திங்கள், 24 ஆகஸ்ட், 2020

1610. நாமக்கல் கவிஞர் - 6

கவிஞரின் மறைவு




ஆகஸ்ட் 24. நாமக்கல் கவிஞரின் நினைவு தினம்


முதலில், ஆனந்தவிகடனில் வந்த அஞ்சலி.
=======
சுப்பிரமணிய பாரதியாரின் வழியில் மக்களிடையே தேசியக் கனலைத் தூண்டி, அடிமைப்பட்டுக் கோழைகளாயிருந்த மக்களை வீறு கொண்டு எழச் செய்த பாடல்களை இயற்றியவர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையவர்கள்.

40 ஆண்டு களுக்குமுன், உப்பு சத்தியாக்ரகத்தின் போது 'கத்தியின்றி ரத்தமின்றி யுத் தம் ஒன்று வருகுது' என்று அத் தனை பேரையும் பாட வைத்து, தேசத் தந்தை மகாத்மாஜியின் அகிம்சைப் போரின் புனிதத்தை அகில உலகிற்கும் பறைசாற்றிய தேசியக் கவிஞர் அவர். விடுதலைப் போரின்போது பல பாடல்களை இயற்றியவர், சுதந்திர தின வெள்ளி விழாவைக் குறித்தும் இறுதியாக ஒரு கவிதை புனைந்துவிட்டு, அண்மையில் தமது 85-வது வயதில் இயற்கை எய்தினார்.

இள வயதில் சிறந்த ஓவியராகத் திகழ்ந்த ராமலிங்கம், அப்போது நாடு முழுவதும் வீசிய தேசிய உணர்ச்சிப் புயலில் சிக்குண்டு, ஒப்புயர்வற்ற தேசியக் கவியாக மலர்ந்தார். எளிமையான சொற் களைக் கையாண்டு, மக்களிடையே நாட்டுப் பற்றையும் மொழிப் பற் றையும் இனப் பற்றையும் வளர்த் தார். 'தமிழன் என்றோர் இனம் உண்டு; தனியே அவருக்கொரு குணம் உண்டு', 'தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா' என்ற கவிஞரது பாடல்கள் தமி ழர்களைத் தலை நிமிர்ந்து நடக்க வைத்தன.

'பாரதம் என் பாட்டனின் சொத்து' என்று முழங்கினார் அவர். 'நாமக்கல் கவிஞர் பாரதத்தின் சொத்து' என்று நாம் பெருமையோடு கூறுவோம்.
====
இரண்டாவதாக, கல்கியில் வந்த அஞ்சலி.



[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்;

நாமக்கல் கவிஞர்


கருத்துகள் இல்லை: