புதன், 14 நவம்பர், 2012

குறும்பா - 2,3: காசி, தாரை

குறும்பா - 2,3 : காசி, தாரை

பசுபதி

                                                                     2.   காசி
                                                                           



ஊரிலுளோர் ஊமையெனுங் காசி
ஆரிடமும் பேசாச்சங் கோசி !
. . காரிருளில் பெண்நின்றாள் ;
. . 'காட்டெனக்கு வழி 'யென்றாள்.
மாறிவிட்டான் மங்கையுடன் பேசி!



                                                                      3.  தாரை



உணவுக்குப் பின் 'பாதாம் கீரை '
உறிஞ்சிடுமோர் மங்கைபெயர் தாரை!
. . அணங்கினெடை ஏறிடவே
. . அருந்துகிறாள் 'மடக் 'கெனவே
உணவுக்குப் பதிலாய்த்தண் ணீரை !

~*~o0O0o~*~

தொடர்புள்ள பதிவு:

குறும்பா -1

குறும்பாக்கள் : மற்றவை

2 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

குறும்பா நன்று.

Pas S. Pasupathy சொன்னது…

@முனைவர்.இரா.குணசீலன்

ரசித்தமைக்கு நன்றி!