திங்கள், 28 செப்டம்பர், 2020

1642. யாப்பிலக்கண நூல்கள்: ஓர் அறிமுகம்

யாப்பிலக்கண நூல்கள்: ஓர் அறிமுகம்

பசுபதி 


அண்மையில் ( 20-9-2020)  ஓர் இணைய வழிப் பன்னாட்டு மரபுக் கவியரங்கில்   நான் வழங்கிய  சிற்றுரை   இன்று கட்டுரையாகத் "திண்ணை" இதழில் வந்துள்ளது.

அந்தச் சிற்றுரையை இந்தக் காணொளியில்  கேட்கலாம். 

[ நன்றி: அகில் சாம்பசிவம் ]

=======

1. அறிமுகம்


யாப்பிலக்கண நூல்களின் வரலாறு தமிழிலக்கிய வரலாற்றுடனும், கவிதை வடிவங்களின் வளர்ச்சியுடனும் இணைந்து நடைபோடும் ஒரு களம். சங்க காலத்தின் ஆசிரியப்பாக்கள், நீதிக் காலத்தின் வெண்பாக்கள், காப்பிய காலத்தின் விருத்தங்கள், சிற்றிலக்கிய காலங்களின் சந்தங்கள், பிரபந்தங்கள் முதலியவற்றின்  வளர்ச்சிகள் புதிய யாப்பு நூல்கள் எழக் காரணங்களாய் இருந்தன. கால வரிசைப்படி அத்தகைய வரலாற்றை ஒரு பருந்துப் பார்வையாய்ப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின்  முக்கிய நோக்கம். நூல்களில் ஏற்பட்ட வளர்ச்சிகளும், மாற்றங்களும்  யாப்பின் வள்ர்ச்சியை மட்டுமின்றி,  காலத்திற்கேற்றபடி யாப்பிலக்கணக் கல்வியில் ஏற்பட்ட  மாற்றங்களையும் குறிப்பிடும். 


யாப்பிலக்கண நூல்களை யாப்பருங்கலக் காரிகை வரை தோன்றியவை, காரிகைக்குப் பின் எழுந்தவை என்று பட்டியலிடுவது ஒரு வசதியான முறை. இந்த நூல்களையும் முழுதும் கிட்டியவை, கிட்டாதவை, செய்யுள் வடிவில் உள்ள மூல நூல்கள், அவற்றின் உரைகள், தமிழிலும், ஆங்கிலத்திலும் தோன்றிய ஆய்வு நூல்கள், உரைநடையில் உள்ளவை, இலக்கணச் சுருக்கங்கள் என்றெல்லாம் பிரிக்கலாம். தொல்காப்பியம் போன்ற மூல நூல்களின் உரைகள் காரிகைக்குப் பிந்தைய காலத்தில் எழுந்தன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 


மேலும் படிக்க:

[ நன்றி: திண்ணை ]

தொடர்புள்ள பதிவுகள் :

யாப்பிலக்கணம்

பசுபடைப்புகள் 

கருத்துகள் இல்லை: