வியாழன், 28 நவம்பர், 2019

1403. பாடலும் படமும் - 78

இராமாயணம் - 19
வான்மீகி



கல்கியில் 1954-இல் வந்த மணியம் அவர்களின் அருமையான ஓவியம். 

ராஜாஜி எழுதத் தொடங்கிய ' சக்கரவர்த்தித் திருமகன்' என்ற தொடர் இதற்கு முந்தைய இதழில் தொடங்கியது; அதன் தொடர்பில் வந்த முதல் அட்டைப்படம் இது.  


[ஓவியம்: மணியம் ] 

படத்திற்குப் பொருத்தமான ஒரு செய்யுள்.

நாரணன் விளையாட்டு எல்லாம்
   நாரத முனிவன் கூற.
ஆரணக் கவிதை செய்தான்.
   அறிந்த வான்மீகி என்பான்;
சீர் அணி சோழ நாட்டுத்
   திருவழுந்தூருள் வாழ்வோன்.
கார் அணி கொடையான். கம்பன்.
   தமிழினால் கவிதை செய்தான்.
                                          ---  தனியன் ( கம்ப ராமாயணம்) 

[ நாரணன் விளையாட்டு- திருமாலின் திருவிளையாடல்; ஆரணம் - வேதம்;   சீர்அணி   -  சிறப்புடைய;  திருவழுந்தூர்-  தேரழுந்தூர்; கார்அணி - மேகம் போன்ற; கொடை - ஈகை; கவிதை - செய்யுள்]

[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

கருத்துகள் இல்லை: