செவ்வாய், 11 அக்டோபர், 2011

’தேவன்’ : ஹிந்துவில் ஒரு கட்டுரை

Wodehousian or just William?

Madras miscellany

S. MUTHIAH 18 September, 2011, 'Hindu'


He has been described as the P.G. Wodehouse of Tamil fiction. Bombay-based columnist, V. Gangadhar, in fact, thought him more versatile that Wodehouse, his characters conveying more to readers than Jeeves and company. On the other hand, R.A. Padmanabhan who had worked with Devan (R. Mahadevan) at the Ananda Vikatan says his humorous ‘Rajamani' series started as Devan's original work but gradually derived much from Richmal Crompton's William series. The ‘Thuppariyum Sambu' series too owed much, it was said, to a foreign character, Agatha Christie's Hercule Poirot, Padmanabhan adds. But one in the audience the other day at the first Devan Memorial Lecture organised by the Madras Book Club and Devan Endowments felt that Sambu reminded him of a much later creation, Inspector Clouseau. Not having read Devan, I'm not passing any judgements except to say that from all reports he was extremely popular in the 1940s and 1950s for his humorous writing as well as for his insightful travelogues.

Devan was a product of Government Arts College, Kumbakonam, when that institution was known as the ‘Oxford of the East'. His first efforts in writing were in English and appeared in My Magazine of India which started before its rival, the better-remembered The Merry Magazine from the S.S. Vasan stable; My Magazine also lasted longer. It was published by P.K. Vinayakam and edited by P.R. Rama Iyengar. Devan's humorous sketches in My Magazine caught the eye of R. Krishnamurthy, the Editor of Ananda Vikatan, who thereupon poached him after learning that he wrote equally felicitously in Tamil. Devan proved a success at Ananda Vikatan, his first contributions being talked about in the same breath as Krishnamurthy's, T. Ashokamitran recalled on the occasion of the endowment lecture.

Ashokamitran went on to remember that Devan was subsequently not given his head at Ananda Vikatan and, frustrated, had decided to join All India Radio, helped by a glowing recommendation from Krishnamurthy that encouraged the move. But when Krishnamurthy and Vasan had a difference of opinion on Krishnamurthy's political activism in the Quit India movement and the Ananda Vikatan's famed Editor left in 1940 — only to re-enter the world of journalism with Kalki — Devan, who was awaiting his appointment orders from Government found himself being asked to edit Ananda Vikatan, whose fort he had many a time held while Krishnamurthy was on his travels. Devan was to edit Vikatan from 1940 till his death in 1957. This was the period when he came into his own and his several serials made Ananda Vikatan a runaway leader until Kumudam came onto the scene with its ‘new journalism'.

Sadly, his serials never got published as novels — because Vasan refused him permission — until his death at the early age of 44 when he was at the peak of his creativity. The only one of his novels published in translation was Justice Jagannathan (2004). I'm in the middle of it, right now, enjoying a story entirely set as a murder trial-in-progress in the Madras High Court. With the action only rarely moving out of the courtroom in its 370 pages, it must indeed have been a Tamil fiction first, if not an international one. If this is a good example of Devan's work, his other novels could well prove as successful in English as they were in Tamil.

From :
Wodehousian or just William? 

* Please also see Sri Muthiah's subsequent column:

Devan days

====

A related article about 'My Magazine'

More old journals


ஞாயிறு, 17 ஜூலை, 2011

’தேவன்' : தினமணிக் கட்டுரை

துப்பறியும் "தேவன்'!
பரிபூர்ணா


[ நன்றி: தினமணி, 26 Jun 2011 ]

உலகில் உள்ள அனைவரையும் அழவைப்பது என்பது எல்லோராலும் முடியும் என்பது மட்டுமல்ல, அது எல்லோருக்கும் கைவந்த கலையும்கூட. ஆனால், சிரிக்க வைப்பது சிலரால், அதுவும் மிகச் சிலரால் மட்டுமே முடியும். அந்த வகையில், தன்னுடைய படைப்புகளின் மூலம் வாசகர்களை வயிறு குலுங்கச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நகைச்சுவை எழுத்தாளர் "தேவன்' என்கிற ஆர்.மகாதேவன்.

"அழுபவனை சிரிக்க வைக்க வேண்டும்; சிரிப்பவனை சிந்திக்க வைக்க வேண்டும், அதுதான் என் வாழ்வின் லட்சியம்'' என்று எம்.ஜி.ஆர். ஒரு திரைப்படத்தில் வசனம் பேசியிருக்கிறார் (நான் ஏன் பிறந்தேன்?). இந்த வசனம் முழுக்க முழுக்க தேவனுக்குத்தான் பொருந்தும்.

துப்பறியும் சாம்புவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள், மறக்கவும் முடியாது. தேவனின் எழுத்தாளுமை அப்படிப்பட்டது. நகைச்சுவை உணர்வும், நுட்பமான நுண்ணறிவும், பன்முக ஆற்றலும் கைவரப்பெற்றவர்; நகைச்சுவை இலக்கியத்தை வளர்த்து வாழவைத்தவர்.

ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற எண்ணிக்கையை விட, அவர் வாழ்ந்த காலத்தில் என்னென்ன சாதனைகளைப் புரிந்தார் என்பதுதான் முக்கியம். அதைத்தான் வள்ளுவப்பெருந்தகை

"தோன்றின் புகழோடு தோன்றுக; அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று'' (236)

என்றார். இந்தக் குறளுக்கு, உலகில் தோன்றுதல் (பிறத்தல்), நல்லோர் - சான்றோர் சூழ்ந்த அவையில் தோன்றுதல் - இப்படிப் பல விளக்கங்களைக் கூறலாம். எங்கே எப்படித் தோன்றினாலும் அதில் தலைமைத்துவத்துடன் திகழவேண்டும் என்பதுதான் இதன் பொருள். அவ்வாறு இல்லாதபோது உலகில் தோன்றுவதோ (பிறப்பதோ). சபையில் தோன்றுவதோ வீண் என்கிறார். எதற்கு இத்தனை பீடிகை என எண்ண வேண்டாம். மனிதப் பிறவி எடுத்த அனைவரும் பிறரைச் சிரிக்க வைக்க முடியவில்லை என்றாலும், அழவைக்காமலாவது இருக்க வேண்டும். அதுவே மிகச் சிறந்த நாகரிகமும் அறமுமாகும். இந்த நல்ல நாகரிகத்தை - அறத்தை நாம் நகைச்சுவை எழுத்தாளர் தேவனிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.

தேவன், இவ்வுலகில் வாழ்ந்த காலம் 43 ஆண்டுகள்தான். ஆனால், அதற்குள் எத்தனை எத்தனை படைப்புகள்; எத்தனை பேரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார். உலகில் பிறந்து, வெறுமனே வாழ்ந்துவிட்டுப்போக நாம் என்ன அஃறிணை படைப்பா? ஆறறிவு படைத்த உயர்திணை அல்லவா? அதற்காகத்தான் இத்தனை விளக்கங்களும்!

÷கயிலைக்கு இணையாகப் புராணங்களில் கூறப்படும் மத்தியார்ஜுனம் என்கிற திருவிடைமருதூரில் (குடந்தையை அடுத்துள்ள ஊர்) 1913-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி பிறந்தார். அவ்வூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளில் படித்தார். மகாதேவன், பள்ளியில் சாரணர் படையில் சேர்ந்திருந்ததால், சாரணப்படைத் தலைவராக இருந்த கோபாலசாமி ஐயங்கார், மாணவர்களுக்கு நிறைய சிறுகதைகளைச் சொல்வாராம். மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பாராம். இதனால்தான் கதை கட்டுவதில் மகாதேவனுக்கு ஆர்வமும் சுவையும் தோன்றியதாம்.

÷பின்னர், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். பிறகு பள்ளி ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். 21-வது வயதில் "ஆனந்த விகடன்' இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். ஆனந்த விகடனில், கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் நகைச்சுவை கட்டுரைகளையும் தொடர்களையும் எழுதினார்.

÷பத்திரிகைத் துறையில் இவர் கையாளாத உத்திகளே இல்லை என்று கூறலாம். நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் "தேவன்' என்ற புனைபெயரில் எழுதினார். இவருடைய துப்பறியும் சாம்பு, கோமதியின் காதலன், ராஜாமணி, ரங்கூன் பெரியப்பா, வரப்பிரஸாதி, மறக்கமுடியாது, விச்சுவுக்குக் கடிதங்கள் ஆகிய படைப்புகள் மிகவும் பிரபலமானவை.


÷துப்பறியும் சாம்பு தொலைக்காட்சியில் தொடராகவும், கோமதியின் காதலன் திரைப்படமாகவும் வெளிவந்தன. மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், மிஸ் ஜானகி, மைதிலி, கல்யாணி, துப்பறியும் சாம்பு ஆகிய நாவல்கள் மேடை நாடகங்களாக நடத்தப்பட்டன. வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் ஆகிய இரு நாவல்களும் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டன. வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எழுதிய பயண நூல்தான், "ஐந்து நாடுகளில் அறுபது நாட்கள்'. இதைத்தவிர "நடந்தது நடந்தபடியே' என்ற பயண நூலையும் எழுதியுள்ளார்.

÷இவை தவிர, அப்பளக்கச்சேரி, பெயர்போன புளுகுகள், ராஜத்தின் மோதரம், கமலம் சொல்கிறாள், போடாத தபால், சரசுவதிக்குக் கடிதங்கள், அதிசயத் தம்பதிகள், கண்ணன் கட்டுரைகள், லட்சுமி கடாட்சம், சி.ஐ.டி. சந்துரு, ராஜியின் பிள்ளை, மல்லாரி ராவ் கதைகள், சின்னஞ்சிறு கதைகள், பிரபுவே உத்தரவு, சீனுப்பயல், மாலதி, போக்கிரி மாமா, மனித சுபாவம், ஏன் இந்த அசட்டுத்தனம், பார்வதியின் சங்கல்பம், சொன்னபடி கேளுங்கள், மோட்டார் அகராதி, ஜாங்கிரி சுந்தரம் - இப்படி புதினம், சிறுகதைகள், கட்டுரைகள், தொகுப்புகள், பயணக் கட்டுரைகள், கதைத் தொடர்கள் என பலவற்றை எழுதிக் குவித்திருக்கிறார்.



÷நீதித்துறை தவிர மற்ற அனைத்துத் துறைகளைப் பற்றி சிறுகதை, நாவல், நாடகம், முதலியவை அதிகம் வெளிவந்துள்ளன. ஆனால், நீதித்துறை பற்றிய விரிவான நாவலோ, நாடகமோ, சிறுகதையோ மிகவும் குறைவு. அந்த மிகப்பெரிய குறையை, "ஜஸ்டிஸ் ஜகந்நாதன்' நாவல் மூலம் தேவன் நிறைவு செய்துள்ளார்.

÷நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய மிக விரிவான நாவல்தான் ஜஸ்டிஸ் ஜகந்நாதன். இந்நாவல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜஸ்டிஸ் ஜகந்நாதனை அறிமுகப்படுத்தும்போது, தொல்காப்பியர் குறிப்பிடும் "வனப்பு' பற்றி கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

""மனிதனுக்கு யௌவனப் பருவத்திலே ஒரு வனப்பு உண்டு. இந்த வனப்பு கேவலம், இளமையினாலும் உடல் ஆரோக்கிய நிலையினாலும் ஏற்படுவதுதான். எத்தனையோ மகான்கள், பெரியவர்கள், அறிஞர்கள் இந்தப் பருவத்திலே மேலே குறிப்பிட்ட வனப்பை விசேஷமாகப் பெற்றவர்கள் இல்லை. ஆனால், அறுபது வயது ஆகிவிடும்போது, விவரிக்க முடியாத ஒரு கம்பீரமான வசீகரம் அவர்களை வந்து அடைந்து விடுகிறது.

அறிவின் மேன்மையுடன், பண்பட்ட இதயத்தின் சிறப்பும், மேதையின் முதிர்ச்சியும்தான் இந்த வசீகரத்தின் ரகசியம். பார்ப்பவர்களுக்கு, ஒரு முறைக்கு நூறுமுறை இந்த தேஜசைக் காணவேண்டும்; கண்டு, கண்கொட்டாமல் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கும். ஜஸ்டிஸ் ஜகந்நாதன் வதனத்திலும் இந்த மாதிரியான காந்தமொன்று இருப்பதை எத்தனையோ பேர் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்'' - கனிந்த பழம்தான் இனிக்கும் - ருசிக்கும் என்பதை எத்தனை அழகாக, அருமையாக எழுத்தில் கொண்டுவந்துள்ளார் தேவன்.

÷""ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில், தமிழ்நாடெங்கும் பிரசித்தமாகிவிட்டார் தேவன். முதன் முதலில் கையெழுத்துப் பிரதியில் அவர் கட்டுரையைப் படித்தபோது, இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையை எழுதும் இந்த ஆசாமி யார் என்று வியப்படைந்தேன். இவரோ, இன்னும் இருபது வயது நிரம்பாத இளைஞர் என்று அறிந்தபோது அளவிலாத மகிழ்ச்சி உண்டாயிற்று. குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும் துக்கங்களையும் மட்டுமல்ல, வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர் தேவன்' என்று கல்கி புகழாரம் சூட்டியுள்ளார்.

""தேவனின் கதைகளை ஒன்றுவிடாமல் படித்தவன் நான். அவர் ஒரு தலை சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். என்போன்ற எழுத்தாளர்களுக்கு அவர் முன்னோடியாகவும், மானசீக ஆசானாகவும் இருந்திருக்கிறார். தேவன் என்றைக்கும் இருப்பார். அவர் நிஜமாகவே தேவன்தான்'' என்று எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார்.

÷சென்னை - தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருமுறை பதவி வகித்திருக்கிறார் தேவன். பள்ளி ஆசிரியர், பத்திரிகையாசிரியர், பத்திரிகை நிர்வாக ஆசிரியர், நகைச்சுவை எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்ட தேவன், 1957-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி காலமானார்.

÷தேவன் நினைவாக, ஆனந்தவிகடன் 5.5.57-இதழில், "விகடனின் மகத்தான நஷ்டம்' என்ற தலைப்பில், "கடந்த 23 ஆண்டுகளாக அவர் (தேவன்) எழுதிய சிரஞ்சீவி இலக்கியங்கள் நம் கண்முன் இருக்கின்றன, ஆனால், தேவன் மறைந்துவிட்டார். வடபழனி ஆண்டவனைப் பற்றி எழுதிய பேனா மன்னர், அவர் திருவடிகளிலேயே இரண்டறக் கலந்துவிட்டார்' என்று நினைவஞ்சலி செய்துள்ளது.

தொடர்புள்ள சில பதிவுகள்:

தேவன் நினைவு நாள் , 2010

தேவன்: கல்கி என்னும் காந்த சக்தி

தேவன்: நினைவுகள் -2

வெள்ளி, 6 மே, 2011

கவிதை இயற்றிக் கலக்கு - 6

’ கவிதை இயற்றிக் கலக்கு!’ : சில மதிப்புரைகள்:




1) ‘அமுதசுரபி’ ஆசிரியர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் ஏப்ரல் 2011 ‘அமுதசுரபி’ இதழில் எழுதிய நூல் விமரிசனம்:



2)   கவிமாமணி இலந்தை சு. இராமசாமியின் அணிந்துரையிலிருந்து சில பகுதிகள் :

. . . பேராசிரியர் பசுபதி ”கவிதை இயற்றிக் கலக்கு” என்னும் தலைப்பில் பாடம் நடத்தி மாணவர்கள் தெளிவாய் அறிந்து கொண்டு கவிதைகள் எழுதி, பாடங்களின் செழுமையையும் பாடம் நடத்தியவரின் திறமையையும் நிரூபித்திருக்கிறார்கள். அவர் நடத்திய பாடங்கள், அதன் பின் பலத்த ஆராய்ச்சியின் விளைவாக அவர் எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுதியாக இந்நூல் வெளிவருகிறது. நானறிந்த வரையில் இது ஆறாண்டு கால உழைப்பின் தொகுப்பு . . . . கவிதை இலக்கணம் பற்றி என்னென்ன நூல்களெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றனவோ அவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து தனது ஆய்வின் பயனாகக் காலப்போக்கில் நிகழ்ந்துள்ள மாறுபாடுகளுக்கேற்ப யாப்பிலக்கண ஆய்வு நூலாக இதை அளித்திருப்பதுதான் இதன் சிறப்பு. . . . . பசுபதி அவர்கள் பேராசிரியராக இருக்கிற காரணத்தால் இதைப் பயில்வோருக்கு என்னென்ன ஐயங்கள் வரலாம் என்பதை முன் கூட்டியே ஆராய்ந்து அவ்வையங்களைத் தானே எழுப்பி விளக்கம் அளித்துவிடுகிறார். . . . அசை விருத்தங்கள், சந்த விருத்தங்கள், வண்ணம் ஆகியவற்றின் வேறுபாடுகளை இவ்வளவு விளக்கமாக நான் வேறு எந்த நூலிலும் கண்டதில்லை. அவற்றைப் பற்றிய எல்லா நூல்களையும் அலசி ஆராய்ந்து அவற்றிற்கான சரியான எடுத்துக்காட்டுகளுடன் அவர் விளக்கியிருப்பது பாராட்டிற்குரியது. . . இந்நூல் தமிழ் பேசும் இடங்களில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், நூலகங்களிலும் இருக்க வேண்டிய ஒன்று.

3) பேராசிரியர் வே.ச. அனந்தநாராயணனின் நட்புரையிலிருந்து சில பகுதிகள்:

. . . அடிப்படைத் தமிழறிவுடன் முறையாகக் கவிதை எழுதுவதில் ஆர்வங் கொண்டவர்களோடு தோழமை கொண்டாடி அவர்கள் உள்ளப் பாங்கிற்கேற்பத் தற்கால அணுகு முறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட்ட இந்நூல் இவ்வகையில் ஒரு திசை திருப்பம் என்று கூறலாம். . . ஒரு நூலுக்குப் பெருமை தருவது அதன் கருப்பொருள் மட்டுமன்றி அதற்கான உண்மையானதும் தெளிவானதுமான விளக்கத்தைக் கூறும் நூலாசிரியனின் திறனும் ஆகும். பல்கலைக் கழக ஆசிரியராகப் பணியாற்றிய தமது அனுபவத்தின் முழுப்பயனையும் இந்த நூலில் பசுபதி தர முயன்றிருக்கிறார். அதன் விளைவாக, நூலாசிரியரே மாணவனாக மாறிக் கற்போரின் உள்ளத்தை அறிந்து எழுதும் அரிய நிகழ்ச்சியை நாம் நூலின் எல்லாப் பகுதிகளிலும் தெளிவாகக் காண்கிறோம். . . . நூலின் பிற்பகுதியில் விரிவாகத் தரப்பட்டுள்ள சந்தப்பாக்கள், வண்ணப் பாக்கள் பற்றிய இலக்கண விளக்கம் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்த ஒன்று. இயற்றமிழை இசை, நாடகத் தமிழோடு இணைப்பது எழுத்துச் சேர்க்கைகளின் காலஅளவு ஆகும். குரு, லகு என்னும் கால அளவு கொண்ட குறிப்புகள் கொண்ட இப்பாவடிவங்கள் பற்றி எழுதப்பட்டுள்ள பண்டைய நூல்களைப் போல அன்றி, பசுபதி தமக்கே உரிய எளிய, ஆயின் கருத்துச் செறிந்த நடையில் தமது விளக்கங்களை அமைத்த விதம் மிகவும் அருமையானது. . . மற்ற யாப்பிலக்கண நூல்களில் காண இயலாத இந்தப் பயிற்சிப் பகுதியை இந்த நூலின் மிகச் சிறந்த தகுதிகளில் ஒன்றாக நான் கருதுகிறேன். தரப்பட்டுள்ள பயிற்சிகளின் பரப்பும் ஆழமும் அவற்றைத் தேர்ந்தெடுக்க ஆசிரியர் மேற்கொண்ட ஆய்வின் தீவிரத்தைக் காட்டுகின்றன. . . . இறுதியாக, இலக்கண நூல்கள் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கின்றது பேராசிரியர் பசுபதியின் ‘கவிதை இயற்றிக் கலக்கு’. யாப்பிலக்கணத்தை எளிதில் படித்துத் தேர்ச்சியடைந்து தரமான கவிதைகள் படைக்க விரும்பும் யாவருக்கும் இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.


======
கவிதை இயற்றிக் கலக்கு 
பக்கங்கள்: 384 விலை: Rs.180.00


LKM Publication

10, Ramachandra Street,
T.Nagar , Chennai - 600017
தொலைபேசி: 044_2814 2241
கைபேசி : 99406 82929.

=====
 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு!

திங்கள், 21 மார்ச், 2011

கவிதை இயற்றிக் கலக்கு - 5

'கவிதை இயற்றிக் கலக்கு!’ நூல் வெளியீட்டு விழா : 





அன்றெடுக்கப் பட்ட சில படங்கள் :

படத் தொகுப்பு-1

படத் தொகுப்பு-2

விழாவுக்கு வந்தவர் ஒருவரின் விமரிசனம்
=============
                             



பொருளடக்கம்

பகுதி 1
========
1. அறிமுகம்
2. கவிதை உறுப்புகள்
3. எழுத்துகள்
குறில், நெடில், ஒற்று, மாத்திரை
4. நேரசை
5. நிரையசை
6. பாடலை அலகிடுதல்
7. சீர்கள்
ஓரசை, ஈரசை, மூவசை, நான்கசைச் சீர்கள்,
8. தளை, அடி, ஓசை
9. தொடை -1: மோனை
10. தொடை -2: எதுகை
வருக்க, இன, உயிர், நெடில், இரண்டடி எதுகைகள்;
இடையெட்டெதுகை, மூன்றாம் எழுத்தொன்றெதுகை,
வழியெதுகை, ஆசிடை இட்ட எதுகை, இயைபு.
11. குறள் வெண்பா : முதலடி
12. வெண்பாவின் ஈற்றடி
13. அலகிடுதல் : சில நுண்மைகள்
குற்றியலிகரம், அளபெடை, ஆய்தம். ஐகாரக் குறுக்கம்
ஒற்று நீக்கி அலகிடல்.
14. குறள் வெண்செந்துறை
15. ஆசிரியப்பா
நிலை மண்டில ஆசிரியப்பா, ( தனிச்சொல் பெற்றுவந்த ) நிலை மண்டில ஆசிரியம். நேரிசை ஆசிரியப்பா, (அடிக்குள் எதுகை பெற்று வரும் ) ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா , அடிமறி மண்டில ஆசிரியப்பா
16. வஞ்சித் துறை
வஞ்சித் தாழிசை
17. வஞ்சி விருத்தம்
18. கலிவிருத்தம்
19. தரவு கொச்சகக் கலிப்பா
20. ஆசிரியத் தாழிசை
21. கலித்தாழிசை
22. வெண்பா - 1 : குறள், சிந்தியல்
குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா (நேரிசை, இன்னிசை )
23. வெண்பா - 2: அளவியல்
நேரிசை, இன்னிசை, முடுகு, இருகுறள் நேரிசை,
ஆசிடை நேரிசை வெண்பாக்கள்.
24. வெண்பா – 3
பஃறொடை வெண்பா(நேரிசை, இன்னிசை), கலிவெண்பா (இன்னிசை, நேரிசை ), சவலை வெண்பா, மருட்பா, வெண்கலிப்பா.
25. கலித்துறை - 1
கலிமண்டிலத் துறை,
26. கலித்துறை - 2
வெளிவிருத்தம்,
27. கட்டளைக் கலித்துறை
விதிகள், நேரசைக் கட்டளைக் கலித்துறை,
நிரையசைக் கட்டளைக் கலித்துறை, கட்டளைக்
கலித்துறையில் வகையுளி
28. அறுசீர் விருத்தம்
வெண்டளை அறுசீர்
29. எழுசீர் விருத்தம்
30. எண்சீர் விருத்தம்
31. கட்டளைக் கலிப்பா
32. வஞ்சிப் பா
33. கலிப்பா -1
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா.
34. கலிப்பா -2
தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா,
சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக்
கலிப்பா.
35. கலிப்பா -3
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, வெண்கலிப்பா,
உறழ்கலிப்பா .
36. மற்ற சில பாவினங்கள்
பாக்கள், பாவகைகள், பாவினங்கள், குறள் தாழிசை (குறட்டாழிசை), வெண்டாழிசை, வெள்ளொத்தாழிசை,
வெண்டுறை, ஆசிரியத் துறை, மேல் வைப்பு,
குறும்பா

பகுதி 2
========

37. சந்தப் பாக்கள்: இலக்கணம்
38. சந்த வஞ்சித் துறை, சந்த வஞ்சி விருத்தம்
39. சந்தக் கலிவிருத்தங்கள் -1
40. சந்தக் கலிவிருத்தங்கள் -2
41. சந்தக் கலித்தாழிசை
42. சந்தக் கலித்துறை
43. சந்த அறுசீர் விருத்தம்
44. சந்த எழுசீர் விருத்தம்
45. சந்த எண்சீர் விருத்தம்
46. விருத்தங்களில் ஒன்பது, பத்து, பதினொரு சீர்கள்
47. பன்னிரு சீர், பதினான்கு சீர், பதினாறு சீர் விருத்தங்கள்
48. பரணித் தாழிசை
49. வண்ணப் பாடல்கள் – 1
சந்தங்கள், தொடர் சந்தங்கள், சந்தங்களும், தாள ஜாதிகளும்
50. வண்ணப் பாடல்கள் – 2
வண்ண வஞ்சித் துறை, வண்ண வஞ்சி விருத்தம், வண்ணக் கலி விருத்தம், வண்ணத் தரவு கொச்சகம், வண்ணக் கலிநிலைத் துறை, அறுசீர் வண்ண விருத்தம் .
51. வண்ணப் பாடல்கள் – 3
7 – 26 சீரடி வண்ண விருத்தங்கள்
52. சிந்துகள்- 1
53. கும்மி
இயற்கும்மி, ஒயிற்கும்மி, ஓரடிக் கும்மி .
54. சிந்துகள் -2
சமனிலைச் சிந்து, வியனிலைச் சிந்து.
55. கிளிக்கண்ணி
56. சிந்துகள் – 3
ஆனந்தக் களிப்பு, காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, இலாவணி
57. இசைப்பாடல்
58. முடிவுரை

பின்னிணைப்பு :
பயிற்சிகளிலுள்ள சில வினாக்களுக்குரிய விடைகள்

==================

நூல் கிடைக்குமிடம்:

LKM Publication
10, Ramachandra Street,
T.Nagar , Chennai - 600017

தொலைபேசி: 044_2814 2241
கைபேசி : 99406 82929.
கவிதை இயற்றிக் கலக்கு 
பக்கங்கள்: 384 விலை: Rs.180.00



தொடர்புள்ள பதிவுகள்:

கவிதை இயற்றிக் கலக்கு!

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

அகாடமியில் மாலை ஆறு மணி

அகாடமியில் மாலை ஆறு மணி 
‘வாணி’ 

[ஓவியர்  ‘வாணி’ ]


ஓவியர்களிலேயே விகடனில் மிக அதிக காலம் (சுமார் 35 வருடங்கள்) பணியில் இருந்தவர் :வாணி’.  வெங்கடரமணி என்பது அவருடைய  இயற்பெயர். அதைச் சுருக்கி 'வாணி'யாக்கியவர் ’தேவன்’ . 1957 க்குப் பின் விகடனில் இவர் படங்கள் அதிகமாய் வரத் தொடங்கின. 

சென்னையில் சங்கீத ஸீசனில்  சங்கீத அகாடமியில் ஒரு நாள் மாலை :
’வாணி’ வரைந்த  அழகான நகைச்சுவைச் சித்திரம். ( விகடன் 24-12-2008 இதழுடன் இணைப்பு.) 





[ நன்றி: ஆனந்த விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்: 

சிரிகமபதநி

சங்கதி -2 :”மாலி”யின் கைவண்ணம் 

சங்கீத முக பாவங்கள் : போட்டோ :மாலி

மாமாங்க மாறுதல்கள் ! -1 ; ..மாலி-சில்பி

சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்