திங்கள், 30 ஆகஸ்ட், 2021

1925. பாடலும் படமும் - 139

 கெடுக சிந்தை கடிது இவள் துணிவே


1936-ஆம் ஆண்டில் வந்த ஒரு  'விகடன்' இதழின் அட்டைப் படம். ஏ.கே.சேகர் வரைந்திருப்பார் என்று எண்ணுகிறேன். 'கல்கி' ஆசிரியராய் இருந்த சமயம். 

கெடுக சிந்தை கடிது இவள் துணிவே: 

மூதில் மகளிராதல் தகுமே: 

மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை, 

யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே, 

நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன், 

பெரு நிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே, 

இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி, 

வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇப், 

பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி, 

ஒரு மகன் அல்லது இல்லோள், 

செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே!

                                     - ஒக்கூர் மாசாத்தியார்( புறநானூறு) --

பொருள்:

இவளது சிந்தை மிகவும் கொடியது; இவள் துணிவு மிகக் கடுமையானது. முதிய மறக்குடியில் பிறந்தவள் என்ற சிறப்புக்கு இவள் மிகவும் பொருத்தமானவளே.

முன்னாளில் உண்டான போரில் இவள் தந்தை யானையைக்  கொன்று தானும் களத்தில் வீழ்ந்து மாண்டான்.  நேற்று நடந்த போரில் இவள் கணவன் பசு நிரைகளை மீட்கச் சென்றவன்  மாண்டான். 

இன்றும் போர்ப் பறை கேட்டு விருப்பமுற்று அறிவு மயங்கி வேலைக் கையில் தந்து வெண்மையான ஆடையை விரித்து உடுத்திப் பரட்டைத் தலை மயிர் முடியை எண்ணெய் இட்டு வாரி முடித்துக் குடிக்கு ஒரே மகன் அவனைச் போர்முகம் நோக்கிச் செல்க என்று அனுப்பி வைக்கிறாள்.

தொடர்புள்ள பதிவுகள்:

ஏ.கே.சேகர்


ஓவிய உலா 

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை: