வியாழன், 11 நவம்பர், 2021

1968.பேயெனப் பெய்யும் மழை : கவிதை

பேயெனப் பெய்யும் மழை 

பசுபதி


'தினமணி'யில் 30 நவம்பர் 2015 அன்று வெளியான கவிதை.வாராவாரம் கொடுக்கப்படும் தலைப்புக்கேற்ப எழுதி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கவிதை.

====

"வானம்பார் பூமியென்றெம் மண்ணுலகை ஏன்படைத்தாய்?!”

வானத்தை எட்டியதே மழைவேண்டும் கதறல்கள்.


சொக்கட்டான் நிறுத்திவிட்டுத் துயருற்ற தேவிக்குப்

பக்கத்தில் இருந்தவனோ பதிலிறுத்தான் சலிப்புடனே.


ஒருகாசு கொடுத்தாலென்? ஒருகோடி கொடுத்தாலென்?

உருப்படியாய்ச் சேமிக்கத் தெரியாத மக்களுக்கு! “


“போதாதோ ஒருசூடு புத்தியுள்ள மாட்டுக்கு?

தாதாவே! தந்திடுவாய்! “ தர்மபத்னி சொல்கேட்ட


மாயவனும் ஆழிமழை வருணனுக்கோர் ஆணையிடப்

பேயெனவோர் கனமழையும் பெய்ததுகாண் சென்னையிலே!

             

தொடர்புள்ள பதிவுகள் :

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

1 கருத்து:

Bhanumathy Venkateswaran சொன்னது…

ஒருகாசு கொடுத்தாலென்? ஒருகோடி கொடுத்தாலென்?

உருப்படியாய்ச் சேமிக்கத் தெரியாத மக்களுக்கு! “//அருமையான வரிகள்.