ஞாயிறு, 25 மார்ச், 2018

1018. பாடலும் படமும் - 29

இராமாயணம் - 1
பாலகாண்டம், அகலிகைப் படலம்



கண்ட கல்மிசைக் காகுத்தன்
   கழல் - துகள் கதுவ.-
உண்ட பேதைமை மயக்கு அற
   வேறுபட்டு. உருவம்
கொண்டு. மெய் உணர்பவன்
   கழல் கூடியது ஒப்ப.-
பண்டை வண்ணமாய் நின்றனள்;
   மா முனி பணிப்பான்;

[ கண்ட  கல்மிசை  - (அவ்வாறு) கண்ட கல்லின்மேலே; காகுத்தன்
கழல் துகள் - இராமனது திருவடித் துகள்; கதுவ - பட்டதால்; உண்ட
பேதைமை - (தான்) மனத்திற் கொண்டுள்ள அறியாமையாகிய;  மயக்கு
அற - இருள் மயக்கம் நீங்குமாறு; மெய் உணர்பவன் -  உண்மையான
தத்துவ  ஞானம்  பெற்றவன்;  வேறுபட்டு  - தனது  அஞ்ஞானமாகிய
அறியாமை  நிலை  மாறி; உருவம் கொண்டு - உண்மை வடிவம்  (புது
ஞானஸ்வரூபி)   அடைந்து;   கழல்   கூடியது   ஒப்ப  -  பரமனது
திருவடிகளை  அடைவதைப்  போல; பண்டை வண்ணமாய் -  (அந்த
அகலிகை) முன்னைய வடிவத்தோடு; நி்ன்றனள் -  எழுந்து  நின்றனள்;
மா   முனி   பணிப்பான்   -  (அதனைக்  கண்ட)  விசுவாமித்திரன்
இராமனை நோக்கிப் பின்வருமாறு கூறினான்.]

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

1 கருத்து:

கோமதி அரசு சொன்னது…

படமும், பாடலும் அருமை.