செவ்வாய், 30 அக்டோபர், 2012

குறும்பா -1 : பட்டணத்தில் படிக்கின்ற கிட்டு!

1. பட்டணத்தில் படிக்கின்ற கிட்டு!
பசுபதி






பட்டணத்தில் படிக்கின்ற கிட்டு
பந்தயத்தில் போக்கிடுவான் துட்டு !
. . கொட்டினள்தாய் சுடுசொல்லை;
. . குணத்தையவன் விடவில்லை.
சட்டென்று போட்டாள் 'கால் கட்டு ' !
   
 Limerick என்ற ஆங்கிலக் கவிதை வடிவினைக் 'குறும்பா ' வாகத் தமிழில் முதலில் உருவாக்கினவர் ஈழத்துக் கவிஞர் 'மஹாகவி ' (உருத்திரமூர்த்தி)

அவருடைய ஒரு குறும்பா:

முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன்.

முன்னாலே வந்து நின்றான் காலன்.

           சத்தமின்றி, வந்தவனின்

           கைத்தலத்திற் பத்துமுத்தைப்

பொத்திவைத்தான். போனான்முச் சூலன்


அவருடைய குறும்பாவின்  இலக்கணம்:

காய் - காய் - தேமா -

காய் - காய் - தேமா -

       காய் - காய் -

       காய் - காய் -

காய் - காய் - தேமா. 


’சந்தவசந்த’க் குழுவில் பலர் இதைத் தொடர்ந்து  பல புதிய 

இலக்கணங்களும் பரிந்துரைத்திருக்கின்றனர். 


தொடர்புள்ள பதிவுகள்:

குறும்பாக்கள்

கவிதைகள்

கருத்துகள் இல்லை: