வினு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வினு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 டிசம்பர், 2022

2345. பாடலும் படமும் - 158

 கார்த்திகை தீபம்! 

[ ஓவியர்:வினு] 

'கார்த்திகைத் தீபத்திருவிழா'வைப் போற்றும் மூன்று பாடல்கள் ! 


 [  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[ நன்றி : கல்கி ]


 தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1 


பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வியாழன், 21 மே, 2020

1544. ஓவிய உலா - 13

விசித்திர விக்கிரகம்




மே 20. காஞ்சி மகாசுவாமிகளின் பிறந்த தினம்.

ஓவியர் வினுவின்  வண்ணப் படங்கள்,  பட விளக்கங்கள், தொடர்புள்ள வினு அவர்களின் கட்டுரை ஆகியவற்றைப் பாருங்கள், படியுங்கள்!






[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

1472. பாடலும் படமும் - 89

ஆர்கொலோ சதுரர்?


[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

பாடலும், படமும் - 14

அரவத்திற்கு அபயமளித்த அரி


பதிப்பகைஞர்க் காற்றாது பாய்திரைநீர்ப் பாழி,
மதித்தடைந்த வாளரவந் தன்னை,- மதித்தவன்றன்
வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,
அல்லாதொன் றேத்தாதென் நா.
              ( நான்முகன் திருவந்தாதி – திருமழிசை ஆழ்வார் )

பொழிப்புரை:  தன் இயல்பான எதிரியான கருடனுக்கு அஞ்சி, பாயும் அலைகளோடு கூடிய நீருடைய கடல்போலே குளிர்ந்த திருப்படுக்கையைப் புகலிடமாக நம்பி வந்து பற்றின ஒளிபொருந்திய பாம்பாகிய சுமுகனை  ஆதரித்து, அந்த ( எதிரியான) கருடனுடைய வலிமை பொருந்திய உடலிலே ஏறவிட்டவனும், சிறந்த திவ்ய மேனியுடையவனான சர்வேஸ்வரனை அன்றி வேறொருவரை என் நா துதி செய்யாது.

கருடனுக்கு அஞ்சிவந்து அடிபணிந்த சுமுகன் என்ற பாம்பிற்கு விஷ்ணு அபயமளித்த வரலாறு இப்பாடலில் சொல்லப் படுகிறது .

திருமால் இந்திரனின் தம்பி, உபேந்திரனாய் அவதரித்தபோது நடந்த சம்பவம் இது. கருடன் அவருக்கு வாகனமாய் இருந்தான். இந்திரனின் தேர்ச்சாரதி, மாதலி, தன் மகளைச் சுமுகன் என்ற நாகலோக இளவரசனுக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். பாம்பினத்திற்கு எதிரியான கருடனுக்குச் சுமுகன் இரையாவானோ என்று பயந்து, மாதலி இந்திரனின் உதவியை நாடினான். இந்திரன் சுமுகனுக்கு நீண்ட ஆயுள் கிட்ட ஆசீர்வதித்தான். கருடன், திருமாலின் வாகனம் என்ற பெருமையில் சிறிது கர்வம் அடைந்திருந்த தருணம் அது. தன் இயல்பான இரையான ஒரு பாம்பைத் தன்னுணவாகக் கொள்ளவிடாமல் தடுப்பதை ஆட்சேபித்தான். மேலும் திருமாலுக்கே சவாலாய், திருமால் வல்லவரா? அல்லது திருமாலையே தாங்கும் தான் வல்லவனா? என்று வினவினான் கருடன். விஷ்ணு அப்போது தன் வலது கையைக் கருடன் மேல் வைத்து, அந்த பாரத்தைத் தூக்கச் சொன்னார். அந்த எடையைத் தாங்கமுடியாமல் தவித்த கருடன் விஷ்ணுவின் மன்னிப்பைக் கோரினான். இச்சமயத்தில், கருடனுக்கு அஞ்சின சுமுகன் பாம்பின் வடிவத்தில் விஷ்ணுவின் அடியில் சரணடைந்திருந்தான். விஷ்ணு சுமுகனைக் கருடனின் உடலில் ஏற்றிவிட்டு, கருடனைச் சுமுகனுடன் நட்புடன் இருக்கப் பணித்தார். கருடனும் அப்படியே நடந்து கொண்டான்.   

இந்தச் சம்பவத்தை அழகாக ஓவியத்தில் வடித்துள்ளார் வினு.


[ நன்றி: கல்கி தீபாவளி மலர், 1970 ; http://www.indian-heritage.org/  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

செவ்வாய், 7 ஜூன், 2016

பாடலும், படமும் - 13

தப்பிய பிள்ளைகளைத் தாயொடு கூட்டிய அப்பன்! 
ராதா முரளிதரன் 




ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி (1-6-7) (4-8-2) விவரிக்கும் ஸ்ரீமத் பாகவதக் கதை இந்த படத்தில் சித்திரமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. 

கண்ணன் திரு அவதாரம் செய்ததால்  வடமதுரை. விருந்தாவனம், துவாரகையில் உள்ளோருக்கு இன்ப வெள்ளமாகிய அவன் லீலைகளை அனுபவிக்கும் பெரும் பேறு கிடைத்தது. பரமபதத்தில் உள்ளோர் கண்ணனைத்  தம்மிடத்திலே எழுந்தருளப்பண்ண ஆசைகொண்டு ஒரு திட்டம் வகுத்தனர். 

துவாரகையில் வசித்த ஒரு வைதிகனின் பிள்ளைகளைப் பிறந்த நொடியிலேயே கவர்ந்து சென்றனர். வைதிகனும்  சவமாய்க்கிடந்த குழந்தையை அரண்மனை வாயிலில்  கிடத்தி  அரசநிந்தனை செய்தான். அர்ஜுனன் அவன் பிள்ளைகளைக் காப்பதாக வாக்களித்துப் பிரசவ விடுதிக்கு  முன் காவல் இருந்தான். அப்போது பிறந்த குழந்தை உடனே மறைய அர்ஜுனன் தான் உறுதிமொழி கொடுத்தபடி அக்னிப்ரவேசம் செய்ய தயார் ஆனான்.  விரைந்துவந்த கண்ணன் அவனைத் தடுத்து அவனுடனே திவ்யரதமேறி ஸ்ரீவைகுண்டம் சென்றார். அங்குள்ளவர்களுக்கு அருள் புரிந்து  பிள்ளைகளை மீட்டுவந்தார்.

திருவாய்மொழி (3-10-5), பெரியதிருமொழி  (5-8-8) இந்தக் கதையை வர்ணித்துக்  கொண்டாடுகின்றன.

ஸ்ரீ பெரியாழ்வார் (4-8-2) அமுதத்திருவாக்கை ரஸிப்போம்.

"பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்த உறைப்பன் ஊர்
மறைப்பெரும் தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை அளித்திருப்பார்
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே".

இன்னொரு பாடலில் (1-6-7) பெரியாழ்வார் 

  “தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்
        தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டியஎன் 
    அப்ப ! “

 என்று கூறுவதையும் ரசிக்கலாம் 

[ நன்றி: கல்கி தீபாவளி மலர், 1970; ஓவியம் :வினு; http://www.indian-heritage.org/ ] 

தொடர்புள்ள பதிவுகள்:

வியாழன், 12 மே, 2016

பாடலும் படமும் - 11; சங்கீத சங்கதிகள் -74

ஆசாரியர் அவதாரம் 

பாபநாசம் சிவன் 


1962  மே மாதம்
. சங்கர ஜயந்தியை ஒட்டிய ’கல்கி’ இதழில்  வந்த பாடல் இது.
பாபநாசம் சிவன் அவர்களின் கிருதி.   படம் வினு அவர்களுடையது. விரைவில் வரையப்பட்ட சிறிய படம் தான். இருப்பினும் நுணுக்கம் நிறைந்தது.


வினுவின் இயற்பெயர் வேங்கடராமன். பத்து வருடங்கள் தினமணி கதிரில் பணி. பிறகு கல்கியில் சேர்ந்தார். கோகுலம் இதழில் இவர் வரைந்த வண்ணப் படக் கதைகள் பிரபலமானவை.  அண்ணா சாலையில் உள்ள குதிரை வீரர்களின் சிலைகள் வினுவின் ஓவியக் கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்  பட்டது என்பர்.


சிவன் பாடலில் ராகம்-தாளம் குறிப்பிடப் படவில்லை. ஆனால்,  பாடல் நூலிலிருந்து அவை சங்கராபரணம் - தேசாதி தாளம் என்று அறிகிறோம்.



[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும் 

பாபநாசம் சிவன்

வினுவின் பொன்னியின் செல்வன் சித்திரங்கள்

சங்கீத சங்கதிகள்