வெள்ளி, 22 மார்ச், 2013

பி.ஸ்ரீ -3 : சித்திர ராமாயணம் -3

362. வானரர் கற்ற வைத்திய பாடம்
பி.ஸ்ரீ.


பி.ஸ்ரீ. ஆசார்யா அவர்களின் நூல்களின் பட்டியலை இட்டால் அதுவே ஒரு கட்டுரையாகும்! மேலும், பல்வேறு  துறைகளிலும் அவர் எழுதியுள்ள படைப்புகளைப் படித்தால் நமக்குப் பிரமிப்பு இன்னும் அதிகரிக்கும்! உதாரணமாக, அவர் தன் பெயரை வெளியிடாமல் ‘விகட’னில் எழுதிய கட்டுரைத்தொடர்கள் பலவற்றில் இரண்டு காட்டுகள்: 

1) “துள்ளித் திரிகின்ற காலத்திலே”  என்ற தலைப்பில் குழந்தை வளர்ப்பு முறை , மாண்டிசோரி கல்வி முறை  பற்றி அழகாக எழுதி இருக்கிறார். ( இதை அல்லயன்ஸ் ஒரு நூலாக வெளியிட்டுள்ளது.)

2) ‘கிளைவ் முதல் ராஜாஜி வரை ‘ என்ற சரித்திர வரலாறு இன்னொன்று. கிளைவ், ராஜாஜி இருவரின் கையெழுத்துகளுடன் கம்பீரமாய் விகடனில் 1948 -இல் வெளியான தொடர் இது. ( இதை அசோகா பப்ளிகேஷன்ஸ் ஹவுஸ், ( மதுரை) 1954 -இல் நூலாக வெளியிட்டது என்ற ஒரு தகவல் கிட்டுகிறது. நூல் இப்போது அச்சில் இருக்கிறதாய்த் தெரியவில்லை.)

இப்படிப்பட்ட தொடர்களை நாங்கள் சிறுவயதில் ( 40/50-களில்) படிக்கும் போது, இவற்றின் ஆசிரியர் யார் என்று யூகிக்க முயன்றதுண்டு. பல வருடங்களுக்குப் பின்னர் தான் இவற்றை எழுதியவர் பி.ஸ்ரீ. என்று அறிந்தோம். (இப்போதும் சிலர் அறியாமலிருக்கலாம்! ‘விகடன்’ வெளியிட்ட ‘காலப்பெட்டகம்’ என்ற நூலில் இரண்டாம் தொடரைப் பற்றித் தகவல் இருக்கிறது.ஆனால், அதன் ஆசிரியர் யார் என்று ஏனோ குறிப்பிடப் படவில்லை! )

எழுத்தாளராக இவர் ஆவதற்கு முந்தைய இவருடைய  வாழ்க்கையைப்  பற்றிச் “சுந்தா” ( பொன்னியின் புதல்வர் நூலில்) எழுதியதைப் படித்தால், உங்களுக்கே ஆச்சரியமாய் இருக்கும்!  ‘சுந்தா’ எழுதுகிறார்:

டி.கே.சியைப் போலவே பி.ஸ்ரீயும் பொருனை தந்த செல்வர்களிலே ஒருவர். விட்டலபுரம் கிராமத்தில் இலக்கியச் செல்வம் படைத்த குடும்பம் ஒன்றில் பிறந்து, அந்தச் செல்வத்தை அனுபவித்துக் கொண்டே வளர்ந்தவர். அவர் முதலில் வகித்தது உளவறியும் போலீஸ் உத்தியோகம். அரவிந்தரின் நடவடிக்கைகளை உளவறியும் வேலையில் ஈடுபட்டிருக்கையில் அவருடைய உள்ளத்தில் மாறுதல் உண்டான காரணத்தால் உத்தியோகத்தை உதறித் தள்ளிவிட்டு, தேசிய உணர்ச்சியையும் , இலக்கிய ஆர்வத்தையும் ஊட்டும் எழுத்தாளராய்ப் பரிணமித்தார்


சரி, நாம் ராமாயணத்தில் ’வானரர் கற்ற வைத்திய பாடம் ‘ என்னவென்று பார்க்கலாமா?





[ நன்றி: விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

1 கருத்து:

VangalSam சொன்னது…

பிஶ்ரீ பாணியே தனி !