புதன், 28 டிசம்பர், 2022

2387. பாடலும் படமும் - 164

இராமாயணம் - 26

சுந்தர காண்டம்



எஸ்.ராஜம் வால்மீகி ராமாயண நூலிற்கு வரைந்த ஓவியங்களில் ஏழாம் ஓவியத்தைப் பார்ப்போம். அதற்குப் பொருத்தமான கம்பனின் பாடலையும் பார்ப்போம்.  இந்த நூல் ( இரண்டாம் பதிப்பு)  கலைமகள் ஆசிரியர் நாராயணசாமி ஐயரால்  1958 -இல் வெளியிடப் பட்டது.



அந்த நூலில் மேலே உள்ள ராஜம் அவர்களின் படத்தின் அடியில் வால்மீகியின் இந்த ஸ்லோகம் காணப் படுகிறது.

वानरोऽहं महाभागे दूतो रामस्य धीमतः।
रामनामाङ्कितं चेदं पश्य देव्यङ्गुलीयकम्

"O noble lady I am a vanara, an envoy of learned Rama. You see this ring with Rama's name inscribed on it, O godlike lady"
கம்பன்
"மீட்டும் உரை வேண்டுவன இல்லை" என, "மெய்ப் பேர்
தீட்டியது; தீட்டஅரிய செய்கையது; செவ்வே,
நீட்டு இது" என,நேர்ந்தனன்' எனா, நெடிய கையால்,
காட்டினன் ஓர்ஆழி; அது வாள் நுதலி கண்டாள்.

மீட்டும் உரைவேண்டுவன இல்லை என - திரும்பவும் யான் கூற
வேண்டியவை இல்லை என்று; 
மெய்ப்பேர் தீட்டியது - உண்மைப் பேர் பொறிக்கப்பட்டதும்; 
தீட்டரிய செய்கையது - எழுத முடியாத வேலைப்பாடு பெற்றதும்;
 (ஆன) இது - இந்தத் திருவாழி; 
செவ்வே நீட்டு எனசெவ்வையாய் அமைந்த திருமுகம் என்று கூறி;
 (இராமபிரான்) நேர்ந்தனன்என்பால் வழங்கினான்; 
எனா - என்று கூறி (அனுமன்); 
நெடிய கையால்நீண்ட கைகளில்; 
ஓர் ஆழி - ஒப்பற்ற மோதிரத்தை; 
காட்டினன்காண்பித்தான்;  
அது - அந்த மோதிரத்தை; 
வாள் நுதலி - ஒளிமிக்க நெற்றியை உடைய பிராட்டி; 
கண்டாள் - பார்த்தாள்.
[ நன்றி : ஓவியம்- லலிதாராம் ]
 
தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா 

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1 

இராமாயணம் 

எஸ்.ராஜம் 

எஸ்.ராஜம்: 'வால்மீகி ராமாயண'நூல் படங்கள்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை: