், 'அஞ்சல்’ என்ற சொல்லும்
உடையான் சரராமன் ஊர்.

(மோட்டெருமை  பருத்த எருமை மாடுகள்; வாவி  குளம்; முட்டுவரால்  முட்டுகின்ற வரால் மீன்; வெண்ணை  வெண்ணெய் நல்லூர். அஞ்சல் என்ற சொல்  'அஞ்சாதே’ என்ற அபய வாக்கு; சரராமன்  சடையப்பனுடைய புனைபெயர்.)

எருமை மாடுகள் குளத்துத் தண்ணீரில் கிடப்பது கிராமாந்தரங்களில் இன்றும் நாம் சாதாரணமாய்க் காணும் காட்சி! அழுக்கை உண்ண வரும் மீன்கள் அந்த எருமைகளின் உடம்பிலும் மடுக்களிலும் முட்டுவதும் யாரும் பார்த்திருக்கக்கூடியதுதான். ஆனால், மூன்று அல்லது நாலு அடி வளர்ச்சியுள்ள வரால் மீன்கள் வந்து மடுக்களில் முட்டியதும் அந்த எருமைகள் கன்றை நினைத்துக் கொண்டு அங்கேயிருந்து வீடுவரையிலும் பால் சொரிந்துகொண்டே போகுமென்று கவிஞர் கற்பனை செய்யும்போது, அவ்வூரின் பால் வளத்தை  பஞ்சத்தை அறியாத அவ்வூரின் உணவு வளத்தை  நாமும் மனக் கண்ணால் ஒருவாறு பார்க்க முடிகிறது. ஆம்; பொருள் என்பதே ஸாராம்சத்தில் உணவுப் பொருள்தானே? 'பால் சொரியும் வெண்ணையே’ என்று அந்த வளம்தான் எவ்வளவு சமத்காரமாய்க் குறிக்கப்படுகிறது!

வால்மீகி காட்டிய சித்திரசாலை

கம்பனும் சடையப்பனுமாகிய இரண்டு நண்பர்களும் இளமையிலேயே ராம கதையில் ஈடுபட்டிருக்க வேண்டும். சடையப்பனுடைய அரண்மனை போன்ற மாளிகையிலே அடிக்கடி வால்மீகி ராமாயண காலட்சேபங்கள் நடைபெற்றிருக்கும் என்று ஊகம் செய்யலாம். அந்தக் காலட்சேபங்களைக் கேட்டுக் கேட்டுக் கம்பன் ராம சரித்திரத்தில் ஆழ்ந்து ராம பக்தனானதுடன், வால்மீகியின் கவிதை அழகிலும் மூழ்கி மோகித்துப் போயிருக்கவேண்டும். அந்தக் கவியின்பத்தை உள்ளத்திலும், அந்த இசை வெள்ளத்தைச் செவிகளிலும் தேக்கிக் கொண்டான் என்றே சொல்ல வேண்டும். அந்தக் கதையும் கவிதையும் பக்தியும் கம்பனை வெறி கொள்ளச் செய்து, இந்த மண்ணுலகத்திலேயே லட்சிய பூமியாகிய ஒரு பொன்னுலகத்தையும் காணும்படி செய்துவிட்டன. இதனால்தான் கம்பன் சொல்லுகிறான்:

வாங்கரும் பாதம் நான்கும்
  வகுத்தவான் மீகி என்பான்,
தீங்கவி செவிகள் ஆரத்
  தேவரும் பருகச் செய்தான்!
ஆங்கவன் புகழ்ந்த நாட்டை
  அன்பெனும் நறவம் மாந்தி
மூங்கையான் பேசலுற்றான்
  என்ன, யான் மொழிய லுற்றேன்.

(வாங்கரும்  (ஒன்றை) எடுத்துவிட்டு (வேறொன்று) போட முடியாத பாதம்  (சுலோகங்களின்) அடி. தீங்கலி  இனிய கலிகள், ஆரநிரம்பும்படி. ஆங்கவன்  ஆங்கு அவன். நறவம்  கள். மாந்தி  குடித்து (முங்கையான்  ஊமையன்.)

'மகாகவியாகிய மகரிஷி புகழ்ந்த ராம ராஜ்யத்தை (கோசல நாட்டை) நானும் புகழ்ந்து பேசத் தொடங்குகிறேனே, ஊமை பேசத் தொடங்குவது போலே!' என்று எவ்வளவோ அடங்கிப் பேசுகிறான் கம்பன்! ஊமை பேசத் தொடங்கினால், அது கேவலம் உளறலாகத்தானே வரும்? ''அப்படியானால் நீ ஏன் பேசத் தொடங்குகிறாய்?' என்ற கேள்வியும் வரக் கூடுமல்லவா? அதற்குத்தான், ''அன்பு என்ற கள்ளைக் குடித்துவிட்டு (நறவம்கள்) நான் பேசத் தொடங்கினேன்!' என்கிறான். கள்ளுக்குச் 'சொல் விளம்பி’ (அதாவது, பேசச் செய்வது) என்று ஒரு பெயர். 'பேசாமடந்தை’யையும்  பேச வைக்கும் அந்தச் 'சொல் விளம்பி’தான் ஊமையைப் பேச வைக்க முடியுமா?

வால்மீகியின் 'சப்த சித்திரங்கள்’ மூலமாகக் கம்பன் ஒரு சித்திரசாலையைப் பார்த்துவிட்டான் என்றே சொல்லவேண்டும். அந்தச் சித்திரசாலையிலே வால்மீகிக்குப் பின் ஏற்பட்ட ராமாயண வளர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்க விரும்பினான். தமிழோடு வளர்ந்த கலைப் பண்புகளுக்கும் இடம் அளித்தான். விசேஷமாக, ராமாயண பாத்திரங்களையெல்லாம் தமிழ்நாட்டிலே தமிழருள்ளங்களிலேயே கண்டு, அந்தக் காட்சிகளைத் தமிழ்மயமாகிச் சித்திரித்தான்.

என்றும் வாடாத கவிச் சித்திரங்கள் நிறைந்த கம்பனின் இந்தப் புதிய சிருஷ்டி, என்றும் புதுமை வாய்ந்த சித்திரசாலையாகவே இருக்கிறது. இதைத்தான் கம்ப ராமாயணம் என்றும், கம்ப நாடகம் என்றும் சொல்லுகிறோம். இந்தக் கம்ப நாடகத்துலே, பிரபஞ்ச நாடகத்தையெல்லாம் பார்க்கலாம்.

சித்திரசாலையாகவும் நாடகசாலையாகவும் ஒருங்கே காட்சிதரும் கம்ப ராமாயணத்தின் மூலமாகக் கவிதைப் பேரின்பத்தை அனுபவிப்பது தமிழராய்ப் பிறந்தவர்களுக்கெல்லாம் கடமையும் உரிமையும் பாக்கியமுமாகும்

[ நன்றி: சக்தி விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்;

சனி, 9 மார்ச், 2013

பாடலும் படமும் - 4 : கவிமணி

மூன்று மலர்க் கவிதைகள்



விகடன், கல்கி இதழ்களின் ஆரம்ப காலத்தில் பல நல்ல மரபுக் கவிதைகள் அவ்விதழ்களிலும், அவை வெளியிட்ட சிறப்பு மலர்களிலும் வந்தன. 30, 40 -களில் அப்படி வெளியான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களின் சில கவிதைகளை இப்போது பார்க்கலாம்.

பாடல்களுக்கேற்ற ஓவியங்களை வரைவதிலும், ஓவியத் தொழில் நுட்பத்திலும், இதழ்களை அச்சிடுவதிலும்  காலப் போக்கில்  பல நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்பட்டாலும், பழைய பாடல்-படப் பக்கங்களைப் பதிவு செய்வது நம் கடமை அல்லவா?

இதோ விகடன்  38 , 40 ஆண்டு விகடன் தீபாவளி மலர்களில் வந்த மூன்று பாடல்-படங்கள். மூன்றும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களின் கவிதைகள் .

பாடல்களில் கவிமணி என்ற பட்டம் இல்லை என்பதைக் கவனிக்கவும்.
ஆம், 1940-இல் சென்னை பச்சையப்பா கல்லூரியில் நடந்த சென்னை மாகாண ஏழாம் தமிழ் மாநாட்டில் தான்  தேசிகவிநாயகம் பிள்ளை ‘கவிமணி’ என்ற பட்டம் பெற்றார்.   ஆனால், இந்தப் பட்டப் பெயர் பிரசித்தி ஆவதற்கு முன்பே இவருடைய பல பாடல்கள் விகடன் போன்ற பத்திரிகைகள் மூலம்  பிரபலமாகிவிட்டன. கீழ்க்கண்ட பாடல்களே அதற்குச் சாட்சி.


( பொதுவாக தீபாவளி மலர்களில் ஒரு கவிஞரின் ஒரு பாடல்தான் இடம் பெற்றிருக்கும்; மேலே உள்ள  இரண்டு பாடல்களும் ஒரே தீபாவளி மலரில் இடம் பெற்றிருந்தது ( 1938 விகடன் மலர்) குறிப்பிடத்தக்கது! )



( மேலே உள்ள படத்தின் வலது கீழ்க் கோடியில் கவனமாய்ப் பார்த்தால்,
A V R  என்ற கையொப்பம் தெரியும். இவர்தான் ‘ ஏ.வெங்கடராகவன்’. கல்கியில் ‘ராகவன்’ என்ற கையெழுத்துடன் நிறைய வரைந்திருக்கிறார். ஹனுமான், கலைமகள் இவற்றிலும் வரைந்திருக்கிறார். மேலும் அதிகமாய் இவரைப் பற்றி என்னால் அறியமுடியவில்லை.  இவருடைய படத்தையும், மேலும் சில ஓவியங்களையும் சேர்த்து  ‘ஓவிய உலா’ இழையில் இட எண்ணுகிறேன். )


1940- விகடன் தீபாவளி மலரில் வந்த “கோவில்  வழிபாடு” கவிதைக்குப் படம் வரைந்த “சேகர்” பற்றிக் கோபுலு சொல்கிறார்.

ஏ.கே.சேகர்: இயற்பெயர் ஏ.குலசேகர். சினிமாவில் ஆர்ட் டைரக்டராகச் சிறந்து விளங்கியவர். புராணம், இலக்கியம் சம்பந்தமான படங்களை வரைவதில் மிகுந்த திறமைசாலி. 1933 முதல் 38 வரையில் விகடனில் அழகழகான அட்டைப் படங்களை வரைந்து அற்புதப்படுத்தியவர்” "

( நண்பர் ஒருவரின் பின்னூட்டம்: இந்தக் கவிதையை எம்.எல்.வசந்தகுமாரி “தாய் உள்ளம்” என்ற படத்தில் கீரவாணி ராகத்தில் பாடியிருக்கிறார்.
http://www.dhingana.com/kovil-muluthum-kanden-song-thai-ullam-tamil-2ea3a31
)

இந்த மலர்கள் வெளியானபோது, ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி விகடன் ஆசிரியராய் இருந்தார். பிறகு , ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 40- இறுதியில் விகடனை விட்டுப் பிரிந்து , பிறகு 41-இல் சொந்தப் பத்திரிகையாய்க் ‘கல்கி’யைத் தொடங்கியபோது, கவிமணியின் வாழ்த்து ‘கல்கி’க்கும் கிடைத்தது.

1941, ஆகஸ்ட் 1 ‘கல்கி’ இதழில் வந்த கவிமணியின் வாழ்த்து வெண்பா:

புத்தம் புதுமலர்கள் பூக்குமே வண்டினங்கள்
சித்தம் மகிழ்ந்துண்ணச் சேருமே -- நித்தமும்
பல்கி வளரும் பசுந்தமிழ்ச் சோலையாம்
‘கல்கி’ படர்ந்துவருங் கால்.

1947 -இல் பாரதி மணி மண்டபம்  திறக்கப் பட்டதைப் பற்றிப் படித்திருப்பீர்கள். ‘கல்கி’ ஆசிரியரின் பெரு முயற்சியால் இது கட்டப் பட்டதால், 12-10-47 ‘கல்கி’ இதழைக்  கவிமணியின் ஒரு வெண்பா அலங்கரித்தது.

தேவருமே இங்குவந்து செந்தமிழைக் கற்றினிய 
பாவலராய் வாழமனம் பற்றுவரே -- பூவுலகில்
வானுயரும் பாரதியார் மண்டபத்தை எட்டப்பன் 
மாநகரில் கண்டு மகிழ்ந்து.  

இந்த வெண்பாக்களுடன் ஏதேனும் ஓவியங்கள் இடப்பட்டனவா என்று தெரியவில்லை! ஒருநாள் தெரிய வரலாம்!

[ நன்றி ; விகடன் ; கவிமணியின் கவிதைகள், ஸ்ரீசெண்பகா பதிப்பகம்.]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

பாடலும், படமும்